Thursday, July 29, 2021

நிலைப்பாடுகள்.

 

மனிதர்கள் எடுக்கும் நிலைப்பாடுகள் வழியாகவே அவர்கள் ஆளுமை வெளிப்படுகிறது. நிலைப்பாடுகள் தனிமனிதர்களின் கருத்து, அறிவு, சூழல் போன்றவை காரணமாகவோ அல்லது அவர்களின் உணர்வுகள் காரணமாகவோ அல்லது அவற்றின் கலவைகளின் காரணமாகவோ இருக்கலாம். அவை மனிதர்கள் விழிப்புணர்வுடன் எடுத்த நிலைப்பாடுகளாகவோ அல்லது எதற்கு என தெரியாமல் அவர்களை அறியாமலே எடுத்ததாகவோ இருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும், அவர்களின் உணர்வு அல்லது அறிவின் எல்லைகள், நிலைப்பாடுகளையும், எனவே ஆளுமையையும் வகுத்தளிக்கின்றன.

Sunday, July 11, 2021

மீண்டும்…..

Blog – இல் கடந்த நான்காண்டுகளாக எதுவும் எழுதவில்லை. எழுதாமல் இருப்பது எனக்குத் தேவையாக இருந்தது. எதையாவது எழுதுவதற்காக, அகப்பயணத்திற்கான என் நேரத்தை இழந்ததைப்போல தோன்றியது. மேலும் என் எண்ணங்களை அறுதியான உண்மைகள் என எழுதும் த்வனி சில பதிவுகளிலும். சில காலத்திற்குப்பிறகு படித்தால் அபத்தமாகத் தோன்றுவது பல பதிவுகளிலுமாக குளறுபடிகள் விரவி இருக்கிறது. இந்தக்  குறைபாடுகளை களையாமல் எழுதுவதும் அவற்றை Blog-இல் பதிப்பதும் சரியானதாகத் தோன்றவில்லை.