கடவுள் என்பது ஒரு இருப்பா (சத் - existance) அல்லது இன்மையா (அசத்- non-existance) என்னும் உபநிஷங்கள் எழுப்பும் கேள்வியை நம் மனதை நோக்கியும் நாம் கேட்கலாம். இங்கு இன்மை என்பது இருப்பு என்பதன் எதிர்பதம் ஆகாது. இன்மை என்பது எல்லாவற்றையும் அதனுள் அடக்கும் முழு வெறுமை – இந்த அர்த்தத்தில் இருப்பு என்பது இன்மையினுள் மிதக்கும் சிறுதுகள் மட்டுமே. இன்மை என்பதை நிகழ்வு என்னும் அர்த்தத்திலும் கொள்ளலாம்.
இந்த அர்த்தத்தில் மனம் ஒரு இருப்பா (சத்), நிகழ்வா(அசத்) என்னும் கேள்வியை எழுப்பினால் மனம் ஒரு நிகழ்வு என்பதே பதிலாக இருக்க முடியும். மனம் என்பது ஒரு பொதீக பொருள் அல்ல. அது ஒரு நிகழ்வு மட்டுமே. அதாவது மூளையின் இயக்கங்களின் பிம்பங்களே மனமாக வெளிப்படுகிறது. அதாவது மனம் என்னும் நிகழ்விற்கு மூளை என்னும் இருப்பு தேவைப்படுகிறது. (கடவுள் என்பது நிகழ்வாக இருந்தால், அந்த நிகழ்விற்கு அடிப்படையாக எந்த இருப்பும் தேவையாக இருக்க முடியாது. எனவே சத், அசத் என்னும் வார்த்தைகளை மனதிற்கு பொருத்தி பார்ப்பது, ஒரு தகுதியற்ற ஒப்பீடு மட்டுமே) மூளை அதன் இயக்கத்திலிருந்து முழுமையாக விடுபடும்போது அல்லது மூளையின் உயிர்ப்பு இல்லாமல் ஆகும்போது மனம் என்னும் நிகழ்வும் இல்லாமல் ஆகிறது.
மூளையின் இயக்கங்கள், அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்குமானால், அந்த இயக்கங்களின் வெளிப்பாடான மனமும் அதன் வெளிப்புற இயக்கங்களுடன் ஒத்திசைவில் இருக்க கூடும். இத்தகைய மூளையின் ஒத்திசைவான இயக்கங்களை வெளிப்படுத்தும் மனமே உண்மையை அல்லது கடவுளை உணரும் மனமாக இருக்கலாம். மூளை அதன் அறிதல்கள் மூலம் சுய அடையாளங்களை உருவாக்கி கொள்ளும்போது, அது வெளிப்புற இயக்கங்களுடனான ஒத்திசைவை இழந்து, அதுவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன்(Self) ஒத்திசைவை ஏற்படுத்துகிறது. மூளை உருவாக்கும் சுயம் என்பது ஒற்றைப்படையான ஒரு இயக்கம் அல்ல. மூளை அறியும் ஒவ்வொரு அறிதலும் ஒரு சுயத்தை உருவாக்குகிறது. மேலும் மூளை அடைந்த அறிவின் இயல்பிற்கேற்ப இந்த ஒவ்வொரு சுயமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும் முரண்பட்டதாகவும் இருக்க கூடும். ஆக, மூளை அதுவாகவே உருவாக்கிக்கொண்ட சுயங்களுடன் ஒத்திசைந்து செயல்களை வெளிப்படுத்தும்போது, அந்த செயல்களும் செயல்களின் மூலம் அடையப்படும் விளைவுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதாகவோ, முரண்பட்டதாகவோ இருக்கும். இத்தகைய செயல்கள் மற்றும் விளைவுகளின் தொடர்பின்மையும் முரண்பாடுகளுமே நம் வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கு அடிப்படை காரணியாக இருக்கிறது.
உண்மையான சுயம் என்பது நாம் இந்த உலகில் தோன்றியபின் உருவாகி நம்முடன் ஒட்டிக்கொண்ட ஒன்றாக இருக்க முடியாது. நம் உண்மையான சுயம், நாம் இந்த உலகில் தோன்றும்போது உருவான ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் – அந்த சுயம் என்பது நம் பிறப்புடன் தோன்றி இறப்புடன் முடியும் ஒன்றாக இருந்தால். நாம் பிறந்தபின், மூளையின் அறிதல் இயக்கம் தொடங்கியபின், மூளை உருவாக்கும் சுயங்கள் எல்லாம், அந்த மூளையால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களே. மாயத்தோற்றங்களை உருவாக்கும் மூளை, வெளிப்புற இயக்கங்களுடனான தன் ஒத்திசைவிலிருந்து தன்னை விடுவித்துக்கொணைடு, அதனால் உருவாக்கப்பட்ட மாயத்தோற்றங்களான சுயங்களுடன் ஒத்திசைந்து புதிய அறிதல்களை நிகழ்த்துகிறது. இந்த மாயத்தோற்றங்களுடன் ஓத்திசைந்து இயங்கும் மூளையின் ஒவ்வொரு இயக்கத்தையும் தன் நிகழ்வாக பெறும் மனம், வெறும் மனமயக்கம் மட்டுமே. அதாவது, நம் வாழ்க்கையை பெரும்பாலும் மனமயக்கங்களாக இருக்கும் இயக்கங்கள் மற்றும் அந்த மனமயக்கங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்படும் இயக்கங்களினால் மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கின்றன. அதாவது நம் வாழ்க்கைக்கும் உண்மைக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருந்தால், அந்த தொடர்பு பிரக்ஞ்சைபூர்வமாக நம்மால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பு அல்ல. அது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமே.
எனில் நாம் பிறக்கும்போது நம் மூளை இயற்கையுடன் கொண்டிருந்த ஒத்திசைவு இயக்கத்தை எவ்வாறு நாம் இழக்கிறோம்? நம் சுற்றுச்சூழலும் சமூகமும் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் இந்த இழப்புக்கு காரணமாக இருக்கலாம். நம் மனம் இயற்கையுடன் தொடர்ச்சியாக ஒத்திசைவுடன் இருக்க அது அதீத சக்தியுடனும் முழு உயிர்ப்புடனும் இருக்க வேண்டியது மிக அவசியம். சமூகம் நம் மேல் செலுத்தும் ஆதிக்கத்தின் தன்மை அந்த உயிர்ப்பை இழக்க செய்திருக்க கூடும். இயற்கையுடன் தொடர்பை இழந்த மனம், அதன் இயக்கத்தை தக்க வைத்து கொள்வதற்கு, சுயங்களை உருவாக்கி, அந்த சுயங்களுடன் ஒத்திசைந்து தன் இயக்கத்தை தொடர்ந்திருக்கலாம். அவ்வாறு சுயங்களை உருவாக்க இயலாத மனம், மனப்பிறழ்வு நிலையை அடைந்து வெளிஉலகத்திடமிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக் கொள்ள நேரலாம்.
ஆன்மீகம் என்பது இயற்கையுடனான நம் மனதின் உறவை முற்றிலுமாக திரும்பப் பெறுவதற்கான இயக்கமே. நம் மனம் மீண்டும் இயற்கையுடனான ஒத்திசைவை திரும்பப்பெற வேண்டுமானால், மனம் அதுவாக உருவாக்கிக்கொண்ட சுயங்களிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளே நம் சுயத்தை உருவாக்குகிறது. எனவே சுயங்களிலிருந்து விடுபட, நாம் அறிந்தவைகளிலிருந்து விடுபட்டாக வேண்டும். நாம் அறிந்தவைகளின் இயல்பை அறிவதும், நம் சுயங்களின் இயல்பை அறிவதும், இயற்கையுடனான தொடர்பை மீண்டும் பெறுவதற்கான எளிய வழிகளாக இருக்க கூடும். மனம் அடைந்த சுயங்களை அழிப்பதற்கான வேறு வழிகளும் இருக்க கூடும். எந்த வழியில் சுயத்தை இழப்பதற்கான முயற்சியில் இருந்தாலும், அத்துடன் சேர்ந்து இயற்கையுடனான தொடர்பையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஒருவேளை நம் மனதால் சுயத்தை அழிக்க முடிந்து, ஆனால் இயற்கையுடனான தொடர்பை மீட்டெடுக்க முடியாமல் போனால், மனப்பிறழ்வு நிலை கூட அதன் முடிவாக இருக்கலாம். இந்த எதிர்மறை விளைவே ஆன்மீக சாதனைகளுக்கு வழிகாட்டுதலை அவசியமாக்குகிறது.
நாம் சமூக வாழ்க்கையினுள் செல்ல செல்ல, மனமயக்கங்களாலும் மாயைகளாலும் நம்மை இழப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த இழப்பை நம்மால் அறிய முடிந்தால், மனமயக்கங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் ஒருவேளை நம்மால் நம் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியலாம். எல்லா மதங்களும், எல்லா புனித நூல்களும், எல்லா தத்துவக் கோட்பாடுகளும், எல்லா ஆன்மீக வழிகளும் அந்த ஒற்றை நோக்கத்திற்காகவே இந்த உலகில் தோன்றியிருக்க வேண்டும்!
blog.change@gmail.com
Sunday, June 17, 2012
Tuesday, June 5, 2012
அறிதல், அறிந்ததிலிருந்து விடுபடுதல்
மனிதனின் குறைந்தபட்ச தேவைகளுக்கான இயக்கங்களைத் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் மனித மனதின் அறிதல் தேவைகளை சார்ந்தே இருக்கும். புகழ் அல்லது செல்வத்தை தேடும் இயக்கங்கள் கூட, அந்த புகழ் அல்லது செல்வத்தை அடையும்போது மனம் அடையும் இன்பத்தை நம் மனமே அறிவதாலும் அவ்வாறு அறிவதற்கான தேவை நம்மிடம் இருப்பதாலும் மட்டுமே நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை புகழ் அல்லது செல்வம் சேர்வதனால் மனம் அடையும் இன்பத்தை அறியும் தேவையை நம்மால் கடந்து செல்ல முடிந்தால், புகழ் அல்லது செல்வத்தை தேடுவதற்கான நம் இயக்கங்களையும் நம்மால் கடந்து செல்ல முடியும்.
சமூக வாழ்க்கையில் நம் குறைந்த பட்ச தேவைகளை அடைய செல்வம் இன்றியமையாதது. எனவே அந்த செல்வத்தை தேடுவதற்கான இயக்கங்களையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இயக்கங்கள் மூலம் செல்வத்தை நாம் அடையும்போது மனம் அடையும் இன்பத்தையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இன்பத்தை அறியும் மனம், அதையே பற்றிக்கொள்ள விரும்புகிறது, அந்த இன்பத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்க விரும்புகிறது. ஆனால் எந்த இன்பமும் கண நேரத்திற்கு மட்டுமே இருக்கும் – அந்த இன்பத்தை மனம் அறியும் தருணத்தில் மட்டும். மனம் தொடர்ச்சியாக அந்த இன்பத்தை பெற வேண்டுமானால், அதற்கான காரணி தொடர்ச்சியாக இருக்க வேணைடும். அதாவது, நாம் மீண்டும் மீண்டும் செல்வத்தை அடைந்து கொண்டே இருக்க வேண்டும், செல்வத்தை அடையும்போது மனம் அடையும் புளங்காகிதத்தை அந்த மனம் மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே செல்வத்தை அடைதல் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் அடைந்த இன்பத்தை அறிந்த மனம், அந்த அறிதலிலுருந்து விடுபட இயலாமல் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தை அறிவதற்காக, நம் மரணம்வரை செல்வத்தின் பின்னால் நம்மை ஓட வைக்கிறது. இது எவ்வாறு நம் மனம் செல்வத்தை தேடுதல் என்னும் ஒரு இயக்கத்திற்கு அடிமையாகிறது என்பது. இதைப்போல நம் அறிவின் எல்லைக்கேற்ப நம் மனம் எண்ணற்ற இயக்கங்களின் அடிமையாக மாறி, அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட வழி தெரியாமல் அடிமைத்தனத்தையே அதன் இயங்கும் திசையாக அமைத்துக்கொண்டுள்ளது.
ஆனால் அறிவு மட்டுமே நம்மை தளைகளிலிருந்து விடுவிக்கும் ஆற்றலையம் கொண்டது – அந்த அறிவை நம் தர்க்க புத்தியின் மூலமோ, இயற்கை அல்லது உண்மை அல்லது கடவுள் என்னும் கருத்திடம் முழுமையாக சரணடைவதன் மூலமோ அல்லது நம் உணர்வுநிலைகளை உச்சத்துக்கு எடுத்துச்செல்லும் வேறு வழிகள் மூலமோ நாம் பெறலாம். ஆக அறிவே நம்மை தளைப்படுத்துகிறது. அதே அறிவே தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கவும் கூடியது. வெளிப்படையாக பார்த்தால் முரண்பாடாக தோன்றும் இந்த கருத்தின் யதார்த்தத்தை அறிய நம் மன இயக்கங்களை சற்று நோக்க வேண்டி இருக்கலாம். அறிவு நம்மை தளை படுத்துகிறது, எனில் அறிவை அடையாமல் இருந்தால் தளைபட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆம், அறிவை அடையாவிட்டால் தளைபட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்போது நாம் மனிதர்களும் இல்லை – ஓரு தளைபடாத விலங்கு மட்டுமே. அறிதலின் சாத்தியங்களே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது.
நம் சாதாரண நிலையில், எல்லா புதிய அறிதல்களும், நாம் முன்பே அறியும் ஏதேனும் ஒன்றை சார்ந்து மட்டுமே இருக்க முடியும். எனவே நமது அறிவு எப்போதுமே முழுமையானதாக இருக்க முடியாது. முழுமையான அறிவு என்பது நம் அறிதல் எப்போது நம் முன்னறிவை சார்ந்திராமல் முற்றிலும் புதிதாக இருக்க முடியுமோ அந்த அறிவு மட்டுமே ஆகும். அத்தகைய முற்றான அறிதல் நம்முள் நடைபெறும்போது, அங்கு எந்த எண்ணங்களுக்கும் இடம் இல்லை, நம் மூளையில் அடைத்து இறுக்கி வைத்திருக்கும் எந்த நினைவுகளுக்கும், தகவல்களுக்கும் தேவை இல்லை. நாம் முயன்று பெற்ற கல்விக்கும் தேவை இல்லை.
ஒரு சாதாரண சார்புநிலை அறிவு, சிறிதளவு செல்வம் நம்மிடம் சேருகிறது என நாம் அறியும் அறிவு நமக்கு மிகப்பெரிய இன்பத்தை கொடுக்கும்போது, முழு முதல் அறிவு, முழுமையான அறிவு, எதையும் சார்ந்திராத அறிவு அறியப்படும்போது நாம் அடையும் இன்பத்தை அனுமானிக்க சிறிதளவு கற்பனைத்திறனே போதுமானது. ஆம், இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து முடித்து விட்டோம். நம் மனதை நோக்கி இப்போது கூட நாம் திரும்பாமல் இருந்தால், இன்னும் சிறிது காலத்தில் இந்த கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து இறந்து இருப்போம். இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அளிக்காத கல்வியை கற்று விட்டு, நாம் கற்றவர்கள் என்னும் கற்பனையில் மூழ்கியிருக்கிறோம்.
எனில், நாம் எவற்றை அறிய வேண்டும்? எந்த அறிதல்களிலிருந்து விடுபட வேண்டும்? நாம் விரும்பியவற்றை அடைந்து விட்டோம் என்னும் அறிதலே இதுவரை நாம் அடைந்த எல்லா இன்பங்களுக்குமான காரணம். அந்த அறிதல் நடைபெற்ற தருணங்கள் மட்டுமே நாம் இன்பமாக இருந்த தருணங்கள். மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டிருப்பது, மனிதனிடம் உள்ள அறிதலின் சாத்தியத்தினால் மட்டுமே. எனவே மனிதனின் இயல்பு என்பது அறிதலின் இன்பத்தில் திளைத்திருப்பது. எல்லாவிதமான சார்புநிலை அறிவுகளாலும் அறியும் தருணத்தில் மட்டுமே இன்பத்தை கொடுக்க இயலும் – அடைதலை அறியும் இன்பங்களும், அடைந்ததை நுகரும்போது அறியும் இன்பமும். அறிதல் நிகழ்ந்த அடுத்த கணத்தில் அது நம் நினைவுகளாகி அறிதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும். எனவே நாம் உண்மையில் மனிதர்களாக இருக்க விரும்பினால், நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒவ்வொரு கணமும் இன்பத்தில் திளைத்திருக்கும் நிலையை நோக்கி நம் இயக்கத்தை வழிப்படுத்துவது மட்டுமே. அத்தகைய முடிவிலா இன்பத்தை, ஒவ்வொரு கணமும் அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் அடைய முடியும். முழுமையான அறிவை அறியம்போது மட்டுமே ஒவ்வொரு கணமும் அறிதல் புத்தம்புதியதாக எந்த சார்புநிலையும் இல்லாமல் நிகழும் சாத்தியம் உள்ளது. ஆக நாம் அறியவேண்டியதெல்லாம் அத்தகைய முழுமையான அறிவுக்கான சாத்தியங்களையும் அந்த அறிவை அடைவதற்கான வழிமுறைகளையுமே.
ஆனால் முழுமையான அறிவு என்பது, நாம் அறிந்த எந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் தொடர்பில்லாததாக மட்டுமே இருக்க முடியும். ஏனைனில் முழுமையான அறிவு முற்றிலும் சார்புநிலையற்றது. அறியும் ஒவ்வோரு கணமும் புத்தம்புதியதாக அறியப்படுவது. நாம் அறிந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் சார்ந்திருந்தால் அது சார்புநிலையற்ற அறிவாக இருக்க முடியாது. முழுமையான அறிவின் இத்தகைய சார்புநிலையற்ற தன்மையே நாம் அறிந்தவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆம், நாம் அறிந்த அனைத்திலிருந்தும் நம்மால் விடுபட முடிந்தால் மட்டுமே முழுமையான அறிதலின் இன்பத்தில் நம்மால் திளைக்க முடியும் – நாம் அறிந்தவை வேதங்களாக இருந்தாலும், குருவின் வார்த்தைகளாக இருந்தாலும் அல்லது எந்த மூல நூல்களாக இருந்தாலும்! ஆனால் வேதங்களும், குருவின் வார்த்தைகளும் மற்ற மூல நூல்களும் நிச்சயமாக நமக்கு தேவை – முழுமையான அறிவின் சாத்தியங்களை அறிவதற்காக, அந்த சாத்தியத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்காக! அத்தகைய சாத்தியங்களை, வழிமுறைகளை அறிந்தபின், அடைந்தபின் வேதங்களும், குருவின் வார்த்தைகளும், மற்ற மூல நூல்களும் முழுமையான அறிதலுக்கு இடைஞ்சல்களே!
blog.change@gmail.com
சமூக வாழ்க்கையில் நம் குறைந்த பட்ச தேவைகளை அடைய செல்வம் இன்றியமையாதது. எனவே அந்த செல்வத்தை தேடுவதற்கான இயக்கங்களையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இயக்கங்கள் மூலம் செல்வத்தை நாம் அடையும்போது மனம் அடையும் இன்பத்தையும் நம்மால் தவிர்க்க முடியாது. அந்த இன்பத்தை அறியும் மனம், அதையே பற்றிக்கொள்ள விரும்புகிறது, அந்த இன்பத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்க விரும்புகிறது. ஆனால் எந்த இன்பமும் கண நேரத்திற்கு மட்டுமே இருக்கும் – அந்த இன்பத்தை மனம் அறியும் தருணத்தில் மட்டும். மனம் தொடர்ச்சியாக அந்த இன்பத்தை பெற வேண்டுமானால், அதற்கான காரணி தொடர்ச்சியாக இருக்க வேணைடும். அதாவது, நாம் மீண்டும் மீண்டும் செல்வத்தை அடைந்து கொண்டே இருக்க வேண்டும், செல்வத்தை அடையும்போது மனம் அடையும் புளங்காகிதத்தை அந்த மனம் மீண்டும் மீண்டும் அறிந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே செல்வத்தை அடைதல் என்னும் ஒரு இயக்கத்தின் மூலம் அடைந்த இன்பத்தை அறிந்த மனம், அந்த அறிதலிலுருந்து விடுபட இயலாமல் மீண்டும் மீண்டும் அந்த இன்பத்தை அறிவதற்காக, நம் மரணம்வரை செல்வத்தின் பின்னால் நம்மை ஓட வைக்கிறது. இது எவ்வாறு நம் மனம் செல்வத்தை தேடுதல் என்னும் ஒரு இயக்கத்திற்கு அடிமையாகிறது என்பது. இதைப்போல நம் அறிவின் எல்லைக்கேற்ப நம் மனம் எண்ணற்ற இயக்கங்களின் அடிமையாக மாறி, அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட வழி தெரியாமல் அடிமைத்தனத்தையே அதன் இயங்கும் திசையாக அமைத்துக்கொண்டுள்ளது.
ஆனால் அறிவு மட்டுமே நம்மை தளைகளிலிருந்து விடுவிக்கும் ஆற்றலையம் கொண்டது – அந்த அறிவை நம் தர்க்க புத்தியின் மூலமோ, இயற்கை அல்லது உண்மை அல்லது கடவுள் என்னும் கருத்திடம் முழுமையாக சரணடைவதன் மூலமோ அல்லது நம் உணர்வுநிலைகளை உச்சத்துக்கு எடுத்துச்செல்லும் வேறு வழிகள் மூலமோ நாம் பெறலாம். ஆக அறிவே நம்மை தளைப்படுத்துகிறது. அதே அறிவே தளைகளிலிருந்து நம்மை விடுவிக்கவும் கூடியது. வெளிப்படையாக பார்த்தால் முரண்பாடாக தோன்றும் இந்த கருத்தின் யதார்த்தத்தை அறிய நம் மன இயக்கங்களை சற்று நோக்க வேண்டி இருக்கலாம். அறிவு நம்மை தளை படுத்துகிறது, எனில் அறிவை அடையாமல் இருந்தால் தளைபட வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். ஆம், அறிவை அடையாவிட்டால் தளைபட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்போது நாம் மனிதர்களும் இல்லை – ஓரு தளைபடாத விலங்கு மட்டுமே. அறிதலின் சாத்தியங்களே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துகிறது.
நம் சாதாரண நிலையில், எல்லா புதிய அறிதல்களும், நாம் முன்பே அறியும் ஏதேனும் ஒன்றை சார்ந்து மட்டுமே இருக்க முடியும். எனவே நமது அறிவு எப்போதுமே முழுமையானதாக இருக்க முடியாது. முழுமையான அறிவு என்பது நம் அறிதல் எப்போது நம் முன்னறிவை சார்ந்திராமல் முற்றிலும் புதிதாக இருக்க முடியுமோ அந்த அறிவு மட்டுமே ஆகும். அத்தகைய முற்றான அறிதல் நம்முள் நடைபெறும்போது, அங்கு எந்த எண்ணங்களுக்கும் இடம் இல்லை, நம் மூளையில் அடைத்து இறுக்கி வைத்திருக்கும் எந்த நினைவுகளுக்கும், தகவல்களுக்கும் தேவை இல்லை. நாம் முயன்று பெற்ற கல்விக்கும் தேவை இல்லை.
ஒரு சாதாரண சார்புநிலை அறிவு, சிறிதளவு செல்வம் நம்மிடம் சேருகிறது என நாம் அறியும் அறிவு நமக்கு மிகப்பெரிய இன்பத்தை கொடுக்கும்போது, முழு முதல் அறிவு, முழுமையான அறிவு, எதையும் சார்ந்திராத அறிவு அறியப்படும்போது நாம் அடையும் இன்பத்தை அனுமானிக்க சிறிதளவு கற்பனைத்திறனே போதுமானது. ஆம், இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை வாழ்ந்து முடித்து விட்டோம். நம் மனதை நோக்கி இப்போது கூட நாம் திரும்பாமல் இருந்தால், இன்னும் சிறிது காலத்தில் இந்த கற்பனைக்கான சாத்தியத்தை கூட அறியாமல் நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து இறந்து இருப்போம். இத்தகைய ஒரு சிறிய கற்பனைக்கான சாத்தியத்தை கூட அளிக்காத கல்வியை கற்று விட்டு, நாம் கற்றவர்கள் என்னும் கற்பனையில் மூழ்கியிருக்கிறோம்.
எனில், நாம் எவற்றை அறிய வேண்டும்? எந்த அறிதல்களிலிருந்து விடுபட வேண்டும்? நாம் விரும்பியவற்றை அடைந்து விட்டோம் என்னும் அறிதலே இதுவரை நாம் அடைந்த எல்லா இன்பங்களுக்குமான காரணம். அந்த அறிதல் நடைபெற்ற தருணங்கள் மட்டுமே நாம் இன்பமாக இருந்த தருணங்கள். மனிதன் விலங்கிலிருந்து வேறுபட்டிருப்பது, மனிதனிடம் உள்ள அறிதலின் சாத்தியத்தினால் மட்டுமே. எனவே மனிதனின் இயல்பு என்பது அறிதலின் இன்பத்தில் திளைத்திருப்பது. எல்லாவிதமான சார்புநிலை அறிவுகளாலும் அறியும் தருணத்தில் மட்டுமே இன்பத்தை கொடுக்க இயலும் – அடைதலை அறியும் இன்பங்களும், அடைந்ததை நுகரும்போது அறியும் இன்பமும். அறிதல் நிகழ்ந்த அடுத்த கணத்தில் அது நம் நினைவுகளாகி அறிதல் என்னும் இயக்கத்திலிருந்து விடுபட்டிருக்கும். எனவே நாம் உண்மையில் மனிதர்களாக இருக்க விரும்பினால், நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் ஒவ்வொரு கணமும் இன்பத்தில் திளைத்திருக்கும் நிலையை நோக்கி நம் இயக்கத்தை வழிப்படுத்துவது மட்டுமே. அத்தகைய முடிவிலா இன்பத்தை, ஒவ்வொரு கணமும் அறிதல் நிகழ்ந்து கொண்டிருந்தால் மட்டுமே நம்மால் அடைய முடியும். முழுமையான அறிவை அறியம்போது மட்டுமே ஒவ்வொரு கணமும் அறிதல் புத்தம்புதியதாக எந்த சார்புநிலையும் இல்லாமல் நிகழும் சாத்தியம் உள்ளது. ஆக நாம் அறியவேண்டியதெல்லாம் அத்தகைய முழுமையான அறிவுக்கான சாத்தியங்களையும் அந்த அறிவை அடைவதற்கான வழிமுறைகளையுமே.
ஆனால் முழுமையான அறிவு என்பது, நாம் அறிந்த எந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் தொடர்பில்லாததாக மட்டுமே இருக்க முடியும். ஏனைனில் முழுமையான அறிவு முற்றிலும் சார்புநிலையற்றது. அறியும் ஒவ்வோரு கணமும் புத்தம்புதியதாக அறியப்படுவது. நாம் அறிந்த சாத்தியங்களுடனும் வழிமுறைகளுடனும் சார்ந்திருந்தால் அது சார்புநிலையற்ற அறிவாக இருக்க முடியாது. முழுமையான அறிவின் இத்தகைய சார்புநிலையற்ற தன்மையே நாம் அறிந்தவற்றிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதற்கான தேவையை உருவாக்குகிறது. ஆம், நாம் அறிந்த அனைத்திலிருந்தும் நம்மால் விடுபட முடிந்தால் மட்டுமே முழுமையான அறிதலின் இன்பத்தில் நம்மால் திளைக்க முடியும் – நாம் அறிந்தவை வேதங்களாக இருந்தாலும், குருவின் வார்த்தைகளாக இருந்தாலும் அல்லது எந்த மூல நூல்களாக இருந்தாலும்! ஆனால் வேதங்களும், குருவின் வார்த்தைகளும் மற்ற மூல நூல்களும் நிச்சயமாக நமக்கு தேவை – முழுமையான அறிவின் சாத்தியங்களை அறிவதற்காக, அந்த சாத்தியத்தை அடைவதற்கான வழிமுறைகளை அறிவதற்காக! அத்தகைய சாத்தியங்களை, வழிமுறைகளை அறிந்தபின், அடைந்தபின் வேதங்களும், குருவின் வார்த்தைகளும், மற்ற மூல நூல்களும் முழுமையான அறிதலுக்கு இடைஞ்சல்களே!
blog.change@gmail.com
Monday, May 7, 2012
மனித மனம், மிருகம், தெய்வம்
மனித மனத்தின் கீழ்மைகளை விலங்குகளுடன் ஒப்பிடுவது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பீடு சரியான ஒன்றா என்பது உண்மையிலேயே விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. நாம் மரபு கண்ணி வழியாக விலங்குகளிலிருந்து உருவானவர்கள். எனவே நம் அடிப்படைத் தன்மையும் விலங்குகளின் அடிப்படைத் தன்மையை ஒத்திருக்கவே முடியும். அந்த அடிப்படைத் தன்மைகளின் மூலம் உருவாகும் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். அதற்கு எதிராக, அந்த அடிப்படைத் தேவைகள் மிருகத்தன்மை என்னும் சாயம் பூசி அவற்றை வலுக்கட்டாயமாக தவிர்ப்போமானால், நாம் இயற்கையுடன் முரண்பட்டுக்கொண்டிருப்போம். முரண்பாடுகள் இருக்கும் இடத்தில் அமைதி இருக்க முடியாது.
சமீபத்தில் படிக்க நேர்ந்த ‘THE MONKEYS OF VARANASI” கட்டுரை சில வெளிச்சக்கோடுகளை எனக்கு காட்டியது. இந்தக் கட்டுரையில் வரும் இந்த வாக்கியம், நாம் மிருகத்தன்மை என விலக்க முயலும், ஆனால் நம்மிடமிருந்து விலகாத நம் இயல்புகளை கூறுகிறது போலும். ‘Any one who has done a little self-observation may have detected these three main objects of desire whereby pleasure, security, and status reveal themselves as the centeres around which psychological thinking turns”. இன்பம், உயிர் மற்றும் இன்பத்திற்கான பாதுகாப்பு, இவை இரண்டுக்கும் தேவையான அந்தஸ்து(விலங்கு சமூகத்தின் தலைமை பொறுப்பு) இவை மூன்றுமே விலங்குகளுக்கான அடிப்படைத் தேவைகள் என கூறப்பட்டுள்ளது. விலங்குகளின் இயக்கத்தை கவனித்தால் இதனை நாமும் உணரலாம். இந்த மூன்று தேவைகளும், அந்த தேவை உருவாகும் நேரத்திலேயே அதை அடைய தேவையான உயிர்ப்பையும் விலங்குகள் பெறுகின்றன. அந்த உயிர் சக்தி, தேவைகளை அடைவதற்கான இயக்கங்களில் விலங்குகளை ஈடுபட வைக்கிறது. அதாவது, அந்த விலங்கு இன்பத்திற்கான பாதுகாப்பு மற்றும் அந்தஸ்துடன் இருந்தால் இன்பத்தையும் உணவையும் அடைகிறது. அந்த இன்பத்திற்கும், பாதுகாப்புக்கும் எதிர்ப்புகள் எழும்போது, அந்த எதிர்ப்பை அழிப்பதற்கு தேவையான விழிப்புணர்வுடன் இருக்கிறது- விழிப்புணர்வுடன் இருக்கும்போது, உண்மையிலேயே முழுமையான உயிர்ப்பு அதன் முழு வீரியத்துடன் இருக்கிறது. விலங்குகளிடம் இன்பத்திற்கான தேவை எற்படும்போது, அந்த தேவையை நிறைவேற்றத் தேவையான அந்தஸ்து அல்லது தலைமைப் பதவி இல்லாத பட்சத்தில், அந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தலைமையுடன் போராட்டத்தில் ஈடுபடுகிறது. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றால், இன்பத்தை அடைகிறது. போராட்டத்தில் ஈடுபடும்போது வீணாகும் உயிர் சக்தியின் மூலம் இன்பத்திற்கான தேவை அழியுமானால், அந்த விலங்கு சமூகத்தினுள் அடங்கி இருந்து உயிர்ப்பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது. இன்பத்திற்கான தேவை குறையாத பட்சத்தில் கடைசிவரைப் போராடி உயிரை விடுகிறது.
நாம் மனிதர்கள்! நம் அறிவின் மூலம் சமூக அமைப்புகளை உருவாக்கி இன்பம் மற்றும் உயிர் பாதுகாப்பை பெருமளவில் உறுதி செய்து விட்டோம். ஆனால் நமக்கு மனம் என்னும் கொடை இயற்கையால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனதை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை தெரிவு செய்யும் சாத்தியத்தையும் நமக்கு இயற்கை அளித்துள்ளது. இந்த தெரிவு செய்யும் சாத்தியத்தையே நாம் மனித வாழ்விலிருந்து பிறழ்வதற்காக உபயோகப்படுத்துகிறோமா? அல்லது தெரிவு செய்யும் சாத்தியம் இருந்தும் தெரிவு செய்ய இயலாதவர்களாக இருக்கிறோமா? ஆக, மனிதர்களாக பரிணாம வளர்ச்சியடைந்த நம் இயக்கம், விலங்கின் அடிப்படை இயல்புகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஏனெனில் அந்த தேவைகளை நாம் அடைந்து விட்டோம், அல்லது அந்த தேவைகளுக்கான போராட்டத்தை கடந்து வந்து விட்டோம். எனவே நமது தற்போதைய போராட்டம், நம் உயிரின் தற்போதைய இயக்கம், அந்த அடிப்படைத் தேவைகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஆனால், மனிதர்களாகிய நாமும் இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எதை அடைய இந்த இடைவிடாத போராட்டம்?
நாம் நம் அறிவின் மூலம் அளவில்லாத புதிய தேவைகளை உருவாக்கி இருக்கிறோம். அந்த புதிய தேவைகள் நம் அறிவின் தரம் அல்லது அந்த அறிவு உண்மையுடன் அல்லது இயற்கையுடன் கொண்டுள்ள உறவை அடிப்படையாக கொண்டிருக்கும். நம் தேவைகளை உருவாக்கும் அறிவு உண்மையுடன் நெருங்கிய உறவில் இருக்குமானால், அந்த தேவைகளினால், நம் வாழ்க்கை இயக்கத்தில் முரண்பாடுகளை ஏற்பட சாத்தியம் இல்லை. முரண்பாடுகள் இல்லா விட்டால் வாழ்க்கையில் போராட்டமும் இல்லை. ஆனால் வாழ்வின் எதார்த்தம் அவ்வாறு இல்லை. நம் பெரும்பாலான இயக்கங்களில் முரண்பாடுகள் உள்ளது. அதன் மூலம் நம் பெரும்பாலான வாழ்வின் இயக்கங்கள் போராட்டங்களாகவே உள்ளது. இதன் காரணம், நம் அறிவு உண்மையிலிருந்து விலகி உளவியல் இயக்கங்கள் மூலம் உருவாகும் மாயையில் இருப்பதாலா?
நாம் நம்மை அறிய விரும்பினால், அல்லது நமது வாழ்க்கை போராட்டத்தின் திசையை அறிவதற்கான தேவை நம்மில் தோன்றினால், நாம் அறிய வேண்டியது, எந்த அடிப்படை தேவை நம் வாழ்க்கையை இயக்குகிறது அல்லது எந்த அடிப்படைத் தேவையிலிருந்து நம் அறிவு வாழ்க்கையின் போராட்டங்களுக்கு காரணமான தேவைகளை உருவாக்குகிறது என்பதாகவே இருக்கும். நம் உயிர்ப்பு எதைத் தேடுகிறது? நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டமும் எந்த குறிக்கோளுக்காக? அவ்வாறு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருந்தால், நாம் போராட வேண்டிய தேவையே இல்லையே. நம் சமூக அமைப்பு, அந்த சமூகத்தின் அங்கத்தினராக இருக்கும் அடிப்படைத் தகுதி நமக்கு இருந்தால், அடிப்படை இன்பங்களையும் அடிப்படை பாதுகாப்பையும் சமூக கட்டமைப்பின் மூலம் வழங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சமூக கட்டமைப்பை மீறும் எந்த மனிதனும், ஏதோ ஒரு தேடலின் விசை கொண்டு மட்டுமே அந்த சமூக கட்டமைப்பை மீற முடியும். அந்த விசை எதனால்? எதை நோக்கி?
நம்மை இயக்கும், நம் உயிர்ப்பை இறுதிவரை உண்ணும், நம் எல்லா வித சக்திகளையும் திசைப்படுத்தும் அந்த தேடுதலின் ஊற்றுமுகம் நம் மனமாகவே இருக்க முடியும். நம் மனம் அதன் ஆழங்களிலிருந்து அதற்கான விசையை பெறுகிறது. அந்த விசையின் தோற்றுவாயை அறியாத பட்சத்தில், விலங்குகளிலிருந்து நாம் பெற்ற, நம் மனதின் அடியாழத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அடிப்படைத் தேவைகளில் அந்த விசையை உளவியல் இயக்கங்கள் மூலம் செலுத்தி நம் அன்றாட போராட்டங்களை வெளிப்படுத்துகிறது. நாம் பெறும் அறிவின் அளவிற்கேற்ப, அந்த அறிவு உண்மையுடன் கொண்டுள்ள தொடர்பிற்கேற்ப நம் மனதில் உருவாகும் விசையின் திசையும் அமைந்திருக்கலாம். நம் தேடுதல் முழுமை அடையும்போது, நம் உயிர்ப்பு முழுமையாக, சிறிதளவும் சிதையாமல், நம் தேவைகளால் உண்ணப்படாமல் அதன் முழுமையுடன் நம்மிடம் தங்கக்கூடும். உயிர்ப்பின் முழுமைத் தன்மையை அடைவது கூட நம் வாழ்க்கையின் போராட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருக்கலாம். ஒருவேளை அத்தகைய ஒரு உயிர்ப்பு நிலையை நாம் அடைந்து, அந்நிலையை தலைமுறைகளாக நம்மால் தக்க வைத்திருக்க முடிந்தால், அதுவே பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கூட இருக்கலாம்.
blog.change@gmail.com
சமீபத்தில் படிக்க நேர்ந்த ‘THE MONKEYS OF VARANASI” கட்டுரை சில வெளிச்சக்கோடுகளை எனக்கு காட்டியது. இந்தக் கட்டுரையில் வரும் இந்த வாக்கியம், நாம் மிருகத்தன்மை என விலக்க முயலும், ஆனால் நம்மிடமிருந்து விலகாத நம் இயல்புகளை கூறுகிறது போலும். ‘Any one who has done a little self-observation may have detected these three main objects of desire whereby pleasure, security, and status reveal themselves as the centeres around which psychological thinking turns”. இன்பம், உயிர் மற்றும் இன்பத்திற்கான பாதுகாப்பு, இவை இரண்டுக்கும் தேவையான அந்தஸ்து(விலங்கு சமூகத்தின் தலைமை பொறுப்பு) இவை மூன்றுமே விலங்குகளுக்கான அடிப்படைத் தேவைகள் என கூறப்பட்டுள்ளது. விலங்குகளின் இயக்கத்தை கவனித்தால் இதனை நாமும் உணரலாம். இந்த மூன்று தேவைகளும், அந்த தேவை உருவாகும் நேரத்திலேயே அதை அடைய தேவையான உயிர்ப்பையும் விலங்குகள் பெறுகின்றன. அந்த உயிர் சக்தி, தேவைகளை அடைவதற்கான இயக்கங்களில் விலங்குகளை ஈடுபட வைக்கிறது. அதாவது, அந்த விலங்கு இன்பத்திற்கான பாதுகாப்பு மற்றும் அந்தஸ்துடன் இருந்தால் இன்பத்தையும் உணவையும் அடைகிறது. அந்த இன்பத்திற்கும், பாதுகாப்புக்கும் எதிர்ப்புகள் எழும்போது, அந்த எதிர்ப்பை அழிப்பதற்கு தேவையான விழிப்புணர்வுடன் இருக்கிறது- விழிப்புணர்வுடன் இருக்கும்போது, உண்மையிலேயே முழுமையான உயிர்ப்பு அதன் முழு வீரியத்துடன் இருக்கிறது. விலங்குகளிடம் இன்பத்திற்கான தேவை எற்படும்போது, அந்த தேவையை நிறைவேற்றத் தேவையான அந்தஸ்து அல்லது தலைமைப் பதவி இல்லாத பட்சத்தில், அந்த அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தலைமையுடன் போராட்டத்தில் ஈடுபடுகிறது. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றால், இன்பத்தை அடைகிறது. போராட்டத்தில் ஈடுபடும்போது வீணாகும் உயிர் சக்தியின் மூலம் இன்பத்திற்கான தேவை அழியுமானால், அந்த விலங்கு சமூகத்தினுள் அடங்கி இருந்து உயிர்ப்பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது. இன்பத்திற்கான தேவை குறையாத பட்சத்தில் கடைசிவரைப் போராடி உயிரை விடுகிறது.
நாம் மனிதர்கள்! நம் அறிவின் மூலம் சமூக அமைப்புகளை உருவாக்கி இன்பம் மற்றும் உயிர் பாதுகாப்பை பெருமளவில் உறுதி செய்து விட்டோம். ஆனால் நமக்கு மனம் என்னும் கொடை இயற்கையால் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனதை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை தெரிவு செய்யும் சாத்தியத்தையும் நமக்கு இயற்கை அளித்துள்ளது. இந்த தெரிவு செய்யும் சாத்தியத்தையே நாம் மனித வாழ்விலிருந்து பிறழ்வதற்காக உபயோகப்படுத்துகிறோமா? அல்லது தெரிவு செய்யும் சாத்தியம் இருந்தும் தெரிவு செய்ய இயலாதவர்களாக இருக்கிறோமா? ஆக, மனிதர்களாக பரிணாம வளர்ச்சியடைந்த நம் இயக்கம், விலங்கின் அடிப்படை இயல்புகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஏனெனில் அந்த தேவைகளை நாம் அடைந்து விட்டோம், அல்லது அந்த தேவைகளுக்கான போராட்டத்தை கடந்து வந்து விட்டோம். எனவே நமது தற்போதைய போராட்டம், நம் உயிரின் தற்போதைய இயக்கம், அந்த அடிப்படைத் தேவைகளை நோக்கி நிச்சயமாக இல்லை. ஆனால், மனிதர்களாகிய நாமும் இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எதை அடைய இந்த இடைவிடாத போராட்டம்?
நாம் நம் அறிவின் மூலம் அளவில்லாத புதிய தேவைகளை உருவாக்கி இருக்கிறோம். அந்த புதிய தேவைகள் நம் அறிவின் தரம் அல்லது அந்த அறிவு உண்மையுடன் அல்லது இயற்கையுடன் கொண்டுள்ள உறவை அடிப்படையாக கொண்டிருக்கும். நம் தேவைகளை உருவாக்கும் அறிவு உண்மையுடன் நெருங்கிய உறவில் இருக்குமானால், அந்த தேவைகளினால், நம் வாழ்க்கை இயக்கத்தில் முரண்பாடுகளை ஏற்பட சாத்தியம் இல்லை. முரண்பாடுகள் இல்லா விட்டால் வாழ்க்கையில் போராட்டமும் இல்லை. ஆனால் வாழ்வின் எதார்த்தம் அவ்வாறு இல்லை. நம் பெரும்பாலான இயக்கங்களில் முரண்பாடுகள் உள்ளது. அதன் மூலம் நம் பெரும்பாலான வாழ்வின் இயக்கங்கள் போராட்டங்களாகவே உள்ளது. இதன் காரணம், நம் அறிவு உண்மையிலிருந்து விலகி உளவியல் இயக்கங்கள் மூலம் உருவாகும் மாயையில் இருப்பதாலா?
நாம் நம்மை அறிய விரும்பினால், அல்லது நமது வாழ்க்கை போராட்டத்தின் திசையை அறிவதற்கான தேவை நம்மில் தோன்றினால், நாம் அறிய வேண்டியது, எந்த அடிப்படை தேவை நம் வாழ்க்கையை இயக்குகிறது அல்லது எந்த அடிப்படைத் தேவையிலிருந்து நம் அறிவு வாழ்க்கையின் போராட்டங்களுக்கு காரணமான தேவைகளை உருவாக்குகிறது என்பதாகவே இருக்கும். நம் உயிர்ப்பு எதைத் தேடுகிறது? நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு போராட்டமும் எந்த குறிக்கோளுக்காக? அவ்வாறு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருந்தால், நாம் போராட வேண்டிய தேவையே இல்லையே. நம் சமூக அமைப்பு, அந்த சமூகத்தின் அங்கத்தினராக இருக்கும் அடிப்படைத் தகுதி நமக்கு இருந்தால், அடிப்படை இன்பங்களையும் அடிப்படை பாதுகாப்பையும் சமூக கட்டமைப்பின் மூலம் வழங்கிக்கொண்டிருக்கிறது. அந்த சமூக கட்டமைப்பை மீறும் எந்த மனிதனும், ஏதோ ஒரு தேடலின் விசை கொண்டு மட்டுமே அந்த சமூக கட்டமைப்பை மீற முடியும். அந்த விசை எதனால்? எதை நோக்கி?
நம்மை இயக்கும், நம் உயிர்ப்பை இறுதிவரை உண்ணும், நம் எல்லா வித சக்திகளையும் திசைப்படுத்தும் அந்த தேடுதலின் ஊற்றுமுகம் நம் மனமாகவே இருக்க முடியும். நம் மனம் அதன் ஆழங்களிலிருந்து அதற்கான விசையை பெறுகிறது. அந்த விசையின் தோற்றுவாயை அறியாத பட்சத்தில், விலங்குகளிலிருந்து நாம் பெற்ற, நம் மனதின் அடியாழத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அடிப்படைத் தேவைகளில் அந்த விசையை உளவியல் இயக்கங்கள் மூலம் செலுத்தி நம் அன்றாட போராட்டங்களை வெளிப்படுத்துகிறது. நாம் பெறும் அறிவின் அளவிற்கேற்ப, அந்த அறிவு உண்மையுடன் கொண்டுள்ள தொடர்பிற்கேற்ப நம் மனதில் உருவாகும் விசையின் திசையும் அமைந்திருக்கலாம். நம் தேடுதல் முழுமை அடையும்போது, நம் உயிர்ப்பு முழுமையாக, சிறிதளவும் சிதையாமல், நம் தேவைகளால் உண்ணப்படாமல் அதன் முழுமையுடன் நம்மிடம் தங்கக்கூடும். உயிர்ப்பின் முழுமைத் தன்மையை அடைவது கூட நம் வாழ்க்கையின் போராட்டங்களின் அடிப்படை நோக்கமாக இருக்கலாம். ஒருவேளை அத்தகைய ஒரு உயிர்ப்பு நிலையை நாம் அடைந்து, அந்நிலையை தலைமுறைகளாக நம்மால் தக்க வைத்திருக்க முடிந்தால், அதுவே பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக கூட இருக்கலாம்.
blog.change@gmail.com
Sunday, April 29, 2012
மனம் என்னும் காடு
மனம் என்பது நம்மால் எளிதில் அறியமுடியாத ஒரு பெரும் இருப்பு. நம் சாதாரண விழிப்பு நிலையில் நம் மனதை குறித்து நாம் அறிந்திருப்பது, அதன் மேற்பரப்பில் தெரியும் நிழல்களை மட்டுமே. ஆம், நம் மனமும் ஒரு காடு போன்றதே. நம்மால் அறியமுடியாத விசித்திரங்களை தன்னுள்ளே கொண்டிருப்பது காடு. எத்தனை எத்தனை மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டுகள், விலங்குகள், பறவைகள், நுண்ணுயிர்கள், நீரோடைகள், நீர் ஊற்றுமுகங்கள்…….. அவற்றை ஒருபோதும் நம்மால் முழுமையாக அறியமுடியாது. நம் மனமும் காட்டைப் போன்ற விசித்திரங்களை உடையது. எத்தனை எத்தனை வகையான எண்ணங்கள், நினைவுகள், எண்ணங்களின் தோற்றுமுகங்கள், எண்ணங்களின் பிரதிபிம்பங்கள், அனுபவங்களின் பதிவுகள், அனுபவங்களின் எதிர்வினைகள், செற்களின் உற்பத்திகள், உற்பத்தியான சொற்களின் பதிவுகள்…….. ஆம், நம் மனதையும் ஒருபோதும் நம்மால் முழுமையாக அறிய முடியாமல் போகலாம். அத்தகைய அறிதலுக்கான சாத்தியங்கள் உள்ளதா என்பது, மனம் நோக்கிய பார்வை உடையவர்களிடம் உள்ள அடிப்படை கேள்வியாக இருக்க கூடும். இந்த அடைப்படை கேள்வியே அனைத்து ஆன்மீகத் தேடல்களுக்குமான உந்து சக்தியாக இருக்கலாம் – அந்த தேடல்கள் எந்த திசையில் சென்றாலும்!
மனம் என்னும் காட்டினுள் நிறைந்திருக்கம் விசித்திரங்களை, புதிர்களை நம்மால் அறிய முடியுமா? நம் விழிப்புணர்வின், பிரக்ஞ்சையின் ஆற்றலைப் பொறுத்து அறிதலுக்கான சாத்தியங்களும் உள்ளன, அறிய முடியாமலும் போகலாம். ஆனால் நம் மனம் விசித்திரங்கள் நிறைந்தது, புதிர்களால் ஆனது என்னும் அறிதலே மனம் குறித்த நம் தேடுதலுக்கான அடிப்படை. அத்தகைய அறிதலை நாம் அடையாதவரைக்கும், அந்த விசித்திரங்களை தேடுவதற்கான தேவை நம்மிடம் எழவே இல்லை. எனவே நம்மிடம் ஆன்மீகத் தேடலும் உருவாகவில்லை. நம் மனம் விசித்திரங்கள் நிறைந்தது என அறியும் கணத்திலிருந்து, அந்த விசித்திரங்களை நம்மால் தேடாமலும் இருக்க முடியாது. நம் மனம் விசித்திரங்களால், தர்க்க புத்திக்கு எட்டாத புதிர்களால் ஆனது என்னும் அறிவை அடையும் அந்த கணத்திலேயே நம் ஆன்மீக தேடலும் நம்முள் தோன்றியிருக்கும். அந்த ஆன்மீகத் தேடலின் திசை, நம் இயல்பிற்கேற்ப எதுவாகவும் இருக்கலாம் – உணர்வு அல்லது பக்தி சார்ந்ததாகவோ, அறிவு சார்ந்ததாகவோ, செயல் சார்ந்ததாகவோ அல்லது இவை அனைத்தையும் நம் இயல்புக்கேற்ற விகிதங்களில் சார்ந்ததாகவோ இருக்கலாம்.
நம் மனதின் உள்ளடக்கம் மட்டும் அல்ல, அதன இயக்கமும் விசித்திரமானது, புதிரானது. அதீத விழிப்புணர்வு அல்லது பிரக்ஞ்சை இல்லாத பட்சத்தில், மனம் அடுத்த கால அவகாசத்தில் எவ்வாறு அல்லது எதை நோக்கி இயங்கும் என்பதையும் நம்மால் முன்கூட்டியே கூற இயலாது. நம் வாழ்க்கையின் இயல்பு, மனதின் இயல்பிற்கேற்பவே இருக்கும். எனவே நம் வாழ்க்கை, அடுத்த கால அவாகாசத்தில் எவ்வாறு இருக்கும் என்பதையும் நம்மால் கூற முடியாது. உதாரணமாக, நம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணத்தை எதிர்பார்த்து நாம் காத்திருக்கலாம், ஆனால் அந்த தருணத்தில் வெளிப்படையான நிகழ்வுகள் நாம் எதிர்பார்த்தது போல இருந்தாலும், அந்த தருணத்தில் நம் மனதின் சிறு சலனம், அந்த வெளிப்படையான நிகழ்வுகளை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவும் கூடும் – அந்த மன சலனத்தின் மூலம் நம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணத்தை நாம் இழந்து விட்டிருப்போம். இத்தகைய மனதின் விசித்திரமான இயக்கங்களினாலேயே நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை தினம் தோறும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
நம் மனதின் விசித்திரங்களை, புதிர்களை எவ்வாறு அறிந்து கொள்வது? ஆன்மீகம் மட்டுமே அதற்கான ஒரே வழி. ஆன்மீகம் என்பது ஆன்மாவை நோக்குவது. ஆன்மா என்பது நம் மனதின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டிருக்கும், எப்போதுமே விழிப்புடன் இருக்கும், நமக்குள் இருக்கும் ஒரு அம்சம். ஆன்மாவைக் குறித்து பல தளங்களில் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், நம் அனுபவத்திற்கு உட்பட விளக்கினால், நமது விழிப்புணர்வு அல்லது பிரக்ஞ்சையே ஆன்மாவாகும். ஆன்மா என்பது நம் அனுபவத்திற்கு வெளியே இருக்குமானால், அதை அறிவதற்கான கருவியும் நம் விழிப்புணர்வு மட்டுமே. ஆக ஆன்மீகம் என்பது நம் பிரக்ஞ்சையை அல்லது விழிப்புணர்வை நோக்கிய பயணம் அல்லது தேடுதல், அதன் மூலம் நம் ஆன்மாவை அறிவது – ஆன்மா என்பது நம் பிரக்ஞ்சையாக இருந்தாலும், அல்லது அதைத் தாண்டிய தற்போதைய நம் அறிதலுக்கு எட்டாத ஒன்றாக இருந்தாலும்!
நாம் ஆன்மீக வழியில் செல்லும்போது, நம் விழிப்புணர்வு கூர்மை அடைகிறது. விழிப்புணர்வு கூர்மை அடையும்தோறும், அந்த விழிப்புணர்வால், நம் மனதின் வெளிப்புறத்தில் நாம் சாதாரண நிலையில் அறியும் மனதின் நிழல்களையும் பிம்பங்களையும் தாண்டி மனதின் உண்மையான இயக்கங்களை அறிய நேரிடலாம். அதாவது, நம் பிரக்ஞ்சை மனம் என்னும் காட்டினுள் நுழைந்து அங்கிருக்கும் மிருகங்களையும் தெய்வங்களையும் அறியத் தொடங்குகிறது. ஆம், நம் மனதினுள் தெய்வத்தன்மையும், மிருகத்தன்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நம் மனதை இயக்கிக்கொண்டிருக்கிறது. அன்பு, கருணை போன்ற தெய்வத் தன்மைகளும், வன்முறை, வெறுப்பு, கோபம், வெறி போன்ற மிருகத்தன்மைகளும், பயம், நம்பிக்கை, ஆசை போன்ற மாயைகளும் நம் மனதில் நிரம்பி, இவற்றின் கலவையே நம் அன்றாட வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருக்கிறது. நம்மில் எவரும் இத்தகைய மனதின் தன்மையிலிருந்து விதிவிலக்கானவர்கள் அல்ல.
ஆன்மீக பயணத்தை தொடங்கும் ஒருவர், அவர் பிரக்ஞ்சை மனதின் இந்ந தன்மைகளை முதன் முதலாக அறிய நேரிடும்போது, மிகப்பெரிய மன அதிர்ச்சிக்கு உட்பட நேரிடலாம். மனம் என்னும் காட்டினுள் பிரக்ஞ்சை நுழையும்போது உண்மையின் எல்லை கோட்டை மனம் முதன் முதலாக தொடுகிறது. அந்த எல்லையில் நம் பிரக்ஞ்சை அறிய நேரிடும் உண்மையின் அம்சம், நாம் நம்மைக்குறித்து கொண்டிருக்கும் எல்லா மன பிம்பங்களின் அர்த்தமின்மையை நமக்கு உணர்த்துவதன் மூலம் நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் – நம் வாழ்க்கையை மன பிம்பங்களின் அடிப்படையில் அமைத்திருந்தால். இந்த ஆரம்பக்கட்ட அதிர்ச்சியைத் தாண்டி ஆன்மீகப் பயணத்தை நம்மால் தொடர முடிந்தால், மனம் என்னும் காட்டின் விசித்திரங்கள் ஒவ்வொன்றையும், பிரக்ஞ்சையால் ஒருவேளை அறிந்து மீள முடியலாம். பிரக்ஞ்சையால் நம் உள்மனம் தொடப்படும் அந்த ஒவ்வொரு அறிதல் அனுபவமும், பேரனுபவங்களாக இருக்க கூடும்.
நம் மனம் இயங்கும் முறையை நாம் எப்போதாவது கவனித்திருந்தால், நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்பதை நாம் அறியலாம். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கட்டாயத்தினால், முடிவெடுக்கும் தருணத்தை மேலும் தள்ளிப்போட முடியாத இயலாமையால் மட்டுமே அந்த முடிவுகளை எடுத்திருப்போம். உதாரணமாக நம் தொழில் துறையில் தினமும் பல்வேறு முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்க கூடும். அந்த கட்டாயமே, தொழிலில் நம் முடிவுகளை எடுக்கத்தூண்டுகிறது. மேலும், நம் முடிவுகளை தவறாக செல்லும் பட்சத்தில் நம் மேல் இருப்பவர், அவர் கட்டாயத்தின்பேரில் அடுத்தகட்ட தேவையான முடிவுகளை எடுப்பார். அதாவது, நமது முடிவெடுக்கும் தேவை ஒரு எல்லைக்குட்பட்டே இருக்கும். எனவே அதன்மூலம் எற்படும் உளவியல் தாக்கங்களும் அந்த எல்லைக்குட்பட்டே இருக்கும். ஆனால் நம் சொந்த வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு அத்தகைய எல்லை என்பது இல்லை. நம் விழிப்புணர்வின் எல்லையே நமது முடிவெடுக்கும் எல்லையும். எனவே, அதன் மூலம் ஏற்படும் உளவியல் தாக்கங்களுக்கும் எல்லை நமது பிரக்ஞ்சையின் எல்லையே. மனம் என்னும் காட்டின் எல்லைக்குளை நம் பிரக்ஞ்சை நுழையாதவரை நாம் வாழ்க்கையில் எந்த விதமான முடிவுகளும் எடுப்பதில்லை, மனம் செல்லும் திசையில் வாழ்ந்து கொண்டிருப்போம். அல்லது நாம் பிரக்ஞ்சையின் துணை இல்லாமல் முடிவெடுப்பவர்களாக இருந்தால், அந்த முடிவுகளின் மூலம் மனதினில் சேர்க்கும் குப்பைகளும் மிக அதிகம் – இந்த குப்பைகளே நம் வாழ்க்கையை மட்க செய்ய போதுமானவை. இதற்கு மாறாக, நம் முடிவுகள் பிரக்ஞ்சைபூர்வமாக இருக்கும் பட்சத்தில், மனதினுள் எந்த குப்பைகளும் சேர்வதில்லை, ஆனால் பிரக்ஞ்சை வெளிப்படுத்தும் மனதின் விசித்திரங்களினால் அடையும் அனுபவங்களின் பேரானந்தத்தில் நாம் திளைத்துக்கொண்டிருக்க கூடும்!
மனம் என்னும் காட்டினுள் நிறைந்திருக்கம் விசித்திரங்களை, புதிர்களை நம்மால் அறிய முடியுமா? நம் விழிப்புணர்வின், பிரக்ஞ்சையின் ஆற்றலைப் பொறுத்து அறிதலுக்கான சாத்தியங்களும் உள்ளன, அறிய முடியாமலும் போகலாம். ஆனால் நம் மனம் விசித்திரங்கள் நிறைந்தது, புதிர்களால் ஆனது என்னும் அறிதலே மனம் குறித்த நம் தேடுதலுக்கான அடிப்படை. அத்தகைய அறிதலை நாம் அடையாதவரைக்கும், அந்த விசித்திரங்களை தேடுவதற்கான தேவை நம்மிடம் எழவே இல்லை. எனவே நம்மிடம் ஆன்மீகத் தேடலும் உருவாகவில்லை. நம் மனம் விசித்திரங்கள் நிறைந்தது என அறியும் கணத்திலிருந்து, அந்த விசித்திரங்களை நம்மால் தேடாமலும் இருக்க முடியாது. நம் மனம் விசித்திரங்களால், தர்க்க புத்திக்கு எட்டாத புதிர்களால் ஆனது என்னும் அறிவை அடையும் அந்த கணத்திலேயே நம் ஆன்மீக தேடலும் நம்முள் தோன்றியிருக்கும். அந்த ஆன்மீகத் தேடலின் திசை, நம் இயல்பிற்கேற்ப எதுவாகவும் இருக்கலாம் – உணர்வு அல்லது பக்தி சார்ந்ததாகவோ, அறிவு சார்ந்ததாகவோ, செயல் சார்ந்ததாகவோ அல்லது இவை அனைத்தையும் நம் இயல்புக்கேற்ற விகிதங்களில் சார்ந்ததாகவோ இருக்கலாம்.
நம் மனதின் உள்ளடக்கம் மட்டும் அல்ல, அதன இயக்கமும் விசித்திரமானது, புதிரானது. அதீத விழிப்புணர்வு அல்லது பிரக்ஞ்சை இல்லாத பட்சத்தில், மனம் அடுத்த கால அவகாசத்தில் எவ்வாறு அல்லது எதை நோக்கி இயங்கும் என்பதையும் நம்மால் முன்கூட்டியே கூற இயலாது. நம் வாழ்க்கையின் இயல்பு, மனதின் இயல்பிற்கேற்பவே இருக்கும். எனவே நம் வாழ்க்கை, அடுத்த கால அவாகாசத்தில் எவ்வாறு இருக்கும் என்பதையும் நம்மால் கூற முடியாது. உதாரணமாக, நம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணத்தை எதிர்பார்த்து நாம் காத்திருக்கலாம், ஆனால் அந்த தருணத்தில் வெளிப்படையான நிகழ்வுகள் நாம் எதிர்பார்த்தது போல இருந்தாலும், அந்த தருணத்தில் நம் மனதின் சிறு சலனம், அந்த வெளிப்படையான நிகழ்வுகளை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளவும் கூடும் – அந்த மன சலனத்தின் மூலம் நம் வாழ்க்கையின் மிக சந்தோஷமான தருணத்தை நாம் இழந்து விட்டிருப்போம். இத்தகைய மனதின் விசித்திரமான இயக்கங்களினாலேயே நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை தினம் தோறும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.
நம் மனதின் விசித்திரங்களை, புதிர்களை எவ்வாறு அறிந்து கொள்வது? ஆன்மீகம் மட்டுமே அதற்கான ஒரே வழி. ஆன்மீகம் என்பது ஆன்மாவை நோக்குவது. ஆன்மா என்பது நம் மனதின் செயல்பாடுகளை கவனித்துக்கொண்டிருக்கும், எப்போதுமே விழிப்புடன் இருக்கும், நமக்குள் இருக்கும் ஒரு அம்சம். ஆன்மாவைக் குறித்து பல தளங்களில் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், நம் அனுபவத்திற்கு உட்பட விளக்கினால், நமது விழிப்புணர்வு அல்லது பிரக்ஞ்சையே ஆன்மாவாகும். ஆன்மா என்பது நம் அனுபவத்திற்கு வெளியே இருக்குமானால், அதை அறிவதற்கான கருவியும் நம் விழிப்புணர்வு மட்டுமே. ஆக ஆன்மீகம் என்பது நம் பிரக்ஞ்சையை அல்லது விழிப்புணர்வை நோக்கிய பயணம் அல்லது தேடுதல், அதன் மூலம் நம் ஆன்மாவை அறிவது – ஆன்மா என்பது நம் பிரக்ஞ்சையாக இருந்தாலும், அல்லது அதைத் தாண்டிய தற்போதைய நம் அறிதலுக்கு எட்டாத ஒன்றாக இருந்தாலும்!
நாம் ஆன்மீக வழியில் செல்லும்போது, நம் விழிப்புணர்வு கூர்மை அடைகிறது. விழிப்புணர்வு கூர்மை அடையும்தோறும், அந்த விழிப்புணர்வால், நம் மனதின் வெளிப்புறத்தில் நாம் சாதாரண நிலையில் அறியும் மனதின் நிழல்களையும் பிம்பங்களையும் தாண்டி மனதின் உண்மையான இயக்கங்களை அறிய நேரிடலாம். அதாவது, நம் பிரக்ஞ்சை மனம் என்னும் காட்டினுள் நுழைந்து அங்கிருக்கும் மிருகங்களையும் தெய்வங்களையும் அறியத் தொடங்குகிறது. ஆம், நம் மனதினுள் தெய்வத்தன்மையும், மிருகத்தன்மையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நம் மனதை இயக்கிக்கொண்டிருக்கிறது. அன்பு, கருணை போன்ற தெய்வத் தன்மைகளும், வன்முறை, வெறுப்பு, கோபம், வெறி போன்ற மிருகத்தன்மைகளும், பயம், நம்பிக்கை, ஆசை போன்ற மாயைகளும் நம் மனதில் நிரம்பி, இவற்றின் கலவையே நம் அன்றாட வாழ்க்கையை இயக்கிக் கொண்டிருக்கிறது. நம்மில் எவரும் இத்தகைய மனதின் தன்மையிலிருந்து விதிவிலக்கானவர்கள் அல்ல.
ஆன்மீக பயணத்தை தொடங்கும் ஒருவர், அவர் பிரக்ஞ்சை மனதின் இந்ந தன்மைகளை முதன் முதலாக அறிய நேரிடும்போது, மிகப்பெரிய மன அதிர்ச்சிக்கு உட்பட நேரிடலாம். மனம் என்னும் காட்டினுள் பிரக்ஞ்சை நுழையும்போது உண்மையின் எல்லை கோட்டை மனம் முதன் முதலாக தொடுகிறது. அந்த எல்லையில் நம் பிரக்ஞ்சை அறிய நேரிடும் உண்மையின் அம்சம், நாம் நம்மைக்குறித்து கொண்டிருக்கும் எல்லா மன பிம்பங்களின் அர்த்தமின்மையை நமக்கு உணர்த்துவதன் மூலம் நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கலாம் – நம் வாழ்க்கையை மன பிம்பங்களின் அடிப்படையில் அமைத்திருந்தால். இந்த ஆரம்பக்கட்ட அதிர்ச்சியைத் தாண்டி ஆன்மீகப் பயணத்தை நம்மால் தொடர முடிந்தால், மனம் என்னும் காட்டின் விசித்திரங்கள் ஒவ்வொன்றையும், பிரக்ஞ்சையால் ஒருவேளை அறிந்து மீள முடியலாம். பிரக்ஞ்சையால் நம் உள்மனம் தொடப்படும் அந்த ஒவ்வொரு அறிதல் அனுபவமும், பேரனுபவங்களாக இருக்க கூடும்.
நம் மனம் இயங்கும் முறையை நாம் எப்போதாவது கவனித்திருந்தால், நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்பதை நாம் அறியலாம். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் கட்டாயத்தினால், முடிவெடுக்கும் தருணத்தை மேலும் தள்ளிப்போட முடியாத இயலாமையால் மட்டுமே அந்த முடிவுகளை எடுத்திருப்போம். உதாரணமாக நம் தொழில் துறையில் தினமும் பல்வேறு முடிவுகளை எடுக்கும் கட்டாயத்தில் நாம் இருக்க கூடும். அந்த கட்டாயமே, தொழிலில் நம் முடிவுகளை எடுக்கத்தூண்டுகிறது. மேலும், நம் முடிவுகளை தவறாக செல்லும் பட்சத்தில் நம் மேல் இருப்பவர், அவர் கட்டாயத்தின்பேரில் அடுத்தகட்ட தேவையான முடிவுகளை எடுப்பார். அதாவது, நமது முடிவெடுக்கும் தேவை ஒரு எல்லைக்குட்பட்டே இருக்கும். எனவே அதன்மூலம் எற்படும் உளவியல் தாக்கங்களும் அந்த எல்லைக்குட்பட்டே இருக்கும். ஆனால் நம் சொந்த வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளுக்கு அத்தகைய எல்லை என்பது இல்லை. நம் விழிப்புணர்வின் எல்லையே நமது முடிவெடுக்கும் எல்லையும். எனவே, அதன் மூலம் ஏற்படும் உளவியல் தாக்கங்களுக்கும் எல்லை நமது பிரக்ஞ்சையின் எல்லையே. மனம் என்னும் காட்டின் எல்லைக்குளை நம் பிரக்ஞ்சை நுழையாதவரை நாம் வாழ்க்கையில் எந்த விதமான முடிவுகளும் எடுப்பதில்லை, மனம் செல்லும் திசையில் வாழ்ந்து கொண்டிருப்போம். அல்லது நாம் பிரக்ஞ்சையின் துணை இல்லாமல் முடிவெடுப்பவர்களாக இருந்தால், அந்த முடிவுகளின் மூலம் மனதினில் சேர்க்கும் குப்பைகளும் மிக அதிகம் – இந்த குப்பைகளே நம் வாழ்க்கையை மட்க செய்ய போதுமானவை. இதற்கு மாறாக, நம் முடிவுகள் பிரக்ஞ்சைபூர்வமாக இருக்கும் பட்சத்தில், மனதினுள் எந்த குப்பைகளும் சேர்வதில்லை, ஆனால் பிரக்ஞ்சை வெளிப்படுத்தும் மனதின் விசித்திரங்களினால் அடையும் அனுபவங்களின் பேரானந்தத்தில் நாம் திளைத்துக்கொண்டிருக்க கூடும்!
Saturday, March 24, 2012
ஓயாத ஓட்டம்!
மனிதப் பிறவிகளாகிய நாம், பிறந்தது முதல் இறப்பதுவரை ஓயாது ஒடிக்கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது, நிச்சயமாக நம்மில் பெரும்பான்மையானவர்களின் பிரக்ஞ்சையில் இல்லை. நாம் அறிந்திருப்பது எல்லாம் நம் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட நோக்கங்களையே – செல்வம், புகழ், பெருமை, இன்னும் இதைப்போன்றவை. ஆம், செல்வம் நம் சமூக வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஆனால், நம் சமூக வாழ்க்கைக்கு தேவைப்படும் அளவுக்கான செல்வம் மட்டும்!. நாம் எப்போதுமே நம் தேவை என்ன என்பதை அறிந்திருப்பதில்லை. எனவே நமக்கு தேவையான செல்வத்தின் அளவையும் நாம் அறிந்திருப்பதில்லை. எனவே செல்வத்தை தேடும்ஓட்டமும் முடிவில்லாத, நம் கற்பனையால் உருவாக்கப்பட்ட தேவையை நோக்கியே பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒரு எறும்பு வரிசையின் இயக்கம் கவனத்தில் வர நேர்ந்தது. அந்த வரிசையில் இரண்டு திசைகளிலும் எறும்புகளை ஊர்ந்து கொண்டிருந்ததன. ஒரு திசையில் ஊர்ந்து செல்லும் ஒவ்வொரு எறும்பும் எதிர்திசையில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு எறும்பின் முன்னும் வந்து நின்று, பின் விலகி வழிவிட்டு, மீண்டும் அந்த வரிசையினுள் வந்து அடுத்த எறும்பின் மேல் முட்டி நின்று, வழிவிட்டு, மீண்டும், மீண்டும். . . . . . அந்த சிறிய எறும்பின் வாழும் காலம் சில நாட்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அந்த வாழ்க்கையின் பெரும்பகுதி, வெறும் வரிசையில் நகர்ந்து, தன் இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் மேலும் முட்டி மோதி, ஆனால் வரிசையிலிருந்து பிறழாமல் அதற்கு தெரியாத ஒரு நோக்கத்திற்காக எதையோ நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. இத்தகைய எறும்பின் வாழ்க்கைக்கு, அந்த எறும்பின் வாழ்க்கையின் உட்புறமிருந்து நோக்கினால் எந்த அர்த்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த எறும்பின் வாழ்க்கை, உயிரினங்களின் ஒட்டுமொத்த பார்வையில், ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றிருக்கலாம். ஒவ்வொரு எறும்பும் வேறு ஒரு உயிரினத்துக்கு உணவாகவோ அல்லது வேறு ஒரு உயிரினத்தின் உணவு உற்பத்திக்கான காரணியாகவோ இருக்க கூடும். ஒவ்வொரு தனிப்பட்ட எறும்பின் பிரக்ஞ்சையில், அதன் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்திருப்பதற்கான சாத்தியம் நிச்சயாமாக இல்லை. ஆனால் அந்த ஒட்டுமொத்த எறும்பு சமூகத்தின் பிரக்ஞ்சையில், அந்த ஒவ்வொரு எறும்பின் வாழ்க்கைக்கான நோக்கம் இருக்க கூடும். அவற்றால் அறிய முடியாத அந்த நோக்கத்திற்காகவே, ஒவ்வொரு எறும்பும் அதன் சில நாள் வழ்க்கையை, அவற்றால் அறிய முடியாத ஒழுங்குமுறையில் வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்க கூடும்.
மனித வாழ்க்கையை, நம் தனிப்பட்ட முறையில் அறிந்துள்ள உலகின் அடிப்படையில், நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படையில் நோக்கினால் நம் வாழ்க்கைக்கும் எந்த நோக்கத்தையும் நம்மால் அறிய முடியாமல் இருக்கலாம். எனில் மனித இனமும் நம்மால் அறிய முடியாத ஏதோ ஒரு இயற்கையின் படைப்புக்கு உணவாகுவதற்காக, அல்லது உணவை உருவாக்கும் காரணியாக வாழ்ந்துகொண்டிருக்கிறதா? அவ்வாறு நாம் வாழும் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள இயலாதவர்களாக நாம் இருந்தால், நாம் ஆறாம் அறிவு என பெருமை அடைவதும், வெறும்கற்பனையாகிய ஒன்றைக் குறித்தா?
ஆறாம் அறிவு என நாம் கூறுவது, நம் பிரக்ஞ்சையையே, நம் விழிப்புணர்வையே. நாம் வாழும் வாழ்க்கையை, நம்மைச்சுற்றி நிகழும் மனித சமூகத்தின் வாழ்க்கையை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிந்தால், நாம் எவ்வாறு சுயபிரக்ஞ்சை இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக அறியலாம். விழிப்புணர்வற்று வாழும்போது, நாம் ஆறு அறிவுடைய பிறவி என பெருமை அடைவது கூட வெறும் கற்பனை அல்லவா?
சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்த ஒரு முன்னணி மருந்து நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செய்தி, நாம் எவ்வாறு நமக்கு இயற்கையால் வழங்கப்பட்டுள்ள ஆறாவது அறிவை உபயோகப்படுத்த இயலாமல், நம் மனவிருப்புகளால் (tendency), வரிசையில் செல்லும் எறும்புகள் போல இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தது. பங்குதாரர்ளுக்கு, தன் வருங்கால வியாபார முன்னேற்றத்திற்கான சாத்தியங்களை தெரிவிக்கும் கட்டாயத்தில் இருந்த அந்த நிறுவனம், மக்களின் வாழ்க்கைமுறை (life style) சார்ந்த நோய்கள் வருடாவருடம் அதிகரித்து கொண்டிருப்பதாக ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டு, அந்த நிறுவனத்தின் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கான மருந்துகளே எதிர்கால லாபத்திற்கான காரணிகள் என அந்நிறுவனத்தின் வியாபார வாய்ப்புகளை விவரித்திருந்தது. அதாவது, பங்குதாரர்களே, நீங்கள் உங்களை வாழ்க்கையை வாழத்தெரியாமல் வாழ்வதன் மூலம் உருவாக்கும் நோய்களே, உங்கள் நிறுவனத்தின் எதிர்கால வியாபார வாய்ப்புகள்! இதை இன்னும் விரிவாக பார்த்தால், நாம் மனவிருப்புகளுக்கு (tendency) அடிமைப்பட்டு நம் அறிவை அறியாமல் இருக்கும்போது, நம் துன்பங்களை நாமே உருவாக்கி, அந்த துன்பங்களை நோக்கி ஓயாமல் ஓடுவதையே நம் வாழ்க்கையின் நோக்கமாக கற்பிதம் செய்துகொண்டு, இன்பமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
நண்பன் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலைப்பழுவின் காரணமாக தன்னால் குடும்பத்தினருடன் தேவையான அளவு நேரத்தை செலவிட முடியவில்லை, ஆனால் தன்னால் அத்தகைய அழுத்தம் தரக்கூடிய வேலைகளையே விருப்பத்துடன் செய்ய இயல்கிறது எனக் கூறினார். இது அந்த ஒரு நண்பரின் பிரச்சினை (அந்த நண்பருக்கு இது பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்!) மட்டும் இல்லை. இது பெரும்பாலானவர்களின் பொதுவான பிரச்சினை. பெற்றோர் தங்களால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்கள் குழந்தைகளின் மேல் ஏற்றி, பள்ளிப் பருவம் முதல் மன அழுத்தத்தையும், அந்த அழுத்தத்துக்கு மாற்றாக, முறை தவறிய வாழ்க்கை அமைப்பையும் (unhealthy lifestyle) உருவாக்கும்போது, அந்த குழந்தைகள் பெரியவர்களாகும்போது மன அழுத்தத்தின் போதையால் மட்டுமே அவர்களால் வாழ முடியலாம். எனவே, தங்கள் தொழில்களின் மூலம் மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் தொழில்களில் மன அழுத்தத்தை உருவாக்க இயலாத துரதிர்ஷ்டசாலிகள், தங்கள் குடும்பத்தினுள் பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தேவையான மன அழுத்தத்தை அடைந்து தங்கள் வாழ்க்கையின் சங்கல்பத்தை அடைகிறார்கள். எறும்பு வரிசையில் உள்ள ஒரு எறும்பு, எதற்காக வரிசையில் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே அந்த வரிசையில் இடைவிடாது நகர்ந்து உயிர்விடுவது போல, நாமும் சமூக அமைப்பினுள் ஓயாமல் ஓடி, எதற்காக உழைக்கிறோம் என்பதை அறியாமலே, யாருக்காகவோ உழைத்து மரணமடைகிறோம்.
ஆனால் மனிதர்களாகிய நமக்கு, ஆறாவது அறிவு என்னும் சாத்தியம் இயற்கையால் அளிக்கப்பட்டுள்ளது. ஆறாவது அறிவை அறியும்போது மட்டுமே நாம் மனிதர்களாக முடியும். இல்லை எனில், அந்த எறும்பு சமூகத்தைப்போல நாமும் ஒரு அற்ப சமூகம் மட்டுமே – நாம் நம்மைப்பற்றி எத்தகைய உயர்நிலையில் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும்! நமக்கு அளிக்கப்பட்டுள்ள சாத்தியமான அந்த ஆறாவது அறிவை அறிவது, அத்தகைய கடினமான காரியமாக இருக்க வாய்ப்பில்லை. அது கடினமாக இருந்தாலும், அதை அறிவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க முடியும் – நாம் உண்மையிலேயே நம்மை மனிதர்களாக கருதினால்!
ஆம், நாம் சமூகத்தில் இருக்கும்போது உழைத்தாக வேண்டும். ஏனெனில் நம் உழைப்பு, பிறரின் உணவுக்கு காரணமாகிறமது, நாமும் பிறர் உழைப்பையும் உணவாக உட்கொள்கிறோம். எனவே உழைப்பு என்பது இன்றியமையாதது. ஆனால் நாம் எதற்காக உழைக்கிறோம் என்னும் விழிப்புணர்வுடன் உழைப்பதற்கும், எதற்காக உழைக்கிறோம் என தெரியாமல் உழைப்பதற்கும் நடுவில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது – மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே ஆன வேறுபாடு! உழைப்பின் மேல் விழிப்புணர்வு இல்லாமல் உழைக்கும்போது, அந்த உழைப்பின் தொடர்ச்சியாக நாம் பிறரின் உழைப்பையும் வன்முறையுடன் எடுத்துக்கொண்டிருப்போம், நம் உழைப்பையும் வேறு சிலர் அதே அளவிலான வன்முறையுடன் பறித்துக்கொண்டிருப்பார்கள் – அந்த வன்முறைக்கு எத்தகைய கவர்ச்சியான வண்ணத்தை பூசினாலும்! அதே உழைப்பை நாம் பிரக்ஞ்சையுடன் செய்யும்போது நன்றியுணர்வுடனும், மரியாதையுணர்வுடனும் பிறர் உழைப்பை உண்டுகொண்டிருப்போம். நம் உழைப்பை பிறர் உண்ணும்போது, அதே நன்றியுணர்வுடனும், பெருங்கருணையுடனும் நம் உழைப்பை அவர்களுக்கு உணவாக்கிக் கொண்டிருப்போம். இத்தகைய சுயபிரக்ஞ்சையால் மட்டுமே ஆறாவது அறிவை நமக்களித்து நம்மை மனிதர்களாக்க முடியும்.
சமீபத்தில் ஒரு எறும்பு வரிசையின் இயக்கம் கவனத்தில் வர நேர்ந்தது. அந்த வரிசையில் இரண்டு திசைகளிலும் எறும்புகளை ஊர்ந்து கொண்டிருந்ததன. ஒரு திசையில் ஊர்ந்து செல்லும் ஒவ்வொரு எறும்பும் எதிர்திசையில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு எறும்பின் முன்னும் வந்து நின்று, பின் விலகி வழிவிட்டு, மீண்டும் அந்த வரிசையினுள் வந்து அடுத்த எறும்பின் மேல் முட்டி நின்று, வழிவிட்டு, மீண்டும், மீண்டும். . . . . . அந்த சிறிய எறும்பின் வாழும் காலம் சில நாட்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அந்த வாழ்க்கையின் பெரும்பகுதி, வெறும் வரிசையில் நகர்ந்து, தன் இனத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் மேலும் முட்டி மோதி, ஆனால் வரிசையிலிருந்து பிறழாமல் அதற்கு தெரியாத ஒரு நோக்கத்திற்காக எதையோ நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. இத்தகைய எறும்பின் வாழ்க்கைக்கு, அந்த எறும்பின் வாழ்க்கையின் உட்புறமிருந்து நோக்கினால் எந்த அர்த்தமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த எறும்பின் வாழ்க்கை, உயிரினங்களின் ஒட்டுமொத்த பார்வையில், ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றிருக்கலாம். ஒவ்வொரு எறும்பும் வேறு ஒரு உயிரினத்துக்கு உணவாகவோ அல்லது வேறு ஒரு உயிரினத்தின் உணவு உற்பத்திக்கான காரணியாகவோ இருக்க கூடும். ஒவ்வொரு தனிப்பட்ட எறும்பின் பிரக்ஞ்சையில், அதன் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்திருப்பதற்கான சாத்தியம் நிச்சயாமாக இல்லை. ஆனால் அந்த ஒட்டுமொத்த எறும்பு சமூகத்தின் பிரக்ஞ்சையில், அந்த ஒவ்வொரு எறும்பின் வாழ்க்கைக்கான நோக்கம் இருக்க கூடும். அவற்றால் அறிய முடியாத அந்த நோக்கத்திற்காகவே, ஒவ்வொரு எறும்பும் அதன் சில நாள் வழ்க்கையை, அவற்றால் அறிய முடியாத ஒழுங்குமுறையில் வாழ்ந்து முடித்துக் கொண்டிருக்க கூடும்.
மனித வாழ்க்கையை, நம் தனிப்பட்ட முறையில் அறிந்துள்ள உலகின் அடிப்படையில், நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படையில் நோக்கினால் நம் வாழ்க்கைக்கும் எந்த நோக்கத்தையும் நம்மால் அறிய முடியாமல் இருக்கலாம். எனில் மனித இனமும் நம்மால் அறிய முடியாத ஏதோ ஒரு இயற்கையின் படைப்புக்கு உணவாகுவதற்காக, அல்லது உணவை உருவாக்கும் காரணியாக வாழ்ந்துகொண்டிருக்கிறதா? அவ்வாறு நாம் வாழும் வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்து கொள்ள இயலாதவர்களாக நாம் இருந்தால், நாம் ஆறாம் அறிவு என பெருமை அடைவதும், வெறும்கற்பனையாகிய ஒன்றைக் குறித்தா?
ஆறாம் அறிவு என நாம் கூறுவது, நம் பிரக்ஞ்சையையே, நம் விழிப்புணர்வையே. நாம் வாழும் வாழ்க்கையை, நம்மைச்சுற்றி நிகழும் மனித சமூகத்தின் வாழ்க்கையை நம்மால் கூர்ந்து கவனிக்க முடிந்தால், நாம் எவ்வாறு சுயபிரக்ஞ்சை இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக அறியலாம். விழிப்புணர்வற்று வாழும்போது, நாம் ஆறு அறிவுடைய பிறவி என பெருமை அடைவது கூட வெறும் கற்பனை அல்லவா?
சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்த ஒரு முன்னணி மருந்து நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு செய்தி, நாம் எவ்வாறு நமக்கு இயற்கையால் வழங்கப்பட்டுள்ள ஆறாவது அறிவை உபயோகப்படுத்த இயலாமல், நம் மனவிருப்புகளால் (tendency), வரிசையில் செல்லும் எறும்புகள் போல இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தது. பங்குதாரர்ளுக்கு, தன் வருங்கால வியாபார முன்னேற்றத்திற்கான சாத்தியங்களை தெரிவிக்கும் கட்டாயத்தில் இருந்த அந்த நிறுவனம், மக்களின் வாழ்க்கைமுறை (life style) சார்ந்த நோய்கள் வருடாவருடம் அதிகரித்து கொண்டிருப்பதாக ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டு, அந்த நிறுவனத்தின் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களுக்கான மருந்துகளே எதிர்கால லாபத்திற்கான காரணிகள் என அந்நிறுவனத்தின் வியாபார வாய்ப்புகளை விவரித்திருந்தது. அதாவது, பங்குதாரர்களே, நீங்கள் உங்களை வாழ்க்கையை வாழத்தெரியாமல் வாழ்வதன் மூலம் உருவாக்கும் நோய்களே, உங்கள் நிறுவனத்தின் எதிர்கால வியாபார வாய்ப்புகள்! இதை இன்னும் விரிவாக பார்த்தால், நாம் மனவிருப்புகளுக்கு (tendency) அடிமைப்பட்டு நம் அறிவை அறியாமல் இருக்கும்போது, நம் துன்பங்களை நாமே உருவாக்கி, அந்த துன்பங்களை நோக்கி ஓயாமல் ஓடுவதையே நம் வாழ்க்கையின் நோக்கமாக கற்பிதம் செய்துகொண்டு, இன்பமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
நண்பன் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலைப்பழுவின் காரணமாக தன்னால் குடும்பத்தினருடன் தேவையான அளவு நேரத்தை செலவிட முடியவில்லை, ஆனால் தன்னால் அத்தகைய அழுத்தம் தரக்கூடிய வேலைகளையே விருப்பத்துடன் செய்ய இயல்கிறது எனக் கூறினார். இது அந்த ஒரு நண்பரின் பிரச்சினை (அந்த நண்பருக்கு இது பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்!) மட்டும் இல்லை. இது பெரும்பாலானவர்களின் பொதுவான பிரச்சினை. பெற்றோர் தங்களால் நிறைவேற்ற முடியாத ஆசைகளை தங்கள் குழந்தைகளின் மேல் ஏற்றி, பள்ளிப் பருவம் முதல் மன அழுத்தத்தையும், அந்த அழுத்தத்துக்கு மாற்றாக, முறை தவறிய வாழ்க்கை அமைப்பையும் (unhealthy lifestyle) உருவாக்கும்போது, அந்த குழந்தைகள் பெரியவர்களாகும்போது மன அழுத்தத்தின் போதையால் மட்டுமே அவர்களால் வாழ முடியலாம். எனவே, தங்கள் தொழில்களின் மூலம் மன அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். தங்கள் தொழில்களில் மன அழுத்தத்தை உருவாக்க இயலாத துரதிர்ஷ்டசாலிகள், தங்கள் குடும்பத்தினுள் பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தேவையான மன அழுத்தத்தை அடைந்து தங்கள் வாழ்க்கையின் சங்கல்பத்தை அடைகிறார்கள். எறும்பு வரிசையில் உள்ள ஒரு எறும்பு, எதற்காக வரிசையில் ஊர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலே அந்த வரிசையில் இடைவிடாது நகர்ந்து உயிர்விடுவது போல, நாமும் சமூக அமைப்பினுள் ஓயாமல் ஓடி, எதற்காக உழைக்கிறோம் என்பதை அறியாமலே, யாருக்காகவோ உழைத்து மரணமடைகிறோம்.
ஆனால் மனிதர்களாகிய நமக்கு, ஆறாவது அறிவு என்னும் சாத்தியம் இயற்கையால் அளிக்கப்பட்டுள்ளது. ஆறாவது அறிவை அறியும்போது மட்டுமே நாம் மனிதர்களாக முடியும். இல்லை எனில், அந்த எறும்பு சமூகத்தைப்போல நாமும் ஒரு அற்ப சமூகம் மட்டுமே – நாம் நம்மைப்பற்றி எத்தகைய உயர்நிலையில் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும்! நமக்கு அளிக்கப்பட்டுள்ள சாத்தியமான அந்த ஆறாவது அறிவை அறிவது, அத்தகைய கடினமான காரியமாக இருக்க வாய்ப்பில்லை. அது கடினமாக இருந்தாலும், அதை அறிவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க முடியும் – நாம் உண்மையிலேயே நம்மை மனிதர்களாக கருதினால்!
ஆம், நாம் சமூகத்தில் இருக்கும்போது உழைத்தாக வேண்டும். ஏனெனில் நம் உழைப்பு, பிறரின் உணவுக்கு காரணமாகிறமது, நாமும் பிறர் உழைப்பையும் உணவாக உட்கொள்கிறோம். எனவே உழைப்பு என்பது இன்றியமையாதது. ஆனால் நாம் எதற்காக உழைக்கிறோம் என்னும் விழிப்புணர்வுடன் உழைப்பதற்கும், எதற்காக உழைக்கிறோம் என தெரியாமல் உழைப்பதற்கும் நடுவில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது – மனிதனுக்கும் விலங்குக்கும் இடையே ஆன வேறுபாடு! உழைப்பின் மேல் விழிப்புணர்வு இல்லாமல் உழைக்கும்போது, அந்த உழைப்பின் தொடர்ச்சியாக நாம் பிறரின் உழைப்பையும் வன்முறையுடன் எடுத்துக்கொண்டிருப்போம், நம் உழைப்பையும் வேறு சிலர் அதே அளவிலான வன்முறையுடன் பறித்துக்கொண்டிருப்பார்கள் – அந்த வன்முறைக்கு எத்தகைய கவர்ச்சியான வண்ணத்தை பூசினாலும்! அதே உழைப்பை நாம் பிரக்ஞ்சையுடன் செய்யும்போது நன்றியுணர்வுடனும், மரியாதையுணர்வுடனும் பிறர் உழைப்பை உண்டுகொண்டிருப்போம். நம் உழைப்பை பிறர் உண்ணும்போது, அதே நன்றியுணர்வுடனும், பெருங்கருணையுடனும் நம் உழைப்பை அவர்களுக்கு உணவாக்கிக் கொண்டிருப்போம். இத்தகைய சுயபிரக்ஞ்சையால் மட்டுமே ஆறாவது அறிவை நமக்களித்து நம்மை மனிதர்களாக்க முடியும்.
Sunday, February 19, 2012
அறிதலில் மனமயக்கங்கள்
அறிதலின் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் அறியப்படுவது ஒன்று மட்டுமே. அதுவே உண்மை. நேரடியாக அறியும்போது மட்டுமே நாம் அறிவது உண்மை. மற்ற எல்லா அறிவுகளும் மாயையே. நேரடியாக அறியாதபோது, நாம் அறிவது வெறும் எண்ணங்களை மட்டுமே. எண்ணங்கள் மூலம் பிம்பங்களை மட்டுமே அறிய முடியும். உணர்வு ஒன்றுதான் உண்மையை அடைவதற்கான வாகனம். உணர்வு மட்டும்தான் உண்மையான அநுபவம். உண்மையை உணர அல்லது அநுபவிக்க மட்டுமே முடியும். உண்மையை விளக்க முடியாது, எனவே விளங்கிக்கொள்ளவும் முடியாது – உணர மட்டுமே முடியும், உண்மையை உணர்வதே உண்மையை அறிவது.
எதற்காக உண்மையை அறிய வேண்டும்? நம் வாழ்க்கையின் எந்த கட்டத்தை எடுத்துக்கொண்டாலும் தேடுதல் மட்டுமே வாழ்க்கையை இயக்கிக்கொண்டிருக்கும். அறிவுக்கான தேடுதல், அநுபவத்திற்கான தேடுதல், பொருளுக்கான தேடுதல், புகழுக்கான தேடுதல், எதிர்காலத்திற்கான தேடுதல், இன்னும் பல. ஆனால் எப்போதுமே நம் தேடுதல் முழுமை அடைந்ததாக நாம் உணர்ந்திருக்க சாத்தியமில்லை. நாம் எப்போதாவது, முழுமை அடைய முடியாத தேடுதலின் முடிவின்மையையும், முடிவற்ற தேடுதலின் மூலம் நம் வாழ்க்கையை இழப்பதையும் அறிய நேர்ந்தால், அந்த அறிதலே உண்மையை அறிவதற்கான தூண்டுதலாக இருக்க கூடும். உண்மையை அறிவதன் மூலம் தேடுதல் என்னும் முடிவற்ற இயக்கத்தை தாண்டிச் சென்று நம் வாழ்க்கையை ஒருவேளை நம்மால் வாழ இயலலாம். ஆனால் தேடுதலின் முடிவின்மையை உணராதவரைக்கும், உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்கு வராமல் போகலாம். அல்லது, அதுவரை உண்மையை அறிவதற்கான தேவை நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆக, நம் அன்றாட தேடுதல்கள் மூலம் நாம் அடையும் அறிவான தேடுதலின் முடிவின்மை என்னும் அறிவே – அத்தகைய அறிவை அடைய நேர்ந்தால், உண்மையை நோக்கி நம் தேடுதலை திசைப்படுத்தலாம்.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள், அநுபவப்பூர்வமாக அடைந்த, அன்றாட தேடுதலின் முடிவின்மை குறித்த அறிவின் திசை காட்டுதல் மூலம் உண்மையைத் தேட தொடங்குவதில்லை. உண்மையை அறிய விரும்பும் நம்மில் பெரும்பாலானலவர்கள், உண்மையை அறிந்தவர்கள் உண்மையைக் குறித்து அளிக்கும் விளக்கங்களால் தூண்டப்பட்டு மட்டுமே, அவர்கள் வார்த்தையின் மேல் நாம் அடையும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு மட்டுமே நம் தேடுதலைத் தொடங்குகிறோம். எனவே நாம் எதைத் தேடுகிறோம் என்பதைக்கூட நாம் அறியாமலே நம் தேடுதலில் முழ்கி இருக்கலாம்.
மேலே கூறப்பட்டவைகள், ஒருவேளை நாம் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த தேடுதல்களின் வழியில் நாம் சந்திக்க நேரும் மன மயக்கங்களை குறித்த ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆன்மீகத் தேடலின் வழியில் நாம் எதிர்கொள்ள நேரிடும் மன மயக்கங்களை நம்மால் அறிய முடியாவிட்டால், நம் ஆன்மீகத்தேடல் கூட நம்மை மாயையிலிருந்து மீட்க முடியாது. இதுவே, எந்த ஆன்மீகப் பயிற்சியையும் உண்மையை உணர்ந்தவர்களின் நேரடி கண்காணிப்பில் செய்ய வேண்டும் என கூறப்படுவதன் காரணம். நம்மில் பெரும்பான்மையினருக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனால், நம் விழிப்புணர்வையே ஆன்மீக குருவாக கொண்டு நம் ஆன்மீக பயணத்தை தொடர முடியும். அவ்வாறெனில், நம் ஆன்மீகத்தேடலை மாயையினுள் தள்ளும் மனமயக்கங்களை குறித்த குறைந்தபட்ச அறிவேனும் நிச்சயமாக நமக்கு தேவைப்படும்.
ஆன்மீகம் குறித்து பெரும்பாலும் நாம் எதுவும் உணர்ந்திருப்பது இல்லை. அதாவது ஆன்மீகம் குறித்த நம் அறிவு முழுவதும் பிறரிடமிருந்து நாம் அறிந்தவையே. பிறர் என்பது, உண்மையை உணர்ந்த ஞானிகளாகவும் இருக்கலாம், உண்மையை தேடுபவர்களாகவும் இருக்கலாம், தேடலின் மூலம் மனமயக்கங்களை அடைந்தவர்களாகவும் இருக்கலாம். நாம் அறிந்தவை, உண்மையை உணர்ந்த ஞானிகளிடமிருந்து இருந்து வந்திருந்தாலும், உண்மையை நோக்கிய தேடலில் இருப்பவர்களிடமிருந்து வந்திருந்தாலும், அந்த அறிவு நம்மை பொறுத்தவரைக்கும் வெறும் அனுமானம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அத்தகைய அறிவை நாம் உணரும்வரை, பிறர் வார்த்தைகளிலிருந்து நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆக, நம்மில் பெரும்பாலானவர்கள், எப்போதாவது ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தால், அது பெரும்பாலும் பிறர்வார்த்தைகள் அல்லது விளக்கங்களிலிருந்து நாம் அடைந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.
நம் மனம் அதீத சக்தியை உடையது. நாம் அறிந்திருக்கும் உலகம் முழுவதும் நம் மனதால், நம் விருப்பத்திற்கேற்ப, நமக்குள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஒரு அனுமானத்தை உண்மையாக கொண்டு நம் தேடுதல் பாதையை அமைத்தால், நம் மனம் அந்த அனுமானத்தையே உண்மைத் தோற்றத்துடன் நமக்கு அளிக்கும் வல்லமை உடையது – மன மயக்கத்தின் மூலம். மிகக்கூர்மையான நுண்ணறிவின் மூலம் மட்டுமே உண்மைக்கும் மனமயக்கத்திற்குமான இடைவெளியை அறிய முடியும். ஆக நம்முன் உள்ள எண்ணற்ற சான்றோர்களின் விளக்கங்களும், ஞான நூல்களும் ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்த வேண்டுமானால், அந்த விளக்கங்களையும், நூல்களையும் அனுமானிப்பதற்கான நுண்ணறிவு நமக்குத் தேவை. அத்தகைய நுண்ணறிவு இல்லாத பட்சத்தில் ஆனமீக விளக்கங்களும், ஞான நூல்களும் நம்மை மன மயக்க நிலைக்கே எடுத்துச் செல்லும்.
எனில் நம் நுண்ணறிவை எவ்வாறு பெறுவது? அது நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. நம் இயல்பு எவ்வாறாயினும், நம் தற்போதைய அறிதல் முறையில், நுண்ணறிவை அடைவதற்கு தர்க்க புத்தியின் தேவை இன்றியமையாததாக இருக்க கூடும். தர்க்க புத்தியின் மூலம் நாம் அறிந்தவற்றை ஆராய்ந்து, உண்மை, உண்மை அல்லாதது என அறிந்து, உண்மையற்றதை விலக்குவதன் மூலம் நம்மால் நுண்ணறிவின் இயக்கத்தை தொட முடியலாம் – வேறு வழிகள் கூட இருக்கலாம். உண்மை, உண்மை அல்லாதது என அறிய உண்மையை உணர்ந்தவர்கள், நமக்கு உதவலாம். எவ்வாறாயினும், ஆரம்ப நிலையில் உண்மையை நோக்கிய தேடுதல் எளிதானதாக இருக்க சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். எனில், மனித மனதால் அடைய இயலாதவை என ஒன்றும் இருக்கவும் சாத்தியமில்லை. மனித பிறவியின் சாத்தியத்தின் உச்சகட்ட ஆனந்தத்தை அடைய, அது எளிதானதாக இல்லா விட்டால் கூட, அதற்காக முயற்சிக்காமல் விடுவது, உலகம் நமக்களித்த மனிதப் பிறவி என்னும் பெரும் கொடையை வீணாக்குவதாகும். அவ்வாறு வீணாக்குவது, நாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்த கடவுளையே அவமதிப்பதாகும் – கடவுள் கொடுத்த கொடையை வீணாக்குவதன் மூலம்!
எதற்காக உண்மையை அறிய வேண்டும்? நம் வாழ்க்கையின் எந்த கட்டத்தை எடுத்துக்கொண்டாலும் தேடுதல் மட்டுமே வாழ்க்கையை இயக்கிக்கொண்டிருக்கும். அறிவுக்கான தேடுதல், அநுபவத்திற்கான தேடுதல், பொருளுக்கான தேடுதல், புகழுக்கான தேடுதல், எதிர்காலத்திற்கான தேடுதல், இன்னும் பல. ஆனால் எப்போதுமே நம் தேடுதல் முழுமை அடைந்ததாக நாம் உணர்ந்திருக்க சாத்தியமில்லை. நாம் எப்போதாவது, முழுமை அடைய முடியாத தேடுதலின் முடிவின்மையையும், முடிவற்ற தேடுதலின் மூலம் நம் வாழ்க்கையை இழப்பதையும் அறிய நேர்ந்தால், அந்த அறிதலே உண்மையை அறிவதற்கான தூண்டுதலாக இருக்க கூடும். உண்மையை அறிவதன் மூலம் தேடுதல் என்னும் முடிவற்ற இயக்கத்தை தாண்டிச் சென்று நம் வாழ்க்கையை ஒருவேளை நம்மால் வாழ இயலலாம். ஆனால் தேடுதலின் முடிவின்மையை உணராதவரைக்கும், உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்கு வராமல் போகலாம். அல்லது, அதுவரை உண்மையை அறிவதற்கான தேவை நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆக, நம் அன்றாட தேடுதல்கள் மூலம் நாம் அடையும் அறிவான தேடுதலின் முடிவின்மை என்னும் அறிவே – அத்தகைய அறிவை அடைய நேர்ந்தால், உண்மையை நோக்கி நம் தேடுதலை திசைப்படுத்தலாம்.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள், அநுபவப்பூர்வமாக அடைந்த, அன்றாட தேடுதலின் முடிவின்மை குறித்த அறிவின் திசை காட்டுதல் மூலம் உண்மையைத் தேட தொடங்குவதில்லை. உண்மையை அறிய விரும்பும் நம்மில் பெரும்பாலானலவர்கள், உண்மையை அறிந்தவர்கள் உண்மையைக் குறித்து அளிக்கும் விளக்கங்களால் தூண்டப்பட்டு மட்டுமே, அவர்கள் வார்த்தையின் மேல் நாம் அடையும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு மட்டுமே நம் தேடுதலைத் தொடங்குகிறோம். எனவே நாம் எதைத் தேடுகிறோம் என்பதைக்கூட நாம் அறியாமலே நம் தேடுதலில் முழ்கி இருக்கலாம்.
மேலே கூறப்பட்டவைகள், ஒருவேளை நாம் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த தேடுதல்களின் வழியில் நாம் சந்திக்க நேரும் மன மயக்கங்களை குறித்த ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆன்மீகத் தேடலின் வழியில் நாம் எதிர்கொள்ள நேரிடும் மன மயக்கங்களை நம்மால் அறிய முடியாவிட்டால், நம் ஆன்மீகத்தேடல் கூட நம்மை மாயையிலிருந்து மீட்க முடியாது. இதுவே, எந்த ஆன்மீகப் பயிற்சியையும் உண்மையை உணர்ந்தவர்களின் நேரடி கண்காணிப்பில் செய்ய வேண்டும் என கூறப்படுவதன் காரணம். நம்மில் பெரும்பான்மையினருக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனால், நம் விழிப்புணர்வையே ஆன்மீக குருவாக கொண்டு நம் ஆன்மீக பயணத்தை தொடர முடியும். அவ்வாறெனில், நம் ஆன்மீகத்தேடலை மாயையினுள் தள்ளும் மனமயக்கங்களை குறித்த குறைந்தபட்ச அறிவேனும் நிச்சயமாக நமக்கு தேவைப்படும்.
ஆன்மீகம் குறித்து பெரும்பாலும் நாம் எதுவும் உணர்ந்திருப்பது இல்லை. அதாவது ஆன்மீகம் குறித்த நம் அறிவு முழுவதும் பிறரிடமிருந்து நாம் அறிந்தவையே. பிறர் என்பது, உண்மையை உணர்ந்த ஞானிகளாகவும் இருக்கலாம், உண்மையை தேடுபவர்களாகவும் இருக்கலாம், தேடலின் மூலம் மனமயக்கங்களை அடைந்தவர்களாகவும் இருக்கலாம். நாம் அறிந்தவை, உண்மையை உணர்ந்த ஞானிகளிடமிருந்து இருந்து வந்திருந்தாலும், உண்மையை நோக்கிய தேடலில் இருப்பவர்களிடமிருந்து வந்திருந்தாலும், அந்த அறிவு நம்மை பொறுத்தவரைக்கும் வெறும் அனுமானம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அத்தகைய அறிவை நாம் உணரும்வரை, பிறர் வார்த்தைகளிலிருந்து நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆக, நம்மில் பெரும்பாலானவர்கள், எப்போதாவது ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தால், அது பெரும்பாலும் பிறர்வார்த்தைகள் அல்லது விளக்கங்களிலிருந்து நாம் அடைந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.
நம் மனம் அதீத சக்தியை உடையது. நாம் அறிந்திருக்கும் உலகம் முழுவதும் நம் மனதால், நம் விருப்பத்திற்கேற்ப, நமக்குள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஒரு அனுமானத்தை உண்மையாக கொண்டு நம் தேடுதல் பாதையை அமைத்தால், நம் மனம் அந்த அனுமானத்தையே உண்மைத் தோற்றத்துடன் நமக்கு அளிக்கும் வல்லமை உடையது – மன மயக்கத்தின் மூலம். மிகக்கூர்மையான நுண்ணறிவின் மூலம் மட்டுமே உண்மைக்கும் மனமயக்கத்திற்குமான இடைவெளியை அறிய முடியும். ஆக நம்முன் உள்ள எண்ணற்ற சான்றோர்களின் விளக்கங்களும், ஞான நூல்களும் ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்த வேண்டுமானால், அந்த விளக்கங்களையும், நூல்களையும் அனுமானிப்பதற்கான நுண்ணறிவு நமக்குத் தேவை. அத்தகைய நுண்ணறிவு இல்லாத பட்சத்தில் ஆனமீக விளக்கங்களும், ஞான நூல்களும் நம்மை மன மயக்க நிலைக்கே எடுத்துச் செல்லும்.
எனில் நம் நுண்ணறிவை எவ்வாறு பெறுவது? அது நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. நம் இயல்பு எவ்வாறாயினும், நம் தற்போதைய அறிதல் முறையில், நுண்ணறிவை அடைவதற்கு தர்க்க புத்தியின் தேவை இன்றியமையாததாக இருக்க கூடும். தர்க்க புத்தியின் மூலம் நாம் அறிந்தவற்றை ஆராய்ந்து, உண்மை, உண்மை அல்லாதது என அறிந்து, உண்மையற்றதை விலக்குவதன் மூலம் நம்மால் நுண்ணறிவின் இயக்கத்தை தொட முடியலாம் – வேறு வழிகள் கூட இருக்கலாம். உண்மை, உண்மை அல்லாதது என அறிய உண்மையை உணர்ந்தவர்கள், நமக்கு உதவலாம். எவ்வாறாயினும், ஆரம்ப நிலையில் உண்மையை நோக்கிய தேடுதல் எளிதானதாக இருக்க சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். எனில், மனித மனதால் அடைய இயலாதவை என ஒன்றும் இருக்கவும் சாத்தியமில்லை. மனித பிறவியின் சாத்தியத்தின் உச்சகட்ட ஆனந்தத்தை அடைய, அது எளிதானதாக இல்லா விட்டால் கூட, அதற்காக முயற்சிக்காமல் விடுவது, உலகம் நமக்களித்த மனிதப் பிறவி என்னும் பெரும் கொடையை வீணாக்குவதாகும். அவ்வாறு வீணாக்குவது, நாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்த கடவுளையே அவமதிப்பதாகும் – கடவுள் கொடுத்த கொடையை வீணாக்குவதன் மூலம்!
Thursday, February 2, 2012
உணர்தல், உணர்ச்சி வசப்படுதல்
இருப்பை (existence) உணர்வதே மனம் நமக்கு அளிக்கப்பட்டிருப்பதன் நோக்கமாக இருக்க கூடும். ஆனால், இருப்பு என்பது இடைவிடாது மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் மகாப்பிரவாகம். நம் புலன்களுக்கு எட்டும் அந்த மாற்றங்களை இடைவிடாது அறிந்து அல்லது உணர்ந்து கொண்டிருப்பதே இருப்பை உணர்வது எனலாம். அத்தகைய அறிதலுக்கு மனம் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் நடைபெறும் தருணத்திலேயே அல்லது அந்த மாற்ங்களை நம் புலன்களை வந்தடையும் தருணத்திலேயே உணர்வதே இருப்பை உணர்வதாக இருக்கலாம். இத்தகைய உணர்தலுக்கு இடைவிடாது விழிப்பு நிலையில் இருக்கும் மனம் அவசியமானது. ஆனால் நம்மில் பெரும்பான்மையினர், பல்வேறு காரணங்களால், அத்தகைய விழிப்பு நிலையில் இல்லை.
நாம் பெரும்பாலும், மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் கனவு நிலையிலேயே இருக்கிறோம். அதாவது, மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் நம் வாழ்க்கையை கனவிலேயே வாழ்ந்து முடிக்கிறோம். கனவு என்பது, நாம் செய்யவிரும்பிய செயல்களை நம்மால் செய்ய முடியாத பட்சத்தில், நம் மனம், நம் உறக்கத்தின்போது அந்த செயல்களை செய்து முடிப்பதாகும் (முழுச் செயல்பாட்டையும் கற்பனை என்ற உணர்வின்றி, கற்பனையிலேயே செய்து முடிப்பது). இதன் மூலம் மனம் அதன் முற்றுபெறாத விருப்பங்களின் அழுத்தங்களிலிருந்து விடுபடுகிறது. இங்கு விருப்பம் என்பது, ஆழ்மன விருப்பமாக கூட இருக்கலாம் – அவ்வாறு ஆழ்மன விருப்பமாக இருக்கும் பட்சத்தில், நம் உணர்வு நிலையில் அத்தகைய விரப்பங்களை நாம் அறிந்திருக்க சாத்தியம் இல்லை. ‘சிக்மென்ட் ஃப்ராய்ட்’ கனவுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்குமான தொடர்பை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
நாம் உறங்காமல் இருக்கும்போது கூட, பெரும்பாலும் நம் புலன்களை வந்தடையும் இயற்கையின் மாற்றங்களை, புலன்கள் உணரும் தருணத்தில் மனம் உணர்வதில்லை. புலன்களின் உணர்வு, நினைவாக நம் மூளையில் சேமிக்கப் பட்டு அந்த நினைவு மீண்டும் நம் அறிவாக மீட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு நினைவிலிருந்து மீட்டெடுத்து உணர்வது கனவு நிலைக்கு ஒப்பானதாகும். நம் மனதில் அலைபாபயும் எண்ணங்களைப் பொறுத்து, நினைவாக சேமிக்கப்படுவதுக்கும், அந்த நினைவு நம் அறிதலாக மாறுவதற்குமான இடைவெளி மிக குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம், அதாவது சில வினாடிகள், சில நிமிடங்கள், சில நாட்கள் கூட ஆகலாம். அந்த நினைவுகளில் பெரும்பகுதி, நம்மால் மீட்டெடுக்கப் படாமல் கூட, மனதின் அடி ஆழத்திற்கு போகலாம்.
உதாரணமாக நாம் உண்ணும் உணவின் ருசி – நம் மனதின் தற்போதைய விழிப்பு நிலையில், பெரும்பாலும் நாக்கு ருசியை உணரும் தருணத்தில், நம் மனமும் உணர்வதில்லை. நாம் ருசியை ஒப்பீடு செய்ய விரும்பினால் மட்டும், அந்த ஒப்பீட்டுக்கு தேவையான அளவு நம் நாக்கும் மனமும் ருசியின் உணர்வில் ஒத்து இருக்கும் – இதுவும், ஒப்பீடு செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே. மற்ற தருணங்களில் நாக்கின் உணர்வை மனம் உணர்வதில்லை – மூளை வெறும் நினைவுகளாக பதிவு செய்கிறது. அந்த நினைவுகளின் தொகுப்பே, பெரும்பாலும் ருசி என அறிவது. நாக்கு ருசியை உணரும்போது மனமும் உணருமானால், நம்மால் எப்போதுமே தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது – நம் முன் இருக்கும் உணவு எத்தகையதாக இருந்தாலும்! தேவைக்கு அதிகமாக உண்பதன் மூலம் ஏற்படும் நோய்களும் இருக்காது.
இன்னொரு உதாரணம் நாம் கேட்கும் இசை – ஒரு இசைத்தொகுப்பின் எல்லா துணுக்குகளையும் நம் செவி உணர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் மனம் அந்த எல்லா ஒலி அலைகளையும் உணர்வதில்லை. நம்மனம் விரும்பும் சில ஒலி அலைகளை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருப்போம் – நம் செவி, எல்லா ஒலி அலைகளையும் உணர்ந்தாலும். மனம் அதன் விருப்பத்தின் அடிப்படையில் அது கேட்க விரும்பும் ஒலி அலைகளை தேர்வு செய்வதன் மூலம், நாம் முழுமையான இசைத்தொகுப்பை அநுபவிக்கும் இன்பத்தை இழந்து விடுகிறோம். நம்மில் இசை ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள், சில தருணங்களிலாவது, முழுமையான இசைத்தொகுப்பை மனதின் தெரிவின்றி முழுமையாக கேட்டிருப்போம். எனவே நாம், தெரிவு இல்லாமல் முழுமையாக இருப்பதன் இன்பத்தை சில தருணங்களிலாவது அநுபவத்திருப்போம்.
ஆக, உணர்வு என்பது மனம் அதன் அளவில், தெரிந்தோ தெரியாமலோ, எந்த வித தெரிவும் (choice) இல்லாமல் புலன்கள் உணர்வதை, எந்த விதமான மாற்றமும் இல்லாமல், உள்ளவாறே மனமும் உணர்வதாகும். மனம் இத்தகைய நிலையில் இருந்தால் மட்டுமே அன்பு, கருணை போன்ற இயல்புகள் நம்முடன் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது, நம் சாதாரண மன நிலையில் நாம் அன்பு, கருணை எனக்கூறுவது எல்லாம் வெறும் கற்பனைகளே அல்லது வெறும் எண்ணங்களின் தொகுப்பே – நம் மனம் இத்தகைய உணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால்.
நம் புலன்களின் தேவை இல்லாமல் மனம் அறியும் சில உணர்வுகள் உள்ளன - பயம், கோபம், அன்பு, கருணை, விருப்பு, பசி, பாலுணர்வு போன்றவை. இந்த உணர்வுகளுக்கும் எந்தவிதமான எண்ணங்களும் தேவை இல்லை. உதாரணமாக பசி என்னும் உணர்வு. நம் உடலின் சக்தி தேவைப்படும் தருணங்களில், நம் உடலினுள் நடைபெறும் வேதிமாற்றங்கள் மூலம் பசி என்னும் உணர்வு நம் மனதில் உருவாகிறது. நம் மனம் பசி குறித்த எண்ணங்களை உருவாக்காமல் இருந்தால், அந்த பசியால் நாம் துன்பப்படுவதில்லை. ஆனால், நமக்கு துன்பம் வாராமல் இருக்கும்வரை நாம் உணவைத் தேடி செல்லாமல் இருக்கலாம். எனவே, பசி என்னும் உணர்வுடன் எண்ணங்களையும் உருவாக்குவது, ஒரு வாழ்க்கைத் தேவையாக இருக்கலாம். ஆனால், நாம், நம் உடலுக்கு உண்மையான மரியாதையை அளிப்போமானால், பசி என்னும் உணர்வு ஏற்படும்போது, நம்மால் உடலுக்கு, உணவளிக்காமல் இருக்க முடியாது – அந்த பசியுணர்வு எந்த துன்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலும். அதாவது, நம் உடலுக்கான மரியாதை நம்மால் அளிக்கப்படும்போது, நாம் பசி குறித்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்திருப்போம். நாம் செய்யும் சடங்குகளில் பெரும்பான்மையானவையும், நாம் கூறும் மந்திரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளவையும், நம் உடலையும் மனதையும் போற்றுவதாகவும், அவற்றிற்கு நம் நன்றியை \ மரியாதையை தெரிவிப்பவையாகவே இருக்கம் – அந்த சடங்குகள் அல்லது மந்திர உச்சாடனத்துக்கான மன நிலையில் இருக்கும்போது மட்டும்.
நம் சாதாரண மனநிலையில், நாம் எந்த உணர்வுகளை அடைந்தாலும், அதனுடன் சேர்ந்து, மனம் எண்ணங்களையும் உருவாக்குகிறது. உணர்வுகளுடன் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழும்போது, மனம் உணர்வை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் வெகு எளிதாக ஈடுபட்டு விடுகிறது. அதாவது, மனம் உணர்வுநிலையை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபடுகிறது. மனதின் இந்த நிலைப்பாடே உணர்ச்சிவசப்படுதல் ஆகும். மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உணர்வுகளை முழுவதுமாக இழந்து விடுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் அந்த உணர்வுசார்ந்த எண்ணங்களிலேயே மூழ்கி, மனதில் வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் இடம் இல்லாமல் இருக்கலாம். இது உளவியல் ரீதியாக மிக மிக ஆபத்தான மன நிலை – இதுவே மனப்பிறழ்வுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மனப்பிறழ்வு நிலையிலிருந்து நம்மை பாதுகாக்கவே, மூளை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நம்மை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து வெளிவர உதவுகிறது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம் விழிப்புணர்வை இழப்பதால், அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் தவிர வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் மனதில் இடம் இருப்பதில்லை. அந்த நிலையில் நம் முழு உளவியல் சக்தியும் அந்த குறிப்பிட்ட உணர்வு சார்ந்த எண்ணங்களிலேயே நிலைப்பெற்றிருக்கும், முழு பொதீக சக்தியும் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் சுட்டும் செயல்களில் மட்டுமே குவிந்திருக்கும். அந்த நிலையில் மூளையின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது போன்ற செயல்படுகள் மூலம் மனதின் விழிப்புணர்வு திரும்பப் பெறாவிட்டால், உணர்ச்சிவசப்படுவதன் மூலம் செய்யும் செயல்களின் தீவிரம் பேரழிவைக் கூட ஏற்படுத்தலாம்.
ஆனால், இவ்வாறு உணர்ச்சி வசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை முழுமையாக திரும்பப் பெற முடியுமானால், இது நிச்சயமாக எளிதானதல்ல, அந்த உணர்வுநிலை நம்மில் மிகப்பெரிய ஆன்மீக மாற்றத்தை உருவாக்கும். அதாவது நாம் உணர்ச்சிவப்பட்டிருக்கும் நிலையில், மூளையின் சக்தியின் பெரும்பகுதி உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபெற்று செலவாகிக் கொண்டிருக்கும். அந்நிலையில் நாம் விழிப்புணர்வை திரும்பப் பெறும்போது மனம் எண்ணங்களிலிருந்து உடனடியாக விடுபடும். அந்த நிலையில் எண்ணங்களில் செலவாகிக் கொண்டிருந்த மூளையின் குவிக்கப்பட்ட சக்தி, எண்ணங்கள் திடீரென விடுபட்ட நிலையில் மூளையின் உணர்வாக வெளிப்படலாம். இந்த உணர்வு நிலை, ஆன்மீக உச்சநிலையின் துளியாக இருக்க கூடும். இந்த ஆன்மீக உச்சத்தின் துளியை ஒருமுறை அநுபவிக்க நேர்ந்தால், அதுவே நம் ஆன்மீகப் பாதையின் தொடக்கமாக இருக்கலாம். உதாரணமாக, கோபம் என்ற உணர்வும் அதன் மூலம் உணர்ச்சிவசப்படுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்க கூடும். அந்த உச்சகட்ட உணர்ச்சிவசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை திரும்பப்பெற்று, கோபம் என்னும் உணர்வை முழுமையாக உணர முடியுமானால், அந்த உணர்வு நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எற்படுத்தலாம்.
‘விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூல், உணர்வுகளின் மூலம் ஆன்மீக உச்ச நிலையை அடைவதை விளக்குகிறது.! பல மதங்களும் ஆன்மீக முறைகளும் புலன் உணர்வுகளை மறுப்பதை முதன்மை படுத்தும்போது, உணர்வுகளை முதன்மை படுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டு முறைகளிலும் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஒரு முறையில், புலன் உணர்வுகளை மறுப்பதன் மூலம், புலன் உணர்வுகளால் தூண்டப்படும் எண்ணங்களை மனதில் இல்லாமல் செய்து ஆன்மீக அநுபவத்தை பெற முயலப்படுகிறது. இன்னொரு முறையில், உணர்வுகளை முழுமையாக உணர்வதன் மூலம் மனதில் எண்ணங்கள் உருவாகுவதற்கான இடைவெளி இல்லாமல் செய்வதன் மூலம் ஆன்மீக உச்சத்தை அடைய முயலப்படுகிறது.
பின் குறிப்பு: விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூலுக்கு ஓஷோ அவர்களின் விளக்கம், இரு பகுதிகளாக இங்கு உள்ளது.
http://www.oshoworld.com/e-books/search.asp?search=Vigyan_Bhairav_Tantra&select_search=search_title
நாம் பெரும்பாலும், மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் கனவு நிலையிலேயே இருக்கிறோம். அதாவது, மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் நம் வாழ்க்கையை கனவிலேயே வாழ்ந்து முடிக்கிறோம். கனவு என்பது, நாம் செய்யவிரும்பிய செயல்களை நம்மால் செய்ய முடியாத பட்சத்தில், நம் மனம், நம் உறக்கத்தின்போது அந்த செயல்களை செய்து முடிப்பதாகும் (முழுச் செயல்பாட்டையும் கற்பனை என்ற உணர்வின்றி, கற்பனையிலேயே செய்து முடிப்பது). இதன் மூலம் மனம் அதன் முற்றுபெறாத விருப்பங்களின் அழுத்தங்களிலிருந்து விடுபடுகிறது. இங்கு விருப்பம் என்பது, ஆழ்மன விருப்பமாக கூட இருக்கலாம் – அவ்வாறு ஆழ்மன விருப்பமாக இருக்கும் பட்சத்தில், நம் உணர்வு நிலையில் அத்தகைய விரப்பங்களை நாம் அறிந்திருக்க சாத்தியம் இல்லை. ‘சிக்மென்ட் ஃப்ராய்ட்’ கனவுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்குமான தொடர்பை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
நாம் உறங்காமல் இருக்கும்போது கூட, பெரும்பாலும் நம் புலன்களை வந்தடையும் இயற்கையின் மாற்றங்களை, புலன்கள் உணரும் தருணத்தில் மனம் உணர்வதில்லை. புலன்களின் உணர்வு, நினைவாக நம் மூளையில் சேமிக்கப் பட்டு அந்த நினைவு மீண்டும் நம் அறிவாக மீட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு நினைவிலிருந்து மீட்டெடுத்து உணர்வது கனவு நிலைக்கு ஒப்பானதாகும். நம் மனதில் அலைபாபயும் எண்ணங்களைப் பொறுத்து, நினைவாக சேமிக்கப்படுவதுக்கும், அந்த நினைவு நம் அறிதலாக மாறுவதற்குமான இடைவெளி மிக குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம், அதாவது சில வினாடிகள், சில நிமிடங்கள், சில நாட்கள் கூட ஆகலாம். அந்த நினைவுகளில் பெரும்பகுதி, நம்மால் மீட்டெடுக்கப் படாமல் கூட, மனதின் அடி ஆழத்திற்கு போகலாம்.
உதாரணமாக நாம் உண்ணும் உணவின் ருசி – நம் மனதின் தற்போதைய விழிப்பு நிலையில், பெரும்பாலும் நாக்கு ருசியை உணரும் தருணத்தில், நம் மனமும் உணர்வதில்லை. நாம் ருசியை ஒப்பீடு செய்ய விரும்பினால் மட்டும், அந்த ஒப்பீட்டுக்கு தேவையான அளவு நம் நாக்கும் மனமும் ருசியின் உணர்வில் ஒத்து இருக்கும் – இதுவும், ஒப்பீடு செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே. மற்ற தருணங்களில் நாக்கின் உணர்வை மனம் உணர்வதில்லை – மூளை வெறும் நினைவுகளாக பதிவு செய்கிறது. அந்த நினைவுகளின் தொகுப்பே, பெரும்பாலும் ருசி என அறிவது. நாக்கு ருசியை உணரும்போது மனமும் உணருமானால், நம்மால் எப்போதுமே தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது – நம் முன் இருக்கும் உணவு எத்தகையதாக இருந்தாலும்! தேவைக்கு அதிகமாக உண்பதன் மூலம் ஏற்படும் நோய்களும் இருக்காது.
இன்னொரு உதாரணம் நாம் கேட்கும் இசை – ஒரு இசைத்தொகுப்பின் எல்லா துணுக்குகளையும் நம் செவி உணர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் மனம் அந்த எல்லா ஒலி அலைகளையும் உணர்வதில்லை. நம்மனம் விரும்பும் சில ஒலி அலைகளை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருப்போம் – நம் செவி, எல்லா ஒலி அலைகளையும் உணர்ந்தாலும். மனம் அதன் விருப்பத்தின் அடிப்படையில் அது கேட்க விரும்பும் ஒலி அலைகளை தேர்வு செய்வதன் மூலம், நாம் முழுமையான இசைத்தொகுப்பை அநுபவிக்கும் இன்பத்தை இழந்து விடுகிறோம். நம்மில் இசை ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள், சில தருணங்களிலாவது, முழுமையான இசைத்தொகுப்பை மனதின் தெரிவின்றி முழுமையாக கேட்டிருப்போம். எனவே நாம், தெரிவு இல்லாமல் முழுமையாக இருப்பதன் இன்பத்தை சில தருணங்களிலாவது அநுபவத்திருப்போம்.
ஆக, உணர்வு என்பது மனம் அதன் அளவில், தெரிந்தோ தெரியாமலோ, எந்த வித தெரிவும் (choice) இல்லாமல் புலன்கள் உணர்வதை, எந்த விதமான மாற்றமும் இல்லாமல், உள்ளவாறே மனமும் உணர்வதாகும். மனம் இத்தகைய நிலையில் இருந்தால் மட்டுமே அன்பு, கருணை போன்ற இயல்புகள் நம்முடன் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது, நம் சாதாரண மன நிலையில் நாம் அன்பு, கருணை எனக்கூறுவது எல்லாம் வெறும் கற்பனைகளே அல்லது வெறும் எண்ணங்களின் தொகுப்பே – நம் மனம் இத்தகைய உணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால்.
நம் புலன்களின் தேவை இல்லாமல் மனம் அறியும் சில உணர்வுகள் உள்ளன - பயம், கோபம், அன்பு, கருணை, விருப்பு, பசி, பாலுணர்வு போன்றவை. இந்த உணர்வுகளுக்கும் எந்தவிதமான எண்ணங்களும் தேவை இல்லை. உதாரணமாக பசி என்னும் உணர்வு. நம் உடலின் சக்தி தேவைப்படும் தருணங்களில், நம் உடலினுள் நடைபெறும் வேதிமாற்றங்கள் மூலம் பசி என்னும் உணர்வு நம் மனதில் உருவாகிறது. நம் மனம் பசி குறித்த எண்ணங்களை உருவாக்காமல் இருந்தால், அந்த பசியால் நாம் துன்பப்படுவதில்லை. ஆனால், நமக்கு துன்பம் வாராமல் இருக்கும்வரை நாம் உணவைத் தேடி செல்லாமல் இருக்கலாம். எனவே, பசி என்னும் உணர்வுடன் எண்ணங்களையும் உருவாக்குவது, ஒரு வாழ்க்கைத் தேவையாக இருக்கலாம். ஆனால், நாம், நம் உடலுக்கு உண்மையான மரியாதையை அளிப்போமானால், பசி என்னும் உணர்வு ஏற்படும்போது, நம்மால் உடலுக்கு, உணவளிக்காமல் இருக்க முடியாது – அந்த பசியுணர்வு எந்த துன்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலும். அதாவது, நம் உடலுக்கான மரியாதை நம்மால் அளிக்கப்படும்போது, நாம் பசி குறித்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்திருப்போம். நாம் செய்யும் சடங்குகளில் பெரும்பான்மையானவையும், நாம் கூறும் மந்திரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளவையும், நம் உடலையும் மனதையும் போற்றுவதாகவும், அவற்றிற்கு நம் நன்றியை \ மரியாதையை தெரிவிப்பவையாகவே இருக்கம் – அந்த சடங்குகள் அல்லது மந்திர உச்சாடனத்துக்கான மன நிலையில் இருக்கும்போது மட்டும்.
நம் சாதாரண மனநிலையில், நாம் எந்த உணர்வுகளை அடைந்தாலும், அதனுடன் சேர்ந்து, மனம் எண்ணங்களையும் உருவாக்குகிறது. உணர்வுகளுடன் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழும்போது, மனம் உணர்வை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் வெகு எளிதாக ஈடுபட்டு விடுகிறது. அதாவது, மனம் உணர்வுநிலையை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபடுகிறது. மனதின் இந்த நிலைப்பாடே உணர்ச்சிவசப்படுதல் ஆகும். மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உணர்வுகளை முழுவதுமாக இழந்து விடுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் அந்த உணர்வுசார்ந்த எண்ணங்களிலேயே மூழ்கி, மனதில் வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் இடம் இல்லாமல் இருக்கலாம். இது உளவியல் ரீதியாக மிக மிக ஆபத்தான மன நிலை – இதுவே மனப்பிறழ்வுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மனப்பிறழ்வு நிலையிலிருந்து நம்மை பாதுகாக்கவே, மூளை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நம்மை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து வெளிவர உதவுகிறது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம் விழிப்புணர்வை இழப்பதால், அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் தவிர வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் மனதில் இடம் இருப்பதில்லை. அந்த நிலையில் நம் முழு உளவியல் சக்தியும் அந்த குறிப்பிட்ட உணர்வு சார்ந்த எண்ணங்களிலேயே நிலைப்பெற்றிருக்கும், முழு பொதீக சக்தியும் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் சுட்டும் செயல்களில் மட்டுமே குவிந்திருக்கும். அந்த நிலையில் மூளையின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது போன்ற செயல்படுகள் மூலம் மனதின் விழிப்புணர்வு திரும்பப் பெறாவிட்டால், உணர்ச்சிவசப்படுவதன் மூலம் செய்யும் செயல்களின் தீவிரம் பேரழிவைக் கூட ஏற்படுத்தலாம்.
ஆனால், இவ்வாறு உணர்ச்சி வசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை முழுமையாக திரும்பப் பெற முடியுமானால், இது நிச்சயமாக எளிதானதல்ல, அந்த உணர்வுநிலை நம்மில் மிகப்பெரிய ஆன்மீக மாற்றத்தை உருவாக்கும். அதாவது நாம் உணர்ச்சிவப்பட்டிருக்கும் நிலையில், மூளையின் சக்தியின் பெரும்பகுதி உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபெற்று செலவாகிக் கொண்டிருக்கும். அந்நிலையில் நாம் விழிப்புணர்வை திரும்பப் பெறும்போது மனம் எண்ணங்களிலிருந்து உடனடியாக விடுபடும். அந்த நிலையில் எண்ணங்களில் செலவாகிக் கொண்டிருந்த மூளையின் குவிக்கப்பட்ட சக்தி, எண்ணங்கள் திடீரென விடுபட்ட நிலையில் மூளையின் உணர்வாக வெளிப்படலாம். இந்த உணர்வு நிலை, ஆன்மீக உச்சநிலையின் துளியாக இருக்க கூடும். இந்த ஆன்மீக உச்சத்தின் துளியை ஒருமுறை அநுபவிக்க நேர்ந்தால், அதுவே நம் ஆன்மீகப் பாதையின் தொடக்கமாக இருக்கலாம். உதாரணமாக, கோபம் என்ற உணர்வும் அதன் மூலம் உணர்ச்சிவசப்படுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்க கூடும். அந்த உச்சகட்ட உணர்ச்சிவசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை திரும்பப்பெற்று, கோபம் என்னும் உணர்வை முழுமையாக உணர முடியுமானால், அந்த உணர்வு நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எற்படுத்தலாம்.
‘விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூல், உணர்வுகளின் மூலம் ஆன்மீக உச்ச நிலையை அடைவதை விளக்குகிறது.! பல மதங்களும் ஆன்மீக முறைகளும் புலன் உணர்வுகளை மறுப்பதை முதன்மை படுத்தும்போது, உணர்வுகளை முதன்மை படுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டு முறைகளிலும் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஒரு முறையில், புலன் உணர்வுகளை மறுப்பதன் மூலம், புலன் உணர்வுகளால் தூண்டப்படும் எண்ணங்களை மனதில் இல்லாமல் செய்து ஆன்மீக அநுபவத்தை பெற முயலப்படுகிறது. இன்னொரு முறையில், உணர்வுகளை முழுமையாக உணர்வதன் மூலம் மனதில் எண்ணங்கள் உருவாகுவதற்கான இடைவெளி இல்லாமல் செய்வதன் மூலம் ஆன்மீக உச்சத்தை அடைய முயலப்படுகிறது.
பின் குறிப்பு: விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூலுக்கு ஓஷோ அவர்களின் விளக்கம், இரு பகுதிகளாக இங்கு உள்ளது.
http://www.oshoworld.com/e-books/search.asp?search=Vigyan_Bhairav_Tantra&select_search=search_title
Subscribe to:
Posts (Atom)