நம் வாழ்க்கையை அதன் உள்ளிலிருந்து எப்போதாவது அறிந்து கொள்ள முயற்சித்திருந்தால், வாழ்க்கையை குறித்த சில அடிப்படை கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நம் கேட்கும் வீரியத்திற்கேற்ப, நம் பார்வையின் ஆழத்திற்கேற்ப, நம் வாழ்வின் இயல்பிற்கேற்ப, கேள்வியை ஆராயும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய பதிலை அளிக்கும் கேள்விகள்! ஆம், நம் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டுமென்றால், நிச்சயமாக கேட்கப்பட்டாக வேண்டிய கேள்வி, அடைந்தாக வேண்டிய பதில் – அந்த பதில் எத்தகையதாக இருந்தாலும். நம் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியையாவது உணர்வு நிலையில் அடைந்திருந்தால் மட்டுமே, அந்த கேள்விகள் நம் மனதில் எழ சாத்தியமுண்டு. அந்த கேள்வியும், பதிலை அடைவதற்கான இச்சையும் கூட நம் உணர்வின் எல்லைகளை விரிவடையச் செய்யும் சாத்திய கூறுகளை தம்முள் கொண்டிருக்க கூடும்.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறுகளும் செயல்களால் ஆனது. அந்த செயல்கள் நம்மால் செய்யபடுவதாகவோ அல்லது நம் மூலம் செய்விக்கப் படுவதாகவோ இருக்க்கலாம். அச்செயல்களை, அதன் ஒற்றைத் தன்மையில் ஆராய்ந்தால், அச்செயல்களுக்கோ அல்லது அதன் விளைவுகளுக்கோ எந்த ஒரு அர்த்தத்தையும் நம்மால் காண இயலாமல் போகலாம். எனில், நம் வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் எதற்காக அல்லது யாருக்காக வாழ்கிறோம் அல்லது வாழ வேண்டும்? நம் வாழ்க்கையின் கூறுகளாகிய செயல்களின் அர்த்தம் என்ன? அந்த செயல்கள் இல்லாது போனால் நம் வாழ்க்கை என்ன ஆகும்? அந்த செயல்களின் அடிப்படை என்ன? அந்த அடிப்படைகள் இல்லாது போனால் அல்லது ஒரு மாய தோற்றமாகிப் போனால், நம் செயல்கள் அல்லது அச்செயல்களால் ஆன நம் வாழ்க்கை என்ன ஆகும்? நம் செயல்களின் அடிப்படை ஒரு மாய தோற்றத்தினால் ஆனதாக இருந்தால், நம் செயல்களிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ள வேண்டுமா? அவ்வாறு விலக்கிக் கொண்டால், நாம் எதைப் பற்றிக்கொண்டு வாழ்வது? நாம் பொய் தோற்றத்தை அடிப்படையாக்க கொண்ட வாழ்க்கையிலிருந்து மீண்டு, புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அந்த புதிய வாழ்வின் அடிப்படையும் பொய் தோற்றங்களாக இல்லாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதைப் போன்ற இன்னும் எத்தனையோ கேள்விகள்!
இந்த கேள்விகள், நம்மையே நாம் உணரத் தொடங்கினால் அல்லது உணர வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே எழ சாத்தியமுண்டு. இந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடையை நாம் அணுகும் முறை கூட, நம் வாழக்கையை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ புரட்டிப் போடும் சாத்தியங்களை உடையது. அதாவது, இந்த கேள்விகளை நாம் அணுகும் போது, நம் உணர்வுகளையும் மிக கவனமாக பின் தொடரவேண்டியது அவசியம். அவ்வாறு நம் உணர்வுகளை நம்மால் பின்தொடர இயலாவிட்டால், ஒரு வழிகாட்டி அல்லது குருவின் துணை அவசியப்படலாம். எவர் ஒருவர் நம் இயல்பை உணர்ந்து, நம் ஆன்மீக கேள்விகளுக்கு நாமே விடையை அறிய உதவுகிறாரோ, அவரே ஒரு குருவாக இருக்க முடியும். நம் உணர்வுகளை மிக கவனமாக நம்மால் பின்தொடர இயலுமானால், நம் உணர்வுகளே கூட நமக்கு குருவாக இருக்கூடும்.
வாழ்க்கை குறித்த நம் கேள்விகளின் பதில், நம் தனி மனித இயல்புகளையும் அந்த இயல்புகளின் அடிப்படையான தனிமனித இச்சைகளையும் பொறுத்தே அமையும். ஆக நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறிந்து கொள்வதே ஆன்மீகம் அல்லது நம் வாழ்வு குறித்த அறிதலுக்கு தொடக்கமாக இருக்க முடியும். நம் இயல்புகளையும் இச்சைகளையும் அறியாமல், நம் வாழ்வின் அர்த்தத்தை தேடினால், ஒருவேளை அங்கு தெரியும் அர்த்தமின்மை, வாழ்வின் மேல் நம்மை வெறுப்புறச் செய்து, தற்கொலைக்கு கூட தூண்டலாம். சமூக அமைப்பில் அர்த்தமின்மை என்னும் மாயையில் நம்மை தள்ளி, சமூக அமைப்பிலிருந்து நம்மை விலகச் செய்யலாம். இத்தகைய விளைவுகள், நம் இயல்பை நாம் அறியாமல், கற்பனைகள் மூலம் அடையும் முடிவுகளின் காரணமாகவே ஏற்பட்டுகின்றன. இத்தகைய முடிவுகள், மீண்டு வர இயலாத பொறிகளினுள் நம்மை முழுமையாக மூழ்கடிக்கலாம். ஆக, ஆன்மீகத் தேடுதலை, நம் இயல்பை அறிவதலிருந்தே தொடங்க முடியும்.
எந்த ஒரு பொருளுக்கும் அல்லது உயிருக்கும் அதன் இருப்பை உறுதிசெய்வதே அடிப்படை இச்சையாக இருக்க முடியும். அதன் மற்ற அனைத்து இச்சைகளின் கட்டுமானமும் இந்த அடிப்படை இச்சையை அடித்தளமாக கொண்டே இருக்கும். நாமும் அவ்வாறே! நம் இருப்பின் மேல் கொண்டுள்ள இச்சையையும் அதை சார்ந்து உள்ள அல்லது சார்ந்து உருவாக்கிய இச்சையையும் அறிந்து கொள்ள, நம் இருப்பின் உணர்வு நமக்கு இருந்தாக வேண்டும். ஆனால், துரதிர்க்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையினர், பெரும் மகிழ்ச்சி அல்லது கடும் துன்பத்தில் மட்டுமே நம் இருப்பை உணரும் தன்மையில் இருக்கிறோம். நம் இருப்பைக் குறித்த விழிப்புணர்வே நமக்கு இல்லாத பட்சத்தில், அந்த இருப்பை அடிப்படையாக கொண்ட இச்சைகளை அறிந்திருப்பதற்கான சாத்தியம் இன்னும் குறைவாகவே உள்ளது.
ஆனல், மனம் செயல்புரிய வேண்டுமானால் நம் இருப்பை அது உறுதிசெய்தாக வேண்டும் – செயலின்றி மனதால் இருக்க முடியாது. நம் இருப்பின் அடிப்படையை மனதால் உணரமுடியாதபோது, அகங்காரத்தின் துணைகொண்டு நமது இருப்பைக் குறித்த கற்பனைகளை உருவாக்குவதன் மூலம், மனம் அதன் செயல்பாட்டை உறுதி செய்து கொள்கிறது. ஆக நம் இருப்பின் அடிப்படை இச்சைகள், மனதால் அகங்காரத்தின் துணை கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனைகளாலான இருப்பின் அல்லது மாயை இருப்பினாலான இச்சைகள் மூடி மறைத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது நாம் கணம் தோறும் உணரும் விருப்பங்களில் பெரும்பாலானவை, நம் கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பின் விருப்பங்களே. சில அடிப்படை விருப்பங்கள் நம்மை அறியாமலே நம்மிடமிருந்து வெளிப்படும். கற்பனை அல்லது மாயையால் ஆன நம் இருப்பு, அடிப்படை இருப்பின் வெளிப்பாடுளை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ செய்யலாம் – அது நம் மாயை இருப்பு, அடிப்படை இருப்புடன் கொண்டுள்ள ஒத்திசைவு அல்லது முரண்பாடுகளை பொறுத்த்து.
நம் இருப்பின் இச்சைகளை அறியவேணைடுமானால், அதை சூழ்ந்துள்ள மாயையை நாம் துளைத்து சென்றாக வேண்டும். எனில், அந்த மாயையின் இயல்பை அறிவது மட்டுமே அத்தகைய ஒரு சாத்தியத்தை நமக்கு அளிக்க கூடும். நம் இருப்பு மற்றும் இருப்பின் இச்சைகள், உண்மையானது. அதாவது, அது பொதீகமானது. ஆனால், நம் கற்பனையால் ஆன இருப்புக்கு அத்தகைய பொதீக இயல்புகள் இருக்க வாய்ப்பில்லை – அந்த கற்பனைகள் நம் மூளையில் ஏற்படுத்தும் சில உளவியல் சார்ந்த வேதி மாற்றங்களைத் தவிர. ஆம், இந்த மாயை அல்லது கற்பனை இருப்பு என்பது முழுவதும் நம் உளவியல் சார்ந்த இருப்பு. நம் எண்ணங்களே அந்த மாயைகளை உருவாக்கி, அந்த எண்ணங்களால் ஆன நம் அகங்காரத்துடன் பிணைத்து அதன் மாயத்தோற்றத்தை உறுதி செய்கிறது.
நம் வாழ்க்கை தளத்தில், நம் மனங்களின் வெளிப்புற கட்டுமானம் முழுவதும் வெறும் எண்ணங்களால் ஆனது. இந்த எண்ணங்களே மாயை இருப்பை உருவாக்குகிறது. ஆனால், இந்த எண்ணங்களைத் தாங்கிகொண்டிருக்கம் அந்த மனதின் மூலம் மட்டுமே, அந்த எண்ணங்களைத் தாண்டிச் சென்று, நம் இருப்பின் ஆழத்தையம் அடைய முடியும். இதுவே ஆன்மீகம் மனித இனத்தின் பெரும்பான்மையினரிடம் வெளிப்படாமல் இருப்பதற்கான மூல காரணமாக இருக்க கூடும். மாயையால் மூடப்பட்டுள்ள மனதின் மூலமே அந்த மாயையை அறிந்து, மனதின் ஒருபாகமாக மாறிவிட்ட மாயையை உடைத்தெறிய வேண்டுமென்பது சற்று கடினமான செயலாகத்தான் இருக்ககூடும்.
அறிவின் மூலம் மட்டுமே அந்த தொடக்கத்தை பெறமுடியும். துரதிர்க்ஷ்டவசமாக, உலகம் முழுவதும் கல்வி முழுமையாக பொருளியல் சார்ந்த்தாக மாறிவிட்டது. அதாவது இன்றைய சூழலில் நம் வாழ்க்கை அறிவு என்பது நிறுவப்பட்ட கல்விக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வெளியே மட்டுமே பெறமுடியக்கூடிய ஒன்றாகி விட்டது. இந்த பொருளியல் சார்ந்த கல்வி, நம் ஆன்மீகத்தையும், பொருளியல் சார்ந்த கற்பனைகளாக மாற்றி விட்டது. நாமும், நம் சந்ததியினர் நிறுவப்பட்ட கல்விக்கு வெளியே அவர்கள் ஆர்வம் செல்லாதவாறு, அவர்களை நிறுவப்பட்ட கல்வியினுள்ளே முழுமையாக வழிப்படுத்தி, அவர்களும் மாயையினுள் நிரந்தரமாக இருக்குமாறு உறுதி செய்து கொள்கிறோம்.
Thursday, October 13, 2011
Tuesday, October 4, 2011
சக்தி
நம் பிறப்பு, இருப்பு, இறப்பு ஆகிய அனைத்தின் அடிப்படையும் சக்தியே. தத்துவப்பூர்வமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இந்த உலகத்தின் இருப்பின் அடிப்படை சக்தியே ஆகும் - E = mc^2. நாம் காண்பதும், கேட்பதும், நுகர்வதும், உண்பதும், உணருவதும் அனைத்தும் சக்தியின் வடிவங்களே. ஆயினும், நம் அன்றாட வாழ்க்கைத் தளத்தில் உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. அனைத்துமே சக்தி மயமாக இருந்தாலும், சக்திக்காக இப்போதும் நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது உலகப் போர் ஒன்று நடக்குமானால், அது சக்தியின் உரிமைக்காகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லாமும் சக்தியின் வடிவங்களாக இருந்தாலும், நாம் கூட சக்தியின் ஒரு வடிவாக இருந்தாலும், சக்தியின் உரிமைக்காக நாமும், நம் சந்ததியினரும் ஒருவருடன் ஒருவர் போரிடும் தருணத்திற்காக காத்திருக்கிறோம் – நம் வாழ்வின் முரண்பாடுகளின் உச்சம்!
உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. நம் வாழ்வின் பெரும்பகுதி, தற்போதைய வாழ்க்கைச் சூழலில், இந்த சக்தியின் வடிவங்களை சார்ந்தே உள்ளது. சக்தியின் போதாமைக்கான காரணங்கள் பல தளங்களை சார்ந்தவை. இந்த அனைத்து தளங்களையும் உணரத் தேவையான ஒரு முழுமையான பார்வையுடையவர்களாக நாம் இருந்தால், அந்த போதாமையைத் தவிர்க்க நம்மால் இயன்றவற்றை நாம் செய்து கொண்டிருப்போம் – அதாவது, ஒரு உலகப் போரை தவிர்க்க நம்மால் இயன்றதை செய்து கொண்டிருப்போம், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ!.
உலக மக்கள் தொகை, 1960 ஆம் ஆண்டு சுமார் 300 கோடி. 1999 ஆம் ஆண்டு, சுமார் 600 கோடி. இன்று, சுமார் 700 கோடி. 2050 ஆம் ஆண்டு, எதிர்பார்க்கப் படுவது, சுமார் 900 கோடி. `1990 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 18 வருட காலத்தில், உலகின் தனி மனித சக்தியின் நுகர்வு சுமார் 10% அதிகரித்துள்ளது. அதாவது, சராசரியாக வருடத்திற்கு 0.53%. இதே கால கட்டத்தில், உலகின் மக்கள் தொகை சராசரியாக வருடத்திற்கு 1.8% அதிகரித்துள்ளது.
இந்த புள்ளி விவரத்தை, ஒரளவேனும் நம்மால் கிரகித்துக் கொள்ள முடிந்தால், நம் முன் உள்ள பிரச்சினையின் விஸ்வரூபத்தை நம்மால் அனுமானிக்க முடியலாம். பிரச்சினை உலகின் உபயோகப்படும் சக்தியின் தேவை மட்டுமல்ல – எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை, மனித உபயோக சக்தியாக மனிதனால் மாற்றப்படும்போது, அந்த மாற்றம், பூமியின் சமன்நிலையில் உருவாக்கும் குலைவும், அந்த சமன்நிலைக் குலைவால் உலக வாழ்க்கையில் (மனிதனின் மற்றும் பிற உயிர்களின் – தற்கால மற்றும் சந்ததியினரின்) வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மற்றும் ஏற்படப் போகின்ற எதிர்மறை விளைவுகளும்!
இன்று நம் வாழ்க்கையின் தரம் நிச்சயமாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம், சந்தேகமே இல்லாமல், நம்மிடம் உள்ள சக்திதான் – நாம் நுகரும் மற்றும் நாம் உணரும் சக்திகள். ஆனால் நாம் உபயோகிக்கும்\நுகரும் மற்றும் உணரும் சக்திகள், தொடர்ச்சியாக, நம் இருப்பையே அழிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் இல்லாமல், கிடைத்துக் கொண்டிருக்குமா என்பதே நம் கேள்வியாக இருக்க கூடும் – இந்த பிரச்சனையின் ஆழத்தை நம்மால் உணர முடிந்தால்!
நாம் உணரும் சக்தியை – நம்முள் இருக்கும் சக்தி, நாம் அறியும்போது, நம் படைப்பூக்கத்தை அறியத் தொடங்குவோம். இந்த படைப்பூக்கம் நம்மை முற்றிலும் வேறான தளத்துக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடும். இங்கு சக்தியின் நுகர்வு இல்லை – அதன் உணர்வு மற்றும் இயக்கம், அந்த சக்தியின் இருப்பின் வடிவில் மட்டுமே. எனவே அதன் மூலம் எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த சக்தி, நம் வாழ்வின் தரத்தை உள்முகமாக உயர்த்துகிறது, எதிர்மறை விளைவுகள் எதுவும் இல்லாமலே!
ஆக நம் முன் உள்ள கேள்வி, நம் உபயோகத்தின்\நுகர்வின் மூலம், உலகின் இருப்பின் சமன்நிலை குலைவிற்கு, நாமும் எவ்வாறு ஒரு காரணியாக இருந்து, அதன் எதிர்மற் விளைவிற்கும் எவ்வாறு பொறுப்பேற்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதும், இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க நம்மால் செய்யக் கூடியது என்ன என்பதுமாகவே இருக்க கூடும். நம்மால் சக்தியின் நுகர்வை தவிர்க்க முடியாது, குறைக்கவும் முடியாது. அவ்வாறு செய்வோமெனில் நம்மால் சமூகத் தளத்தில் வாழவும் முடியாது. ஆனால் சக்தியை வீணாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும் – நமது தேவைகளையும் நுகர்வையும் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம்.
உலகில் உள்ள எந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை சார்ந்தே வாழ முடியும். எந்த ஒரு உயிரினமும் மற்ற ஒரு உயிரினத்தை அல்லது உயிரினத்தால் உருவாக்கப்பட்டதையே உணவாக கொள்ள முடியும். தாவரங்களும், நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலமே தங்கள் உணவைப் பெறுகின்றன. மனிதனின் உடலையும், உயிருடன் இருக்கும்போதே, பல நுண்ணுயிரிகள் உணவாக்கிக் கொண்டிருக்க கூடும். ஆகவே உலகின் சமன்நிலை குறையாமல் இருக்க, இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் சமன்நிலையும் குலையாமல் இருக்க வேண்டியது அவசியம்.
மனித இனம் தன் அறிவின் மூலம், இயற்கையிலிருந்து ஓரளவுக்கு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், இயற்கையின் தன்னைத் தானே சமன் செய்யும் இயக்கங்களிலிருந்தும், தன்னை ஒரு எல்லைவரைக்கும், விடுவித்துக் கொண்டுள்ளது. உலக மக்கட்தொகை பெருக்கத்துக்கு, இது ஒரு வெளிப்படையான காரணம். ஆனால், இயற்கையின் அழிவுகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு நாம் இயற்கையை நமது நுகர்வுக்காக அழிப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை, அல்லது விலக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், இயற்கை அழிவிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு, மனித விதைகள் முளைப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை. இதன் மூலம், இயற்கையின் சமநிலை குலைவிற்கு நாமே காரணமாயிருந்திருக்கிறோம்.
கட்டுப்பாடுகளற்ற மக்கட்தொகைப் பெருக்கத்தால் உயிரினங்களின் சமமின்மை ஒரு புறமிருக்க, மனித இனத்தின் நுகர்வும், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது நுகர்வு, தேவைகளிலிருந்து ஆடம்பரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், நம் நுகர்வுக்கு அடிப்படைத் தேவை சக்தி – உபயோகப்படுத்தும் வடிவில் உள்ள சக்தி. நம் நுகர்வு, தேவையை அடிப்படையாக கொண்டிருக்குமானால், அந்த நுகர்வை நம்மால் தடுக்க முடியாது. அதற்கு தேவையான சக்தியை நாம் நிச்சயமாக பெற்றே ஆக வேண்டும் - அதனால் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும். அந்த விளைவுகள், பெரும்பாலும், இயற்கையால் சமன் செய்யக் கூடியதாகவே இருக்கும். ஆனால் நம் நுகர்வின் பெரும் பகுதி ஆடம்பரத்திற்காக மாறும்போது, உபயோக வடிவில் உள்ள சக்தியின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது. அதன் எதிர் விளைவுகளை, பேரழிவுகள் இல்லாமல், இயற்கையால் சமன் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!
தற்போது உலக அளவில் மின் சக்தியின் பெரும்பகுதி நிலக்கரி(40%), எண்ணை(5%), இயற்கை வாயு(21%) மற்றும் கதிரியக்க அணுக்களின்(13.5%) மூலமே பெறப்படுகிறது. இது தவிர உலகின் இயங்கு சக்தியில் (வாகனங்கள்) பெரும் பகுதி எண்ணையிலிருந்து பெறப்படுகிறது. இந்த புள்ளி விபரம், நம் ஆடம்பரத்திற்காக நாம் எத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கலாம். உலகின் நிலக்கரி இருப்பில் பெரும் பகுதி அடர்ந்த காடுகளிலேயே உள்ளது. அந்த நிலக்கரியை உபயோகப்படுத்த வேண்டுமானால், முதலில் செய்யப்படுவது, கரியமில வாயுவை உணவாக கொள்ளும் அந்த காடுகளை அழிப்பதே. பின்னர் நிலக்கரியை எரித்து, பெருமளவு கரியமில வாயுவை வெளியிட்டு, உபயேகப்படுத்தும் சக்தியாக்குகிறோம். காரியமில வாயுவை உண்ணும் காடுகளை அழித்ததன் மூலம், இயற்கையின் சமநிலையை உருவாக்கும் ஒரு காரணியை நாமே அழித்து விட்டோம்.
அடுத்தது அணு சக்தி. மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் வந்து விட்டன. இருப்பினும், மற்ற எந்த எந்திரங்களைப் போலவே அணுஉலையும் விபத்துக்கான ஒரு குறைந்தபட்ச நிகழ்வாய்ப்பு உள்ளதாகவே இருக்கும். அவ்வாறு எற்பட்டால் அந்த பகுதி அடுத்த சில பத்தாண்டுகளுக்கு எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகி விடும். மேலும் கதிரியக்க அணுவிலிருந்து உபயோகப்படுத்தும் சக்தியை பிரித்தெடுத்த பின்னும், அந்த அணுக் கழிவுகள் நம்மால் உபயோகப்படுத்த முடியாத சக்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அணுக்கழிவு மேலாண்மையில் ஏற்படும் எந்த குளறுபடிகளும், அது வெளியிடும் உபயோகப்படுத்த முடியாத சக்தியின் மூலம் இயற்கையில் சமநிலையின்மையை உருவாக்கலாம்.
ஆக அன்றாடம் நம் தேவை மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிடும் சக்தியின் பெரும்பகுதி, இயற்கையின் சமன்நிலையை தொடர்ச்சியாக குலைத்துக் கொண்டு இருப்பதன் மூலமே பெறப்படுகிறது. நம் வாழ்க்கை இன்னும் அதிக பட்சம் 80 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஒருவேளை இந்த இயற்கையின் சமன்நிலை குலைவு நம் வாழ்க்கை முடியும்வரைக் கூட நம்மை விட்டு வைக்கலாம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் இயற்கையின் சமன்நிலை குலைவை எந்த வழியிலாவது இயற்கை சமன் செய்தாக வேண்டும். அந்த சமன் செய்யும் இயக்கம், நம் வாழ்க்கை காலத்தில் இல்லாவிட்டாலும், மிக நெருங்கிய நம் சந்ததியினரின் காலத்தில் நிச்சயமாக ஏற்பட்டாக வேண்டும் – அந்த இயக்கம், உலகின் ஒரு பேரழிவாகவே இருக்க முடியும். ஆம், நம் சந்ததியினருக்கு நம் ஆடம்பரம் மற்றும் பேராசைகளின் மூலம் செல்வத்தை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. அவர்கள் அழிவையும் அவர்களுக்காக தினம் தோறும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்!
நம்மால் என்ன செய்ய முடியும்? பொருள்களில் உள்ள சக்தியை உபயோகப்படுத்தும் வடிவிலுள்ள சக்தியாக மாற்றி, அதை மீண்டும் நுகரும் பொருளாக மாற்றி, நுகர்ந்து கொண்டிருப்பது நாமேதான் – நாமும் அங்கத்தினராக உள்ள நம் சமூகமத்தின் மூலம். சமூகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அந்த சமூக மனத்தின் இச்சைகளை நிறைவேற்றுபவர்களாகவே இருக்க முடியும். அந்த சமூக மனத்தின் இச்சையை முடிவு செய்வது, சமூகத்தின் துளிகளாகிய நம் தனிமனங்களின் இச்சைகளே. நம் ஆடம்பரங்கள் மூலம் நம் சந்ததியினரின் அழிவை நாம் தினம் தோறும் சேமித்துக் கொண்டிருப்பதை உண்மையிலேயே நம்மால் உணர முடியுமானால், நம் மனதினுள், நம் ஆடம்பரத்தைக் குறித்து மிகப்பெரிய மாறுதல் ஒன்று நிகழக் கூடும். அந்த நிகழ்வு, அதன் வீரியத்தைப் பொறுத்து, சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். எந்த ஒரு மாற்றமும் தனி மனித மனதில் உருவாகிய பின்பே சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். அந்த சமூக மாற்றம் ஏற்பட சில ஆண்டுகளோ, சில பத்தாண்டுகளோ, சில நூற்றாண்டுகளோ அல்லது பேரழிவு ஏற்படும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!
உபயோகப்படுத்தும் சக்தியின் வடிவங்கள், நமக்கு போதுமான அளவில் இல்லை. நம் வாழ்வின் பெரும்பகுதி, தற்போதைய வாழ்க்கைச் சூழலில், இந்த சக்தியின் வடிவங்களை சார்ந்தே உள்ளது. சக்தியின் போதாமைக்கான காரணங்கள் பல தளங்களை சார்ந்தவை. இந்த அனைத்து தளங்களையும் உணரத் தேவையான ஒரு முழுமையான பார்வையுடையவர்களாக நாம் இருந்தால், அந்த போதாமையைத் தவிர்க்க நம்மால் இயன்றவற்றை நாம் செய்து கொண்டிருப்போம் – அதாவது, ஒரு உலகப் போரை தவிர்க்க நம்மால் இயன்றதை செய்து கொண்டிருப்போம், நமக்கு தெரிந்தோ தெரியாமலோ!.
உலக மக்கள் தொகை, 1960 ஆம் ஆண்டு சுமார் 300 கோடி. 1999 ஆம் ஆண்டு, சுமார் 600 கோடி. இன்று, சுமார் 700 கோடி. 2050 ஆம் ஆண்டு, எதிர்பார்க்கப் படுவது, சுமார் 900 கோடி. `1990 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 18 வருட காலத்தில், உலகின் தனி மனித சக்தியின் நுகர்வு சுமார் 10% அதிகரித்துள்ளது. அதாவது, சராசரியாக வருடத்திற்கு 0.53%. இதே கால கட்டத்தில், உலகின் மக்கள் தொகை சராசரியாக வருடத்திற்கு 1.8% அதிகரித்துள்ளது.
இந்த புள்ளி விவரத்தை, ஒரளவேனும் நம்மால் கிரகித்துக் கொள்ள முடிந்தால், நம் முன் உள்ள பிரச்சினையின் விஸ்வரூபத்தை நம்மால் அனுமானிக்க முடியலாம். பிரச்சினை உலகின் உபயோகப்படும் சக்தியின் தேவை மட்டுமல்ல – எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை, மனித உபயோக சக்தியாக மனிதனால் மாற்றப்படும்போது, அந்த மாற்றம், பூமியின் சமன்நிலையில் உருவாக்கும் குலைவும், அந்த சமன்நிலைக் குலைவால் உலக வாழ்க்கையில் (மனிதனின் மற்றும் பிற உயிர்களின் – தற்கால மற்றும் சந்ததியினரின்) வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற மற்றும் ஏற்படப் போகின்ற எதிர்மறை விளைவுகளும்!
இன்று நம் வாழ்க்கையின் தரம் நிச்சயமாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம், சந்தேகமே இல்லாமல், நம்மிடம் உள்ள சக்திதான் – நாம் நுகரும் மற்றும் நாம் உணரும் சக்திகள். ஆனால் நாம் உபயோகிக்கும்\நுகரும் மற்றும் உணரும் சக்திகள், தொடர்ச்சியாக, நம் இருப்பையே அழிக்கும் அளவுக்கு எதிர்வினைகள் இல்லாமல், கிடைத்துக் கொண்டிருக்குமா என்பதே நம் கேள்வியாக இருக்க கூடும் – இந்த பிரச்சனையின் ஆழத்தை நம்மால் உணர முடிந்தால்!
நாம் உணரும் சக்தியை – நம்முள் இருக்கும் சக்தி, நாம் அறியும்போது, நம் படைப்பூக்கத்தை அறியத் தொடங்குவோம். இந்த படைப்பூக்கம் நம்மை முற்றிலும் வேறான தளத்துக்கு நம்மை எடுத்துச்செல்லக் கூடும். இங்கு சக்தியின் நுகர்வு இல்லை – அதன் உணர்வு மற்றும் இயக்கம், அந்த சக்தியின் இருப்பின் வடிவில் மட்டுமே. எனவே அதன் மூலம் எதிர்மறை விளைவுகளுக்கும் வாய்ப்புகள் இல்லை. இந்த சக்தி, நம் வாழ்வின் தரத்தை உள்முகமாக உயர்த்துகிறது, எதிர்மறை விளைவுகள் எதுவும் இல்லாமலே!
ஆக நம் முன் உள்ள கேள்வி, நம் உபயோகத்தின்\நுகர்வின் மூலம், உலகின் இருப்பின் சமன்நிலை குலைவிற்கு, நாமும் எவ்வாறு ஒரு காரணியாக இருந்து, அதன் எதிர்மற் விளைவிற்கும் எவ்வாறு பொறுப்பேற்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதும், இந்த எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க நம்மால் செய்யக் கூடியது என்ன என்பதுமாகவே இருக்க கூடும். நம்மால் சக்தியின் நுகர்வை தவிர்க்க முடியாது, குறைக்கவும் முடியாது. அவ்வாறு செய்வோமெனில் நம்மால் சமூகத் தளத்தில் வாழவும் முடியாது. ஆனால் சக்தியை வீணாக்குவதை நம்மால் தவிர்க்க முடியும் – நமது தேவைகளையும் நுகர்வையும் முழுமையாக அறிந்து கொள்வதன் மூலம்.
உலகில் உள்ள எந்த உயிரினமும் மற்ற உயிரினங்களை சார்ந்தே வாழ முடியும். எந்த ஒரு உயிரினமும் மற்ற ஒரு உயிரினத்தை அல்லது உயிரினத்தால் உருவாக்கப்பட்டதையே உணவாக கொள்ள முடியும். தாவரங்களும், நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகள் மூலமே தங்கள் உணவைப் பெறுகின்றன. மனிதனின் உடலையும், உயிருடன் இருக்கும்போதே, பல நுண்ணுயிரிகள் உணவாக்கிக் கொண்டிருக்க கூடும். ஆகவே உலகின் சமன்நிலை குறையாமல் இருக்க, இவ்வுலகில் வாழும் உயிரினங்களின் சமன்நிலையும் குலையாமல் இருக்க வேண்டியது அவசியம்.
மனித இனம் தன் அறிவின் மூலம், இயற்கையிலிருந்து ஓரளவுக்கு தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், இயற்கையின் தன்னைத் தானே சமன் செய்யும் இயக்கங்களிலிருந்தும், தன்னை ஒரு எல்லைவரைக்கும், விடுவித்துக் கொண்டுள்ளது. உலக மக்கட்தொகை பெருக்கத்துக்கு, இது ஒரு வெளிப்படையான காரணம். ஆனால், இயற்கையின் அழிவுகளிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு நாம் இயற்கையை நமது நுகர்வுக்காக அழிப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை, அல்லது விலக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும், இயற்கை அழிவிலிருந்து நம்மை விலக்கிக் கொண்ட அளவிற்கு, மனித விதைகள் முளைப்பதிலிருந்து நம்மை விலக்கிக் கொள்ளவில்லை. இதன் மூலம், இயற்கையின் சமநிலை குலைவிற்கு நாமே காரணமாயிருந்திருக்கிறோம்.
கட்டுப்பாடுகளற்ற மக்கட்தொகைப் பெருக்கத்தால் உயிரினங்களின் சமமின்மை ஒரு புறமிருக்க, மனித இனத்தின் நுகர்வும், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது நுகர்வு, தேவைகளிலிருந்து ஆடம்பரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், நம் நுகர்வுக்கு அடிப்படைத் தேவை சக்தி – உபயோகப்படுத்தும் வடிவில் உள்ள சக்தி. நம் நுகர்வு, தேவையை அடிப்படையாக கொண்டிருக்குமானால், அந்த நுகர்வை நம்மால் தடுக்க முடியாது. அதற்கு தேவையான சக்தியை நாம் நிச்சயமாக பெற்றே ஆக வேண்டும் - அதனால் எந்த விளைவுகள் ஏற்பட்டாலும். அந்த விளைவுகள், பெரும்பாலும், இயற்கையால் சமன் செய்யக் கூடியதாகவே இருக்கும். ஆனால் நம் நுகர்வின் பெரும் பகுதி ஆடம்பரத்திற்காக மாறும்போது, உபயோக வடிவில் உள்ள சக்தியின் தேவையும் பல மடங்கு அதிகரிக்கிறது. அதன் எதிர் விளைவுகளை, பேரழிவுகள் இல்லாமல், இயற்கையால் சமன் செய்ய முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!
தற்போது உலக அளவில் மின் சக்தியின் பெரும்பகுதி நிலக்கரி(40%), எண்ணை(5%), இயற்கை வாயு(21%) மற்றும் கதிரியக்க அணுக்களின்(13.5%) மூலமே பெறப்படுகிறது. இது தவிர உலகின் இயங்கு சக்தியில் (வாகனங்கள்) பெரும் பகுதி எண்ணையிலிருந்து பெறப்படுகிறது. இந்த புள்ளி விபரம், நம் ஆடம்பரத்திற்காக நாம் எத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பதை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கலாம். உலகின் நிலக்கரி இருப்பில் பெரும் பகுதி அடர்ந்த காடுகளிலேயே உள்ளது. அந்த நிலக்கரியை உபயோகப்படுத்த வேண்டுமானால், முதலில் செய்யப்படுவது, கரியமில வாயுவை உணவாக கொள்ளும் அந்த காடுகளை அழிப்பதே. பின்னர் நிலக்கரியை எரித்து, பெருமளவு கரியமில வாயுவை வெளியிட்டு, உபயேகப்படுத்தும் சக்தியாக்குகிறோம். காரியமில வாயுவை உண்ணும் காடுகளை அழித்ததன் மூலம், இயற்கையின் சமநிலையை உருவாக்கும் ஒரு காரணியை நாமே அழித்து விட்டோம்.
அடுத்தது அணு சக்தி. மிகவும் பாதுகாப்பான அணு உலைகள் வந்து விட்டன. இருப்பினும், மற்ற எந்த எந்திரங்களைப் போலவே அணுஉலையும் விபத்துக்கான ஒரு குறைந்தபட்ச நிகழ்வாய்ப்பு உள்ளதாகவே இருக்கும். அவ்வாறு எற்பட்டால் அந்த பகுதி அடுத்த சில பத்தாண்டுகளுக்கு எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகி விடும். மேலும் கதிரியக்க அணுவிலிருந்து உபயோகப்படுத்தும் சக்தியை பிரித்தெடுத்த பின்னும், அந்த அணுக் கழிவுகள் நம்மால் உபயோகப்படுத்த முடியாத சக்தியை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அணுக்கழிவு மேலாண்மையில் ஏற்படும் எந்த குளறுபடிகளும், அது வெளியிடும் உபயோகப்படுத்த முடியாத சக்தியின் மூலம் இயற்கையில் சமநிலையின்மையை உருவாக்கலாம்.
ஆக அன்றாடம் நம் தேவை மற்றும் ஆடம்பரத்திற்காக செலவிடும் சக்தியின் பெரும்பகுதி, இயற்கையின் சமன்நிலையை தொடர்ச்சியாக குலைத்துக் கொண்டு இருப்பதன் மூலமே பெறப்படுகிறது. நம் வாழ்க்கை இன்னும் அதிக பட்சம் 80 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஒருவேளை இந்த இயற்கையின் சமன்நிலை குலைவு நம் வாழ்க்கை முடியும்வரைக் கூட நம்மை விட்டு வைக்கலாம். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் இயற்கையின் சமன்நிலை குலைவை எந்த வழியிலாவது இயற்கை சமன் செய்தாக வேண்டும். அந்த சமன் செய்யும் இயக்கம், நம் வாழ்க்கை காலத்தில் இல்லாவிட்டாலும், மிக நெருங்கிய நம் சந்ததியினரின் காலத்தில் நிச்சயமாக ஏற்பட்டாக வேண்டும் – அந்த இயக்கம், உலகின் ஒரு பேரழிவாகவே இருக்க முடியும். ஆம், நம் சந்ததியினருக்கு நம் ஆடம்பரம் மற்றும் பேராசைகளின் மூலம் செல்வத்தை மட்டும் சேர்த்து வைக்கவில்லை. அவர்கள் அழிவையும் அவர்களுக்காக தினம் தோறும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்!
நம்மால் என்ன செய்ய முடியும்? பொருள்களில் உள்ள சக்தியை உபயோகப்படுத்தும் வடிவிலுள்ள சக்தியாக மாற்றி, அதை மீண்டும் நுகரும் பொருளாக மாற்றி, நுகர்ந்து கொண்டிருப்பது நாமேதான் – நாமும் அங்கத்தினராக உள்ள நம் சமூகமத்தின் மூலம். சமூகத்தின் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், அந்த சமூக மனத்தின் இச்சைகளை நிறைவேற்றுபவர்களாகவே இருக்க முடியும். அந்த சமூக மனத்தின் இச்சையை முடிவு செய்வது, சமூகத்தின் துளிகளாகிய நம் தனிமனங்களின் இச்சைகளே. நம் ஆடம்பரங்கள் மூலம் நம் சந்ததியினரின் அழிவை நாம் தினம் தோறும் சேமித்துக் கொண்டிருப்பதை உண்மையிலேயே நம்மால் உணர முடியுமானால், நம் மனதினுள், நம் ஆடம்பரத்தைக் குறித்து மிகப்பெரிய மாறுதல் ஒன்று நிகழக் கூடும். அந்த நிகழ்வு, அதன் வீரியத்தைப் பொறுத்து, சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். எந்த ஒரு மாற்றமும் தனி மனித மனதில் உருவாகிய பின்பே சமூக மனதினுள் மாற்றத்தை உருவாக்கத் தொடங்கும். அந்த சமூக மாற்றம் ஏற்பட சில ஆண்டுகளோ, சில பத்தாண்டுகளோ, சில நூற்றாண்டுகளோ அல்லது பேரழிவு ஏற்படும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்!
Sunday, September 11, 2011
மன கட்டுப்பாடு, ஆன்மீகம்
‘மன இயக்கங்களை இல்லாமல் செய்வதே யோகம்’ – ‘யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத’ என்பது பதாஞ்சலி யோக சூத்த்திரத்தின் இரண்டாவது மற்றும் அதன் அடிப்படை நோக்கத்தை விளக்கும் சூத்திரம். மனத்தை அடக்குவது அல்லது மனம் அதுவாகவே அடஙகுவதன் மூலம் மட்டுமே மன இயக்கங்களை இல்லாமல் செய்ய முடியும்.
மன இயக்கங்களை இல்லாமல் செய்வதற்கு மன இயக்கங்களின் இயல்பை அறிந்து கொள்வது மிக அவசியம். இந்த அறிவு, நம் மனதை நாமே கூர்ந்து கவனிப்பது மற்றும் கவனப்பின் நீட்சியான அனுமானம் மூலம் மட்டுமே சாத்தியமாகலாம். மேலும் மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்பதை விட மனம் தானாகவே கட்டுப்படுவது அல்லது அடங்குவது என்பதே மிகச்சரியான முறையாக இருக்கும்.
மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும்போது அங்கு கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும் சொல்லினுள்ளேயே இருமை அடங்கியுள்ளது- கட்டுப்ப்படுத்தும் அமைப்பு மற்றும் கட்டுப்படும் பொருள்! ஆனால் நம்மிடம் இருப்பது நம் மனம் மட்டுமே. நம்மிடம் இருக்கும் அந்த ஒரே மனமே அந்த மனத்தை அடக்கவேண்டும் என விரும்புகிறது, அது தன்னைத்தானே அடக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. அந்த விருப்பம் நிறைவேறாதபோது, அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது தன்னைத்தானே வருத்திக் கொள்கிறது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்கிறது.
நாம் நம் மனதை அடக்க வேண்டும் என நினைக்கம்போதே நம் மனம் அதனை இரு பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறது - ஒரு பகுதி அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் மனம், மற்ற பகுதி அலைபாய்தலை அடக்க வேண்டும் என கருதும் மனம்! ஆக மனம் தனக்குள்ளேயே முரண்படுகிறது - எங்கெல்லாம் முரண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் சக்தி வீணாக்கப்படுகிறது. தனக்குள்ளே முரண்படும் மனதால் மன இயக்கங்களை நிறுத்த அல்லது குறைக்க இயலாது, அது மன இயக்கங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும் - மன வருத்த்தத்தை, துன்பத்தை உருவாக்குவதன் மூலம்! கடவுளை (கடவுள் என்னும் கருத்து எந்த அர்த்த்தத்தில் கூறப்பட்டிருந்தாலும்) அடைவதற்கு அல்லது வாழ்வில் முன்னேற, மனதை அடக்குவது மட்டுமே வழி என எங்காவது கூறப்பட்டிருந்தால், அந்த "அடக்குவது" என்பதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது மிக முக்கியமானது.
ஆக, மனதை நம்மால் அடக்க முடியாது. ஆனால் மனதை, அது தானாகவே அடங்குமாறு , கட்டுப்படுமாறு செய்ய முடியும் - மனம் தன்னைத்தானே அறிவதன் மூலம். மனதினுள் ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் - அவை நம் உணர்வுகளில் இருந்தாலும் இல்லாவிடிலும். இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் மனதினுள் நினைவுத் தடங்களை விட்டுச் செல்லும். நாம் பெரும்பாலும் இந்த மன நிகழ்வுகள் நிகழும்போது அவற்றை அறிவதில்லை. அவ்வாறு அறிய நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆம், விழிப்புணர்வின் மூலம் மட்டுமே மனம் தானாகவே கட்டுப்படுமாறு செய்ய முடியும்.
விழிப்புணர்வு என்பது மனதின் இன்னொரு இயக்கமாக அல்லது நிகழ்வாக இருக்கலாம். அதாவது மனதின் ஒரு இயக்கம், மனதின் மற்ற அனைத்து இயக்கங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் மனதின் மொத்த இயக்கத்தையும் மனம் அதனுள்ளேயே பிரதிபலிப்பதாகும்- மனம் அதனுள்ளே பிரதிபலிக்கும் மன இயக்கங்களின், நிகழ்வுகளின் மேல் விழிப்புடன் இருக்கிறோம். தற்போதையவாழ்க்கை முறையில் நம் விழிப்புணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கிறோம். நம் மன இயக்கங்களும் நிகழ்வுகளும் நம் மனதினுள் விட்டுச் சென்றுள்ள தடங்களை அல்லது நினைவுகளை மட்டுமே நம் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ளோம். அதாவது நம் தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக மனம் அதன் நிகழ்வுகளை அதனுள்ளே பிரதிபலிப்பதில்லை.
மனம் தன்னைத்தானே கட்டுப்படச் செய்ய வேண்டுமென்றால், மனம் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதற்காக ஒரு புது மன இயக்கத்தை உருவாக்க வேண்டும்- அந்த புது மன இயக்கமும் அந்த மனதினுள் நடைபெறும் ஒரு நிகழ்வு என்னும் விழிப்புணர்வோடு. நாம் தற்போதே சிறிதளவேனும் விழிப்புணர்வுடன் இருந்தால், அந்த விழிப்புணர்வுக்கு காரணமான மன இயக்கத்தின் ஆற்றலை கூட்ட வேண்டும். அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் இந்த குறிக்கோளை நோக்கியே வடிவமைக்கப்பட்டிருக்க கூடும்- நேரடியாகவோ, பிற குறியீடுகள் மூலமாகவோ!
நம் மன இயக்கங்களை நாம் கவனிக்கத் தொடங்கினால், மனதின் மிக வெளிப்படையான இயக்கங்களின் இயங்குமுறையை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மன இயக்கத்தை நம் மனம் கவனிக்கிறது என்பதை அந்த மனமே உணரும்போது, அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தின் ஆற்றல் உடனடியாக பெருமளவில் குறைந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தை மனம் தொடர்ந்து கவனித்து வந்தால், அந்த குறிப்பிட்ட மன இயக்கமே இல்லாமல் அழிந்து விடுகிறது. அதாவது ஒரு நிகழ்வு நிகழும்போதே நம் மனம் அந்த நிகழ்வை உணர முடிந்தால், நம் மன இயக்கத்தின் மூலம் அந்நிகழ்வை நினைவாக சேமிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம் அல்லது நினைவாக சேமிக்கத் தேவையான மன இயக்கத்திற்கு தேவைப்படும் ஆற்றல் மிகக் குறைவானதாக இருக்கலாம். அதாவது நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, மன இயக்கங்களின் மூலம் வீணாக்கப் படும் மன ஆற்றலின் பெரும்பகுதி சேமிக்கப்படுகிறது.
நம் மனம், அதனுள் நிகழும் நிகழ்வுகளை, அதுவே உணரும்போது அல்லது பிரதிபலிக்கும்போது, அந்த மனதினுள் நிகழ்வுகள் தானாகவே கட்டுப்படுகிறது. இத்தகைய கட்டுப்படுதலில் உள்மன முரண்பாடுகளோ போராட்டங்களோ இல்லை. எல்லாவிதமான அடிப்படை ஆன்மிகப் பயிற்சிகளும் யோகப் பயிற்சிகளும் இந்த ஒற்றைக் குறிக்கோளை நோக்கியே இருக்கும் - அந்த குறிக்கோள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், கூறப்படாவிட்டாலும்!
மன இயக்கங்களை இல்லாமல் செய்வதற்கு மன இயக்கங்களின் இயல்பை அறிந்து கொள்வது மிக அவசியம். இந்த அறிவு, நம் மனதை நாமே கூர்ந்து கவனிப்பது மற்றும் கவனப்பின் நீட்சியான அனுமானம் மூலம் மட்டுமே சாத்தியமாகலாம். மேலும் மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்பதை விட மனம் தானாகவே கட்டுப்படுவது அல்லது அடங்குவது என்பதே மிகச்சரியான முறையாக இருக்கும்.
மனதை கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும்போது அங்கு கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கட்டுப்படுத்துவது அல்லது அடக்குவது என்னும் சொல்லினுள்ளேயே இருமை அடங்கியுள்ளது- கட்டுப்ப்படுத்தும் அமைப்பு மற்றும் கட்டுப்படும் பொருள்! ஆனால் நம்மிடம் இருப்பது நம் மனம் மட்டுமே. நம்மிடம் இருக்கும் அந்த ஒரே மனமே அந்த மனத்தை அடக்கவேண்டும் என விரும்புகிறது, அது தன்னைத்தானே அடக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது. அந்த விருப்பம் நிறைவேறாதபோது, அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்படாதபோது அது தன்னைத்தானே வருத்திக் கொள்கிறது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்கிறது.
நாம் நம் மனதை அடக்க வேண்டும் என நினைக்கம்போதே நம் மனம் அதனை இரு பிரிவுகளாக பிரித்துக் கொள்கிறது - ஒரு பகுதி அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் மனம், மற்ற பகுதி அலைபாய்தலை அடக்க வேண்டும் என கருதும் மனம்! ஆக மனம் தனக்குள்ளேயே முரண்படுகிறது - எங்கெல்லாம் முரண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் சக்தி வீணாக்கப்படுகிறது. தனக்குள்ளே முரண்படும் மனதால் மன இயக்கங்களை நிறுத்த அல்லது குறைக்க இயலாது, அது மன இயக்கங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும் - மன வருத்த்தத்தை, துன்பத்தை உருவாக்குவதன் மூலம்! கடவுளை (கடவுள் என்னும் கருத்து எந்த அர்த்த்தத்தில் கூறப்பட்டிருந்தாலும்) அடைவதற்கு அல்லது வாழ்வில் முன்னேற, மனதை அடக்குவது மட்டுமே வழி என எங்காவது கூறப்பட்டிருந்தால், அந்த "அடக்குவது" என்பதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்வது மிக முக்கியமானது.
ஆக, மனதை நம்மால் அடக்க முடியாது. ஆனால் மனதை, அது தானாகவே அடங்குமாறு , கட்டுப்படுமாறு செய்ய முடியும் - மனம் தன்னைத்தானே அறிவதன் மூலம். மனதினுள் ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் - அவை நம் உணர்வுகளில் இருந்தாலும் இல்லாவிடிலும். இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் மனதினுள் நினைவுத் தடங்களை விட்டுச் செல்லும். நாம் பெரும்பாலும் இந்த மன நிகழ்வுகள் நிகழும்போது அவற்றை அறிவதில்லை. அவ்வாறு அறிய நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். ஆம், விழிப்புணர்வின் மூலம் மட்டுமே மனம் தானாகவே கட்டுப்படுமாறு செய்ய முடியும்.
விழிப்புணர்வு என்பது மனதின் இன்னொரு இயக்கமாக அல்லது நிகழ்வாக இருக்கலாம். அதாவது மனதின் ஒரு இயக்கம், மனதின் மற்ற அனைத்து இயக்கங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் மனதின் மொத்த இயக்கத்தையும் மனம் அதனுள்ளேயே பிரதிபலிப்பதாகும்- மனம் அதனுள்ளே பிரதிபலிக்கும் மன இயக்கங்களின், நிகழ்வுகளின் மேல் விழிப்புடன் இருக்கிறோம். தற்போதையவாழ்க்கை முறையில் நம் விழிப்புணர்வை பெரும்பாலும் இழந்து விட்டிருக்கிறோம். நம் மன இயக்கங்களும் நிகழ்வுகளும் நம் மனதினுள் விட்டுச் சென்றுள்ள தடங்களை அல்லது நினைவுகளை மட்டுமே நம் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ளோம். அதாவது நம் தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக மனம் அதன் நிகழ்வுகளை அதனுள்ளே பிரதிபலிப்பதில்லை.
மனம் தன்னைத்தானே கட்டுப்படச் செய்ய வேண்டுமென்றால், மனம் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை கவனிப்பதற்காக ஒரு புது மன இயக்கத்தை உருவாக்க வேண்டும்- அந்த புது மன இயக்கமும் அந்த மனதினுள் நடைபெறும் ஒரு நிகழ்வு என்னும் விழிப்புணர்வோடு. நாம் தற்போதே சிறிதளவேனும் விழிப்புணர்வுடன் இருந்தால், அந்த விழிப்புணர்வுக்கு காரணமான மன இயக்கத்தின் ஆற்றலை கூட்ட வேண்டும். அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் இந்த குறிக்கோளை நோக்கியே வடிவமைக்கப்பட்டிருக்க கூடும்- நேரடியாகவோ, பிற குறியீடுகள் மூலமாகவோ!
நம் மன இயக்கங்களை நாம் கவனிக்கத் தொடங்கினால், மனதின் மிக வெளிப்படையான இயக்கங்களின் இயங்குமுறையை மிக எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட மன இயக்கத்தை நம் மனம் கவனிக்கிறது என்பதை அந்த மனமே உணரும்போது, அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தின் ஆற்றல் உடனடியாக பெருமளவில் குறைந்து விடுகிறது. அந்த குறிப்பிட்ட மன இயக்கத்தை மனம் தொடர்ந்து கவனித்து வந்தால், அந்த குறிப்பிட்ட மன இயக்கமே இல்லாமல் அழிந்து விடுகிறது. அதாவது ஒரு நிகழ்வு நிகழும்போதே நம் மனம் அந்த நிகழ்வை உணர முடிந்தால், நம் மன இயக்கத்தின் மூலம் அந்நிகழ்வை நினைவாக சேமிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம் அல்லது நினைவாக சேமிக்கத் தேவையான மன இயக்கத்திற்கு தேவைப்படும் ஆற்றல் மிகக் குறைவானதாக இருக்கலாம். அதாவது நாம் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, மன இயக்கங்களின் மூலம் வீணாக்கப் படும் மன ஆற்றலின் பெரும்பகுதி சேமிக்கப்படுகிறது.
நம் மனம், அதனுள் நிகழும் நிகழ்வுகளை, அதுவே உணரும்போது அல்லது பிரதிபலிக்கும்போது, அந்த மனதினுள் நிகழ்வுகள் தானாகவே கட்டுப்படுகிறது. இத்தகைய கட்டுப்படுதலில் உள்மன முரண்பாடுகளோ போராட்டங்களோ இல்லை. எல்லாவிதமான அடிப்படை ஆன்மிகப் பயிற்சிகளும் யோகப் பயிற்சிகளும் இந்த ஒற்றைக் குறிக்கோளை நோக்கியே இருக்கும் - அந்த குறிக்கோள் வெளிப்படையாக கூறப்பட்டாலும், கூறப்படாவிட்டாலும்!
Tuesday, August 23, 2011
போராட்டம், ஆன்மீகம்
போராட்டம் – இந்த வார்த்தை கடந்த சில நாட்களில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை என்றால், நாம் லொகீக வாழ்க்கை தளத்தில் இருப்பவர்களானால், நாம் சமூக அமைப்பினுள் வாழவே தகுதியற்றவர்கள் என்றே கருதுகிறேன். இது என் தனிப்பட்ட கருத்து – என் சிந்தனையின், உணர்வுகளின் அடிப்படையில்.
ஊழலுக்கு எதிரான போராட்டம், எந்த ஒரு இரண்டாவது மனிதனுக்கும் எதிரான போராட்டமாக இருக்க முடியாது. அது நமக்குள் இருக்கும் ஊழல்வாதிக்கு எதிரான போராட்டமே. ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும், ஊழலுக்கு அடிப்படை காரணிகளான, பேராசை மற்றும் வன்முறை நிறைந்துள்ளது. நமது சுயமைய பார்வையே நமக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் பேராசையையும் வன்முறையையும் நம்மால் உணரமுடியாதபடிச் செய்கிறது. நம் மனதினுள் உள்ள பேராசையும், வன்முறையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையுமானால், நாம் கூட, பெரும் ஊழல்வாதிகள் என நம்மால் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும், ஊழலில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.
ஆக, இந்தப் போராட்டம் நமக்குள் இருக்கும், சமூக வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்ல தடைகளாக இருக்கும் நம் சொந்த மன இயக்கங்களுக்கு எதிரான போராட்டம். ஆம், இது அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் அந்தரங்கமாக நடத்த வேண்டிய போராட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய உள்மனப் போராட்டத்தை, உள்மனப் புரட்சியை உருவாக்க இயலாதவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே சமூக வாழ்க்கையில் நம் மனதைக் கட்டுப்படுத்த, சமூகத் தளத்தில் செயல்படும் ஒரு சட்ட திட்டம் தேவையாக இருக்கிறது. இப்போதைய சமூகப்புரட்சி, தம் மனதை தாமே கட்டுப்படுத்த இயலாதவர்கள், சமூகத் தளத்தில் இயங்கும்போது, அவர்கள் மனதிலிருந்து பேராசை மற்றும் வன்முறைகள் வெளிப்பட்டு, நம் சமூகத்தின் சமன்நிலையைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கும் கோரிக்கையையே முன் வைத்துள்ளது. ஆக, சமூகத்தினுள் புழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மனதின் விரும்பத்தகாத இயக்கங்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் நோக்கமுள்ள இந்தப்புரட்சியை முன்நகர்த்தி செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – நாம் சமன்நிலை குலையாத சமூக வாழ்க்கையை விரும்பினால்.
ஆன்மீகம் என்பது உணர்வின் உச்ச நிலையை நோக்கிச் செல்வது. எந்த ஒரு மனப் போராட்டமும், மனக் கட்டுப்பாடும் நம் உணர்திறனை அழிக்கும் இயல்புடையவை. ஆக போராட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம் ஆன்மீகத்தன்மையை அழிக்கும் மிக இயல்பான காரணங்கள். இங்கு போராட்டம் அல்லது கட்டுப்பாடு என்பது நம் மனப்போராட்டங்களையும் மனக்கட்டுப்பாடுகளையுமே குறிக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள பலர் லொகீக வாழ்க்கையை துறப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கக்
கூடும் – கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக.
லொகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே நம்மால் கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? முடியும் என்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். நம் மனம், பலவிதமான இயக்கங்களால் ஆனது. இந்த மன இயக்கங்களின் வீரியம் நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்த்து. சில மன இயக்கங்கள் மிகுந்த வீரியத்துடனும் மற்றவை சாதாரணமாகவும் இருக்கலாம். சில மன இயக்கங்கள் நம் வாழ்க்கையை சமூகத் தளத்தில் ஒத்திசைவுடன் செலுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில இயக்கங்கள் சமூகத் தளத்தில் முரண்பட்டு செல்பவையாக இருக்கலாம். இவ்வாறு சமூகத்தளத்தில் முரண்படும் இயக்கங்களே நம் மனப்போராட்டங்களுக்கும், சமூக இயக்கங்களிலிருந்து நாம் முரண்படுவதற்கும் அடிப்படை காரணி. நாம் சமூகத் தளத்தில் இயங்க வேண்டும் என்றால், இந்த முரண்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த கட்டுப்பாடு தேவைப்படும் மன இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டால், சமூக அமைப்பு கட்டுப்படுத்தியாக வேண்டும், சமூகத்தினுள் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டும்.
நம் மனம் நம்மால் கட்டுப்படுத்தப்பட்டாலும், சமூக அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டாலும், அங்கு தனிமனித விடுதலை இழக்கப்பட்டு விடுகிறது. இது சமூக அமைப்பின் கட்டாயம். அதாவது, நம் மன இயக்கங்கள், சமூக இயக்கத்திற்கு முரண்படும்போது அந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வது, அந்த சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதது. ஒரு தனிமனிதனாக, அந்த முரண்பாட்டை நம்மால் உணரமுடியுமானால், அத்தகைய முரண்படும் மன இயக்கங்களின் மூலம் வீணாகும் உளவியல் சக்தியை ஆக்கப் பூர்வமான வழிகளில் திருப்ப முடியும். ஒருவேளை இத்தகைய திருப்புதல் நமக்குள் சாத்தியமானால், நம் ஆன்மீக சக்தி நமக்குள் பிரவாகமாகப் பெருக சாத்தியமுள்ளது – நம் உணர்திறன் பலமடங்குகள் அதிகரிப்பதன் மூலம்.
நம் சமூகத்துடனான ஒத்திசைவு அல்லது முரண்பாடுகள் குறித்து நாம் முழுமையாக அறிய வேண்டுமானால், அந்த சமூகத்துடனான நமது உறவு மிக ஆழமாக இருக்க வேண்டும் – அதாவது அந்த சமூகத்துடனான நமது உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தாக வேண்டும். சமூகத்துடனான நமது உறவுகளின் புரிதல் இல்லாமல், அல்லது அந்த சமூகத்திலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு, அந்த சமூகத்தின் முரண்பாடுகளைப் பற்றி நிச்சயமாக நம்மால் உணரமுடியாது – அத்தகைய சமூக விலக்கத்துடன் இருப்பவர்காளால் உருவாக்கி பரப்ப படும் கருத்துக்களையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும். இத்தகைய கருத்துக்கள் நம் உணர்திறனை இழக்கச் செய்யலாம் – நமது சமூகத்துடனான உறவுகளை, நம் பார்வையிலிருந்து மறைப்பதன் மூலம்!
ஊழலுக்கு எதிரான போராட்டம், எந்த ஒரு இரண்டாவது மனிதனுக்கும் எதிரான போராட்டமாக இருக்க முடியாது. அது நமக்குள் இருக்கும் ஊழல்வாதிக்கு எதிரான போராட்டமே. ஆம், நம் ஒவ்வொருவருக்குள்ளும், ஊழலுக்கு அடிப்படை காரணிகளான, பேராசை மற்றும் வன்முறை நிறைந்துள்ளது. நமது சுயமைய பார்வையே நமக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் பேராசையையும் வன்முறையையும் நம்மால் உணரமுடியாதபடிச் செய்கிறது. நம் மனதினுள் உள்ள பேராசையும், வன்முறையும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அமையுமானால், நாம் கூட, பெரும் ஊழல்வாதிகள் என நம்மால் அடையாளம் காணப்பட்டவர்களை விடவும், ஊழலில் எந்த விதத்திலும் சளைத்தவர்களாக இருக்க மாட்டோம் என்பதே நிதர்சனம்.
ஆக, இந்தப் போராட்டம் நமக்குள் இருக்கும், சமூக வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்ல தடைகளாக இருக்கும் நம் சொந்த மன இயக்கங்களுக்கு எதிரான போராட்டம். ஆம், இது அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் நமக்குள் அந்தரங்கமாக நடத்த வேண்டிய போராட்டம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய உள்மனப் போராட்டத்தை, உள்மனப் புரட்சியை உருவாக்க இயலாதவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவே சமூக வாழ்க்கையில் நம் மனதைக் கட்டுப்படுத்த, சமூகத் தளத்தில் செயல்படும் ஒரு சட்ட திட்டம் தேவையாக இருக்கிறது. இப்போதைய சமூகப்புரட்சி, தம் மனதை தாமே கட்டுப்படுத்த இயலாதவர்கள், சமூகத் தளத்தில் இயங்கும்போது, அவர்கள் மனதிலிருந்து பேராசை மற்றும் வன்முறைகள் வெளிப்பட்டு, நம் சமூகத்தின் சமன்நிலையைப் பாதிக்காதவாறு இருப்பதற்கு தேவையான சட்டதிட்டங்களை உருவாக்கும் கோரிக்கையையே முன் வைத்துள்ளது. ஆக, சமூகத்தினுள் புழங்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மனதின் விரும்பத்தகாத இயக்கங்களை வெளிப்படையாக கட்டுப்படுத்தும் நோக்கமுள்ள இந்தப்புரட்சியை முன்நகர்த்தி செல்லவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் – நாம் சமன்நிலை குலையாத சமூக வாழ்க்கையை விரும்பினால்.
ஆன்மீகம் என்பது உணர்வின் உச்ச நிலையை நோக்கிச் செல்வது. எந்த ஒரு மனப் போராட்டமும், மனக் கட்டுப்பாடும் நம் உணர்திறனை அழிக்கும் இயல்புடையவை. ஆக போராட்டங்களும், கட்டுப்பாடுகளும் நம் ஆன்மீகத்தன்மையை அழிக்கும் மிக இயல்பான காரணங்கள். இங்கு போராட்டம் அல்லது கட்டுப்பாடு என்பது நம் மனப்போராட்டங்களையும் மனக்கட்டுப்பாடுகளையுமே குறிக்கிறது. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள பலர் லொகீக வாழ்க்கையை துறப்பதற்கான காரணம் இதுவாகவே இருக்கக்
கூடும் – கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக.
லொகீக வாழ்க்கையில் இருந்து கொண்டே நம்மால் கட்டுப்பாடுகளற்ற, போராட்டங்களற்ற வாழ்க்கையை வாழ முடியுமா? முடியும் என்பதே பொருத்தமான பதிலாக இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். நம் மனம், பலவிதமான இயக்கங்களால் ஆனது. இந்த மன இயக்கங்களின் வீரியம் நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்த்து. சில மன இயக்கங்கள் மிகுந்த வீரியத்துடனும் மற்றவை சாதாரணமாகவும் இருக்கலாம். சில மன இயக்கங்கள் நம் வாழ்க்கையை சமூகத் தளத்தில் ஒத்திசைவுடன் செலுத்துவதாக இருக்கலாம், மற்றும் சில இயக்கங்கள் சமூகத் தளத்தில் முரண்பட்டு செல்பவையாக இருக்கலாம். இவ்வாறு சமூகத்தளத்தில் முரண்படும் இயக்கங்களே நம் மனப்போராட்டங்களுக்கும், சமூக இயக்கங்களிலிருந்து நாம் முரண்படுவதற்கும் அடிப்படை காரணி. நாம் சமூகத் தளத்தில் இயங்க வேண்டும் என்றால், இந்த முரண்படும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். அந்த கட்டுப்பாடு தேவைப்படும் மன இயக்கங்கள், கட்டுப்படுத்தப்பட்டாக வேண்டும் – நம்மால் கட்டுப்படுத்த இயலாவிட்டால், சமூக அமைப்பு கட்டுப்படுத்தியாக வேண்டும், சமூகத்தினுள் அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டாக வேண்டும்.
நம் மனம் நம்மால் கட்டுப்படுத்தப்பட்டாலும், சமூக அமைப்பால் கட்டுப்படுத்தப் பட்டாலும், அங்கு தனிமனித விடுதலை இழக்கப்பட்டு விடுகிறது. இது சமூக அமைப்பின் கட்டாயம். அதாவது, நம் மன இயக்கங்கள், சமூக இயக்கத்திற்கு முரண்படும்போது அந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வது, அந்த சமூகத்தின் இருப்புக்கு இன்றியமையாதது. ஒரு தனிமனிதனாக, அந்த முரண்பாட்டை நம்மால் உணரமுடியுமானால், அத்தகைய முரண்படும் மன இயக்கங்களின் மூலம் வீணாகும் உளவியல் சக்தியை ஆக்கப் பூர்வமான வழிகளில் திருப்ப முடியும். ஒருவேளை இத்தகைய திருப்புதல் நமக்குள் சாத்தியமானால், நம் ஆன்மீக சக்தி நமக்குள் பிரவாகமாகப் பெருக சாத்தியமுள்ளது – நம் உணர்திறன் பலமடங்குகள் அதிகரிப்பதன் மூலம்.
நம் சமூகத்துடனான ஒத்திசைவு அல்லது முரண்பாடுகள் குறித்து நாம் முழுமையாக அறிய வேண்டுமானால், அந்த சமூகத்துடனான நமது உறவு மிக ஆழமாக இருக்க வேண்டும் – அதாவது அந்த சமூகத்துடனான நமது உறவுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஆழமான புரிதல் இருந்தாக வேண்டும். சமூகத்துடனான நமது உறவுகளின் புரிதல் இல்லாமல், அல்லது அந்த சமூகத்திலிருந்து நம்மை விலக்கிக் கொண்டு, அந்த சமூகத்தின் முரண்பாடுகளைப் பற்றி நிச்சயமாக நம்மால் உணரமுடியாது – அத்தகைய சமூக விலக்கத்துடன் இருப்பவர்காளால் உருவாக்கி பரப்ப படும் கருத்துக்களையும் மிக கவனத்துடன் கையாள வேண்டும். இத்தகைய கருத்துக்கள் நம் உணர்திறனை இழக்கச் செய்யலாம் – நமது சமூகத்துடனான உறவுகளை, நம் பார்வையிலிருந்து மறைப்பதன் மூலம்!
Friday, August 12, 2011
தர்க்க புத்தியும்(Logical Mind), ஆன்மீகமும்.
தர்க்க புத்தி ஆன்மீக வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு கருவி, ஆனால் அதன் எல்லைகளை மீறினால், ஆன்மீக வளர்ச்சிக்கு தடைகல்லாகவும் மாறக்கூடும். தர்க்க புத்தி என்பது, நாம் பெற்ற வாழ்வியல் அறிவை நம் பொருளியல் மற்றும் தத்துவ சிக்கல்களிலிருந்து விடுபட உபயோகிப்பதாகும். ஆன்மீகம், நம் உணர்வின் உச்சத்தை, வாழ்வின் எல்லையை நோக்கி பயணிப்பதாகும். ஒரு எல்லைக்கு மேல் தர்க்க புத்தியும், உணர்வுகளும் ஒன்றை ஒன்று முரண்பட்டு நம் சமநிலையை குலையச் செய்யலாம் – அந்த எல்லை தனிமனித இயல்பை பொறுத்த்து. ஆக நம் வாழ்வின் சமநிலையை உறுதி செய்ய, நம் இயல்பில், தர்க்க புத்தி மற்றும் உணர்வுகளின் இடத்தை அறிந்து, அதற்கான இடத்தை உறுதி செய்வது மிக அவசியம்.
நம் வாழ்க்கை, சமூகத்தால் காலம் காலமாக நம் மேல் சுமத்தப் பட்ட நம்பிக்கைள், சடங்குகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த நம்பிக்கைளும், சடங்குகளும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களும், நம் வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் முன்முடிவுகளை நமக்கு அளித்து அந்த முன்முடிவுகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இயக்குகிறது. நம் வாழ்க்கையின் எந்தெந்த தளங்களில் முன்முடிவை அனுமதிக்கிறோமோ, அந்த தளங்களில் வாழ்வின் நிதர்சனத்தை தவற விட்டு விடுகிறோம். வாழ்வின் நிதர்சனம் நம் கவனத்தினுள் வரவில்லையெனில் வாழ்வின்\ வாழும் உணர்வை இழந்து விடுகிறோம். நம் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை எனில், உண்மையில் நாம் வாழவில்லை – முடுக்கி விட்ட இயந்திரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆம், நமது நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டுப்பாடுகளும் நம்மை உயிருள்ள இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன.
நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அதற்கு எதிராக நம்பிக்கையின்மை என்னும் கருத்தை முன் வைப்பதும் ஒரு நம்பிக்கையே. சடங்குகளை முற்றாக மறுத்து, கைவிட்டு செல்வதும் இன்னொரு நம்பிக்கையே. இந்த நம்பிக்கை மற்றும் எதிர் நம்பிக்கைகளால் நம் வாழ்விற்கு எந்த நன்மையும் கிடையாது. அவை இரண்டினாலும் இயந்திரத் தனமான இயக்கத்திலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாது.
நம் வாழ்க்கையை இயந்திதிரத்தனமான இயக்கத்திலிருந்து மீட்டெடுக்க நம் உணர்வுத் திறனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது நம்பிக்கைகளின் விளைவாக நாம் கொள்ளும் முன்முடிவுகளும், அந்த முன்முடிவுகளைச் சார்ந்த கற்பனைகளும் மன இயக்கங்களும் நம் செயல்களின் விளைவை உணர இயலாதவாறு நம் உணர்திறனை மழுங்கச் செய்கிறது. நாம் குழந்தைகளாக இருந்த்துவரை நம் வாழ்க்கை உணர்வுகளால் மட்டுமே இயக்கப் பட்டிருந்திருக்கும். ஆனால் வழ்வின் போராட்டங்களால், அந்த போராட்டங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத இயலாமையால், நம் உணர்வுத் திறனை சிறுக சிறுக இழந்து, இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குள் நம்மை முழுவதும் இழந்துவிட்டிருக்கிறோம்.
இந்த இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள முதல் கருவி தர்க்க புத்தியாகும். தர்க்க புத்தியால் மட்டுமே நம் வாழ்வின் போராட்டங்களை சரியான முறையில்
எதிர்கொள்வதற்கான திறனை நமக்கு அளிக்க முடியும். தர்க்கபுத்திக்கு அடிப்படைத் தேவை அறிவு. ஆக நாம் எந்தெந்த தளங்களில் அறிவு பெற்றிருக்கிறோமோ அந்த தளங்களில் மட்டுமே தர்க்க புத்தியை உபயோகிக்க முடியும். நாம் அறிவு பெறாத தளங்களில் தர்க்க புத்தியை உபயோகித்தால், அந்த தர்க்கமும் முன்முடிவை சார்ந்தே இருக்கும் – அத்தகைய தர்க்கம் வெறும் கற்பனையே. ஆக நம்மால் இயலும் தர்க்கத்தின் எல்லையை அறிய, நம் அறிவு குறித்த உணர்வு இன்றியமையாதது. தர்க்கத்தின் தேவை உள்ள நம் வாழ்வின் தளங்களில், நம் அறிவை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. ஆக நமக்குத் தேவை அறிவைப் பெறுவதற்கான உபரி உழைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் உண்மையிலேயே விரும்பினால், இயந்திரமயமாக்கப்பட்ட, கணினி மயமாக்கப்பட்ட நம் வாழ்க்கை அமைப்பில், உபரி உழைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.
தர்க்க புத்தியின் தேவை தனிமனித உளவியல் இயல்பிற்கேற்ப மாறுபடும். இதன் தேவை நம் தேடுதல்களின் வீச்சைப் பொறுத்தது. நம் தேடுதலின் வீச்சைப் பொறுத்து, நம் மனதினுள் முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்த முடிச்சுகளை அவிழ்த்து விட்டு நம் தேடுதலைத் தொடர்ந்தால் நாம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் பயணிக்க முடியும். ஆனால் அந்த முடிச்சுகளை நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகள் மூலம் மறைத்து முன்னோக்கி சென்றால், பெரும்பாலும் நம்மால் உண்மையை உணர முடிவதில்லை – நம் நம்பிக்கைகளால் முடிவு செய்தவற்றையே நம்மால் அடையமுடியும்.
வாழ்க்கையை அநுபவிப்பது என்பது, நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நம்முள் நிகழும் நிகழ்வுகளை உணர்வதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், பெரும்பாலும் வாழ்வு நடைபெறும் கணத்தில் நம்மால் வாழ்வை உணர முடிவதில்லை. வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அவ்வாறு நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த வாழ்க்கையின் கற்பனையில் திளைக்கும்போது, அந்த கணத்தில் நடைபெறும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறோம். ஆக நாம் வாழும் வாழ்க்கை என்பது நம் நினைவுகளில் நாம் சேமித்து வைத்துள்ள வாழ்க்கையின் ஒரு சிறிய துளி மட்டுமே. வாழ்வின் பெரும் பகுதியை, நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், அநுபவிக்க முடியாமல் இழந்து விடுகிறோம்.
ஆக நம் வாழ்க்கையை நாம் அநுபவிக்க வேண்டுமானால், நம் உணர்திறனை நாம் திரும்ப பெற்றாக வேண்டும். அதற்கு, நம் உணர்வுத் திறனை இல்லாமல் செய்யும் காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும். உணர்திறனை அதிகரிக்கச் செய்ய பல வழிகள் இருக்கலாம். ஆனால் உணர்திறனை மழுங்கடிக்கும் காரணிகளை வெல்ல தர்க்க புத்தியால் மட்டுமே முடியும்.
நம் தர்க்க புத்தியின் மூலம் நம் உணர்திறனை திரும்பப்பெற முடியுமானால், நம் ஆன்மீக வாழ்க்கையில் – உணர்வுகளின் உச்சத்தை நோக்கிய நம் வாழ்க்கை பயணத்தில், மிகப்பெரிய முன்நகர்வை உணர முடியும். ஆனால் தர்க்க புத்தியின் எல்லைகளை அறிந்திருப்பதும் மிக அவசியம். அந்த எல்லையை தவற விட்டால், தர்க்கபுத்தி நம் உணர்வுகளை உடைத்து, அழித்து இயந்திரத் தனமான வாழ்க்கையில் மறுபடியும் நம்மை தூக்கி எறிந்து விடலாம்!
நம் வாழ்க்கை, சமூகத்தால் காலம் காலமாக நம் மேல் சுமத்தப் பட்ட நம்பிக்கைள், சடங்குகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த நம்பிக்கைளும், சடங்குகளும், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்ட திட்டங்களும், நம் வாழ்க்கையின் பெரும்பாலான தளங்களில் முன்முடிவுகளை நமக்கு அளித்து அந்த முன்முடிவுகளின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இயக்குகிறது. நம் வாழ்க்கையின் எந்தெந்த தளங்களில் முன்முடிவை அனுமதிக்கிறோமோ, அந்த தளங்களில் வாழ்வின் நிதர்சனத்தை தவற விட்டு விடுகிறோம். வாழ்வின் நிதர்சனம் நம் கவனத்தினுள் வரவில்லையெனில் வாழ்வின்\ வாழும் உணர்வை இழந்து விடுகிறோம். நம் வாழ்வை நம்மால் உணர முடியவில்லை எனில், உண்மையில் நாம் வாழவில்லை – முடுக்கி விட்ட இயந்திரத்தைப் போல் இயங்கிக்கொண்டிருக்கிறோம். ஆம், நமது நம்பிக்கைகளும், சடங்குகளும், கட்டுப்பாடுகளும் நம்மை உயிருள்ள இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன.
நம்பிக்கைகளை முற்றாக மறுத்து, அதற்கு எதிராக நம்பிக்கையின்மை என்னும் கருத்தை முன் வைப்பதும் ஒரு நம்பிக்கையே. சடங்குகளை முற்றாக மறுத்து, கைவிட்டு செல்வதும் இன்னொரு நம்பிக்கையே. இந்த நம்பிக்கை மற்றும் எதிர் நம்பிக்கைகளால் நம் வாழ்விற்கு எந்த நன்மையும் கிடையாது. அவை இரண்டினாலும் இயந்திரத் தனமான இயக்கத்திலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க இயலாது.
நம் வாழ்க்கையை இயந்திதிரத்தனமான இயக்கத்திலிருந்து மீட்டெடுக்க நம் உணர்வுத் திறனை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். நமது நம்பிக்கைகளின் விளைவாக நாம் கொள்ளும் முன்முடிவுகளும், அந்த முன்முடிவுகளைச் சார்ந்த கற்பனைகளும் மன இயக்கங்களும் நம் செயல்களின் விளைவை உணர இயலாதவாறு நம் உணர்திறனை மழுங்கச் செய்கிறது. நாம் குழந்தைகளாக இருந்த்துவரை நம் வாழ்க்கை உணர்வுகளால் மட்டுமே இயக்கப் பட்டிருந்திருக்கும். ஆனால் வழ்வின் போராட்டங்களால், அந்த போராட்டங்களை சரியான முறையில் எதிர்கொள்ள முடியாத இயலாமையால், நம் உணர்வுத் திறனை சிறுக சிறுக இழந்து, இயந்திரத்தனமான வாழ்க்கை முறைக்குள் நம்மை முழுவதும் இழந்துவிட்டிருக்கிறோம்.
இந்த இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டெடுக்க நம்மிடம் இயற்கையாகவே உள்ள முதல் கருவி தர்க்க புத்தியாகும். தர்க்க புத்தியால் மட்டுமே நம் வாழ்வின் போராட்டங்களை சரியான முறையில்
எதிர்கொள்வதற்கான திறனை நமக்கு அளிக்க முடியும். தர்க்கபுத்திக்கு அடிப்படைத் தேவை அறிவு. ஆக நாம் எந்தெந்த தளங்களில் அறிவு பெற்றிருக்கிறோமோ அந்த தளங்களில் மட்டுமே தர்க்க புத்தியை உபயோகிக்க முடியும். நாம் அறிவு பெறாத தளங்களில் தர்க்க புத்தியை உபயோகித்தால், அந்த தர்க்கமும் முன்முடிவை சார்ந்தே இருக்கும் – அத்தகைய தர்க்கம் வெறும் கற்பனையே. ஆக நம்மால் இயலும் தர்க்கத்தின் எல்லையை அறிய, நம் அறிவு குறித்த உணர்வு இன்றியமையாதது. தர்க்கத்தின் தேவை உள்ள நம் வாழ்வின் தளங்களில், நம் அறிவை மேம்படுத்துவதும் இன்றியமையாதது. ஆக நமக்குத் தேவை அறிவைப் பெறுவதற்கான உபரி உழைப்பு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் உண்மையிலேயே விரும்பினால், இயந்திரமயமாக்கப்பட்ட, கணினி மயமாக்கப்பட்ட நம் வாழ்க்கை அமைப்பில், உபரி உழைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளது.
தர்க்க புத்தியின் தேவை தனிமனித உளவியல் இயல்பிற்கேற்ப மாறுபடும். இதன் தேவை நம் தேடுதல்களின் வீச்சைப் பொறுத்தது. நம் தேடுதலின் வீச்சைப் பொறுத்து, நம் மனதினுள் முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்த முடிச்சுகளை அவிழ்த்து விட்டு நம் தேடுதலைத் தொடர்ந்தால் நாம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் பயணிக்க முடியும். ஆனால் அந்த முடிச்சுகளை நம்பிக்கைகள் மற்றும் முன்முடிவுகள் மூலம் மறைத்து முன்னோக்கி சென்றால், பெரும்பாலும் நம்மால் உண்மையை உணர முடிவதில்லை – நம் நம்பிக்கைகளால் முடிவு செய்தவற்றையே நம்மால் அடையமுடியும்.
வாழ்க்கையை அநுபவிப்பது என்பது, நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலும் நம்முள் நிகழும் நிகழ்வுகளை உணர்வதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், பெரும்பாலும் வாழ்வு நடைபெறும் கணத்தில் நம்மால் வாழ்வை உணர முடிவதில்லை. வாழ்க்கையை நாம் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து மட்டுமே வாழ்ந்து கொண்டுருக்கிறோம். அவ்வாறு நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த வாழ்க்கையின் கற்பனையில் திளைக்கும்போது, அந்த கணத்தில் நடைபெறும் வாழ்க்கையையும் தவற விட்டு விடுகிறோம். ஆக நாம் வாழும் வாழ்க்கை என்பது நம் நினைவுகளில் நாம் சேமித்து வைத்துள்ள வாழ்க்கையின் ஒரு சிறிய துளி மட்டுமே. வாழ்வின் பெரும் பகுதியை, நம் உணர்திறன் மழுங்கடிக்கப் பட்டிருப்பதால், அநுபவிக்க முடியாமல் இழந்து விடுகிறோம்.
ஆக நம் வாழ்க்கையை நாம் அநுபவிக்க வேண்டுமானால், நம் உணர்திறனை நாம் திரும்ப பெற்றாக வேண்டும். அதற்கு, நம் உணர்வுத் திறனை இல்லாமல் செய்யும் காரணிகளை கண்டறிந்து அவற்றை களைய வேண்டும். உணர்திறனை அதிகரிக்கச் செய்ய பல வழிகள் இருக்கலாம். ஆனால் உணர்திறனை மழுங்கடிக்கும் காரணிகளை வெல்ல தர்க்க புத்தியால் மட்டுமே முடியும்.
நம் தர்க்க புத்தியின் மூலம் நம் உணர்திறனை திரும்பப்பெற முடியுமானால், நம் ஆன்மீக வாழ்க்கையில் – உணர்வுகளின் உச்சத்தை நோக்கிய நம் வாழ்க்கை பயணத்தில், மிகப்பெரிய முன்நகர்வை உணர முடியும். ஆனால் தர்க்க புத்தியின் எல்லைகளை அறிந்திருப்பதும் மிக அவசியம். அந்த எல்லையை தவற விட்டால், தர்க்கபுத்தி நம் உணர்வுகளை உடைத்து, அழித்து இயந்திரத் தனமான வாழ்க்கையில் மறுபடியும் நம்மை தூக்கி எறிந்து விடலாம்!
Saturday, August 6, 2011
மனித பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்
பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ஒரு செல் உயிரினத்திலிருந்து, இன்றைய மனிதனாக நாம் உருவெடுத்திருக்கிறோம். பல ஆயிரம் (அல்லது சில லட்சம்) ஆண்டுகளாக உருவமும் சிந்தனையும் வளர்ச்சியடைந்து, இன்றைய மனிதனாக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்த பரிமாண வளர்ச்சியின் வேகத்தையும் திசையையும் ஒரளவேனும் நம்மால் அனுமானிக்க முடிந்தால், ஒருவேளை பரிணாம வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான காலகட்டத்தில் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நம்மால் உணர முடியலாம். அந்த விழிப்புணர்வு நமக்கு கிட்க்கப்பெற்றால், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான கிரியா ஊக்கியாக கூட நம்மால் மாற முடியலாம்.
ஒரு காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித சிந்தனையின் ஒரு தளம் அன்றாட வாழ்வியல் என்பதிலிருந்து, வாழ்வின் தோற்றம் மற்றும் முடிவு என்பதை குறித்து திரும்பியிருக்க வேண்டும். ஆம், ஆன்மீகம் என்னும் சிந்தனைத் தளம் அப்போதுதான் தோன்றியிருக்க கூடும் – இங்கு ஆன்மீகம் என்பது, சுயம் நோக்கிய சிந்தனைத் தளத்தை மட்டும், இன்றைய லௌகீகம் சார்ந்த சடங்குகளையும் கடவுள் என்னும் கருத்தையும் புறந்தள்ளியே குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போதைய இந்தியாவில், வேத காலகட்டம் சமார் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று கணிக்கப் படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்ங்களுக்கு முன்பு எகிப்து, கிரேக்க நாடுகளில், தத்துவம் சார்ந்த மதங்கள் இருந்துள்ளன. ஆக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனின் தேடல் உள்நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தேடுதலின் தொடர்ச்சியே வேதம், உபநிஷதம் மற்றும் பல தத்துவ தரிசனங்களையும் நமக்கு அளித்திருக்க வேண்டும். இந்த தேடுதலின் விளைவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் அந்த தேடுதலின் முழுமையை அல்லது முழுமையின் அருகாமையை அடைந்துள்ளனர். ஆக மனித மனம் முழுமையை அடைவது என்பது ஒரு கற்பனை அல்ல – அது ஒரு உண்மை. இந்த உண்மையை, கடந்த ஐந்தாயிரம் வருட மனித வரலாற்றிலும், நிகழ்காலத்திலும் பல உதாரணங்களை நம்மால் காண முடியும். எனவே முழுமையை நோக்கி நகர்வதே மனித இன பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்க முடியும்.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது, மனித இனத்தை முழுவதுமாக பார்க்கும்போது, நாம் தேடலை தொடங்கி ஐந்தாயிரம் வருடங்களுக்கு பின்னும், அந்த தேடலின் முழுமையை அடையாமல் இருக்கிறோம் – மிக மிக குறைந்த பட்ச மனிதர்களால் மட்டுமே முழுமையை அடைய முடிந்துள்ளது. இதற்கு காரணம், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது, மனித இனத்தின் அடிப்படை இருப்புக்கான (existence) போராட்டம், அந்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாமல் செய்திருக்கலாம்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போதைய காலகட்டத்தில், முழுமையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் அல்லது முழுமையை அடைந்தவர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டாலும், அந்த தேடுதலின் பாதிப்பு மரபணுக்களில் ஏற்படும் முன்பே இனப்பெருக்கம் முடிந்து விடுகிறது. ஆக முழுமையை நோக்கிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாமல் தேங்கி இருக்கிறது.
பரிணாம வளர்ச்சி பெரும்பாலும், அந்த வளர்ச்சி தொடங்கும் புள்ளியிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு கிளை தற்போதைய இருப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு கிளை பரிணாம வளர்ச்சியடைந்து புதிய இனமாக பரிணமிக்கும். மனித இனத்தில், முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சி சாத்தியமானால், அத்தகைய சாத்தியக்கூறு, தற்போதைய உலகில் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.
உலகின் பெரும்பாலான இடங்களில் நமக்கு முந்தைய தலைமுறைவரை அல்லது தொழில் முறைகளில் மிக வளர்ச்சியடைந்துள்ள உலக பாகங்களில் அதற்கும் முந்தைய தலைமுறைவரை, மனித உழைப்பின் பெரும் பகுதி, மனிதனின் அன்றாட பிழைத்தலுக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது. நமது உடல் உழைப்பு பெரும்பாலும் இயந்திர மயமாக்கப் பட்டுள்ளது. நம் மூளையின் உழைப்பு பெரும்பாலும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமது உழைப்பு என்பது பெரும்பாலும் இயந்திரம் அல்லது கணினியை கட்டமைப்பது மற்றும் இயக்குவது மட்டுமே. ஆக நாம் மனித இனத்தின் இன்றைய காலகட்டம்வரை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்ற சக்தி, அதன் இயக்கத்தின் திசையை நோக்கி, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து, நம்மிடம் காத்துக் கொண்டிருக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவில், நம் வாழ்க்கையின் அன்றாட பிழைத்தலுக்கு தேவையான சக்தியை விட உபரி சக்தி நம்மிடம் இருப்பதன் மூலம், நாம் விரும்பினால், முழுமையை நோக்கிய தேடுதலுக்கான சாத்தியங்களுடன் இருக்கிறோம். ஒன்று மட்டும் நிதர்சனம். நம் உபரி சக்தியை நாம் நிச்சயமாக செலவழித்தாக வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அவ்வாறு செலவழிப்பதற்கும் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்க முடியும் – நம் முழுமையை நோக்கிய தேடுதலுக்காக, முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்காக செலவழிக்கலாம் அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கலாம். இது இரண்டையும் தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. படைப்பூக்கத்துடன் (creativity) செலவிடப்படும் உபரி சக்தி, நம் முழுமையை நோக்கிய தேடுதலைச் சார்ந்து இருக்கும். படைப்பூக்கம் இல்லாமல் செலவிடப்படும் உபரி சக்தி, நமது பொழுது போக்கிற்கு மட்டும் செலவிடப்படுவதாகும்.
மேலே கூறப்பட்டவை சாத்தியம் என்றால், பரிணாம வளர்ச்சியில் நம் பங்களிப்புக்கும் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன – நாம் முழுமையை நோக்கி நகர்ந்து, பரிணாம வளர்ச்சியடைந்து புதிய மனித இனத்திற்கு முன்னோடியாக இருக்கலாம், அல்லது தற்போதைய மனித இனத்தின் நீட்சியாக, மனித வரலாற்றில் காணப்படும் மனித இனத்தின் ஏற்றத் தாழ்வுகளுடனும் இன்ப துன்பங்களுடனும், மனித இனத் தொடர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கலாம்.
பி.கு; அரவிந்தர் மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தரிசனங்களில் இந்த கருத்து, அவர்களின் தனித்தன்மைக்கேற்ப கூறப்பட்டிருப்பதை காணலாம்.
ஒரு காலகட்டத்தில், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மனித சிந்தனையின் ஒரு தளம் அன்றாட வாழ்வியல் என்பதிலிருந்து, வாழ்வின் தோற்றம் மற்றும் முடிவு என்பதை குறித்து திரும்பியிருக்க வேண்டும். ஆம், ஆன்மீகம் என்னும் சிந்தனைத் தளம் அப்போதுதான் தோன்றியிருக்க கூடும் – இங்கு ஆன்மீகம் என்பது, சுயம் நோக்கிய சிந்தனைத் தளத்தை மட்டும், இன்றைய லௌகீகம் சார்ந்த சடங்குகளையும் கடவுள் என்னும் கருத்தையும் புறந்தள்ளியே குறிப்பிடப் பட்டுள்ளது.
தற்போதைய இந்தியாவில், வேத காலகட்டம் சமார் ஐந்து முதல் எட்டு ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்று கணிக்கப் படுகிறது. கிறிஸ்தவ, முஸ்லீம் மதங்ங்களுக்கு முன்பு எகிப்து, கிரேக்க நாடுகளில், தத்துவம் சார்ந்த மதங்கள் இருந்துள்ளன. ஆக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனின் தேடல் உள்நோக்கி திரும்பி இருக்கிறது. இந்த தேடுதலின் தொடர்ச்சியே வேதம், உபநிஷதம் மற்றும் பல தத்துவ தரிசனங்களையும் நமக்கு அளித்திருக்க வேண்டும். இந்த தேடுதலின் விளைவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் அந்த தேடுதலின் முழுமையை அல்லது முழுமையின் அருகாமையை அடைந்துள்ளனர். ஆக மனித மனம் முழுமையை அடைவது என்பது ஒரு கற்பனை அல்ல – அது ஒரு உண்மை. இந்த உண்மையை, கடந்த ஐந்தாயிரம் வருட மனித வரலாற்றிலும், நிகழ்காலத்திலும் பல உதாரணங்களை நம்மால் காண முடியும். எனவே முழுமையை நோக்கி நகர்வதே மனித இன பரிமாண வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இருக்க முடியும்.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது, மனித இனத்தை முழுவதுமாக பார்க்கும்போது, நாம் தேடலை தொடங்கி ஐந்தாயிரம் வருடங்களுக்கு பின்னும், அந்த தேடலின் முழுமையை அடையாமல் இருக்கிறோம் – மிக மிக குறைந்த பட்ச மனிதர்களால் மட்டுமே முழுமையை அடைய முடிந்துள்ளது. இதற்கு காரணம், அத்தகைய பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது, மனித இனத்தின் அடிப்படை இருப்புக்கான (existence) போராட்டம், அந்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாமல் செய்திருக்கலாம்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லப்படும். தற்போதைய காலகட்டத்தில், முழுமையை நோக்கிய தேடுதல் உள்ளவர்கள் அல்லது முழுமையை அடைந்தவர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டாலும், அந்த தேடுதலின் பாதிப்பு மரபணுக்களில் ஏற்படும் முன்பே இனப்பெருக்கம் முடிந்து விடுகிறது. ஆக முழுமையை நோக்கிய மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாமல் தேங்கி இருக்கிறது.
பரிணாம வளர்ச்சி பெரும்பாலும், அந்த வளர்ச்சி தொடங்கும் புள்ளியிலிருந்து இரண்டு கிளைகளாக பிரிந்து செல்லும். ஒரு கிளை தற்போதைய இருப்பின் தொடர்ச்சியாக இருக்கும். இன்னொரு கிளை பரிணாம வளர்ச்சியடைந்து புதிய இனமாக பரிணமிக்கும். மனித இனத்தில், முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சி சாத்தியமானால், அத்தகைய சாத்தியக்கூறு, தற்போதைய உலகில் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக உள்ளது.
உலகின் பெரும்பாலான இடங்களில் நமக்கு முந்தைய தலைமுறைவரை அல்லது தொழில் முறைகளில் மிக வளர்ச்சியடைந்துள்ள உலக பாகங்களில் அதற்கும் முந்தைய தலைமுறைவரை, மனித உழைப்பின் பெரும் பகுதி, மனிதனின் அன்றாட பிழைத்தலுக்கும், பாதுகாப்புக்கும் மட்டுமே செலவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறானது. நமது உடல் உழைப்பு பெரும்பாலும் இயந்திர மயமாக்கப் பட்டுள்ளது. நம் மூளையின் உழைப்பு பெரும்பாலும் கணினி மயமாக்கப் பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நமது உழைப்பு என்பது பெரும்பாலும் இயந்திரம் அல்லது கணினியை கட்டமைப்பது மற்றும் இயக்குவது மட்டுமே. ஆக நாம் மனித இனத்தின் இன்றைய காலகட்டம்வரை, மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்ற சக்தி, அதன் இயக்கத்தின் திசையை நோக்கி, பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எதிர்பார்த்து, நம்மிடம் காத்துக் கொண்டிருக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவில், நம் வாழ்க்கையின் அன்றாட பிழைத்தலுக்கு தேவையான சக்தியை விட உபரி சக்தி நம்மிடம் இருப்பதன் மூலம், நாம் விரும்பினால், முழுமையை நோக்கிய தேடுதலுக்கான சாத்தியங்களுடன் இருக்கிறோம். ஒன்று மட்டும் நிதர்சனம். நம் உபரி சக்தியை நாம் நிச்சயமாக செலவழித்தாக வேண்டும். இதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அவ்வாறு செலவழிப்பதற்கும் இரண்டு சாத்தியங்கள் மட்டுமே இருக்க முடியும் – நம் முழுமையை நோக்கிய தேடுதலுக்காக, முழுமையை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்காக செலவழிக்கலாம் அல்லது பொழுது போக்கிற்காக செலவழிக்கலாம். இது இரண்டையும் தவிர வேறு சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. படைப்பூக்கத்துடன் (creativity) செலவிடப்படும் உபரி சக்தி, நம் முழுமையை நோக்கிய தேடுதலைச் சார்ந்து இருக்கும். படைப்பூக்கம் இல்லாமல் செலவிடப்படும் உபரி சக்தி, நமது பொழுது போக்கிற்கு மட்டும் செலவிடப்படுவதாகும்.
மேலே கூறப்பட்டவை சாத்தியம் என்றால், பரிணாம வளர்ச்சியில் நம் பங்களிப்புக்கும் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன – நாம் முழுமையை நோக்கி நகர்ந்து, பரிணாம வளர்ச்சியடைந்து புதிய மனித இனத்திற்கு முன்னோடியாக இருக்கலாம், அல்லது தற்போதைய மனித இனத்தின் நீட்சியாக, மனித வரலாற்றில் காணப்படும் மனித இனத்தின் ஏற்றத் தாழ்வுகளுடனும் இன்ப துன்பங்களுடனும், மனித இனத் தொடர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இருக்கலாம்.
பி.கு; அரவிந்தர் மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தரிசனங்களில் இந்த கருத்து, அவர்களின் தனித்தன்மைக்கேற்ப கூறப்பட்டிருப்பதை காணலாம்.
Sunday, July 31, 2011
செல்வம், பணம்
சமுதாய அமைப்பினுள் வாழும்போது, நம் வாழ்க்கைக்கு மிக மிகத் தேவையான, ஆனால் மிக மிக அதிகமாக நம் உளவியல் சக்தியை விரயம் செய்விக்கும் ஒரு கருத்து செல்வம் அல்லது பணம் என்னும் கருத்து ஆகும். ஆனால், அந்த இன்றியமையாத, அதேநேரத்தில் நம் உளவியல் சக்தியை விரயம் செய்வதன் மூலம் நம் வாழ்க்கையை வாழ்வு என்பதன் உண்மையான அர்த்தத்தில் நாம் வாழ்வதிலிருந்து நம்மைப் பிறழச்செய்யும் பணத்தைக் குறித்த அறிவு, நம்மில் பெரும்பாலானவர்க்கு, மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது, இங்கு பணத்தைக் குறித்த அறிவு என்பது, சமூக அமைப்பில் பணத்தின் பங்கு, நம் வாழ்க்கையில் பணத்தின் சரியான பயன்பாடு, பணம் குறித்த நம் உளவியல் தேவைகள் என்பனவாகும்- மிக முக்கியமாக, உளவியல் தேவைகள். பணம் குறித்த இந்த அடிப்படை அறிவு நமக்கு கிடைக்கப்பெற்றால், ஒருவேளை பணத்தைக் குறித்த உளவியல் செயல் பாடுகள் மூலம் நம் உளவியல் சக்தி விரயமாவதை ஓரளவேனும் தடுக்க முடியலாம்.
முதலில் பணத்தின் பொருளியல் பயன்பாடு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் தேவைகளை முடிவு செய்வது நாமாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களே நமது தேவைகளை பெரும்பாலும் முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள் - நம் உளவியல் தேவைகளை தூண்டுவதன் மூலம். ஆக நமது தேவைகளை நாமே முடிவு செய்வதற்கான குறைந்த பட்ச அறிவும் விழிப்புணர்வும் கூட இல்லாமல் இருக்கிறோம். பொருளியல் தேவைகளைக் குறித்த அறிவை நாம் பிறரிடமிருந்து பெறலாம். ஆனால் அந்த தேவையை முடிவு செய்வது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு பிறரால் ஏற்படுத்தப் பட்ட உளவியல் தாக்கங்கள், நம் தேவையை முடிவு செய்யாத வகையில், நம் மனதின் செயல்பாடுகளைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். பணத்தின் பொருளியல் பயன்பாடு என்பது, நமக்குத் தேவையென நம்மால் முடிவுச் செய்யப்பட்ட தேவைகளை அடைவதாக மட்டுமே இருக்க முடியும். இந்தத் தேவைகள் பொதுமைப் படுத்த முடியாதவை- தனி மனித இயல்பை சார்ந்தது. ஆக நமது தேவை என்பது நமது இயல்பு, நமது சூழலுடன் இயைந்து செல்வதற்கான பொருளியல் தன்மைகளை உருவாக்குவது அல்லது அடைவதாகும்.
ஒரு சமூகச் சூழலில், நமது பொருளியல் தேவைகளை நமது உழைப்பால் மட்டும் உருவாக்குவது என்பது இயலாதது. நமது தேவைகளை சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பலரின் உழைப்பின் மூலம் மட்டுமே பெற முடியும். நமது உழைப்பின் பகுதியை மற்றவர்களுக்கு வழங்கியும், மற்றவர்களின் உழைப்பின் பகுதியை பெற்றும் நம் பொருளியல் தேவைகளை நிவர்த்தி செய்கிறோம். ஆக நாம் சமூகத்திற்கு அளிக்கும் உழைப்பையும், சமூகத்திலிருந்து பெறும் உழைப்பையும் அளவிட வேண்டியது அவசியமாகிறது. இந்த அளவீடே பணம் என்னும் கருத்தாகும். ஆக நாம், நமது உழைப்பையே பணமாக சேமிக்கிறோம் – நமது உழைப்பை சேமிக்கும்போது அது நேர்மையான சம்பாத்யம், பிறர் உழைப்பைச் சுரண்டி சேமிக்கும்போதி அநியாய சம்பாத்யம்.
நாம் எந்த அளவுக்கு நமது உழைப்பை சேமிக்க வேண்டும்? அது நமது தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. ஆனால், நம் உழைப்பின் தேவையை நாம் மதிப்பிட வேண்டுமானால், நம் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். விழிப்புணர்வு என்பது, நமது மற்றும் நமது சந்ததியின் தேவைகள் என நம் மனம் உருவாக்கும் கற்பனைகள் அல்ல – கற்பனை என்பது வெறும் மன பிம்பங்களே, அவை ஒருபோதும் நமது தேவைகளாக இருக்க முடியாது. நமது இயல்பு மற்றும் சமூகக் கடமைகளை மனம் உணரும்போது, மனதால் நமது தேவைகளையும் உணர முடியும். நமது தேவை என்பது நம் மனம் அதன் கற்பனைத் திறனால் உருவாக்கும் தேவைகள் அல்ல, ஆனால் மனம் உணரும் தேவைகள் – மனதின் கற்பனைக்கும், மனதின் உணர்வுக்கும் இடையான வித்தியாசத்தை நம்மால் அறிய முடிந்தால் மட்டுமே நம்மால் நமது உண்மையான தேவைகளை அறிந்து கொள்ள முடியும். ஆக நம் வாழ்வின் அடிப்படையை, வாழும் முறையை அறிந்து கொள்ளவே பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் நாம் உழைப்பை சேமிப்பதற்காகவே உழைக்கிறோம், வாழ்க்கையை வாழ்வதற்காக உழைக்கவில்லை – வாழ்க்கையை, வாழும் முறையை, அறிந்தால் மட்டுமே நம்மால் நம் வாழ்க்கையை வாழ முடியும்.
ஆம், நம் உயிர்ப் பிழைத்தலுக்கு தேவையான உழைப்பைத் தவிர உள்ள உபரி உழைப்பினை மட்டுமே சேமிப்பு அல்லது வாழ்க்கையை அறிதலுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், இங்கு நாம் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பது கற்றவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், தங்கள் எளிய உழைப்பினால் மட்டுமே கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்தகைய நாம், நமது உபரி உழைப்பின் சிறு பகுதியைக் கூட நமது சொந்த வாழ்க்கையைக் குறித்து கூட அறிந்து கொள்ளச் செலவிடாமல், மனதால் கற்பனை மூலம் உருவாக்கப் படும் தேவைகளுக்காக சேமித்துக் கொண்டே இருக்கிறோம். ஆக நம் உயிர் பிரியும் தருணம்வரை நம் தேவைகளும் பூர்த்தி ஆவதில்லை, நம் உழைப்பிலிருந்து நமக்கு விடுதலையும் இல்லை.
நாம் இறக்கும் தருணம்வரை நம் வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொள்ளாமலே, எனவே நம் வாழ்க்கையை வாழாமலே நாம் இறந்து விட தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆக நம் வாழ்க்கையை அறிந்து கொள்ளத் தேவையான உபரி உழைப்பையும் நம் கற்பனையில் உருவான தேவைகளை அடைவதற்காகவே சேமித்து, நம் வாழ்க்கையையும் கற்பனையிலேயே வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கிறோம். உபரி உழைப்பை நம் வாழ்விற்காக செலவிடாமல் பணமாக, செல்வமாக, பொருளாக, நம் இறுதிவரை சேமித்துக் கொண்டே இருக்கிறோம்.
ஆக நம் மனம் உணரும் தேவைகளுக்காக செலவிடப்படும் பணம் அல்லது உழைப்பு, நம் பொருளியல் தேவைகளுக்காகச் செலவிடப்படுவதாகும். இந்த செலவிடுதல், தவிர்க்க முடியாதது, தவிர்க்க கூடாதது. நம் மனம் கற்பனைச் செய்யும் தேவைகளுக்காகச் செலவிடப் படும் பணம் அல்லது உழைப்பு, நம் உளவியல் தேவைகளுக்காக செலவிடப் படுவதாகும் – இதுவே வீணாக்கப்படும் உழைப்பு அல்லது சக்தி ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உபரி உழைப்பை நமது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவழிப்பது\சேமிப்பது அல்லது நம் உளவியல் தேவைகளுக்காக செலவழிப்பது\சேமிப்பது (வீணாக்குவது) என்பது, நமது உளவியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதாவது, நம் மனம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது, அது கற்பனையில் உழலாது, உணர்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்!
முதலில் பணத்தின் பொருளியல் பயன்பாடு. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நம் தேவைகளை முடிவு செய்வது நாமாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களே நமது தேவைகளை பெரும்பாலும் முடிவு செய்பவர்களாக இருக்கிறார்கள் - நம் உளவியல் தேவைகளை தூண்டுவதன் மூலம். ஆக நமது தேவைகளை நாமே முடிவு செய்வதற்கான குறைந்த பட்ச அறிவும் விழிப்புணர்வும் கூட இல்லாமல் இருக்கிறோம். பொருளியல் தேவைகளைக் குறித்த அறிவை நாம் பிறரிடமிருந்து பெறலாம். ஆனால் அந்த தேவையை முடிவு செய்வது நாமாக மட்டுமே இருக்கவேண்டும். அதற்கு பிறரால் ஏற்படுத்தப் பட்ட உளவியல் தாக்கங்கள், நம் தேவையை முடிவு செய்யாத வகையில், நம் மனதின் செயல்பாடுகளைப்பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். பணத்தின் பொருளியல் பயன்பாடு என்பது, நமக்குத் தேவையென நம்மால் முடிவுச் செய்யப்பட்ட தேவைகளை அடைவதாக மட்டுமே இருக்க முடியும். இந்தத் தேவைகள் பொதுமைப் படுத்த முடியாதவை- தனி மனித இயல்பை சார்ந்தது. ஆக நமது தேவை என்பது நமது இயல்பு, நமது சூழலுடன் இயைந்து செல்வதற்கான பொருளியல் தன்மைகளை உருவாக்குவது அல்லது அடைவதாகும்.
ஒரு சமூகச் சூழலில், நமது பொருளியல் தேவைகளை நமது உழைப்பால் மட்டும் உருவாக்குவது என்பது இயலாதது. நமது தேவைகளை சமூகத்தின் பல நிலைகளில் உள்ள பலரின் உழைப்பின் மூலம் மட்டுமே பெற முடியும். நமது உழைப்பின் பகுதியை மற்றவர்களுக்கு வழங்கியும், மற்றவர்களின் உழைப்பின் பகுதியை பெற்றும் நம் பொருளியல் தேவைகளை நிவர்த்தி செய்கிறோம். ஆக நாம் சமூகத்திற்கு அளிக்கும் உழைப்பையும், சமூகத்திலிருந்து பெறும் உழைப்பையும் அளவிட வேண்டியது அவசியமாகிறது. இந்த அளவீடே பணம் என்னும் கருத்தாகும். ஆக நாம், நமது உழைப்பையே பணமாக சேமிக்கிறோம் – நமது உழைப்பை சேமிக்கும்போது அது நேர்மையான சம்பாத்யம், பிறர் உழைப்பைச் சுரண்டி சேமிக்கும்போதி அநியாய சம்பாத்யம்.
நாம் எந்த அளவுக்கு நமது உழைப்பை சேமிக்க வேண்டும்? அது நமது தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. ஆனால், நம் உழைப்பின் தேவையை நாம் மதிப்பிட வேண்டுமானால், நம் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். விழிப்புணர்வு என்பது, நமது மற்றும் நமது சந்ததியின் தேவைகள் என நம் மனம் உருவாக்கும் கற்பனைகள் அல்ல – கற்பனை என்பது வெறும் மன பிம்பங்களே, அவை ஒருபோதும் நமது தேவைகளாக இருக்க முடியாது. நமது இயல்பு மற்றும் சமூகக் கடமைகளை மனம் உணரும்போது, மனதால் நமது தேவைகளையும் உணர முடியும். நமது தேவை என்பது நம் மனம் அதன் கற்பனைத் திறனால் உருவாக்கும் தேவைகள் அல்ல, ஆனால் மனம் உணரும் தேவைகள் – மனதின் கற்பனைக்கும், மனதின் உணர்வுக்கும் இடையான வித்தியாசத்தை நம்மால் அறிய முடிந்தால் மட்டுமே நம்மால் நமது உண்மையான தேவைகளை அறிந்து கொள்ள முடியும். ஆக நம் வாழ்வின் அடிப்படையை, வாழும் முறையை அறிந்து கொள்ளவே பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் நாம் உழைப்பை சேமிப்பதற்காகவே உழைக்கிறோம், வாழ்க்கையை வாழ்வதற்காக உழைக்கவில்லை – வாழ்க்கையை, வாழும் முறையை, அறிந்தால் மட்டுமே நம்மால் நம் வாழ்க்கையை வாழ முடியும்.
ஆம், நம் உயிர்ப் பிழைத்தலுக்கு தேவையான உழைப்பைத் தவிர உள்ள உபரி உழைப்பினை மட்டுமே சேமிப்பு அல்லது வாழ்க்கையை அறிதலுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், இங்கு நாம் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பது கற்றவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், தங்கள் எளிய உழைப்பினால் மட்டுமே கூட உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இத்தகைய நாம், நமது உபரி உழைப்பின் சிறு பகுதியைக் கூட நமது சொந்த வாழ்க்கையைக் குறித்து கூட அறிந்து கொள்ளச் செலவிடாமல், மனதால் கற்பனை மூலம் உருவாக்கப் படும் தேவைகளுக்காக சேமித்துக் கொண்டே இருக்கிறோம். ஆக நம் உயிர் பிரியும் தருணம்வரை நம் தேவைகளும் பூர்த்தி ஆவதில்லை, நம் உழைப்பிலிருந்து நமக்கு விடுதலையும் இல்லை.
நாம் இறக்கும் தருணம்வரை நம் வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொள்ளாமலே, எனவே நம் வாழ்க்கையை வாழாமலே நாம் இறந்து விட தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆக நம் வாழ்க்கையை அறிந்து கொள்ளத் தேவையான உபரி உழைப்பையும் நம் கற்பனையில் உருவான தேவைகளை அடைவதற்காகவே சேமித்து, நம் வாழ்க்கையையும் கற்பனையிலேயே வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்கிறோம். உபரி உழைப்பை நம் வாழ்விற்காக செலவிடாமல் பணமாக, செல்வமாக, பொருளாக, நம் இறுதிவரை சேமித்துக் கொண்டே இருக்கிறோம்.
ஆக நம் மனம் உணரும் தேவைகளுக்காக செலவிடப்படும் பணம் அல்லது உழைப்பு, நம் பொருளியல் தேவைகளுக்காகச் செலவிடப்படுவதாகும். இந்த செலவிடுதல், தவிர்க்க முடியாதது, தவிர்க்க கூடாதது. நம் மனம் கற்பனைச் செய்யும் தேவைகளுக்காகச் செலவிடப் படும் பணம் அல்லது உழைப்பு, நம் உளவியல் தேவைகளுக்காக செலவிடப் படுவதாகும் – இதுவே வீணாக்கப்படும் உழைப்பு அல்லது சக்தி ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் உபரி உழைப்பை நமது வாழ்க்கையை வாழ்வதற்காக செலவழிப்பது\சேமிப்பது அல்லது நம் உளவியல் தேவைகளுக்காக செலவழிப்பது\சேமிப்பது (வீணாக்குவது) என்பது, நமது உளவியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதாவது, நம் மனம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது, அது கற்பனையில் உழலாது, உணர்வின் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்!
Subscribe to:
Posts (Atom)