Monday, May 5, 2014

மனிதர்களின் உருவாக்கம்

இன்றைய நம் குழந்தைகள், நாளைய நம் சமூகத்தின் மனிதர்கள். குழந்தைகள் அவர்கள் இயல்பு மற்றும் சூழலிற்கேற்ப, ஒரு பகுதி அவர்களாகவே மனிதராகிறார்கள். அவர்களின் இன்னொரு பகுதி, சுற்று சூழலால் உருவாக்கப்படுகிறது. சுற்று சூழல் என்பதன் பெரும் பகுதி பெற்றோர் என்றாகிறது. குழந்தைகளின் சுற்றுசூழல், பெற்றோராலும், பெற்றோரால் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் புறஉலகாலும் ஆனது. அவர்கள் சுற்று சூழலின் மற்றொரு பகுதி, அவர்களாகவே அறிமுகப்படுத்திக்கொள்ளும் புறஉலகினால் ஆனது. குழந்தைகளின் சுற்று சூழலின் இந்த இரு பகுதிகளின் விகிதங்களும், அவர்களின் இயல்பிற்கேற்ப மாறலாம். 

நம் இயல்பு என்ன என்பதையே பெரும்பாலும் அறியமுடியாத நம்மால் குழந்தைகளின் இயல்பு என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இதுவே மனிதர்களின் உருவாக்கத்தில் உள்ள பெரும் தடைகல். ஆம், குழந்தைகளின் இயல்பை அறியாதவரை, அவர்களை பெற்றோரால் மனிதர்களாக உருவாக்க முடியாது. அவர்கள் தாங்களாகவே மனிதர்களாக உருமாற வழிவிடுவதும், அதற்கான சூழலை அமைத்து கொடுப்பதும்தான் பெற்றோரால் ஆனது. ஆனால் அவர்களின் இயல்பை அறியாமல் எவ்வாறு அவர்களுக்கான சூழலை அமைத்து கொடுப்பது? நாம் அமைத்து கொடுக்கும் சூழல் அவர்களை நேர்மறையாகவா அல்லது எதிர்மறையாகவா பாதிக்கிறது என்பதை எவ்வாறு அறிவது?

மனிதர்கள், அவர்கள் வாழும் முறையை, விழுமியங்களை (Axiom), சிந்தனை முறைகளை, எண்ணங்களின் ஓட்டங்களை, சமூகத்தின் இயல்புகளிடமிருந்தே பெறுகிறார்கள். இந்த சமூகத்தின் இயல்புகளை சராசரி சமூக இயல்பு எனலாம். இருந்தாலும் அந்த சமூகத்தில், சமூகத்திலிருந்து தாம் பெற்றவற்றை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் மனிதர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு கேள்விகேட்பவர்கள், தாம் கேட்கும் கேள்விகளுக்கு அடையும் பதில்களுக்கு ஏற்ப சராசரியிலிருந்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விலகி இருக்கலாம் - பெரும்பாலும், உலகியல் வாழ்க்கையின் விதிகளையும் தன்மையையும் புரிந்து கொள்ளாதவர்கள், எத்தகைய கேள்விகளை அடைந்தாலும், தங்களின் புரிதலின்மையால் சராசரியையே வந்தடைவார்கள். ஆக ஒரு சமூகத்தில் பெரும்பாலானவர்கள் சராசரியாகவே இருப்பார்கள் - தங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சராசரிகளிடமிருந்து விலகியிருந்தாலும்!


 மனிதர்கள் உருவாக்கத்தில் உள்ள எதிர்மறை அம்சம், பெரும்பாலும் எந்த பெற்றோரும் தாம் ஒரு சமூகசராசரி என்பதை அறிந்திருப்பதில்லை. சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும், ஒருவர், தம்மை தன்நிலையில் உள்ளவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்றே உணர்ந்து கொண்டிருப்பார். உண்மையில் எந்த இரு மனிதர்களும் ஒன்றுபோலானவர்கள் இல்லை. ஆனால் சமூகத்தில் உள்ள எல்லா மனிதர்களும், அந்த சமூகத்திலிருந்தே செயல்படும் வழிமுறைகளையும் எனவே முன்முடிவுகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே முழுமையான சமூகவிதிகளின் புரிதலுடன் சமூக வழிமுறைகளை கேள்விக்குட்படுத்துபவர்கள் தவிர மற்றவர்களின் சமூக செயல்பாடுகள் சாராசரித்தன்மையுடனே பெரும்பாலும் இருக்கும். ஆனாலும் மனிதர்களுக்கிடையேயான இயல்பான வேறுபாடும், அவர்கள் தன்முனைப்பும் (Ego) சேர்ந்து, அவர்கள் தங்களை சராசரிகளிடமிருந்து வேறுபட்டவர்கள் என்னும் எண்ணத்தை உருவாக்குகிறது. இந்த மாயையிலிருந்து வெளிவருவது அத்தனை எளிதானது அல்ல (இதை உணர்ந்து அல்லது புனைந்து எழுதும் எனக்கும் கூட! - இந்த எழுத்தும் அத்தகைய மாயையிலிருந்து வெளிவர முயலும் சிறு முயற்சியே)

ஆம் உண்மையில் மனிதர்கள் உருவாக்கம் அல்லது (பெரும்பாலும்) அழிப்பில் பெற்றோரின் இந்த சராசரித் தன்மையிலிருந்து தம்மை விலக்கி காணும் மாயை பெரும் பங்கு வகிக்க கூடும். மனிதர்களுக்கு அவர்கள் வாரிசு என்பது தங்களின் நீட்சியே. வாரிசுகளை ஒரு தனிப்பட்ட, முற்றிலும் தனிமையான ஒரு உயிராக காண்பது, இவற்றைபற்றி வாய்கிழிய கதறுவோருக்கும் (என்னையும் சேர்த்து)  எளிதானது அல்ல - சமூக சராசரித்தனத்தின் காரணமாக! நாம் என்பது நமது எண்ணங்களும், நிறைவேறிய மற்றும் நிறைவேறாத ஆசைகளும், மற்றும் இவற்றைப் போன்றவையும். எனவே நமது நீட்சிகளாக நாம் கருதும் நம் வாரிசுகளையும் நமது எண்ணங்களின், ஆசைகளின் நீட்சியாக கருதுவதும் இயல்பே. எனவே நமது ஆசைகளையும் எண்ணங்களையும், நம்மை அறியாமலே அவர்கள் மேல் சுமத்த தொடங்குகிறோம்.

அடுத்ததாக, பெற்றோர் என்பவர்கள், முற்றிலும் தனித்தன்மைகள் கொண்ட, வெவ்வேறு எண்ணங்களும் ஆசைகளும் கொண்ட வெவ்வேறான இரு மனிதர்கள். அவர்களின் குழந்தைகள், அந்த இருவருக்கும் தனித்தனியாக தத்தமது நீட்சியே. ஆக ஒரு குழந்தை அதன் பெற்றோரின் பார்வையிலேயே இரண்டு வெவ்வேறான ஆளுமைகளாக பிரிந்து விடுகிறது. அந்த இரு ஆளுமைகளுக்குமான சூழல் தொடர்ந்து ஒரே நேரத்தில் அந்த குழந்தைக்கு வழங்கப்படுகிறது. மனிதர்களின் உருவாக்கத்தில் ஏற்படும் முதல் ஆளுமை பிழவு (split personality) பெற்றோராலேயே, அவர்களுக்குத் தெரியாமல், உருவாக்கப்பட்டு விடுகிறது. இந்த இரட்டை ஆளுமை சூழலில், தன்னை தன் இயல்பால் சமன் செய்து முன்னகர இயலும் குழந்தைகளால் மட்டுமே சமூக சராசரித்தன்மையிலிருந்து விலகியிருக்க முடியலாம். அல்லது, சமூக சராசரியிலிருந்து விலகியிருக்கும் (இரு) பெற்றோர்களாலும், ஆளுமை பிளவு இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகளாலும் அவ்வாறு சமூக சராசரியிலிருந்து விலகியிருக்க முடியலாம். சமூக சராசரியிலிருந்து, நேர்மறையாக, விலகியிருப்பவர்களால் மட்டுமே எல்லா சமூகங்களும் முன்னோக்கி நகர முடிகிறது. 

வளரும் சூழல் இயல்பாக இருக்கும்வரை, குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டிய தேவை இல்லை. அவர்களாகவே, அவர்கள் இயல்பிற்கேற்ப, மனிதர்களாகி விடுவார்கள். ஆனால், இன்றைய குழந்தைகள் வளரும் சூழல் இயல்பாக உள்ளதா என்பதை அனுமானிக்க முடியவில்லை. உதாரணமாக, குழந்தைகளை அவர்கள் இயல்பான விளையாட்டு தன்மையிலிருந்து தனிமைப்படுத்தும் தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டுகள் போன்றவை, மூன்று வயதிலிருந்தே போட்டியை மட்டும் குறிக்கோளாக கொண்ட கற்பதற்கும் கற்பனைக்கும் சிறிதும் வாய்ப்பளிக்காத கல்வி முறை, வீட்டிலோ, வீட்டிற்கு அருகிலோ, சுயமாக பெற்றோரின் வழிநடத்தல் இல்லாமல் பிற குழந்தைகளுடன் கலக்கும் சுதந்திரம் இல்லாமை, இன்னும் இவற்றை போன்ற பல காரணிகள். ஒருவேளை, முந்தைய தலைமுறையில் இதே அளவிலான வேறு காரணங்கள், அன்றைய குழந்தைகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை வரிசைப்படுத்த, தற்போதைய எண்ண ஒட்டங்களின் அடிப்படையில், இயலவில்லை.

தம் இயல்பையே அறியாத பெற்றோரால் குழந்தைகளின் இயல்பை அறிந்து அவர்களுக்கு தேவையான சூழலை உருவாக்கி வழங்குவது என்பது இயலாதது. அதே வேளையில், தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றால் முற்றிலும் திசைதிருப்பப்பட்ட குழந்தைகள், அவர்களாகவே அவர்கள் இயல்பை அடைவது என்பதும், பெரும்பாலான குழந்தைகளுக்கு எட்டாததாகவே இருக்க கூடும். இத்தகைய ஒரு தலைமுறை மனிதர்கள் சமூகத்தில் உருவாகி வந்து விட்டார்கள். அவர்களின் உள்ளீடு(Content) எவ்வாறு இருக்கும் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை. பொதுவான ஒரு அவதானிப்பில், தற்போதைய சமூக வாழ்க்கை மிகவும் மெலிதான புறவயமான, மேற்பரப்பில் மட்டும் நிகழும்  ஒன்றாகவே தெரிகிறது. ஆம், எப்போதுமே சராசரி சமூக வாழ்க்கை புறவயமானதாகவே இருந்துள்ளது. ஆனால் முந்தைய தலைமுறையில் அது சற்று ஆழமானதாக இருந்திருக்க கூடும்.

எனவே, தற்போதைய குழந்தைகளுக்கு, அவர்களை அவர்களே அடையாளம் காணும்வரைக்கும் முன்முடிவுகளற்ற, ஒரு குறிப்பிட்ட புள்ளியை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்காத வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என்றே தோன்றுகிறது. உதாரணமாக தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றுக்கான கட்டுப்பாடுகள், வாசிப்பு, விளையாட்டு போன்றவற்றுக்கான ஊக்குவிப்புகள் ஆகியவை. ஆனால், தொலைக்காட்சிக்கு அடிமையாவது என்பது மிக எளிமையான ஒன்று. தொலைக்காட்சியிலிருந்து வாசிப்புக்கு குழந்தைகளை வழிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு ஒத்த எண்ண ஓட்டமுள்ள தேவையான அளவு கண்டிப்பை செலுத்தும் உறுதியுள்ள பெற்றோரும் இன்றியமையாத தேவையாகும். அல்லது தற்போதைய போட்டி சார்ந்த கல்வி முறை, சுயவாசிப்பை நிகழ்த்தும் தகுதி பெற்ற குழந்தைகளை அத்தகைய வாசிப்பிலிருந்து விலக்குவதற்கு தேவையன அழுத்தத்தை அளிக்கிறது.  இங்கும் பெற்றோரின் பங்கு இன்றியமையாதது - குழந்தைகளை போட்டி மனநிலையிலிருந்து விலக்கி அவர்கள் சுயஅறிதலின், கற்பனையின் வாய்ப்புகளை பெருக்குவது! ஆனால் போட்டி மனநிலையிலிருந்து குழந்தைகளை விலக்கும்போது, போதிய கண்காணிப்பு மற்றும் கண்டிப்பு இல்லாதபோது, அவர்களை ஊடகங்களின் பரப்பு விசைகளில் இழந்து விடவும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் மேலான கண்டிப்பு, தற்போதைய நடுத்தர மட்டும் மேல்தர குடும்பங்களில், ஊடகங்களில் பெருமளவு காணக்கிடைக்கும் குழந்தைகள் உளவியல் குறித்த கருத்துக்களால், ஏறத்தாழ இல்லை என்ற அளவுக்கு வந்து விட்டது. குழந்தைகள் மேலான கண்டிப்பு, தேவையா இல்லையா என்பது எளிதில் முடிவு செய்யக்கூடிய ஒன்றாக தோன்றவில்லை. கண்மூடித்தனமான கண்டிப்பு தேவை இல்லை. ஆனால் இடம், பொருள், காலம் அறிந்து தேவையான இடத்தில் கண்டிப்பு நிச்சயம் தேவையான ஒன்றாக இருக்கலாம்.


இத்தகைய எண்ணற்ற வளரும் சாத்தியங்களின் நடுவில் குழந்தைகள் மனிதர்களாக மாறுவது, முற்றிலும் அந்த குழந்தைகளின் அனைத்தையும் கடந்து செல்லும் இயல்பிலேயே உள்ளது. அவ்வாறு கடந்து செல்ல முடியாதவர்கள், சமூக சராசரியில் சென்று சேர்கிறார்கள். பெற்றோர்களாலும், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சமூக சராசரியிலிருந்து நேர்மறையாக விலகியிருக்க, செய்யக்கூடியதென்று ஒன்றும் இல்லை. எனினும், பெற்றோர் தம் இயல்பிற்கேற்ற சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு வழங்குவதும், அல்லது தமது இயல்பிற்கேற் சூழல் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என தோன்றினால் தம் இயல்பை அதற்கேற்ற முறையில் மாற்றுவதன் மூலம் குழந்தைகளுக்கான சூழலை வழங்குவதும், குழந்தைகள் எந்த வகை மனிதர்களாக மாறினாலும், அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் மனநிலையை அடைவதுமே பெற்றோர்களால் செய்யக்கூடியதாக இருக்கலாம். 

Friday, May 2, 2014

Little bit of Economics.

Public/Governmentdebt is the debt owed by a central government. When a government's total expenditures exceed the revenue that it generates (excluding money from borrowings), it is deficit. Deficit differs from debt, which is an accumulation of yearly deficits.

In other words,  if a government wants to come out of its debt, it need to refrain completely from any sort of spending, except repayment of debt, till the time the debt becomes zero. This absolutely impossible. The other way out is, it has to generate revenues such that the spending must be much much less than the revenues so that from the surplus revenues, the debt can be repaid. Of course, this is very simple. Anyone can understand this.


The revenue of any country is the tax collected by the government from its citizens, including the tax collected from the companies owned by its citizens operating in other countries also (Revenue from global trade). To increase the revenue, the citizens need to spend more. Part of that spending is collected by various taxes by government and that is the revenue of government. To increase the spending of public, they need to get more individual revenue. Individual revenue is result of public spending. That is, when the public spending is more, individuals get that spending as their salary and once they receive it as salary, they can spend more. This appears as a spiral - more public spending --> more individual revenue-->more individual spending --> more tax collection --> more government revenue-->...... Or to keep the government revenue more, individual spending have to be more, for that, public spending have to be much more. No way to repay the government/public debt.


Hence the only possible way to get more revenue is get it from foreign trade. That is produce in one country, for the consumers in other countries. The consumers who have more money (surplus budget)  only can purchase the consumable of other countries. In other words, if a country which is already having public debt is consuming the products of other nations, it is actually increasing its debt.


I think, at this point, it will be helpful to understand, what is the price of any commodity according to Carl Marx. According to Carl Marx, (as I understand from little bit reading of Carl Marx) the price of any commodity is the price of labor spent on producing it. The raw material for the product is taken from nature free of cost. But labor is spent on extracting it from nature. Probably a commodity takes it final form after numerous intermediate forms and  each intermediate forms consume labor and the price of final product includes the labor of all intermediate forms.


Based on this principle, more consumption means consuming more labor as well as more natural resources. Now I think, we need to analyse two cases. 1) By consuming more, Are the economies really getting any better? 2) Do we have enough natural resources in earth to withstand the consumption spree of human species?


Based on above discussion, for a country to get free from its public debt, there must be budget surplus consumers in some other part of Globe. (Even a country can get its public debt cleared by means of trade with budget deficit countries,  but in this case at the cost of other country).
Now let us analyse some statistics. All the so called wealthy nations are having public debt greater than their GDPs. (Figures taken from internet resources - may not be exact value)
                 
Country
Public debt (%age of GDP)
Japan
237
China
200
Grease
170
Italy
130
Portugal
130
Ireland
125
Cyprus
110
Belgium
105
USA
101
Spain
98
UK
90
......
.....
India
67

When the public debt of so called wealthy nations are close to 100% of their respective GDPs,  who is going to consume more to get them free from public debt? Let us have another statistic about budget deficit of nearly 200 countries at http://mecometer.com/topic/budget-surplus-deficit/. It indicates most of the nations which are having budget surplus are at middle east and far east. And the GDP of many of them are negligible. Furthermore, the world as a whole is budget deficit with -3.8 % of world's GDP. This data is for the year 2013.


For a world, which is spending more than its whole revenue, how is it going to repay its debt? Is it possible to find another world to trade and hence earn money? it seems to be impossible.
However the wealthy nations are spending more on the hope of getting it free from debt, which seems to be impossible any way. Yes, it may possible in one case - By getting the wealth of poor nations and, on its way make them extinct from earth - that is the only way out available for the so called wealthy nations , it seems. However we keep on spending....


Let us analyse the case with respect to natural resources and cost of commodities. As per Carl Marx's theory, to get more value, more labor to be employed on converting natural resources into commodities. On this conversion, on one side we extinct the resources of earth- earth has its own intelligent, it will rebalance itself. When we wait for the earth to rebalance itself, the outcome will be catastrophic to human being and other life forms on earth. On the other side the available labor is exponentially getting increased and in turn consumption is getting increased. We had little more than 1 billion humans in earth a century ago. Now it is more than 7 billion. With increased productivity of humans, we are consuming resources of earth at much faster rate - And natural rebalancing of earth may appear much sooner....

Let us think over at individual level. If we do, then the nations will start acting on it.


blog.change@gmail.com

Tuesday, April 15, 2014

பொது ஜனம், நாம், அரசியல்

இன்று படிக்க நேர்ந்த இரண்டு பதிவுகள், அரசியல் அதிகாரம் சுதந்திரம் சுற்று சூழல் கல்வி சூழல் ஆகியவற்றை பற்றிய எண்ணங்களை மனதில் அசைபோட தூண்டியது. இதில் ஒன்று THE REAL POLITICS என்னும் இந்த பதிவு. இதை எழுதியவர் Donnachada McCarthy என்பவர். இவர் பிரிட்டனின் Liberal Democrats என்னும் கட்சியின் முன்னாள் துணை தலைவர். இவர் தற்போது சுற்றுசூழல் குறித்த தன்னார்வ இயக்கங்களில் இருக்கிறார். கீழே கொடுத்திருப்பது, அவரின் பதிவிலிருந்து சில கருத்துகள்.

நாம் தற்போது ஜனநாயகம் என கொண்டாடுவது உண்மையில் ஜனநாயகம் இல்லை. நாம் வாழ்வது ஜனநாயகத்தின் பண்புகளை கொண்ட ஜனநாயகத்தில் அல்ல. இது ஒரு ஊழல் ஜனநாயகம். ஏன் இதை ஊழல் ஜனநாகம் என கூறுகிறார் என்பதை அவர் துணைதலைவராக இருந்த கட்சியின் நிகழ்வுகளை கொண்டே விளக்கியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சியின் உள்ளிருப்பவராக, அதன் இயங்கு விதிகளை அறிந்தவராக, பிரிட்டனில் உள்ள மூன்று முக்கிய கட்சிகளிலும் இதுவே நிலைமை என்பதை விளக்குகிறார். இன்றைய ஜனநாயகம் பெருநிறுவனங்களின் அரசியல் ஆதாயம் திரட்டுபவர்களால் (Corporate Lobyist) வழி நடத்தப்படுகிறது.

இன்றைய கல்வித்துறை, தொடக்க நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைவரை, உண்மையில் கல்வியாளர்களால் நடத்தப்படவில்லை.  அனைத்து நிலைகளிலும் எவ்வாறு கல்வி நடைபெறவேண்டும் என்பது பெருநிறுவனங்களால் முடிவு செய்யப்படுகிறது. அதாவது வருங்கால கலவியாளர்களின் சுயஅறிவு முற்றிலும் பெருநிறுவனங்களால் அழிக்கப்பட்டு, அவர்களின் சிந்தனையின் அடிப்படை அவற்றின் வியாபார நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படுகிறது. இதன் அர்த்தம், எதிர்காலத்தில் சுயஅறிவுடன் இருக்கும் எந்த அறிவுஜீவிகளும் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். இதன் விளைவை என்னை இன்று பாதித்த இரண்டாவது பதிவு விளக்குகிறது.

 அடுத்ததாக வரி புகலிடம்(Tax Haven). இந்த வரிபுகலிடம் என்னும் வரிஏய்ப்பு வாய்ப்பை உபயோகப்படுத்தும் நிலையில் உள்ள பெருநிறுவனங்கள்அனைத்தும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பெருந்தொகையை கப்பமாக செலுத்துகின்றன். இதன் மூலம் வரிஏய்ப்பு செய்ய உதவும் எல்லா வாய்ப்புகளையும் சட்டபூர்வமானதாக இருக்க வைக்கின்றன.

இறுதியாக பெருநிறுவனங்களால் கைப்பற்றப்பட்ட ஊடகங்கள். பிரிட்டனில் மிகப்பெரும்பான்மையான ஊடகங்கள், மற்ற தொழில்களில் பெருமளவு அக்கறையுள்ள பெருநிறுவனங்களால் நடத்தப்படுகிறது. எனவே இயற்கையாகவே எல்ல ஊடகங்களும் அவற்றின் உரிமையாளர்களின் சுயலாப (ஊடக தொழிலில் பெறும் இலாபம் அல்ல, ஊடகத்தின் மூலம் நிறுவனங்களின் முக்கிய தொழில்களின் இலாபங்கள்) நோக்கங்களுக்காகவே நடத்தப்படுகிறது. இவர் இந்த பதிவில் கூறியிருப்பது பிரிட்டனின் ஜனநாயகத்தை பற்றியே. இதுவே உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகங்களின், சற்றேறக்குறைய, உள்ள நிலைமை என்பது வெளிப்படை.

இரண்டாவதாக என்னைப்பாதித்த பதிவு, ஜெயமோகன் அவர்களின் 'ஜோ - சில வினாக்கள்'. இந்த பதிவில், இந்த வருடத்திய சாகித்தய அகாதமி பரிசுபெற்ற எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் அவர்கள், வெளிப்படையாக இந்திய பிரதம வேட்பாளர் நரேந்திரமோடியை ஆதரித்ததால், இந்திய அறிவுலகத்திலிருந்து அவர் பெறும் எதிர்வினைகளை குறித்தது. அதாவது, இந்திய அறிவியக்கம் எவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைபாடு சார்ந்து மட்டுமே இயங்குகிறது என்பதையும், எந்த மாற்று கருத்துகளையும் அது எவ்வாறு நசுக்குகிறது என்பதையும், மிக விரிவாக, தணியாத ஆற்றாமையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பதிவின் உச்சமாக நான் நினைப்பது, சாகித்ய அகாதமி விருது தேர்வுகுழுவில் இருந்த ஒருவர், ஜோ.டி.குரூஸ் அவர்களின் அரசியல் நிலைபாடு முன்பே தெரிந்திருந்தால், அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்க மாட்டாது என்னும் அர்த்தத்தில் கூறியிருப்பதை பற்றியது. அதாவது நமது அறிவு இயக்கத்தில், அவரின் அரசியல் நிலைபாடே அவர் தகுதியை நிர்ணயிக்கிறது.

ஜோ.டி.குரூஸ் அவர்களின் முந்தைய நாவலான 'ஆழிசூழ் உலகு' என்னும் நாவல் (இந்த நாவலை ஒரு முறைக்கு மேல் படித்திருக்கிறேன், நான் முழு ஆர்வத்துடன் படித்த நாவல்களில் ஒன்று) இன்னொரு மொழியில் வெளியிடவேண்டி மொழியாக்கம் செய்யப்பட்டு, தற்போது அவரது அரசியல் நிலைபாட்டின் காரணமாக, அந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. நம் இந்திய அறிவியக்கம் உண்மையில் எங்கே இருக்கிறது? உண்மையில் இங்கு அறிவியக்கம் என ஒன்று உள்ளதா?

இந்த ஜனநாயகத்தின் அங்கத்தினர்களாக வாழும், கற்றவர்கள் என நம்மை நாமே கூறிக்கொள்ளும், நாம் எவ்வாறு இவற்றை எதிர்கொள்வது. எப்போதும் போல அரசாள்பவர்களையும், அரசியல் தலைவர்களையும், பெருநிறுவனங்களின் லாபநோக்கையும் குறை கூறிவிட்டு, மிக எளிதாக, எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இந்த அவலங்களை கடந்து செல்லலாம். சற்று சிந்திப்பவர்களாக இருந்தால், தத்துவங்களை நமக்கு துணையாக அழைத்து, சற்று கடினத்துடன் கடந்து செல்லலாம். நாம் பிறந்தது முதல் இதுவே நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. நாம் தான் உண்மையிலேயே கற்றவர்கள்! - இந்த சூறையாடப்பட்ட கல்வி முறையின், சூறையாடப்பட்ட ஊடகங்களின் துணைகொண்டு!

மேலை கூறப்பட்ட வழிகளில், இந்த பிரச்சினையை நம்மால் கடந்து செல்ல முடியாவிட்டால், இவற்றை எதிர்கொள்ள நாம் செயலாற்றலாம். அந்த செயல், உண்மையில் நாம் அத்தகைய செயலாற்ற விரும்பினால், அவற்றை கடந்து செல்வதை விட எளிதானதாக கூட இருக்கலாம். ஆம் நாம் செய்யவேண்டியதெல்லாம் நம் அறிவை மறுபரிசீலனை செய்வதைதான். நம் அறிவின் உண்மை தன்மையை, அல்லது நாம் பெற்றிருக்கும் அறிவு உண்மையுடன் உள்ள தூரம் என்பதைதான். நம் அறிவு என நாம் கொண்டாடுவது நாம் கொண்டிருக்கும் முன்முடிவுகளையே. நாம் ஆராய வேண்டியது அந்த முன்முடிவுகளையும், அவற்றின் காரணங்களையும்.


ஒருவேளை குறைந்த பட்ச நேர்மையுடன் நம்மை மறுபரிசீலனை செய்ய முடிந்தால், இந்த பிரச்சினைகளுக்கு நாம் எவ்வாறு செயலாற்ற முடியலாம் என்பது புலப்படலாம். அது, செயலாற்றாமல், இவற்றை கடந்து செல்வதை விட எளிதானதாகவோ அல்லது கடினமாகவோ இருக்கலாம் - நாம் அடையும் சுயபரிசோதனையின் முடிவையும், நம் இயல்பையும் பொறுத்து! பொது தேர்தல் நடைபெறும் இந்த காலகட்டம், இத்தகைய மறுபரீசலனைக்கு ஏற்ற காலம் என்பதே என் கருத்து.

blog.change@gmail.com

Tuesday, April 8, 2014

நுகர்வு, பொருளாதாரம்.

உலகத்தின் எல்லா நாடுகளின் தலைமைகளுக்கும் எந்த காலத்திற்குமான ஒரே நோக்கம் பொருளாதார முன்னேற்றம். பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் பாதுகாப்பும், குடிமக்களின் சுபிட்சமும் அடையப்படுவது அரசுகளின் இறுதி நோக்கமாக இருக்கலாம். ஆனால் பொருளாதார முன்னேற்றத்தின் மூலம் பாதுகாப்பும் குடிமக்கள் சுபிட்சமும் உண்மையிலேயே அடையப்படுகிறதா என்பது சந்தேகத்திற்கிடமானதே.

பொருளாதாரம் என்பது பொருட்களின் சுற்றோட்டமும் (Circulation), அதன் மூலம் அல்லது காரணமாக நடைபெறும் பணத்தின் சுற்றோட்டமும் ஆகும். அல்லது பொருளாதாரம் என்பது குடிமக்களிடம் நடைபெறும் பணத்தின் சுற்றோட்டமும் அதன் மூலம் நிகழும் நுகர்வுமே. ஆம், பொருட்கள் நுகரப்படுவதற்காகவே சுற்றோட்டத்தில் விடப்படுகிறது. பணத்தின் மூலம் குடிமக்களால் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பின் நுகரப்படுகிறது.

உலகத்தில் நிகழும் மொத்த உற்பத்தி, நிகழும் மொத்த நுகர்வுக்கு சற்றேறக்குறைய சமமாகவே இருக்கும். உற்பத்தி நுகர்வை விட அதிகமாக இருந்தால் தேக்கநிலையும், குறைவாக இருந்தால் பற்றாகுறையும் ஏற்படும். அந்த தேக்கநிலை அல்லது பற்றாகுறைக்கு ஏற்றவகையில் பொருட்களின் உற்பத்தி விகிதம் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம் உற்பத்திக்கும் நுகர்வுக்குமான சமன்நிலை பேணப்படும்.

ஆனால் உற்பத்திக்கும் நுகர்வுக்குமான சமநிலை தவறுதல், மாறும் இயற்கை காரணிகளை பொறுத்து இருக்கும்போது, உற்பத்தி விகிதத்தை மாற்றியமைத்தல் நிகழாமல் இருக்கலாம். உதாரணமாக விவசாய உற்பத்தி. விவசாயத்திற்கு தேவையான நீர் வளம் மற்றும் மண்வளம், ஒரு குறிப்பிட்ட வரம்பை உடையது. அந்த வரம்பிற்கு மேல் நீர் வளத்தையோ அல்லது மண்வளத்தையோ அதிகரிக்கும் மனிதனின் முயற்சிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மறை விளைவுகளை உருவாக்கலாம். எனவே விவசாய பொருட்களின் நுகர்வும் அந்த வரம்பிற்குட்பட்டே இருக்கும். ஆனால் விவசாய பொருட்களின் நுகர்வு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற காரணிகளால் அதிகரிக்கும்போது, உற்பத்தியும் அதிகரித்தாக வேண்டும். முன்பே கூறியபடி, அந்த உற்பத்தி அதிகரிப்பு, தவிர்க்க முடியாத எதிர் விளைவுகளுடன் மட்டுமே அடைய முடியும். ஆக உலக நாடுகளின் தலைமைகள், அவை உண்மையிலேயே குடிமக்களின் பாதுகாப்பையும் சுபிட்சத்தையும் உத்தேசித்திருந்தால், நுகர்வு உற்பத்தியின் வரம்புகளிலிருந்து வெளியேறாத படி குடிமக்களின் இயல்பை அமைத்திருக்க வேண்டும். இன்னும் கூறப்போனால், பொறுப்புணர்வுள்ள எந்த குடிமக்களும், தங்கள் நுகர்வு தத்தமது அத்தியாவசிய தேவை மற்றும் பண உற்பத்தியின் அளவை கடக்காமலும், உபரி பணம் இருந்தால் தங்கள் நுகர்வு தத்தமது தேவை மற்றும் தத்தமது நாடு மற்றும் உலகின் உற்பத்தி நுகர்வு சமநிலையை குலைக்காதவாறும் அமைத்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

முன்பே கூறியபடி, எல்லா நாடுகளின் ஆட்சியாளர்களும் தமது நாட்டின் பொருளாதாரத்தையை முழுமுதல் குறிக்கோளாக கொண்டுள்ளனர்.(ஒரு சில ஆட்சியாளர்களை தவிர்த்து - அவர்களுக்கு தத்தமது சொந்த பொருளாதாரமே குறிக்கோள்) நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அதன் மொத்த உற்பத்தியால் (GDP) குறிக்கப்படுகிறது. எல்லா நாடுகளும் அவற்றின் மொத்த உற்பத்தி ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதிகரிப்பதற்கான முயற்சியில் இடைவிடாது ஈடுபடுகின்றன - தங்களால் முடியாவிட்டால் பிற நாடுகளை சுரண்டுவதன் மூலம்! அதாவது அவை எந்த அளவுக்கு தங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிக்க விழைகிறார்களோ அந்த அளவுக்கு தங்கள் நாட்டின் அல்லது உலகின் மற்ற பகுதியில் அவர்கள் உற்பத்தி பொருட்களுக்கான நுகர்வு அதிகரித்தாக வேண்டும்.

எந்த ஒரு பொருளின் உற்பத்தியும் இயற்கையில் நம் பூமியில் உள்ளவற்றை, அவை மனிதனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் வகையில் மாற்றியமைப்பதன் மூலமே நிகழ்கிறது. அதாவது நம் நுகர்வுக்கான எல்லா பொருள்களும் இயற்கையில் உள்ளவற்றை மாற்றியமைப்பதன் மூலமே பெறப்படுகிறது. எவையும் ஒன்றுமின்மையிலிருந்து பெறப்படுவதில்லை. இங்கு நாம் இரண்டு விளைவுகளை ஆராய்ந்தாக வேண்டும். முதலாவதாக மாற்றியமைக்கப்பட்டு புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள் நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பது. இரண்டாவது, புதிதாக உற்பத்திசெய்யப்பட்டுள்ள பொருள் அது உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் அல்லது மூலப்பொருள் இன்னொன்றாக மாற்றியமைக்கப்படுவதன் மூலம் மனித இனத்துக்கும் பூமியில் வாழும் மற்ற உயிரினங்களுக்குமான வாழ்க்கை சூழலின் சமன் நிலையை எவ்வாறு குலைக்கிறது என்பது. 
மேலே கூறப்பட்ட இரண்டு விளைவுகளும், ஒரு பொருளை நுகர்வதற்கு முன் ஆராயப்பட்டாக வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது விளைவை நம்மில் எவரும், நம் சொந்த நுகர்வுடன் துளி கூட தொடர்புபடுத்தி காண்பதில்லை. 

உலகமெங்கும், அடிப்படை தேவைகளுக்கான நுகர்வு சாதனங்களை பெற இயலாத மக்கள் பல்வேறு விகிதாச்சாரங்களில் இன்னும் உள்ளனர். இருந்தாலும் பெரும்பாலான நாடுகளில், முதலாளித்துவம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவாக, உலக மொத்த உற்பத்தியை (World GDP) அதிகரிக்கும் படியாக நுகர்வு உருவாக்கப்படுகிறது. ஆம், உண்மையில் பொருட்கள் நுகரப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், தங்கள் பொருளாதரத்தை உயர்த்துவதற்காக உலக மக்களை நுகர கட்டாயப்படுத்துகின்றன - பெரும்பாலும் மறைமுக அழுத்தத்தை அளிப்பதன் மூலம். இந்த மறைமுக அழுத்தம் சலுகைகள் என்ற பெயரில் கூட இருக்கலாம். உதாரணமாக அமெரிக்காவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் Quantitative Easing எனப்படும் பணப்புழக்கத்திற்கான ஏற்பாடு - ஒரு பெரும் நாடு, அதன் பொருளாதார தேக்க நிலையிலிருந்து வெளிப்படுவதற்காக, மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்ய எளிதான வட்டியில்லாத கடன் அளித்தல். ஆம் குடிமக்களை அளவில்லாமல் நுகருங்கள் என கொடுக்கும், ஆட்சியாளர்களின் மறைமுக அழுத்தம்!

உண்மையில் பொருளாதாரம் என்பது, இயற்கை பொருட்களை உள்ளவாறோ அல்லது உருவமாற்றத்திற்கு உட்படுத்தியோ மனிதனின் நுகர்வுக்கு உட்படுத்தும் இயக்கமே ஆகும். அந்த இயக்கம் பணம் என்னும் பொருளால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆக பொருளாதார முன்னேற்றம் எனப்படுவது, இயற்கையை எந்த அளவுக்கு மனிதன் பயன்படுத்தும் பொருள்களாக மாற்றப்படுகிறது என்பதே. வேறு வார்த்தைகளில் கூறினால் இயற்கை மனிதனால் நுகரப்படும் அளவே உலகத்தின் உற்பத்தி திறன் எனப்படுகிறது.

உலகம் முழுவதும் பொருளாதார மேதைகள் இயற்கையை நுகரும் வழிகளை குடிமக்கள் மேல் அழுத்தும்போது, இயற்கையின் மறுஉற்பத்தி திறனைப்பற்றிய எவ்வித கவலையும் அல்லது அறிதலும் இல்லாமல், மனித இனத்தின் அழிவுக்கே அடிகோலுகிறார்கள் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பொருளாதார மேதைகளின் அழுத்தத்தால், சாதாரண மனிதர்களாகிய நாமும் நம் பொருளாதார தகுதிக்கு அப்பாற்பட்ட நுகர்வுக்காக அலைபாய்கிறோம் - நம் நுகர்வின் மூலம் நம் வருங்கால சந்ததியினருக்கான அடிப்படை நுகர்வு சாதனங்களையும் இல்லாமல் செய்கிறோம் என்னும் பிரக்ஞ்சையே இல்லாமல்!

இயற்கை தன்னைத்தானே மறுஉற்பத்தி செய்யும் இயல்புடையது - அதன் சமன் நிலையை குலைக்காதவரை. ஆனால் இன்றைய நம் நுகர்வின் தன்மையையும், அந்நுகர்வுக்கு பூமியின் எதிர்வினைகளையையும் காணும்போது அந்த சமன் நிலை குலைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக இன்றைய விவசாய முறைகளால், சிறு உயிரினங்களின் சமன்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கையின் மறுஉற்பத்தி அந்த இயற்கையில் வாழும் உயிரினங்களாலே நடைபெறுகிறது. உயிரினங்களின் சமன் நிலை குலையும்போது இயற்கையின் மறு உற்பத்தியும் குலைகிறது. இயற்கை மறுஉற்பத்தி செய்யாமல் இருந்தால், நம் சந்ததியினரின் அடிப்படை நுகர்வு சாதனங்கள் இயற்கையில் இல்லாமல் போகலாம். அந்த நிலைமையில் நம் வருங்கால சந்ததியினர் உயிர் வாழ்வதற்கான சாத்தியம், அவர்கள் எவ்வாறு பரிணாம மாற்றம் அடைந்து, இயற்கையில் அவர்கள் காலத்தில் உள்ள பொருள்களை நுகர தக்கவர்களாக மாறுகிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது. ஆனால் பரிணாம மாற்றம் குறைந்த காலத்தில், ஒரு சில தலைமுறைகளில் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே நம் சந்ததியினர் இந்த பூமியில் வாழ்வார்களா இல்லையா என்பது, நமது நுகர்வின் தன்மையை பொறுத்தே உள்ளது.

தற்போது உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஜனநாயக நாடுகளே. அந்நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் நாட்டு மக்களின் சரசரி விருப்பத்தையே பிரதிபலிப்பார்கள். எனவே நாம் ஒவ்வொருவரும், நம் சந்ததியினரின் அழிவிற்கு அல்லது வாழ்விற்கு சம அளவு பொறுப்படையவர்கள். குறுகிய சுயநல நோக்குள்ளவர்களுக்கு அதிகாரத்தை அளிப்பதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் மனித இன அழிவிற்கு நம் பங்கை அளிக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஆட்சி பொறுப்பிற்கு உண்மையான அறிவுஜீவிகளை அனுப்புவதன் மூலம், பொருளாதாரத்தை மக்களின் உண்மையான சுபிட்சத்தோடு அணுகும் ஆட்சியாளர்களை நம்மால் பெற இயலலாம். அவ்வாறு பெற முடிந்தால், நாம் ஆசியளிக்கப்பட்டவர்கள்.

ஆன்மீக ரீதியிலும் நம் தனிப்பட்ட நுகர்வின் தன்மை ஆதிக்கம் செலுத்தலாம். வாழ்க்கை என்பது ஒயாத நுகர்வு. ஆனால் வாழ்க்கையே நுகர்வு என்பதற்கும் நுகர்வே வாழ்க்கை எனபதற்கும் இடையில் அளவிட முடியாத இடைவெளி உள்ளது. வாழ்க்கையே நுகர்வு என்பதில், நம் வாழ்க்கையை வாழும்போது, அந்தந்த நேரத்தில் வாழ்க்கையின் இயக்கத்திற்கு எத்தகைய நுகர்வு தேவைப்படுகிறதோ, அதை மட்டும் நுகர்வோம். ஆனால் நுகர்வே வாழ்க்கையாகும்போது, நம் வாழ்க்கையை சுற்றுபுறத்தில் உள்ள பொருள்களுக்காக மாற்றியமைக்க முயற்சிப்போம். நம் உண்மையான தேவைகளை புறந்தள்ளி, மன மயக்கம் நம் தேவைகள் எவை என கூறுகின்றதோ அவற்றைமட்டும் நுகர ஓயாத முயற்சி செய்துகொண்டிருப்போம்.

தனிப்பட்ட வகையில், இன்று, நம்மில் பெரும்பான்மையானவர்களின் நுகர்வுக்கும், அவர்கள் தேவைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நம்மை சுற்றி இருப்பவர்களின் விருப்பத்திற்காகவும், சுற்றி இருப்பவர்களிடம் நம் பெருமையை பறை சாற்றுவதற்குமாகவே நம் நுகர்வு இன்றையநிலையில் உள்ளது. இன்னும் ஆழமாக நோக்கினால், சுற்றி இருப்பவர்கள் நாம் என்ன நுகர வேண்டும் என விரும்புவதை நாம் நுகர்ந்து கொண்டிருப்பதை விட, சுற்றி இருப்பவர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் மன பிம்பங்களின் விருப்பங்களுக்கேற்பவும, அந்த மன பிம்பங்களிடம் நம் பெருமையை பறை சாற்றுவதற்குமாகவே நாம் இன்று இயற்கையை இத்தகைய வெறியுடன் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நுகர்வில் நம் வாழ்க்கையை முற்றிலும் மறந்தும் விட்டிருக்கிறோம். அத்துடன், இவ்வுலகை நம் சந்நததியினருக்கு விட்டு செல்ல வேண்டும் என்பதையும் மறந்து விட்டோம்.


அதிர்ஷ்டவசமாக, இங்கொன்றும் அங்கொன்றுமாக கட்டுபாடுகளற்ற நுகர்வை குறித்த விழிப்புணர்வு குரல்கள் உரக்க ஒலிக்கின்றன. அக்குரல்களின் தன்மை, அவை இன்னும் பெருகும் என்பதையும் சுட்டுகின்றன! இயற்கையிலிருந்து நமக்கு தேவையானவற்றை மட்டும் நுகர்வோம்! இயற்கையை மறுஉற்பத்தி செய்ய அனுமதிப்போம்! நம் சந்ததியினர், இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்ந்து, மனித உயிரினத்தின் உச்சத்தை அடைய வாழ்த்துவோம்! ஆம், அவ்வாறே ஆகட்டும்!

தொடர்புடைய பதிவுகள்



blog.change@gmail.com



Friday, March 7, 2014

காமம்

உலக இருப்பில் உள்ள எல்லா ஆண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் பெண்மை என்னும் சக்தி வடிவங்களுக்கும் இடையே இயல்பாகவே இருக்கும், ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாக விரும்பும் மகா இச்சை, காமம் என்னும் பெயரால் சுட்டப்படுகிறது. எங்கெல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்து மற்றொன்று உருவாகிறதோ அங்கெல்லாம் காமம் என்னும் மகாஇச்சையின் இயக்கம் இருப்பதாக கொள்ளலாம். காமமே உலகின் இயங்கு விசை. ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி, புதியதொன்றை உருவாக்கி, தாம் அழிந்து புதியதை தொடர் இயக்கத்தில் சேர்க்கும் மகா இயக்கம். காமம் என்னும் இச்சை எங்கும், எப்போதும், எல்லாவற்றிலும் தொடக்கம் முடிவு இல்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. காமத்தின் இயக்கம் அழியும்போது உலக இயக்கமும் அழியும்.

ஆம், காமம் நம் வணக்கத்துக்குரியது. காமமே நம் படைப்புக்கு ஆதாரம், நம் இருப்புக்கும் படைத்தலுக்கும் ஆதாரம், நம் அழிவுக்கும் ஆதாரம். அதற்கான வணக்கத்தை நாம் முறையாக செலுத்தியாக வேண்டும். அதற்கான வணக்கத்தை மறுக்கும்போது, காமம் நம்மை அலைக்கழிக்கிறது. அப்போது நாம் அதை வெறுக்கத் தொடங்குகிறோம். மற்றவர்களையும் அதை வெறுக்குமாறு கூறுகிறோம். அடுத்த தலைமுறைக்கும் அந்த வெறுப்பை பரப்புகிறோம். வெறுப்பின் பிரதிபலிப்பாக காமத்தை கொச்சைப்படுத்துகிறோம். ஆம், என்று காமம் மனிதனை அலைக்கழிக்க தொடங்கியதோ அன்றே அதை கொச்சைப்படுத்துதலும் தொடங்கியிருக்க வேண்டும்.

ஒரு முழு இருப்பாக நாம் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். ஆனால் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்மையும் பெண்மையும் கலந்தே இருக்கிறது. நமக்குள் இருக்கும் ஆண்மையும் பெண்மையும் கலந்து ஒன்றாகத் துடிக்கும் இயல்பும் காமமே. அந்த ஆண்மையும் பெண்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றாகி முழுமையடையும்போது நாமும் முழுமை அடைந்திருப்போம். நமக்குள் இருக்கும் எல்லா ஆதிக்க இயல்புகளும், வெறி கொண்டு அடைய துடிக்கும் இயல்புகளும், முன்னோக்கி உந்தித் தள்ளும் இயல்புகளும் நம் ஆண்மை இயல்புகள் எனலாம். அந்த ஆதிக்கத்தை, வெறியை, உந்துதலை தன்னுள் அடக்கி, அவற்றின் நோக்கத்தை அடைய செய்து, அவற்றை இல்லாமல் செய்யும் இயல்புகளை பெண்மை இயல்புகள் எனலாம். எனவே எவரிடம் ஆண்மை இயக்கமும் பெண்மை இயக்கமும் ஒத்திசைந்து இயங்குகின்றனவோ, அவர்களின் வாழ்க்கை அந்த வாழ்க்கையின் நோக்கத்தை நோக்கி இயல்பாகவே சென்று கொண்டிருக்கும்.

தன்னுள் ஆண்மையையும் பெண்மையையும் முழுமையாக சமன் செய்யும் இயக்கங்களை இயல்பாகவே கொண்ட ஒருவருக்கு, இன்னொரு பெண்ணின் அல்லது ஆணின் துணை தேவை இல்லை. தனக்குள் உள்ள ஆண்மையையும் பெண்மையையும் கொண்டே அவர் தன்னை நிறைவு செய்து கொள்ள முடியும். மனிதர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் இத்தகைய இயல்புடையவர்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் தன்னுள் உள்ள எந்த ஆண்மை அல்லது பெண்மையை சமன் செய்ய இன்னொரு துணை தேவைப்படுகிறது என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும். அந்த அறிதலே இன்னொரு துணையின் மூலம் தன்னை சமநிலைக்கு எடுத்து சென்று முழுமையை நோக்கி நகர வைக்கும்.

இன்றைய குடும்ப சுழல்களை குறித்த ஒரு புறவயமான பார்வையே, காமம் குறித்த அல்லது ஆண்மை பெண்மை குறித்த அடிப்படை புரிதல்கள் சற்றும் இல்லாத சமூக சூழல் நிலவுவதை உறுதி செய்ய போதுமானது. பெரும்பாலான குடும்பங்கள் இன்று குடும்பங்களாக இருப்பது வெறும் சமூக கட்டாயத்தினால் மட்டுமே. அந்த குடும்பங்களுக்குள் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்கள் ஏதேனும் இருந்தால் அவை வெறும் தற்செயலால் மட்டுமே உள்ளன. கட்டாயத்தின் மூலம் உருவாக்கப்படும் எந்த அமைப்புகளிலும் அமைதி இருக்க வாய்ப்பில்லை. அந்த குடும்பத்தின் தலைவர்கள் காமத்தை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை. அவர்கள் அறிந்த காமம் வெறும் கொச்சையான காமம் மட்டுமே. மனித அகங்காரம் கட்டாயத்தின் மூலம் நிலைநிறுத்தும் எந்த இயக்கங்களையும் தொடர்ந்து எதிர்க்கும். இதுவே பெரும்பாலான குடும்பங்களின் தற்போதைய நிலை - ஒரு பொதுவான பார்வையில். (இது பார்வையின் குறைபாடாக கூட இருக்கலாம்).

ஆண்மை மற்றும் பெண்மை குறித்த புரிதல்கள், ஆண்மையின் மற்றும் பெண்மையின் இயற்கையான மற்றும் புறவயமான ஈர்ப்புகளை முழுமையாக அடைவதன் மூலம், பூர்த்தி செய்வதன் மூலம் பெற தொடங்கலாம். ஆனால் அகங்காரம் இதற்கு தடையாக இருக்கும் ஒரு மிகப்பெரிய வேலி. ஆண்மையும் பெண்மையும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் இயக்கங்களிலாவது, அந்த இயக்கங்கள் முழு விசையில் இருக்கும்போதாவது, அகங்காரம் முழுமையாக அழிய வேண்டும். அத்தகைய அகங்கார அழிவுக்கு வழிவிடாத எந்த ஒருவரும் காமத்தின் சுவையின் துளியை கூட சுவைக்க முடியாது. ஆனால் இயற்கை பெருங்கருணை உடையது. ஆண்மையும் பெண்மையும் சமன் செய்யும் இயக்கத்தில் எண்ணங்களற்ற கண நேரத்தை, அல்லது அந்த கணத்தின் சிறு பகுதி நேர கால இடைவெளியை நமக்கு அளிக்கிறது. எண்ணங்கள் அழியும்போது அகங்காரம் இல்லை. இயற்கையின் பெருங்கருணையை ஏற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்களாக நம்மை அமைத்திருந்தால், அந்த சிறு நேர வெளியில், முழுமையின் துளியை அறிய முடியலாம். அந்த அறிதலில் இருந்து நம்மை முழுமை செய்யும் இயக்கங்களை நோக்கி நகரவும் முடியலாம்.

ஆம், அகங்காரத்தை துறத்தலே, வாழ்வதற்கான ஒரே வழி. அகங்காரத்தை துறக்க எண்ணற்ற வழிகள் இருக்கலாம். இயற்கை, காமத்தின் மூலம், அகங்காரத்தை துறத்தலின் இனிமையை அறியும் வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறது. இது ஒரு சாத்தியம் மட்டுமே. அந்த சாத்தியம், ஒரு பொறியும் கூட. ஆம், வாழ்க்கை ஒரு விளையாட்டு. வாழ்க்கையின் எல்லா சாத்தியங்களுடனும், நம்மை பிணைக்கும் பொறிகளும் சேர்ந்தே உள்ளன. அந்த சாத்தியங்களையும் பொறிகளையும் அறிந்தவர்களாலேயே வாழ்க்கையை விளையாட முடியும். வாழ்க்கையை விளையாட முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்!

blog.change@gmail.com


Tuesday, March 4, 2014

துறவு

மிகப்பரந்த அர்த்தமுள்ள வார்த்தை. முழுமையாக புரிந்து கொள்ள மிக கடினமான வார்த்தை. எனினும் மிகப்பரவலாக உபயோகிக்கப்படும் வார்த்தை. இந்த வார்த்தை சுட்டும் பொருளை குறித்த ஆராய்ச்சி, நம் மனதில் பல சாளரங்களை திறக்க உதவலாம். அந்த சாளரங்கள் இந்த வார்த்தையின் பொருளை நோக்கி நம்மை கொண்டு செல்லவும் உதவலாம். பெரும்பாலும் நாம் துறவு என அறிந்திருப்பது, காவி அல்லது வெள்ளை உடை அணிந்து, சாதாரண மக்கள் விரும்பித் தேடும் சிலவற்றை தவிர்த்து, எண்ணற்ற மனகட்டுப்பாடுகளை விதித்து, பலவாறு தம்மைதாமே துன்புறுத்துவதையே - பல காரணங்களுக்காக! பெரும்பாலும் கடவுள் என்னும் காரணத்துக்காக! இந்த ஆராய்ச்சிக்கு, துறவு குறித்து நாம் கொண்டுள்ள முன்முடிவுகள் அனைத்தையும் சற்று ஒதுக்கிவைப்பது மிக அவசியம்.

துறவு என்பது, அதன் எளிய அர்த்தத்தில், நம்மிடம் இருக்கும் ஒன்றை துறப்பது. எதற்காக நாம் ஒன்றை துறக்க வேண்டும்? நாம் விரும்புபவற்றை பெறவேண்டுமானால், அதற்கு தடையாக இருப்பவற்றை நாம் துறந்தாகவேண்டும். அன்றாட வாழ்க்கைதளத்தில், நம் உடல் தினம்தோறும் தன் கழிவுகளை துறந்து, உணவிலிருந்து தன்னை மறுஉற்பத்தி செய்து கொள்கிறது. ஆம் இது ஒரு இயற்கை நியதி. தேவைஇல்லாதவற்றை அந்த கணமே துறந்து, நம்மை மறுஉற்பத்திசெய்வதற்கு தேவையானவற்றை அதற்கு பதிலாக பெறுவது. இந்த துறத்தலும் எடுத்தலுமே, அன்றாட வாழ்க்கை தளத்தில், நம்மை இயங்கச் செய்கிறது.

ஆக துறவு என்பது, நாம் ஒன்றை பெறுவதற்காக, அதற்கு தடையாக இருக்கும் மற்றொன்றை இழப்பது. துறவு என்னும் வார்த்தை அன்றாட வாழ்க்கை தளத்தில் உபயோகிக்கப்படுவதில்லை. ஆன்மீக தளத்திலேயே பெரும்பாலும் கூறப்படுகிறது. அதாவது ஆன்மீக தளத்தில் ஒன்றை பெறுவதற்காக, அன்றாட வாழ்க்கை தளத்தில் சிலவற்றை துறப்பதையே துறவு என்னும் வார்த்தை பெரும்பாலும் சுட்டுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் நாம் துறப்பவையும், அந்த துறப்பின் விளைவாகும் அடைதலும் வெவ்வேறு தளங்களில் உள்ளன.

உலகியல் துறவு, ஆன்மீக அடைதலாக பரிணாம மாற்றம் அடைய வேண்டுமானால், அந்த துறவு மிக இயல்பாக நம்முள் நடைபெற வேண்டும். வலுக்கட்டாயமாக கொள்ளும் துறவு, நம்மை எவ்வகையிலும் ஆன்மீகத்துக்கு அருகில் அழைத்து செல்லாது. மாறாக அது நம்மை ஆன்மீகத்திலிருந்து விலக்கவே செய்யும். துறவு என்பது நம் மனதில் நிகழும் ஒரு நிகழ்வு. துறவின் அடையாளமாக சுட்டப்படும் எந்த புறவயமான குறியீடுகளாலும் எவ்வகையிலும் துறவு என்னும் நிகழ்வை முழுமையாக அடையாளம் காட்ட இயலாது. குறியீடுகள் உண்மையான துறவையோ அல்லது துறவுக்கான ஆர்வத்தையோ குறிக்கலாம். உண்மையான துறவு புறவயமான குறியீடுகளுடனோ அல்லது குறியீடுகளை முற்றிலும் தவிர்த்தோ நிகழலாம். ஒரு தனிமனிதனின் துறவு சமூகத்தினுள் எந்தவிதமான பாதிப்புகளுக்கும் தேவை இல்லை என்றாலோ, அந்த மனிதனால் குறியீடுகளின் துணையின்றி துறவு மனப்பான்மையை இழக்காமல் வைத்திருக்க முடியும் என்றாலோ, அத்தகைய மனிதர்களுக்கு புறவயமான குறியீடுகளின் தேவை இல்லை.

ஆன்மீக தளத்தை நாம் அடைய வேண்டுமானால், லொகீக தளத்தில் சில அல்லது பலவற்றை நாம் துறந்தாக வேண்டும். ஆனால் அந்த துறவு நம் இருப்புக்கு மிக இயல்பானதாக இருக்க வேண்டும். எவ்வாறு இரு மனிதர்களின் இருப்பு ஒன்றுபோல் இருக்க முடிவதில்லையோ அதைப்போலவே இரு மனிதர்களின் துறவும் ஒன்றுபோல் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு ஆன்மீக அடைதலுக்கு நிச்சயமாக துறந்தாக வேண்டிய ஒன்று, மற்றொரு மனிதனால் துறக்கப்பட்டால், அந்த மனிதனை ஆன்மீகத்திலிருந்து வெகு தூரத்துக்கு விலக்குவதாகவும் இருக்கலாம்.

எந்த பற்றுதல்கள் நம் ஆன்மீக வாழ்க்கைக்கு தடையாகவும், அதே நேரத்தில் நம் லொகீக வழ்வில் தவிர்க்க கூடியனவாகவும் உள்ளனவோ, அவற்றையே நம்மால் இயல்பாக துறக்க முடியும். ஆம், இது ஒரு தெளிவற்ற கருத்தாக தோன்றலாம். எனவேதான் துறவு என்னும் பொறியில் விழுந்து பலர் தம் ஆன்மீக வாழ்க்கையையும் லொகீக வாழ்க்கையையும் இழந்து தவிக்கின்றனர். நம் இருப்பின் இயல்பினை கொண்டே நாம் எவற்றை துறக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். ஒருவேளை, ஆன்மீகம் அல்லது கடவுள் குறித்து உலகில் உலவும் கருத்துகளால் தூண்டப்பட்ட ஒருவர், ஆன்மீக சாதனைக்காக, தன் இயல்பான ஆசைகளை துறக்க முயன்றால், பெரும்பாலும் அவரால் ஆன்மீகத்தின் எந்த திசையையும் அடைய முடியாது. இத்தகைய மனிதர்கள் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள். ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாம் சந்திக்க நேர்ந்த இத்தகைய ஒரு மனிதரைக் குறித்து தம் எழுத்துகளில்\உரைகளில் பதிவு செய்திருக்கிறார். ஆன்மீக வெளியில் நாம் உற்று நோக்கினால், இத்தகைய மனிதர்களை எங்கும் காணலாம். இவர்களில் பலர் தம் வாழ்நாளில் இதனை உணர்வதில்லை. உணரும் வெகுசிலரும், அந்த உணர்தலை கடந்து சென்று தங்கள் பாதையை அமைத்துக்கொள்ளும் உறுதியையும் இழந்திருப்பர்.
பெரும்பாலான இந்திய ஞான தத்துவங்கள் இந்த உண்மையை தம் இயல்பாக கொண்டுள்ளன. எனவேதான் ஆன்மீக அடைதலுக்கு ஒற்றைப்பாதையை காட்டாமல் பலதளங்களில், பல திசைகளில் பாதைகளை காட்டுகின்றன. உதாரணமாக, பெரும்பாலான ஆன்மீக வழிகளில் காமம் விலக்கப்படுகிறது. ஆனால் காமத்தையே பாதையாக கொண்ட ஆன்மீக வழிகளையையும் இந்திய ஆன்மீக தத்துவங்கள் உரக்க கூறுகின்றன. ஆம், காமமே இயல்பானவர்களுக்கு காமமே ஆன்மீகத்திற்கான பாதை!

இங்கு, காமத்தை குறித்து சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த சில சொற்றொடர்கள்...
\\........ரதிவிஹாரிஎன்ற சொல்லைக் கண்டான். புவியிலுள்ள அனைத்தையும் பிரதிபலித்துவிடக்கூடியதுபோன்ற துல்லியத்துடன் அதை அறிந்தான்.
காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி
காமத்துடன் விளையாட எவருக்கேனும் முடியுமா என்ன? அது நோயுடன் விளையாடுவது போன்றது. அவ்விளையாட்டில் நோய் மட்டுமே வெல்லமுடியும். ஆனால் எப்போதேனும் எவரேனும் காமத்தை உள்ளும் புறமும் அறியமுடிந்தால் அவன் விளையாடமுடியும்.

இனியதொரு பரவசத்தில் விதுரன் நடுங்கினான். அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை............\\

blog.change@gmail.com

Saturday, March 1, 2014

உழைப்பு

பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு துகளுக்கும், மனிதர்களாகிய நம்மையும் சேர்த்து, உழைப்பு ஒரு தவிர்க்க முடியாத அம்சம். எந்த ஒரு துகளும் எத்தகைய அமைதியுடன் அமர்ந்திருந்தாலும், அதனுள் இடைவிடாத இயக்கம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். பொருட்களுக்கு அதன் அணுக்களின் இயக்கமும், அணுக்களுக்கு அணுத்துகள்களின் இயக்கமும், அணுத்துகள்களுக்கு அவற்றின் இருப்பின் அடிப்படையான சக்தியின் இயக்கங்களுமாக. எந்த ஒரு இயக்கத்திற்கும் சக்தி இன்றியமையாத தேவை. உழைப்பின் பயன் இயக்கம். எனவே உழைப்பை, இயக்கத்தின் மூலமாக நடைபெறும் சக்தியின் நுகர்வு என வரையறுக்கலாம்.

சக்தி, தோற்றமோ அழிவோ இல்லாதது. எனவே நுகரப்படும் சக்தி, அழியாமல் இன்னொரு வடிவில் வெளிப்பட்டாக வேண்டும். எனவே உழைப்பு என்பது, ஒரு பொருள் அல்லது உயிர், ஒரு வகை சக்தியை அதன் புறத்திலிருந்து பெற்று, இன்னொரு வகை சக்தியாக புறத்தே வெளியிடுவது அல்லது தன்னுள் அமர்ந்திருக்கும் சக்தியை இன்னொரு வகை சக்தியாக வெளியிட்டு, தான் இல்லாமல் அழிவது என்றும் கூறலாம்.

பிரபஞ்சத்தில் அழிவில்லாத ஒன்று என எதுவும் இல்லை எனக் கூறலாம் - சக்தியை தவிர! நம் உணரும் திறன் காலம் என்னும் தளத்தில் (Time Dimension) இருந்தால், தோற்றம் மற்றும் அழிவின் இடைவெளி, அந்த பொருளின் அல்லது உயிரினத்தின் இயல்பை பொறுத்து மாறலாம். அல்லது சில இருப்புகளின் தோற்றமும் முடிவும் நம்மால் உணர முடியாத காலவெளிக்கு அப்பால் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நுண்ணுயிரின் இருப்பு சில நிமிடங்கள் மட்டமே இருக்கலாம். ஒரு சிறு உயிர் சில நாட்களில் தோன்றி மறையலாம். விலங்குகள் சில வருடங்களில் தோன்றி மறையலாம். மனிதன் நூறு வருடங்களில் பிறந்து அழியலாம். ஒரு சிறு கல் சில நூறு ஆண்டுகளை, கல்லாக உருவெடுத்தது முதல் மணலாக மாறி அழிவதுவரை, எடுக்கலாம். நம் சூரிய மண்டலத்தின் நடு நாயகமான சூரியன் பல கோடி ஆண்டுகளில் அழியலாம். இன்னும்..... நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கால வெளியில் பிரபஞ்சம் அதன் தற்போதைய வடிவிலிருந்து வேறுவடிவுக்கு அழிந்தொழியலாம்.

நம் உணரும் திறன் காலம் என்னும் தளத்தை கடந்திருந்தால், பிரபஞ்சத்தின் எல்லா பொருட்களிலும் உயிரினங்களிலும் பிறப்பையும் அழிவையும் ஒவ்வொரு கணம் தோறும் காண முடியலாம். ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கணம் தோறும் இறந்து பிறப்பது பற்றி மிக அழகாக கூறியிருப்பார். அவர் கூறியது சற்றேறகுறைய, காலம் என்னும் தளத்தை கடந்து செல்ல நம்மால் முடிந்தால், ஒவ்வொரு கணமும் நாம் இறந்து பிறப்பதை அறிய முடியும். அதன் மூலம் ஒவ்வொரு கணமும் புது மனிதனாக, புது வாழ்க்கையையும் வாழ முடியும்.

ஆக இயக்கம், பிரபஞ்ச அளவில், நம் அறிவுக்கு எட்டும் வரையில், தொடக்கம் முடிவு இல்லாமல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. சிறு துகளை பொறுத்தவரையிலும் இதுவே. இடைபட்ட இயக்கங்களில், வெகு சில இயக்கங்கள் மட்டுமே நம் உணர்வுக்கும் அறிவுக்கும் எட்டும் தளங்களில் அமைந்துள்ளன. வேறு வார்த்தைகளில் கூறினால் எங்கும் எப்போதும் உழைப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களாகிய நாமும், விரும்பினாலும் இல்லாவிடினும், விழித்திருக்கும்போதும் உறங்கும்போதும் இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். சக்தியை இடைவிடாது நுகரும் உழைப்பாகிய இயக்கமே நம் இருப்பு, நம் வாழ்க்கை.

நம் வாழ்க்கையை அல்லது நம் இருப்பை அறிவது என்பது, நம் உழைப்பை அறிவதே ஆகும். அதாவது நம்மில் நிகழும் உழைப்பு அல்லது நம்மால் நிகழ்த்தப்படும் உழைப்பு, நம் விழிப்புணர்வுக்குள் நிகழ்வது, நம் வாழ்க்கையை அறிய சாத்தியமான ஒரு வழி. நாம் உழைப்பைகுறித்து அறிந்திருப்பது, பெரும்பாலும் நம்மால் நிகழ்த்தப்படும் உழைப்புகளின் மற்றும் அந்த உழைப்புகளின் விளைவுகளின் ஒரு மிகச்சிறிய பகுதியை மட்டுமே. அந்த சிறு துளியைக் கொண்டு நம்மை குறித்த ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்கிக்கொள்கிறோம். நம் இயல்பை தீர்மானிக்கிறோம். ஆம் அதுவே நம்மை குறித்து அறிவதற்கான முறை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அறிவை அடைந்த நம் உழைப்பின் சிறுதுளியிலிருந்தே நம் முழுமையை உருவகித்து, நம்மைகுறித்த ஒரு முன்முடிவை உருவாக்கிக்கொள்கிறோம். இந்த முன்முடிவின் மூலம் உழைப்பின் பிரவாகத்தையும், நம் எல்லையின்மையையும் நம் அறிதலில் தவற விட்டுவிடுகிறோம். வேறுவார்த்தைகளில் கூறினால், நம் உழைப்பின் ஒவ்வொரு துளியையும், உழைப்பின் விளைவுகளின் ஒவ்வொரு துளியையும் அறிவதன் மூலம் நம் முழுமையை நம்மால் அறிய முடியலாம்.

உழைப்பை அறியும்போது, அந்த உழைப்பால் நுகரப்பட்ட சக்தியையும் உழைப்பால் வெளியிடப்பட்ட சக்தியையும் நாம் அறிகிறோம். அதாவது, நம் உழைப்பின் மூலம் உருமாறும் சக்தியை முழுமையாக நம் உணர்வுக்குள் அடைகிறோம். ஆம், நாம் உழைப்பே உருவானவர்கள். சக்தி நம் உழைப்பின் மூலம் தன் உருவத்தை மாற்றியமைத்துக்கொள்கிறது. இதனை நம்மால் அறியமுடிந்தால், அந்த சக்தியின் உருமாற்றத்தை நம்கட்டுக்குள் கொண்டு வர முடியலாம். இல்லையெனில், சக்தி தன்னை தானே உருமாற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக மட்டுமே நம் இருப்பு, நம் வாழ்க்கை அமைந்திருக்கும். எனில், சக்தி நம் மூலம் நிகழ்த்தும் உருமாறுதலின் ஒவ்வொரு அம்சமும், நாம் அந்த அம்சங்களுக்கான விழிப்புடன் இருந்தால். இன்பமாகவோ, துன்பமாகவோ நம்மை கடந்து செல்லும். நம் விழிப்புணர்வை அடையாத இயக்கங்கள் நம் அறிதல் இல்லாமலே சக்தியை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு தொடர்ந்து பெயற்சி செய்து கொண்டும் இருக்கும்.


நம் உழைப்பின் முழு இயக்கங்களும், அதன் விளைவுகளும் நம் அறிதலுக்குள் வரும்போது சக்தி நம் மூலம் உரு மாற்றிக்கொள்வதற்கு, நாம் எந்த தடைகளையும் விதிப்பதில்லை. சக்தியின் இயக்கங்களுக்கான தடை நம்முள் விலகும்போது, அதன் இயக்கமும் நம் இயல்பிற்கேற்பவே பெரும்பாலும் அமைந்திருக்கும். அந்நிலையில், நாம் சக்தியின் இயக்கங்களால் அடையும் இன்ப துன்பங்கள் என்னும் இருமை நிலையை கடந்திருப்போம். சக்தியின் இயக்கமும் நம்மில் ஆனந்த நடனமாக நடைபெறக்கூடும்! 

blog.change@gmail.com