அறிதலின் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் அறியப்படுவது ஒன்று மட்டுமே. அதுவே உண்மை. நேரடியாக அறியும்போது மட்டுமே நாம் அறிவது உண்மை. மற்ற எல்லா அறிவுகளும் மாயையே. நேரடியாக அறியாதபோது, நாம் அறிவது வெறும் எண்ணங்களை மட்டுமே. எண்ணங்கள் மூலம் பிம்பங்களை மட்டுமே அறிய முடியும். உணர்வு ஒன்றுதான் உண்மையை அடைவதற்கான வாகனம். உணர்வு மட்டும்தான் உண்மையான அநுபவம். உண்மையை உணர அல்லது அநுபவிக்க மட்டுமே முடியும். உண்மையை விளக்க முடியாது, எனவே விளங்கிக்கொள்ளவும் முடியாது – உணர மட்டுமே முடியும், உண்மையை உணர்வதே உண்மையை அறிவது.
எதற்காக உண்மையை அறிய வேண்டும்? நம் வாழ்க்கையின் எந்த கட்டத்தை எடுத்துக்கொண்டாலும் தேடுதல் மட்டுமே வாழ்க்கையை இயக்கிக்கொண்டிருக்கும். அறிவுக்கான தேடுதல், அநுபவத்திற்கான தேடுதல், பொருளுக்கான தேடுதல், புகழுக்கான தேடுதல், எதிர்காலத்திற்கான தேடுதல், இன்னும் பல. ஆனால் எப்போதுமே நம் தேடுதல் முழுமை அடைந்ததாக நாம் உணர்ந்திருக்க சாத்தியமில்லை. நாம் எப்போதாவது, முழுமை அடைய முடியாத தேடுதலின் முடிவின்மையையும், முடிவற்ற தேடுதலின் மூலம் நம் வாழ்க்கையை இழப்பதையும் அறிய நேர்ந்தால், அந்த அறிதலே உண்மையை அறிவதற்கான தூண்டுதலாக இருக்க கூடும். உண்மையை அறிவதன் மூலம் தேடுதல் என்னும் முடிவற்ற இயக்கத்தை தாண்டிச் சென்று நம் வாழ்க்கையை ஒருவேளை நம்மால் வாழ இயலலாம். ஆனால் தேடுதலின் முடிவின்மையை உணராதவரைக்கும், உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆர்வம் நமக்கு வராமல் போகலாம். அல்லது, அதுவரை உண்மையை அறிவதற்கான தேவை நமக்கு இல்லாமல் இருக்கலாம். ஆக, நம் அன்றாட தேடுதல்கள் மூலம் நாம் அடையும் அறிவான தேடுதலின் முடிவின்மை என்னும் அறிவே – அத்தகைய அறிவை அடைய நேர்ந்தால், உண்மையை நோக்கி நம் தேடுதலை திசைப்படுத்தலாம்.
ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள், அநுபவப்பூர்வமாக அடைந்த, அன்றாட தேடுதலின் முடிவின்மை குறித்த அறிவின் திசை காட்டுதல் மூலம் உண்மையைத் தேட தொடங்குவதில்லை. உண்மையை அறிய விரும்பும் நம்மில் பெரும்பாலானலவர்கள், உண்மையை அறிந்தவர்கள் உண்மையைக் குறித்து அளிக்கும் விளக்கங்களால் தூண்டப்பட்டு மட்டுமே, அவர்கள் வார்த்தையின் மேல் நாம் அடையும் நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு மட்டுமே நம் தேடுதலைத் தொடங்குகிறோம். எனவே நாம் எதைத் தேடுகிறோம் என்பதைக்கூட நாம் அறியாமலே நம் தேடுதலில் முழ்கி இருக்கலாம்.
மேலே கூறப்பட்டவைகள், ஒருவேளை நாம் ஆன்மீகத் தேடல்களில் ஈடுபட்டிருந்தால், அந்த தேடுதல்களின் வழியில் நாம் சந்திக்க நேரும் மன மயக்கங்களை குறித்த ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆன்மீகத் தேடலின் வழியில் நாம் எதிர்கொள்ள நேரிடும் மன மயக்கங்களை நம்மால் அறிய முடியாவிட்டால், நம் ஆன்மீகத்தேடல் கூட நம்மை மாயையிலிருந்து மீட்க முடியாது. இதுவே, எந்த ஆன்மீகப் பயிற்சியையும் உண்மையை உணர்ந்தவர்களின் நேரடி கண்காணிப்பில் செய்ய வேண்டும் என கூறப்படுவதன் காரணம். நம்மில் பெரும்பான்மையினருக்கு அந்த வாய்ப்பு அமைவதில்லை. ஆனால், நம் விழிப்புணர்வையே ஆன்மீக குருவாக கொண்டு நம் ஆன்மீக பயணத்தை தொடர முடியும். அவ்வாறெனில், நம் ஆன்மீகத்தேடலை மாயையினுள் தள்ளும் மனமயக்கங்களை குறித்த குறைந்தபட்ச அறிவேனும் நிச்சயமாக நமக்கு தேவைப்படும்.
ஆன்மீகம் குறித்து பெரும்பாலும் நாம் எதுவும் உணர்ந்திருப்பது இல்லை. அதாவது ஆன்மீகம் குறித்த நம் அறிவு முழுவதும் பிறரிடமிருந்து நாம் அறிந்தவையே. பிறர் என்பது, உண்மையை உணர்ந்த ஞானிகளாகவும் இருக்கலாம், உண்மையை தேடுபவர்களாகவும் இருக்கலாம், தேடலின் மூலம் மனமயக்கங்களை அடைந்தவர்களாகவும் இருக்கலாம். நாம் அறிந்தவை, உண்மையை உணர்ந்த ஞானிகளிடமிருந்து இருந்து வந்திருந்தாலும், உண்மையை நோக்கிய தேடலில் இருப்பவர்களிடமிருந்து வந்திருந்தாலும், அந்த அறிவு நம்மை பொறுத்தவரைக்கும் வெறும் அனுமானம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அத்தகைய அறிவை நாம் உணரும்வரை, பிறர் வார்த்தைகளிலிருந்து நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆக, நம்மில் பெரும்பாலானவர்கள், எப்போதாவது ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்தால், அது பெரும்பாலும் பிறர்வார்த்தைகள் அல்லது விளக்கங்களிலிருந்து நாம் அடைந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.
நம் மனம் அதீத சக்தியை உடையது. நாம் அறிந்திருக்கும் உலகம் முழுவதும் நம் மனதால், நம் விருப்பத்திற்கேற்ப, நமக்குள் உருவாக்கப்பட்டதே ஆகும். ஒரு அனுமானத்தை உண்மையாக கொண்டு நம் தேடுதல் பாதையை அமைத்தால், நம் மனம் அந்த அனுமானத்தையே உண்மைத் தோற்றத்துடன் நமக்கு அளிக்கும் வல்லமை உடையது – மன மயக்கத்தின் மூலம். மிகக்கூர்மையான நுண்ணறிவின் மூலம் மட்டுமே உண்மைக்கும் மனமயக்கத்திற்குமான இடைவெளியை அறிய முடியும். ஆக நம்முன் உள்ள எண்ணற்ற சான்றோர்களின் விளக்கங்களும், ஞான நூல்களும் ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்த வேண்டுமானால், அந்த விளக்கங்களையும், நூல்களையும் அனுமானிப்பதற்கான நுண்ணறிவு நமக்குத் தேவை. அத்தகைய நுண்ணறிவு இல்லாத பட்சத்தில் ஆனமீக விளக்கங்களும், ஞான நூல்களும் நம்மை மன மயக்க நிலைக்கே எடுத்துச் செல்லும்.
எனில் நம் நுண்ணறிவை எவ்வாறு பெறுவது? அது நம் தனிப்பட்ட இயல்பைப் பொறுத்தது. நம் இயல்பு எவ்வாறாயினும், நம் தற்போதைய அறிதல் முறையில், நுண்ணறிவை அடைவதற்கு தர்க்க புத்தியின் தேவை இன்றியமையாததாக இருக்க கூடும். தர்க்க புத்தியின் மூலம் நாம் அறிந்தவற்றை ஆராய்ந்து, உண்மை, உண்மை அல்லாதது என அறிந்து, உண்மையற்றதை விலக்குவதன் மூலம் நம்மால் நுண்ணறிவின் இயக்கத்தை தொட முடியலாம் – வேறு வழிகள் கூட இருக்கலாம். உண்மை, உண்மை அல்லாதது என அறிய உண்மையை உணர்ந்தவர்கள், நமக்கு உதவலாம். எவ்வாறாயினும், ஆரம்ப நிலையில் உண்மையை நோக்கிய தேடுதல் எளிதானதாக இருக்க சாத்தியம் இல்லாமல் இருக்கலாம். எனில், மனித மனதால் அடைய இயலாதவை என ஒன்றும் இருக்கவும் சாத்தியமில்லை. மனித பிறவியின் சாத்தியத்தின் உச்சகட்ட ஆனந்தத்தை அடைய, அது எளிதானதாக இல்லா விட்டால் கூட, அதற்காக முயற்சிக்காமல் விடுவது, உலகம் நமக்களித்த மனிதப் பிறவி என்னும் பெரும் கொடையை வீணாக்குவதாகும். அவ்வாறு வீணாக்குவது, நாம் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால், அந்த கடவுளையே அவமதிப்பதாகும் – கடவுள் கொடுத்த கொடையை வீணாக்குவதன் மூலம்!
Sunday, February 19, 2012
Thursday, February 2, 2012
உணர்தல், உணர்ச்சி வசப்படுதல்
இருப்பை (existence) உணர்வதே மனம் நமக்கு அளிக்கப்பட்டிருப்பதன் நோக்கமாக இருக்க கூடும். ஆனால், இருப்பு என்பது இடைவிடாது மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் மகாப்பிரவாகம். நம் புலன்களுக்கு எட்டும் அந்த மாற்றங்களை இடைவிடாது அறிந்து அல்லது உணர்ந்து கொண்டிருப்பதே இருப்பை உணர்வது எனலாம். அத்தகைய அறிதலுக்கு மனம் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் நடைபெறும் தருணத்திலேயே அல்லது அந்த மாற்ங்களை நம் புலன்களை வந்தடையும் தருணத்திலேயே உணர்வதே இருப்பை உணர்வதாக இருக்கலாம். இத்தகைய உணர்தலுக்கு இடைவிடாது விழிப்பு நிலையில் இருக்கும் மனம் அவசியமானது. ஆனால் நம்மில் பெரும்பான்மையினர், பல்வேறு காரணங்களால், அத்தகைய விழிப்பு நிலையில் இல்லை.
நாம் பெரும்பாலும், மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் கனவு நிலையிலேயே இருக்கிறோம். அதாவது, மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் நம் வாழ்க்கையை கனவிலேயே வாழ்ந்து முடிக்கிறோம். கனவு என்பது, நாம் செய்யவிரும்பிய செயல்களை நம்மால் செய்ய முடியாத பட்சத்தில், நம் மனம், நம் உறக்கத்தின்போது அந்த செயல்களை செய்து முடிப்பதாகும் (முழுச் செயல்பாட்டையும் கற்பனை என்ற உணர்வின்றி, கற்பனையிலேயே செய்து முடிப்பது). இதன் மூலம் மனம் அதன் முற்றுபெறாத விருப்பங்களின் அழுத்தங்களிலிருந்து விடுபடுகிறது. இங்கு விருப்பம் என்பது, ஆழ்மன விருப்பமாக கூட இருக்கலாம் – அவ்வாறு ஆழ்மன விருப்பமாக இருக்கும் பட்சத்தில், நம் உணர்வு நிலையில் அத்தகைய விரப்பங்களை நாம் அறிந்திருக்க சாத்தியம் இல்லை. ‘சிக்மென்ட் ஃப்ராய்ட்’ கனவுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்குமான தொடர்பை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
நாம் உறங்காமல் இருக்கும்போது கூட, பெரும்பாலும் நம் புலன்களை வந்தடையும் இயற்கையின் மாற்றங்களை, புலன்கள் உணரும் தருணத்தில் மனம் உணர்வதில்லை. புலன்களின் உணர்வு, நினைவாக நம் மூளையில் சேமிக்கப் பட்டு அந்த நினைவு மீண்டும் நம் அறிவாக மீட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு நினைவிலிருந்து மீட்டெடுத்து உணர்வது கனவு நிலைக்கு ஒப்பானதாகும். நம் மனதில் அலைபாபயும் எண்ணங்களைப் பொறுத்து, நினைவாக சேமிக்கப்படுவதுக்கும், அந்த நினைவு நம் அறிதலாக மாறுவதற்குமான இடைவெளி மிக குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம், அதாவது சில வினாடிகள், சில நிமிடங்கள், சில நாட்கள் கூட ஆகலாம். அந்த நினைவுகளில் பெரும்பகுதி, நம்மால் மீட்டெடுக்கப் படாமல் கூட, மனதின் அடி ஆழத்திற்கு போகலாம்.
உதாரணமாக நாம் உண்ணும் உணவின் ருசி – நம் மனதின் தற்போதைய விழிப்பு நிலையில், பெரும்பாலும் நாக்கு ருசியை உணரும் தருணத்தில், நம் மனமும் உணர்வதில்லை. நாம் ருசியை ஒப்பீடு செய்ய விரும்பினால் மட்டும், அந்த ஒப்பீட்டுக்கு தேவையான அளவு நம் நாக்கும் மனமும் ருசியின் உணர்வில் ஒத்து இருக்கும் – இதுவும், ஒப்பீடு செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே. மற்ற தருணங்களில் நாக்கின் உணர்வை மனம் உணர்வதில்லை – மூளை வெறும் நினைவுகளாக பதிவு செய்கிறது. அந்த நினைவுகளின் தொகுப்பே, பெரும்பாலும் ருசி என அறிவது. நாக்கு ருசியை உணரும்போது மனமும் உணருமானால், நம்மால் எப்போதுமே தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது – நம் முன் இருக்கும் உணவு எத்தகையதாக இருந்தாலும்! தேவைக்கு அதிகமாக உண்பதன் மூலம் ஏற்படும் நோய்களும் இருக்காது.
இன்னொரு உதாரணம் நாம் கேட்கும் இசை – ஒரு இசைத்தொகுப்பின் எல்லா துணுக்குகளையும் நம் செவி உணர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் மனம் அந்த எல்லா ஒலி அலைகளையும் உணர்வதில்லை. நம்மனம் விரும்பும் சில ஒலி அலைகளை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருப்போம் – நம் செவி, எல்லா ஒலி அலைகளையும் உணர்ந்தாலும். மனம் அதன் விருப்பத்தின் அடிப்படையில் அது கேட்க விரும்பும் ஒலி அலைகளை தேர்வு செய்வதன் மூலம், நாம் முழுமையான இசைத்தொகுப்பை அநுபவிக்கும் இன்பத்தை இழந்து விடுகிறோம். நம்மில் இசை ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள், சில தருணங்களிலாவது, முழுமையான இசைத்தொகுப்பை மனதின் தெரிவின்றி முழுமையாக கேட்டிருப்போம். எனவே நாம், தெரிவு இல்லாமல் முழுமையாக இருப்பதன் இன்பத்தை சில தருணங்களிலாவது அநுபவத்திருப்போம்.
ஆக, உணர்வு என்பது மனம் அதன் அளவில், தெரிந்தோ தெரியாமலோ, எந்த வித தெரிவும் (choice) இல்லாமல் புலன்கள் உணர்வதை, எந்த விதமான மாற்றமும் இல்லாமல், உள்ளவாறே மனமும் உணர்வதாகும். மனம் இத்தகைய நிலையில் இருந்தால் மட்டுமே அன்பு, கருணை போன்ற இயல்புகள் நம்முடன் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது, நம் சாதாரண மன நிலையில் நாம் அன்பு, கருணை எனக்கூறுவது எல்லாம் வெறும் கற்பனைகளே அல்லது வெறும் எண்ணங்களின் தொகுப்பே – நம் மனம் இத்தகைய உணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால்.
நம் புலன்களின் தேவை இல்லாமல் மனம் அறியும் சில உணர்வுகள் உள்ளன - பயம், கோபம், அன்பு, கருணை, விருப்பு, பசி, பாலுணர்வு போன்றவை. இந்த உணர்வுகளுக்கும் எந்தவிதமான எண்ணங்களும் தேவை இல்லை. உதாரணமாக பசி என்னும் உணர்வு. நம் உடலின் சக்தி தேவைப்படும் தருணங்களில், நம் உடலினுள் நடைபெறும் வேதிமாற்றங்கள் மூலம் பசி என்னும் உணர்வு நம் மனதில் உருவாகிறது. நம் மனம் பசி குறித்த எண்ணங்களை உருவாக்காமல் இருந்தால், அந்த பசியால் நாம் துன்பப்படுவதில்லை. ஆனால், நமக்கு துன்பம் வாராமல் இருக்கும்வரை நாம் உணவைத் தேடி செல்லாமல் இருக்கலாம். எனவே, பசி என்னும் உணர்வுடன் எண்ணங்களையும் உருவாக்குவது, ஒரு வாழ்க்கைத் தேவையாக இருக்கலாம். ஆனால், நாம், நம் உடலுக்கு உண்மையான மரியாதையை அளிப்போமானால், பசி என்னும் உணர்வு ஏற்படும்போது, நம்மால் உடலுக்கு, உணவளிக்காமல் இருக்க முடியாது – அந்த பசியுணர்வு எந்த துன்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலும். அதாவது, நம் உடலுக்கான மரியாதை நம்மால் அளிக்கப்படும்போது, நாம் பசி குறித்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்திருப்போம். நாம் செய்யும் சடங்குகளில் பெரும்பான்மையானவையும், நாம் கூறும் மந்திரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளவையும், நம் உடலையும் மனதையும் போற்றுவதாகவும், அவற்றிற்கு நம் நன்றியை \ மரியாதையை தெரிவிப்பவையாகவே இருக்கம் – அந்த சடங்குகள் அல்லது மந்திர உச்சாடனத்துக்கான மன நிலையில் இருக்கும்போது மட்டும்.
நம் சாதாரண மனநிலையில், நாம் எந்த உணர்வுகளை அடைந்தாலும், அதனுடன் சேர்ந்து, மனம் எண்ணங்களையும் உருவாக்குகிறது. உணர்வுகளுடன் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழும்போது, மனம் உணர்வை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் வெகு எளிதாக ஈடுபட்டு விடுகிறது. அதாவது, மனம் உணர்வுநிலையை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபடுகிறது. மனதின் இந்த நிலைப்பாடே உணர்ச்சிவசப்படுதல் ஆகும். மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உணர்வுகளை முழுவதுமாக இழந்து விடுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் அந்த உணர்வுசார்ந்த எண்ணங்களிலேயே மூழ்கி, மனதில் வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் இடம் இல்லாமல் இருக்கலாம். இது உளவியல் ரீதியாக மிக மிக ஆபத்தான மன நிலை – இதுவே மனப்பிறழ்வுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மனப்பிறழ்வு நிலையிலிருந்து நம்மை பாதுகாக்கவே, மூளை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நம்மை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து வெளிவர உதவுகிறது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம் விழிப்புணர்வை இழப்பதால், அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் தவிர வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் மனதில் இடம் இருப்பதில்லை. அந்த நிலையில் நம் முழு உளவியல் சக்தியும் அந்த குறிப்பிட்ட உணர்வு சார்ந்த எண்ணங்களிலேயே நிலைப்பெற்றிருக்கும், முழு பொதீக சக்தியும் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் சுட்டும் செயல்களில் மட்டுமே குவிந்திருக்கும். அந்த நிலையில் மூளையின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது போன்ற செயல்படுகள் மூலம் மனதின் விழிப்புணர்வு திரும்பப் பெறாவிட்டால், உணர்ச்சிவசப்படுவதன் மூலம் செய்யும் செயல்களின் தீவிரம் பேரழிவைக் கூட ஏற்படுத்தலாம்.
ஆனால், இவ்வாறு உணர்ச்சி வசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை முழுமையாக திரும்பப் பெற முடியுமானால், இது நிச்சயமாக எளிதானதல்ல, அந்த உணர்வுநிலை நம்மில் மிகப்பெரிய ஆன்மீக மாற்றத்தை உருவாக்கும். அதாவது நாம் உணர்ச்சிவப்பட்டிருக்கும் நிலையில், மூளையின் சக்தியின் பெரும்பகுதி உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபெற்று செலவாகிக் கொண்டிருக்கும். அந்நிலையில் நாம் விழிப்புணர்வை திரும்பப் பெறும்போது மனம் எண்ணங்களிலிருந்து உடனடியாக விடுபடும். அந்த நிலையில் எண்ணங்களில் செலவாகிக் கொண்டிருந்த மூளையின் குவிக்கப்பட்ட சக்தி, எண்ணங்கள் திடீரென விடுபட்ட நிலையில் மூளையின் உணர்வாக வெளிப்படலாம். இந்த உணர்வு நிலை, ஆன்மீக உச்சநிலையின் துளியாக இருக்க கூடும். இந்த ஆன்மீக உச்சத்தின் துளியை ஒருமுறை அநுபவிக்க நேர்ந்தால், அதுவே நம் ஆன்மீகப் பாதையின் தொடக்கமாக இருக்கலாம். உதாரணமாக, கோபம் என்ற உணர்வும் அதன் மூலம் உணர்ச்சிவசப்படுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்க கூடும். அந்த உச்சகட்ட உணர்ச்சிவசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை திரும்பப்பெற்று, கோபம் என்னும் உணர்வை முழுமையாக உணர முடியுமானால், அந்த உணர்வு நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எற்படுத்தலாம்.
‘விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூல், உணர்வுகளின் மூலம் ஆன்மீக உச்ச நிலையை அடைவதை விளக்குகிறது.! பல மதங்களும் ஆன்மீக முறைகளும் புலன் உணர்வுகளை மறுப்பதை முதன்மை படுத்தும்போது, உணர்வுகளை முதன்மை படுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டு முறைகளிலும் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஒரு முறையில், புலன் உணர்வுகளை மறுப்பதன் மூலம், புலன் உணர்வுகளால் தூண்டப்படும் எண்ணங்களை மனதில் இல்லாமல் செய்து ஆன்மீக அநுபவத்தை பெற முயலப்படுகிறது. இன்னொரு முறையில், உணர்வுகளை முழுமையாக உணர்வதன் மூலம் மனதில் எண்ணங்கள் உருவாகுவதற்கான இடைவெளி இல்லாமல் செய்வதன் மூலம் ஆன்மீக உச்சத்தை அடைய முயலப்படுகிறது.
பின் குறிப்பு: விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூலுக்கு ஓஷோ அவர்களின் விளக்கம், இரு பகுதிகளாக இங்கு உள்ளது.
http://www.oshoworld.com/e-books/search.asp?search=Vigyan_Bhairav_Tantra&select_search=search_title
நாம் பெரும்பாலும், மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் கனவு நிலையிலேயே இருக்கிறோம். அதாவது, மிகச்சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் நம் வாழ்க்கையை கனவிலேயே வாழ்ந்து முடிக்கிறோம். கனவு என்பது, நாம் செய்யவிரும்பிய செயல்களை நம்மால் செய்ய முடியாத பட்சத்தில், நம் மனம், நம் உறக்கத்தின்போது அந்த செயல்களை செய்து முடிப்பதாகும் (முழுச் செயல்பாட்டையும் கற்பனை என்ற உணர்வின்றி, கற்பனையிலேயே செய்து முடிப்பது). இதன் மூலம் மனம் அதன் முற்றுபெறாத விருப்பங்களின் அழுத்தங்களிலிருந்து விடுபடுகிறது. இங்கு விருப்பம் என்பது, ஆழ்மன விருப்பமாக கூட இருக்கலாம் – அவ்வாறு ஆழ்மன விருப்பமாக இருக்கும் பட்சத்தில், நம் உணர்வு நிலையில் அத்தகைய விரப்பங்களை நாம் அறிந்திருக்க சாத்தியம் இல்லை. ‘சிக்மென்ட் ஃப்ராய்ட்’ கனவுகளுக்கும் ஆழ்மன விருப்பங்களுக்குமான தொடர்பை உளவியல் ரீதியாக விளக்கியுள்ளார்.
நாம் உறங்காமல் இருக்கும்போது கூட, பெரும்பாலும் நம் புலன்களை வந்தடையும் இயற்கையின் மாற்றங்களை, புலன்கள் உணரும் தருணத்தில் மனம் உணர்வதில்லை. புலன்களின் உணர்வு, நினைவாக நம் மூளையில் சேமிக்கப் பட்டு அந்த நினைவு மீண்டும் நம் அறிவாக மீட்டெடுக்கப் படுகிறது. இவ்வாறு நினைவிலிருந்து மீட்டெடுத்து உணர்வது கனவு நிலைக்கு ஒப்பானதாகும். நம் மனதில் அலைபாபயும் எண்ணங்களைப் பொறுத்து, நினைவாக சேமிக்கப்படுவதுக்கும், அந்த நினைவு நம் அறிதலாக மாறுவதற்குமான இடைவெளி மிக குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம், அதாவது சில வினாடிகள், சில நிமிடங்கள், சில நாட்கள் கூட ஆகலாம். அந்த நினைவுகளில் பெரும்பகுதி, நம்மால் மீட்டெடுக்கப் படாமல் கூட, மனதின் அடி ஆழத்திற்கு போகலாம்.
உதாரணமாக நாம் உண்ணும் உணவின் ருசி – நம் மனதின் தற்போதைய விழிப்பு நிலையில், பெரும்பாலும் நாக்கு ருசியை உணரும் தருணத்தில், நம் மனமும் உணர்வதில்லை. நாம் ருசியை ஒப்பீடு செய்ய விரும்பினால் மட்டும், அந்த ஒப்பீட்டுக்கு தேவையான அளவு நம் நாக்கும் மனமும் ருசியின் உணர்வில் ஒத்து இருக்கும் – இதுவும், ஒப்பீடு செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வின் மூலம் மட்டுமே. மற்ற தருணங்களில் நாக்கின் உணர்வை மனம் உணர்வதில்லை – மூளை வெறும் நினைவுகளாக பதிவு செய்கிறது. அந்த நினைவுகளின் தொகுப்பே, பெரும்பாலும் ருசி என அறிவது. நாக்கு ருசியை உணரும்போது மனமும் உணருமானால், நம்மால் எப்போதுமே தேவைக்கு அதிகமாக உண்ண முடியாது – நம் முன் இருக்கும் உணவு எத்தகையதாக இருந்தாலும்! தேவைக்கு அதிகமாக உண்பதன் மூலம் ஏற்படும் நோய்களும் இருக்காது.
இன்னொரு உதாரணம் நாம் கேட்கும் இசை – ஒரு இசைத்தொகுப்பின் எல்லா துணுக்குகளையும் நம் செவி உணர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் மனம் அந்த எல்லா ஒலி அலைகளையும் உணர்வதில்லை. நம்மனம் விரும்பும் சில ஒலி அலைகளை மட்டுமே நாம் கேட்டுக்கொண்டிருப்போம் – நம் செவி, எல்லா ஒலி அலைகளையும் உணர்ந்தாலும். மனம் அதன் விருப்பத்தின் அடிப்படையில் அது கேட்க விரும்பும் ஒலி அலைகளை தேர்வு செய்வதன் மூலம், நாம் முழுமையான இசைத்தொகுப்பை அநுபவிக்கும் இன்பத்தை இழந்து விடுகிறோம். நம்மில் இசை ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள், சில தருணங்களிலாவது, முழுமையான இசைத்தொகுப்பை மனதின் தெரிவின்றி முழுமையாக கேட்டிருப்போம். எனவே நாம், தெரிவு இல்லாமல் முழுமையாக இருப்பதன் இன்பத்தை சில தருணங்களிலாவது அநுபவத்திருப்போம்.
ஆக, உணர்வு என்பது மனம் அதன் அளவில், தெரிந்தோ தெரியாமலோ, எந்த வித தெரிவும் (choice) இல்லாமல் புலன்கள் உணர்வதை, எந்த விதமான மாற்றமும் இல்லாமல், உள்ளவாறே மனமும் உணர்வதாகும். மனம் இத்தகைய நிலையில் இருந்தால் மட்டுமே அன்பு, கருணை போன்ற இயல்புகள் நம்முடன் இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது, நம் சாதாரண மன நிலையில் நாம் அன்பு, கருணை எனக்கூறுவது எல்லாம் வெறும் கற்பனைகளே அல்லது வெறும் எண்ணங்களின் தொகுப்பே – நம் மனம் இத்தகைய உணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால்.
நம் புலன்களின் தேவை இல்லாமல் மனம் அறியும் சில உணர்வுகள் உள்ளன - பயம், கோபம், அன்பு, கருணை, விருப்பு, பசி, பாலுணர்வு போன்றவை. இந்த உணர்வுகளுக்கும் எந்தவிதமான எண்ணங்களும் தேவை இல்லை. உதாரணமாக பசி என்னும் உணர்வு. நம் உடலின் சக்தி தேவைப்படும் தருணங்களில், நம் உடலினுள் நடைபெறும் வேதிமாற்றங்கள் மூலம் பசி என்னும் உணர்வு நம் மனதில் உருவாகிறது. நம் மனம் பசி குறித்த எண்ணங்களை உருவாக்காமல் இருந்தால், அந்த பசியால் நாம் துன்பப்படுவதில்லை. ஆனால், நமக்கு துன்பம் வாராமல் இருக்கும்வரை நாம் உணவைத் தேடி செல்லாமல் இருக்கலாம். எனவே, பசி என்னும் உணர்வுடன் எண்ணங்களையும் உருவாக்குவது, ஒரு வாழ்க்கைத் தேவையாக இருக்கலாம். ஆனால், நாம், நம் உடலுக்கு உண்மையான மரியாதையை அளிப்போமானால், பசி என்னும் உணர்வு ஏற்படும்போது, நம்மால் உடலுக்கு, உணவளிக்காமல் இருக்க முடியாது – அந்த பசியுணர்வு எந்த துன்பத்தையும் ஏற்படுத்தாமல் இருந்தாலும். அதாவது, நம் உடலுக்கான மரியாதை நம்மால் அளிக்கப்படும்போது, நாம் பசி குறித்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடைந்திருப்போம். நாம் செய்யும் சடங்குகளில் பெரும்பான்மையானவையும், நாம் கூறும் மந்திரங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளவையும், நம் உடலையும் மனதையும் போற்றுவதாகவும், அவற்றிற்கு நம் நன்றியை \ மரியாதையை தெரிவிப்பவையாகவே இருக்கம் – அந்த சடங்குகள் அல்லது மந்திர உச்சாடனத்துக்கான மன நிலையில் இருக்கும்போது மட்டும்.
நம் சாதாரண மனநிலையில், நாம் எந்த உணர்வுகளை அடைந்தாலும், அதனுடன் சேர்ந்து, மனம் எண்ணங்களையும் உருவாக்குகிறது. உணர்வுகளுடன் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் எழும்போது, மனம் உணர்வை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் வெகு எளிதாக ஈடுபட்டு விடுகிறது. அதாவது, மனம் உணர்வுநிலையை விட்டுவிட்டு உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபடுகிறது. மனதின் இந்த நிலைப்பாடே உணர்ச்சிவசப்படுதல் ஆகும். மனம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், உணர்வுகளை முழுவதுமாக இழந்து விடுகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் அந்த உணர்வுசார்ந்த எண்ணங்களிலேயே மூழ்கி, மனதில் வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் இடம் இல்லாமல் இருக்கலாம். இது உளவியல் ரீதியாக மிக மிக ஆபத்தான மன நிலை – இதுவே மனப்பிறழ்வுக்கு முந்தைய நிலையாக இருக்கலாம். உணர்ச்சி வசப்பட்ட நிலையில், மனப்பிறழ்வு நிலையிலிருந்து நம்மை பாதுகாக்கவே, மூளை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நம்மை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து வெளிவர உதவுகிறது.
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நம் விழிப்புணர்வை இழப்பதால், அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் தவிர வேறு எந்த எண்ணங்களுக்கும் அல்லது உணர்வுகளுக்கும் மனதில் இடம் இருப்பதில்லை. அந்த நிலையில் நம் முழு உளவியல் சக்தியும் அந்த குறிப்பிட்ட உணர்வு சார்ந்த எண்ணங்களிலேயே நிலைப்பெற்றிருக்கும், முழு பொதீக சக்தியும் அந்த உணர்வு சார்ந்த எண்ணங்கள் சுட்டும் செயல்களில் மட்டுமே குவிந்திருக்கும். அந்த நிலையில் மூளையின் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது போன்ற செயல்படுகள் மூலம் மனதின் விழிப்புணர்வு திரும்பப் பெறாவிட்டால், உணர்ச்சிவசப்படுவதன் மூலம் செய்யும் செயல்களின் தீவிரம் பேரழிவைக் கூட ஏற்படுத்தலாம்.
ஆனால், இவ்வாறு உணர்ச்சி வசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை முழுமையாக திரும்பப் பெற முடியுமானால், இது நிச்சயமாக எளிதானதல்ல, அந்த உணர்வுநிலை நம்மில் மிகப்பெரிய ஆன்மீக மாற்றத்தை உருவாக்கும். அதாவது நாம் உணர்ச்சிவப்பட்டிருக்கும் நிலையில், மூளையின் சக்தியின் பெரும்பகுதி உணர்வு சார்ந்த எண்ணங்களில் நிலைபெற்று செலவாகிக் கொண்டிருக்கும். அந்நிலையில் நாம் விழிப்புணர்வை திரும்பப் பெறும்போது மனம் எண்ணங்களிலிருந்து உடனடியாக விடுபடும். அந்த நிலையில் எண்ணங்களில் செலவாகிக் கொண்டிருந்த மூளையின் குவிக்கப்பட்ட சக்தி, எண்ணங்கள் திடீரென விடுபட்ட நிலையில் மூளையின் உணர்வாக வெளிப்படலாம். இந்த உணர்வு நிலை, ஆன்மீக உச்சநிலையின் துளியாக இருக்க கூடும். இந்த ஆன்மீக உச்சத்தின் துளியை ஒருமுறை அநுபவிக்க நேர்ந்தால், அதுவே நம் ஆன்மீகப் பாதையின் தொடக்கமாக இருக்கலாம். உதாரணமாக, கோபம் என்ற உணர்வும் அதன் மூலம் உணர்ச்சிவசப்படுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அன்றாட நிகழ்வாக இருக்க கூடும். அந்த உச்சகட்ட உணர்ச்சிவசப்பட்ட நிலையில், நம்மால் விழிப்புணர்வை திரும்பப்பெற்று, கோபம் என்னும் உணர்வை முழுமையாக உணர முடியுமானால், அந்த உணர்வு நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எற்படுத்தலாம்.
‘விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூல், உணர்வுகளின் மூலம் ஆன்மீக உச்ச நிலையை அடைவதை விளக்குகிறது.! பல மதங்களும் ஆன்மீக முறைகளும் புலன் உணர்வுகளை மறுப்பதை முதன்மை படுத்தும்போது, உணர்வுகளை முதன்மை படுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த இரண்டு முறைகளிலும் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஒரு முறையில், புலன் உணர்வுகளை மறுப்பதன் மூலம், புலன் உணர்வுகளால் தூண்டப்படும் எண்ணங்களை மனதில் இல்லாமல் செய்து ஆன்மீக அநுபவத்தை பெற முயலப்படுகிறது. இன்னொரு முறையில், உணர்வுகளை முழுமையாக உணர்வதன் மூலம் மனதில் எண்ணங்கள் உருவாகுவதற்கான இடைவெளி இல்லாமல் செய்வதன் மூலம் ஆன்மீக உச்சத்தை அடைய முயலப்படுகிறது.
பின் குறிப்பு: விக்ஞான பைரவ தந்த்ரா’ என்னும் நூலுக்கு ஓஷோ அவர்களின் விளக்கம், இரு பகுதிகளாக இங்கு உள்ளது.
http://www.oshoworld.com/e-books/search.asp?search=Vigyan_Bhairav_Tantra&select_search=search_title
Sunday, January 22, 2012
வெறுமை
சாதாரண மனநிலையில் வெறுமை என்னும் சொல் பெரும்பாலும் எதிர்மறையான மன அதிர்வுகளையே உருவாக்க கூடும். ஆனால் எப்போதாவது நாம் முழுமையான வெறுமையை எதிர் கொள்ள நேரிட்டிருந்தால் வெறுமையின் எதிர்மறை அர்த்தத்தை கடந்து சென்றிருப்போம். வெறுமை என்பதே இருப்பின் உச்ச நிலை என்பதையும் அறிந்திருப்போம். அந்த அறிதல், நம் ஒவ்வொரு செயலையும், அந்த வெறுமையை நோக்கி நம்மை செலுத்தும் உந்துதலாக மாற்றக்கூடும். எனில் அந்த வெறுமையின் முதல் அநுபவத்தை எவ்வாறு உணர்வது? அந்த முதல்அநுபவமே நம்மை ஆன்மீகத் தளத்தினுள் உந்திச்செல்ல போதுமானதாக இருக்க கூடும்.
மனித இனத்தின் மன இயக்கங்களின் சாத்தியங்களே நம்மை பிற விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த மன இயக்கங்களே நம் எல்லா விதமான துன்பங்களுக்கும் காரணம். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனம் நமக்கு கிடைத்த வரமும் சாபமும் – மனம் நமக்கு வரமா சாபமா என்பது நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தெரிவைப் பொறுத்தது! ஆம், நம் மனதையும், அதன் மூலம் நம் வாழ்க்கையையும் வரமாக ஏற்றுக் கொள்வதோ அல்லது சாபமாக்கி துன்பப்படுவதோ முழுக்க முழுக்க நம்மால் மட்டுமே. நம் மனதையும் வாழ்க்கையையும் வரமாக உணர நேரிட்டால் அதற்காக கடவுள் என நாம் கருதும் ஒன்றிடம் நன்றி கூறுவதோ அல்லது சாபமாக உணர நேரிட்டால், அதே கடவுளிடம் வருந்துவதோ, அதன் ஆழ் நிலையில் எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்க கூடும். ஆனால், நம் எளிய மன நிலையில் இந்த இரண்டுக்குமே தேவை இருக்கலாம் – இங்கு முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது, நம் மன நிலைக்கும் கடவுள் என்னும் கருத்துக்குமான தொடர்பையே. ஒருவேளை அந்த தொடர்பை, நம் சாதாரண மன நிலையில், நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். அல்லது, அந்த தொடர்பை அறிய நேரிட்டால் கடவுள் என்னும் கருத்துக்கான தேவை இல்லாமல் போகலாம்.
நம் அறிவின் எல்லை, நம் மன இயக்கங்களின் எல்லையே. நம் உலகத்தின் எல்லை, நம் அறிவின் எல்லையே. நம் மனதால், நாம் இருக்கும் கிராமத்தை அல்லது நகரத்தை தாண்டிச் செல்ல இயலாவிட்டால் நம் உலகமும் நாம் இருக்கும் கிராமம் அல்லது நகரம் மட்டுமே. நம்மால் பூமி முழுவதையும் உணர முடிந்தால், நம் உலகின் எல்லை, பூமியின் எல்லைவரை நீளும். நம்மால் சூரிய குடும்பத்தை அனுமானிக்க முடிந்தால், நம் உலகம் சூரிய குடும்பத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். பால் வெளி (Milky way galaxy) நம் அறிவினுள் நுழைய நேரிட்டால் நம் உலகமும் பால் வெளியை அடக்கியதாக இருக்கும். நம் மனம் பால் வெளியையும் மற்ற கேலக்ஸிகளையும் தாண்டி நிறைந்துள்ள வெற்றிடத்தை, வெறுமையை உணர முடிந்தால், நம் உலகமும் அந்த முடிவில்லாத வெறுமையை உள்ளடக்கியதாக இருக்கும். நாம் அறியும் உலகங்கள் முழுவதும் வெற்றிடத்தில், வெறுமையில் மிதக்கும் சிறு துகள்களே என்பதை அறிய நேரிட்டால், ஒருவேளை, நம் மனதில் நிறைந்திருக்கும் வெறுமையையும் நம்மால் உணர முடியலாம்.
நம் மனதின் வெறுமையை நிரப்புவது பெரும்பாலும் நம் எண்ணங்களும் நினைவுகளும் மட்டுமே – அத்துடன் நம் உணர்வுகளும்! மனம் தர்க்கங்களாலும், தர்க்கங்களின் அடிப்படையான நினைவுகளாலும், தர்க்கத்தின் வெளிப்பாடுகளான எண்ணங்களாலும் நிரம்பி இருக்கும்போது, அதன் உணர்வு நிலை மிக மிக குறைவானதாக இருக்கலாம். அதாவது, மனம் நம் வாழ்க்கையை உணர முடியாமல் போகலாம் – நாம் எதற்காக வாழ்க்கையை உணர வேண்டும்? வாழ்தல் மட்டுமே போதுமானதாக இருக்க கூடாதா? ஆம், வாழ்தல் மட்டுமே போதுமானது. நம் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க, அந்த வாழ்க்கையை உணர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் வாழ்க்கையை உணரும் சாத்தியத்துடன் படைக்கப் பட்டுள்ளோம். வாழ்க்கையை உணரும் அந்த சாத்தியத்தை பயன் படுத்த வேண்டுமா இல்லையா என்னும் தெரிவிலேயே, நம் வாழ்க்கை வரமா சாபமா என முடிவு செய்யும் தெரிவும் அடங்கி உள்ளது.
நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் சங்கிலித் தொடர் போல முடிவில்லாததாக இருந்தாலும், ஒவ்வொரு எண்ணங்களுக்கு நடுவிலும் சிறு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளி, நம் மனதில் அடங்கியுள்ள அளவற்ற வெறுமையின் சிறு துளியே. நம் உணர்வுநிலை, இந்த சிறு இடைவெளியை எப்போதாவது உணரத் தேவையான தன்மையுடன் (Sensitivity) இருந்திருக்குமானால், அந்த வெறுமையின் இயல்பை நாம் அறிந்திருப்போம். அந்த அறிதலே, நம் எல்லாவிதமன செயல்களையும், வெறுமையை நோக்கிய நம் தேடுதலின் உபகரணமாக மாற்ற கூடும். அளவற்ற வெற்றிடத்தில் இந்த உலகின் துகள்கள் மிதப்பது போல, நம் மனதின் வெறுமையில் எண்ணங்களும், நினைவுகளும் மிதந்து கொண்டிருக்க கூடும். அந்த வெறுமையை நம்மால் உணர முடிந்தால், நினைவுகளும் எண்ணங்களும், நம் மனதினுள் மிதக்கும் சிறு துகள்களைப் போல மாறக்கூடும். அப்போது எந்த நினைவுகளாலும், எந்த எண்ணங்களாலும் நம்மை துன்புறுத்த முடியாது. இந்த நிலையில் நம் மனதின் அளவற்ற வெறுமையும், அந்த வெறுமையை கொண்டிருக்கும் மனமும், நமக்கு கொடுக்கப் பட்ட வரமாக கூடும்.
நம் இருப்பை, நம் மனதின் இருப்பை, மனதினுள் நிரம்பியுள்ள வெறுமையின் இருப்பை வரமாக அறிய முதல் தேவை, நம் எண்ணங்களின் இடைவெளியையும், அந்த இடைவெளியில் நிரம்பியுள்ள வெறுமையையும் அறிவதே. நம் மனம், அதன் இயல்பான உணர்திறனை திரும்ப பெறுவதன் மூலமே, நம்மால் வெறுமையின் முதல் துளியை சுவைக்க முடியலாம். மதங்களும், கடவுள்களும், நம்பிக்கைகளும், சடங்குகளும் அந்த உணர்திறனை மீட்டெடுக்க உதவலாம். அவ்வாறு உதவாத மதங்களாலும், கடவுள்களாலும், நம்பிக்கைகமளாலும், சடங்குகளாலும் மனிதனுக்கு எந்த விதமான ஆன்மீக உபயோகமும் இல்லை. அந்த உணர்திறனை திரும்ப பெற்றால், அதன் பின்னரும், இந்த கருத்துகளுக்கு எந்த தேவையும் இல்லை. ஆக, கடவுளும், அதைச் சார்ந்தவையும் ஆன்மீகத்தின் சில படிகளை தாண்டி செல்வதற்கு மட்டுமே – அதுவும், அந்த உந்துதல் தேவைப்படும் தடைகள் நம் ஆன்மீகப் பாதையில் இருந்தால் மட்டுமே.
மனதின் உணர் திறன் அதிகரிக்க வேண்டுமென்றால், மனதில் உலவும் எண்ணங்கள் குறைய வேண்டும். அல்லது, உணர்வையும் மனம் அறியும் அளவிற்கு மனம் விரிவடைய வேண்டும். அதாவது, மனதில் நிகழும் எண்ணங்களை குறைப்பதன் மூலம் அல்லது மனதின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் அல்லது இந்த இரண்டின் மூலமும் நம் உணர் திறனை அதிகரிக்க முடியும். நம் மனதின் பரப்பு என்பது, நம் அறிவின் பரப்பே. எனவே, அறிதலின் மூலமும் நம் மனதின் பரப்பை அதிகரித்து, அதன் மூலம் நம் உணர் திறனையும் அதிகரிக்க முடியும். ஆனால், அறிவின் மூலம் பெறும் மன விரிவு, எண்ணங்களையும் அதிகரிக்க கூடும் – இதன் மூலம், உணர் திறனுக்கான சாத்தியம் மனம் அடைந்த விரிவினுள் இல்லாமல் போகலாம். நம் அறிவு, அதன் மூலம் பெறும் மன விரிவை, புதிய எண்ணங்கள் நிரப்புகிறதா அல்லது உணர்வு நிரப்புகிறதா என்பது நாம் பெறும்
அறிவின் இயல்பை சார்ந்து கூட இருக்கலாம்.
நம் மனதில் நிரம்பியுள்ள, நம்மால் அளவிட முடியாத வெறுமையின் சிறு துளியை கூட அநுபவிக்க இயலாத இயலாமையின் கொடும் பிடியில் நாம் இருக்கிறோம். ஆனால் அந்த வெறுமையை அறிவதற்கான எண்ணற்ற சாத்தியங்கள் நம் மனதினுள்ளேயே உள்ளன. அதைப் போலவே அந்த வெறுமையிலிருந்து நம்மை துரத்தும் சாத்தியங்களும் நம் மனதினுள் நிரம்பியுள்ளன. இந்த முரண்பாடுகளின் நடுவில், நம்மால் இயன்றது, நம் அறிவை இடைவிடாமல் பெருக்கி அதன் மூலம் நம் மனதின் பரப்பையும் இடைவிடாமல் அதிகரிப்பது மட்டுமே. நம் மனம் இடைவிடாமல் விரிவடையும்போது, எங்கேயாவது ஒரு புள்ளியில், எண்ணங்கள் உணர்வுக்கு வழி கொடுத்து, சிறிதளவு விலக நேரிடலாம். அந்த விலகலே, நம் ஆன்மீக பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கலாம்.
மனித இனத்தின் மன இயக்கங்களின் சாத்தியங்களே நம்மை பிற விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்த மன இயக்கங்களே நம் எல்லா விதமான துன்பங்களுக்கும் காரணம். வேறு வார்த்தைகளில் கூறினால், நம் மனம் நமக்கு கிடைத்த வரமும் சாபமும் – மனம் நமக்கு வரமா சாபமா என்பது நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தெரிவைப் பொறுத்தது! ஆம், நம் மனதையும், அதன் மூலம் நம் வாழ்க்கையையும் வரமாக ஏற்றுக் கொள்வதோ அல்லது சாபமாக்கி துன்பப்படுவதோ முழுக்க முழுக்க நம்மால் மட்டுமே. நம் மனதையும் வாழ்க்கையையும் வரமாக உணர நேரிட்டால் அதற்காக கடவுள் என நாம் கருதும் ஒன்றிடம் நன்றி கூறுவதோ அல்லது சாபமாக உணர நேரிட்டால், அதே கடவுளிடம் வருந்துவதோ, அதன் ஆழ் நிலையில் எந்த அர்த்தமும் இல்லாமல் இருக்க கூடும். ஆனால், நம் எளிய மன நிலையில் இந்த இரண்டுக்குமே தேவை இருக்கலாம் – இங்கு முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது, நம் மன நிலைக்கும் கடவுள் என்னும் கருத்துக்குமான தொடர்பையே. ஒருவேளை அந்த தொடர்பை, நம் சாதாரண மன நிலையில், நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். அல்லது, அந்த தொடர்பை அறிய நேரிட்டால் கடவுள் என்னும் கருத்துக்கான தேவை இல்லாமல் போகலாம்.
நம் அறிவின் எல்லை, நம் மன இயக்கங்களின் எல்லையே. நம் உலகத்தின் எல்லை, நம் அறிவின் எல்லையே. நம் மனதால், நாம் இருக்கும் கிராமத்தை அல்லது நகரத்தை தாண்டிச் செல்ல இயலாவிட்டால் நம் உலகமும் நாம் இருக்கும் கிராமம் அல்லது நகரம் மட்டுமே. நம்மால் பூமி முழுவதையும் உணர முடிந்தால், நம் உலகின் எல்லை, பூமியின் எல்லைவரை நீளும். நம்மால் சூரிய குடும்பத்தை அனுமானிக்க முடிந்தால், நம் உலகம் சூரிய குடும்பத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். பால் வெளி (Milky way galaxy) நம் அறிவினுள் நுழைய நேரிட்டால் நம் உலகமும் பால் வெளியை அடக்கியதாக இருக்கும். நம் மனம் பால் வெளியையும் மற்ற கேலக்ஸிகளையும் தாண்டி நிறைந்துள்ள வெற்றிடத்தை, வெறுமையை உணர முடிந்தால், நம் உலகமும் அந்த முடிவில்லாத வெறுமையை உள்ளடக்கியதாக இருக்கும். நாம் அறியும் உலகங்கள் முழுவதும் வெற்றிடத்தில், வெறுமையில் மிதக்கும் சிறு துகள்களே என்பதை அறிய நேரிட்டால், ஒருவேளை, நம் மனதில் நிறைந்திருக்கும் வெறுமையையும் நம்மால் உணர முடியலாம்.
நம் மனதின் வெறுமையை நிரப்புவது பெரும்பாலும் நம் எண்ணங்களும் நினைவுகளும் மட்டுமே – அத்துடன் நம் உணர்வுகளும்! மனம் தர்க்கங்களாலும், தர்க்கங்களின் அடிப்படையான நினைவுகளாலும், தர்க்கத்தின் வெளிப்பாடுகளான எண்ணங்களாலும் நிரம்பி இருக்கும்போது, அதன் உணர்வு நிலை மிக மிக குறைவானதாக இருக்கலாம். அதாவது, மனம் நம் வாழ்க்கையை உணர முடியாமல் போகலாம் – நாம் எதற்காக வாழ்க்கையை உணர வேண்டும்? வாழ்தல் மட்டுமே போதுமானதாக இருக்க கூடாதா? ஆம், வாழ்தல் மட்டுமே போதுமானது. நம் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க, அந்த வாழ்க்கையை உணர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் வாழ்க்கையை உணரும் சாத்தியத்துடன் படைக்கப் பட்டுள்ளோம். வாழ்க்கையை உணரும் அந்த சாத்தியத்தை பயன் படுத்த வேண்டுமா இல்லையா என்னும் தெரிவிலேயே, நம் வாழ்க்கை வரமா சாபமா என முடிவு செய்யும் தெரிவும் அடங்கி உள்ளது.
நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் சங்கிலித் தொடர் போல முடிவில்லாததாக இருந்தாலும், ஒவ்வொரு எண்ணங்களுக்கு நடுவிலும் சிறு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளி, நம் மனதில் அடங்கியுள்ள அளவற்ற வெறுமையின் சிறு துளியே. நம் உணர்வுநிலை, இந்த சிறு இடைவெளியை எப்போதாவது உணரத் தேவையான தன்மையுடன் (Sensitivity) இருந்திருக்குமானால், அந்த வெறுமையின் இயல்பை நாம் அறிந்திருப்போம். அந்த அறிதலே, நம் எல்லாவிதமன செயல்களையும், வெறுமையை நோக்கிய நம் தேடுதலின் உபகரணமாக மாற்ற கூடும். அளவற்ற வெற்றிடத்தில் இந்த உலகின் துகள்கள் மிதப்பது போல, நம் மனதின் வெறுமையில் எண்ணங்களும், நினைவுகளும் மிதந்து கொண்டிருக்க கூடும். அந்த வெறுமையை நம்மால் உணர முடிந்தால், நினைவுகளும் எண்ணங்களும், நம் மனதினுள் மிதக்கும் சிறு துகள்களைப் போல மாறக்கூடும். அப்போது எந்த நினைவுகளாலும், எந்த எண்ணங்களாலும் நம்மை துன்புறுத்த முடியாது. இந்த நிலையில் நம் மனதின் அளவற்ற வெறுமையும், அந்த வெறுமையை கொண்டிருக்கும் மனமும், நமக்கு கொடுக்கப் பட்ட வரமாக கூடும்.
நம் இருப்பை, நம் மனதின் இருப்பை, மனதினுள் நிரம்பியுள்ள வெறுமையின் இருப்பை வரமாக அறிய முதல் தேவை, நம் எண்ணங்களின் இடைவெளியையும், அந்த இடைவெளியில் நிரம்பியுள்ள வெறுமையையும் அறிவதே. நம் மனம், அதன் இயல்பான உணர்திறனை திரும்ப பெறுவதன் மூலமே, நம்மால் வெறுமையின் முதல் துளியை சுவைக்க முடியலாம். மதங்களும், கடவுள்களும், நம்பிக்கைகளும், சடங்குகளும் அந்த உணர்திறனை மீட்டெடுக்க உதவலாம். அவ்வாறு உதவாத மதங்களாலும், கடவுள்களாலும், நம்பிக்கைகமளாலும், சடங்குகளாலும் மனிதனுக்கு எந்த விதமான ஆன்மீக உபயோகமும் இல்லை. அந்த உணர்திறனை திரும்ப பெற்றால், அதன் பின்னரும், இந்த கருத்துகளுக்கு எந்த தேவையும் இல்லை. ஆக, கடவுளும், அதைச் சார்ந்தவையும் ஆன்மீகத்தின் சில படிகளை தாண்டி செல்வதற்கு மட்டுமே – அதுவும், அந்த உந்துதல் தேவைப்படும் தடைகள் நம் ஆன்மீகப் பாதையில் இருந்தால் மட்டுமே.
மனதின் உணர் திறன் அதிகரிக்க வேண்டுமென்றால், மனதில் உலவும் எண்ணங்கள் குறைய வேண்டும். அல்லது, உணர்வையும் மனம் அறியும் அளவிற்கு மனம் விரிவடைய வேண்டும். அதாவது, மனதில் நிகழும் எண்ணங்களை குறைப்பதன் மூலம் அல்லது மனதின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் அல்லது இந்த இரண்டின் மூலமும் நம் உணர் திறனை அதிகரிக்க முடியும். நம் மனதின் பரப்பு என்பது, நம் அறிவின் பரப்பே. எனவே, அறிதலின் மூலமும் நம் மனதின் பரப்பை அதிகரித்து, அதன் மூலம் நம் உணர் திறனையும் அதிகரிக்க முடியும். ஆனால், அறிவின் மூலம் பெறும் மன விரிவு, எண்ணங்களையும் அதிகரிக்க கூடும் – இதன் மூலம், உணர் திறனுக்கான சாத்தியம் மனம் அடைந்த விரிவினுள் இல்லாமல் போகலாம். நம் அறிவு, அதன் மூலம் பெறும் மன விரிவை, புதிய எண்ணங்கள் நிரப்புகிறதா அல்லது உணர்வு நிரப்புகிறதா என்பது நாம் பெறும்
அறிவின் இயல்பை சார்ந்து கூட இருக்கலாம்.
நம் மனதில் நிரம்பியுள்ள, நம்மால் அளவிட முடியாத வெறுமையின் சிறு துளியை கூட அநுபவிக்க இயலாத இயலாமையின் கொடும் பிடியில் நாம் இருக்கிறோம். ஆனால் அந்த வெறுமையை அறிவதற்கான எண்ணற்ற சாத்தியங்கள் நம் மனதினுள்ளேயே உள்ளன. அதைப் போலவே அந்த வெறுமையிலிருந்து நம்மை துரத்தும் சாத்தியங்களும் நம் மனதினுள் நிரம்பியுள்ளன. இந்த முரண்பாடுகளின் நடுவில், நம்மால் இயன்றது, நம் அறிவை இடைவிடாமல் பெருக்கி அதன் மூலம் நம் மனதின் பரப்பையும் இடைவிடாமல் அதிகரிப்பது மட்டுமே. நம் மனம் இடைவிடாமல் விரிவடையும்போது, எங்கேயாவது ஒரு புள்ளியில், எண்ணங்கள் உணர்வுக்கு வழி கொடுத்து, சிறிதளவு விலக நேரிடலாம். அந்த விலகலே, நம் ஆன்மீக பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கலாம்.
Friday, December 30, 2011
பக்தி, ஆன்மீகம்
தற்போதைய காலகட்டத்தில் பக்தி என்பது ஒரு பாவனையாக மாற்றப்பட்டு, அந்த பாவனையுடன் இருப்பதே ஆன்மீகம் என்னும் ஒரு மாயை மிகப் பரவலாக உள்ளது. மேலும் இன்றையப் பொதுத் தளத்தில் பக்தி என்னும் கருத்து மிகவும் திரிவடைந்து உள்ளது – கடவுள் என்னும் கருத்தை நோக்கி வேண்டுதல்களை முன் வைப்பது அல்லது கடவுள் என்னும் கருத்தை நோக்கி சேவைகள் செய்வது. ஆனால் ஆன்மீக தளத்தில் பக்தி என்பதன் அர்த்தம் முற்றிலும் வேறானதாகவே இருக்க வேண்டும். அது நமக்குள் இருக்கும், ஆனால் நாம் இழந்துவிட்ட உணர்திறனை வீரியத்துடன் வெளிக்கொண்டு வரும் கருவி. பக்தியின் உண்மையான பயன்பாடு நமக்கு தெரியாவிட்டால், அந்த பக்தியால் எந்த பயனும் இல்லை – அது ஒரு உளவியல் அணிகலனாக மட்டுமே இருக்க முடியும், ‘நான்’ என்னும் கருத்தை மெருகூட்டுவதற்காக!
பக்தி என்பது, முழு அற்பணிப்பு அல்லது முழு ஈடுபாடு அல்லது முழுமையான சரணடைவு (devotion/surrender) என்பதன் குறியீடு. ஆன்மீகத்தின் எந்த வழியை பின்பற்றினாலும், முழுமையை அடைவதற்கு பக்தி என்பது மிக அவசியமானதாக இருக்க கூடும். முழுமையான சரணடைதல் என்னும் படி இல்லாமல் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆன்மீகத்தில் காணப்படும் எல்லா அறிதல் முறைகளும், எல்லா தத்துவங்களும், எல்லா பயிற்சிகளும் முழுமையான சரணடைதலுக்காக நம் மனதை பண்படுத்துவதாகவே இருக்கும். அத்தகைய அறிதல்களும், தத்துவ விசாரணைகளும், பயிற்சிகளும் இல்லாமல் பக்தி என்னும் நிலையை நம்மால் அடைய முடியுமா? நம் தற்போதைய மன நிலையில், நம்மை விட பெரிதாக நாம் கருதும் ஒன்றிடம் (அந்த ஒன்று, கடவுளாக அல்லது கடவுள் என்னும் கருத்தாக கூட இருக்கலாம்) நம்மால் முழுமையாக சரணடைய முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால், நாம் பக்தி என கூறுவதன் அர்த்தம் என்ன? நம் மூளையைக் குறித்து நம்மிடம் உள்ள எளிய அறிவும், நம் சுற்று சூழலை கவனிப்பதுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதுமானவையாக இருக்க கூடும்.
நம் மூளை, அதன் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது – இடது மூளை மற்றும் வலது மூளை. இடது மூளை தர்க்க ரீதியான நம் செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. வலது மூளை உணர்வு சார்ந்த செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. நம் ஒவ்வொருவரும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளையும் உபயோகப்படுத்தியாக வேண்டும். ஆனால் எந்த பகுதியை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்பது நம் தனிமனித இயல்பைச் சார்ந்தது.
ஆன்மீகத்தின் நோக்கம் நம்மை நாமே முழுமையாக அறிவது அல்லது உணர்வது. நம்முள் இருக்கும் கடவள் தன்மையை முழுமையாக உணர்வது – அதை நாம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது அல்லது உணர்வது எனக்கூறினாலும், ஜீவாத்மா பரமாத்வாவின் காலடியை சேர்வது எனக்கூறினாலும், கடவுளை அடைவது எனக்கூறினாலும், கடவள் தன்மையை அடைவது எனக்கூறினாலும், மோக்ஷ்சம் எனக்கூறினாலும், சமாதி நிலை எனக்கூறினாலும், நிர்வாணம் எனக்கூறினாலும், இன்னும் வேறு எதுவுமெனக்கூறினாலும்!
நம்மை முழுமையாக உணர்வது என்பது, நம் அறிதல் என்னும் செயல்பாட்டில் வலது மூளை முழுமையாக ஈடுபடுவது மட்டுமாகவே இருக்க முடியும். அதாவது, அறிதலில் இடது மூளையின் தர்க்கத்தின் இடர்பாடு இல்லாமல் வலது மூளை முழுவதுமாக, முழு உணர்வு நிலையில் ஈடுபட்டிருப்பதாகும். அத்தகைய நிலையை நாம் அடையும்வரை, முழுமையான சரணடைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை. வலது மூளையின் ஒவ்வொரு சரண்டையும் முயற்சியிலும், இடது மூளை அதன் தர்க்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கம். எனவே முழுமையான சரணடைதல் என்பதை இடது மூளையின் செயல்பாடு தடுத்துக் கொண்டே இருக்கும்.
வலது மூளையின் செயல்பாட்டின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக கொண்டவர்கள், பக்தி அல்லது சரணடைதல் என்னும் உணர்வு நிலையை முழுமையான அறிதலை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். ஆனால் அவர்களும் இடது மூளையின் செயல்பாட்டைத் தாண்டியே முழுமையை அடைய முடியலாம். இடது மூளையின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்த அல்லது தாண்டிய பின்னர்தான் முழுமையான ஆன்மீக உணர்வை அடைய முடியலாம். இடது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான தர்க்கத்தையே அதை தாண்டிச் செல்ல உபயோகப்படுத்துவதைப் போல, வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான உணரும் தன்மையையே இடது மூளையின் இயல்பை தாண்டிவர உபயோகப்படுத்தலாம். ஆனால், அவர்களும் இடது மூளையின் இருப்பை உணர்ந்தாக வேண்டும். இடது மூளையின் இருப்பை அவர்களால் உணரமுடியாவிட்டால், இடது மூளையின் செயல்பாடுகளை தாண்டாவிட்டால், அவர்கள் பக்தி அல்லது சரண்டைதல் எனக் கூறுவது, மனம் அதனையே ஏமாற்றும் ஒரு தந்திரம்(deception) மட்டுமே!
நாம் வாழும் முறையை, உள்நோக்கித் திரும்பி, எப்போதாவது நம்மால் கவனிக்கப் பட்டிருந்தால், நாம் நம்முடைய இயல்பை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியலாம். அதிவேகமாக நாம் வாழும் சூழல் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த சூழலுக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்முழுமையாக ஈடுபடுவதால், நம் வாழ்க்கையை அறிவதற்கான சாத்தியங்களையும் நாம் முழுவதுமாக இழந்து விடுகிறோம். அதாவது நம் வாழ்வு முழுவதையும், நமக்கேற்ற சூழலை உருவாக்குவதை விட்டு விட்டு, சூழலுக்கேற்ப நம்மை மாற்றுவதிலேயே செலவழிக்கிறோம். அதாவது, நம் இயல்பை விட்டு விட்டு, மாறும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றுகிறோம். இதன் மூலம் நம் இயல்பையும் இழந்து விடுகிறோம்.
வலது மூளையின் ஆதிக்கம் உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல், தங்கள் இயல்பிலிருந்து மாற முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப நாம் மாறுவதில் முனைப்புடன் இருப்பதால், நம் இடது மூளையின் துணைக்கொண்டு நம் இயல்புகளை மறந்து விட்டோம் அல்லது அறியாமல் தவிர்த்து விட்டோம். அதாவது, நாம் ஆன்மீகத்திற்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம – இடது மூளையின் தர்க்க இயல்பைத் தாண்டி வலது மூளையின் உணர்வு நிலைக்கு வருவதற்கு பதிலாக வலது மூளையின் உணர்வு நிலையை தாண்டி, இடது மூளையின் தர்க்க நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வாறு வந்தால் மட்டுமே, வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ளமுடியும்.
நம் உணர்வு நிலைகளை மழுங்கடித்து விட்டு, பக்தி, சரணடைதல் ஆகியவற்றை நம் இயல்பாக நம் மனம் கருதினால், அது நம் மனம் தன்னைத்தானே ஏமாற்றும் தந்திரம் (deception) மட்டுமே. நாம் வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்களாக இருந்தாலும், அந்த இயல்பை, தற்போதைய நம் வாழ்க்கைச் சூழலில் அறிந்து கொள்ள இடது மூளையின் தர்க்க இயல்பை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தத்துவங்களும், தத்துவ மூல நூல்களும் (scriptures) நம் இடது மூளையைன் இயல்பைத் தாண்டி வர நமக்கு உதவலாம் – தத்துவம் அல்லது மூல நூல்களின் பயன்பாடு, மனதின் தர்க்க நிலையை தாண்டி வருவதற்கு பட்டுமே. மனதின் தர்க்க செயல்பாட்டைத் தாண்டி உணர்வின் இயக்கத்திற்கு வரும்போது, நாம் தத்துவங்களையும் மூல நூல்களையும் தாண்டி வந்திருப்போம்! அதன் பின்னர், தர்க்கங்களுக்கும், தத்துவங்களுக்கும், மூல நூல்களுக்கும் எந்த தேவையும் இல்லை!
பக்தி என்பது, முழு அற்பணிப்பு அல்லது முழு ஈடுபாடு அல்லது முழுமையான சரணடைவு (devotion/surrender) என்பதன் குறியீடு. ஆன்மீகத்தின் எந்த வழியை பின்பற்றினாலும், முழுமையை அடைவதற்கு பக்தி என்பது மிக அவசியமானதாக இருக்க கூடும். முழுமையான சரணடைதல் என்னும் படி இல்லாமல் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைய முடியும் என்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆன்மீகத்தில் காணப்படும் எல்லா அறிதல் முறைகளும், எல்லா தத்துவங்களும், எல்லா பயிற்சிகளும் முழுமையான சரணடைதலுக்காக நம் மனதை பண்படுத்துவதாகவே இருக்கும். அத்தகைய அறிதல்களும், தத்துவ விசாரணைகளும், பயிற்சிகளும் இல்லாமல் பக்தி என்னும் நிலையை நம்மால் அடைய முடியுமா? நம் தற்போதைய மன நிலையில், நம்மை விட பெரிதாக நாம் கருதும் ஒன்றிடம் (அந்த ஒன்று, கடவுளாக அல்லது கடவுள் என்னும் கருத்தாக கூட இருக்கலாம்) நம்மால் முழுமையாக சரணடைய முடியுமா? அவ்வாறு முடியாவிட்டால், நாம் பக்தி என கூறுவதன் அர்த்தம் என்ன? நம் மூளையைக் குறித்து நம்மிடம் உள்ள எளிய அறிவும், நம் சுற்று சூழலை கவனிப்பதுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க போதுமானவையாக இருக்க கூடும்.
நம் மூளை, அதன் அன்றாட செயல்பாட்டின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது – இடது மூளை மற்றும் வலது மூளை. இடது மூளை தர்க்க ரீதியான நம் செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. வலது மூளை உணர்வு சார்ந்த செயல்பாடுகளில் உபயோகப்படுத்தப் படுகிறது. நம் ஒவ்வொருவரும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளையும் உபயோகப்படுத்தியாக வேண்டும். ஆனால் எந்த பகுதியை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம் என்பது நம் தனிமனித இயல்பைச் சார்ந்தது.
ஆன்மீகத்தின் நோக்கம் நம்மை நாமே முழுமையாக அறிவது அல்லது உணர்வது. நம்முள் இருக்கும் கடவள் தன்மையை முழுமையாக உணர்வது – அதை நாம் ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது அல்லது உணர்வது எனக்கூறினாலும், ஜீவாத்மா பரமாத்வாவின் காலடியை சேர்வது எனக்கூறினாலும், கடவுளை அடைவது எனக்கூறினாலும், கடவள் தன்மையை அடைவது எனக்கூறினாலும், மோக்ஷ்சம் எனக்கூறினாலும், சமாதி நிலை எனக்கூறினாலும், நிர்வாணம் எனக்கூறினாலும், இன்னும் வேறு எதுவுமெனக்கூறினாலும்!
நம்மை முழுமையாக உணர்வது என்பது, நம் அறிதல் என்னும் செயல்பாட்டில் வலது மூளை முழுமையாக ஈடுபடுவது மட்டுமாகவே இருக்க முடியும். அதாவது, அறிதலில் இடது மூளையின் தர்க்கத்தின் இடர்பாடு இல்லாமல் வலது மூளை முழுவதுமாக, முழு உணர்வு நிலையில் ஈடுபட்டிருப்பதாகும். அத்தகைய நிலையை நாம் அடையும்வரை, முழுமையான சரணடைத்தல் என்பதற்கு சாத்தியமே இல்லை. வலது மூளையின் ஒவ்வொரு சரண்டையும் முயற்சியிலும், இடது மூளை அதன் தர்க்கத்தை நிலைநாட்டிக்கொண்டே இருக்கம். எனவே முழுமையான சரணடைதல் என்பதை இடது மூளையின் செயல்பாடு தடுத்துக் கொண்டே இருக்கும்.
வலது மூளையின் செயல்பாட்டின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக கொண்டவர்கள், பக்தி அல்லது சரணடைதல் என்னும் உணர்வு நிலையை முழுமையான அறிதலை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம். ஆனால் அவர்களும் இடது மூளையின் செயல்பாட்டைத் தாண்டியே முழுமையை அடைய முடியலாம். இடது மூளையின் முதன்மையை அல்லது ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை முற்றிலுமாக இழந்த அல்லது தாண்டிய பின்னர்தான் முழுமையான ஆன்மீக உணர்வை அடைய முடியலாம். இடது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான தர்க்கத்தையே அதை தாண்டிச் செல்ல உபயோகப்படுத்துவதைப் போல, வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்கள், அவர்கள் இயல்பான உணரும் தன்மையையே இடது மூளையின் இயல்பை தாண்டிவர உபயோகப்படுத்தலாம். ஆனால், அவர்களும் இடது மூளையின் இருப்பை உணர்ந்தாக வேண்டும். இடது மூளையின் இருப்பை அவர்களால் உணரமுடியாவிட்டால், இடது மூளையின் செயல்பாடுகளை தாண்டாவிட்டால், அவர்கள் பக்தி அல்லது சரண்டைதல் எனக் கூறுவது, மனம் அதனையே ஏமாற்றும் ஒரு தந்திரம்(deception) மட்டுமே!
நாம் வாழும் முறையை, உள்நோக்கித் திரும்பி, எப்போதாவது நம்மால் கவனிக்கப் பட்டிருந்தால், நாம் நம்முடைய இயல்பை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்பதை நம்மால் உணர முடியலாம். அதிவேகமாக நாம் வாழும் சூழல் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அந்த சூழலுக்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்முழுமையாக ஈடுபடுவதால், நம் வாழ்க்கையை அறிவதற்கான சாத்தியங்களையும் நாம் முழுவதுமாக இழந்து விடுகிறோம். அதாவது நம் வாழ்வு முழுவதையும், நமக்கேற்ற சூழலை உருவாக்குவதை விட்டு விட்டு, சூழலுக்கேற்ப நம்மை மாற்றுவதிலேயே செலவழிக்கிறோம். அதாவது, நம் இயல்பை விட்டு விட்டு, மாறும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றுகிறோம். இதன் மூலம் நம் இயல்பையும் இழந்து விடுகிறோம்.
வலது மூளையின் ஆதிக்கம் உடையவர்கள், அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல், தங்கள் இயல்பிலிருந்து மாற முடியாது. ஆனால் சூழலுக்கேற்ப நாம் மாறுவதில் முனைப்புடன் இருப்பதால், நம் இடது மூளையின் துணைக்கொண்டு நம் இயல்புகளை மறந்து விட்டோம் அல்லது அறியாமல் தவிர்த்து விட்டோம். அதாவது, நாம் ஆன்மீகத்திற்கு எதிரான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம – இடது மூளையின் தர்க்க இயல்பைத் தாண்டி வலது மூளையின் உணர்வு நிலைக்கு வருவதற்கு பதிலாக வலது மூளையின் உணர்வு நிலையை தாண்டி, இடது மூளையின் தர்க்க நிலைக்கு வந்திருக்கிறோம். அவ்வாறு வந்தால் மட்டுமே, வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நம்மை நம்மால் மாற்றிக்கொள்ளமுடியும்.
நம் உணர்வு நிலைகளை மழுங்கடித்து விட்டு, பக்தி, சரணடைதல் ஆகியவற்றை நம் இயல்பாக நம் மனம் கருதினால், அது நம் மனம் தன்னைத்தானே ஏமாற்றும் தந்திரம் (deception) மட்டுமே. நாம் வலது மூளையின் ஆதிக்கத்தை இயல்பாக உடையவர்களாக இருந்தாலும், அந்த இயல்பை, தற்போதைய நம் வாழ்க்கைச் சூழலில் அறிந்து கொள்ள இடது மூளையின் தர்க்க இயல்பை உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தத்துவங்களும், தத்துவ மூல நூல்களும் (scriptures) நம் இடது மூளையைன் இயல்பைத் தாண்டி வர நமக்கு உதவலாம் – தத்துவம் அல்லது மூல நூல்களின் பயன்பாடு, மனதின் தர்க்க நிலையை தாண்டி வருவதற்கு பட்டுமே. மனதின் தர்க்க செயல்பாட்டைத் தாண்டி உணர்வின் இயக்கத்திற்கு வரும்போது, நாம் தத்துவங்களையும் மூல நூல்களையும் தாண்டி வந்திருப்போம்! அதன் பின்னர், தர்க்கங்களுக்கும், தத்துவங்களுக்கும், மூல நூல்களுக்கும் எந்த தேவையும் இல்லை!
Sunday, December 11, 2011
தனிமை
புற உலகில் நாம் எத்தனை உறவினர்கள் புடை சூழ இருந்தாலும், எத்தனை நண்பர்கள் சூழ்ந்திருக்க வாழ்ந்தாலும் அகத்தளவில் நம்மில் பெரும்பாலானவர்கள் மிக மிக தனிமையானவர்களே.அந்த தனிமையை அறிவது, ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலைப்படியாக இருக்க கூடும். அந்த தனிமையை அறிந்தவர்களின் புற உலகப் பார்வை முற்றிலும் வேறானதாக இருக்க கூடும் – சமூக இயக்கத்தின் அடிப்படையை அறிவதன் மூலம். அகத்தனிமை என்றால் என்ன?
நாம் அறிவு எனக் கருதும் நம் அறிவின் ஒரு பகுதி, நம் எண்ணங்களின் பதிவுகளே. இந்த அறிவு நம் புலன்களால் உணரப்பட்டவையும், அனுமானத்தால் பெறப்பட்ட புலன் அறிவின் நீட்சியுமாகும். இந்த அறிவின் பரப்பே நாம் அறியும் உலகத்தின் பரப்புமாகும். ஆக, நாம் அறியும் உலகின் இயல்பு என்பது நம் அறிவின் இயல்பு மற்றும் அறிதலின் இயல்பை சார்ந்தே இருக்கும். மனித இனத்தில், எந்த இருவரின் அறிதல் இயல்பும் அறிவின் இயல்பும் ஒன்று போல் இருக்க சாத்தியம் இல்லை. எனவே நம்மில் எந்த இருவரின் உலகங்களும் ஒன்று போல் இருக்கவும் சாத்தியம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கேயான உலகத்தில் நாம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நமக்கேயான உலகத்தில், நம் உறவுகளையும், நண்பர்களையும், அறிந்தவர்களையும் நாமே நம்முடன் இணைத்துக் கொண்டுள்ளோம் – அவர்களாக இணையவில்லை, இணையவும் முடியாது. இதே போல, நம் உறவுகளும், நண்பர்களும், நம்மை அறிந்தவர்களும் அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்திருப்பார்கள் – நாமாக இணையவில்லை, நம்மால் இணையவும் முடியாது.
இங்கு எவருமே அடுத்தவர் உலகத்தில் நுழைந்து அவர்கள் தனிமையைப் போக்கவில்லை. ஆனால் அடுத்வர்களை நம் உலகத்தில் நுழைத்து, நம் தனிமையைப் போக்கிவிட்டோமென்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கற்பனையின் மூலமே நம் தனிமையை மறைத்து அதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடும் சாத்தியத்தை மரணம்வரை தள்ளி வைக்கிறோம்.
அத்தகைய தனிமையை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒருவேளை ஆன்மீகத்தின் சாரமே இந்த தனிமையை அறிந்து கொள்வதாக இருக்க கூடும் – ஆன்மீகத்தை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது. நமக்கேயான நம் உலகத்தை, அதன் இயல்புகளுடன் அறிந்து கொள்ளும்போதுதான் நம் தனிமையை உணர முடியலாம். நாம்முடைய உலகை அறிய முற்படும்போது, அது முழுவதும் நம் இயல்பை சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம். இந்த அறிதல், பிறருடைய உலகம், அவர்களின் இயல்பை சார்ந்தே இருக்கும் என்னும் அறிவுக்கு நம்மை எடுத்துச் செல்லலாம். இந்த ஜட உலகில், நம் இயல்பைப் போன்ற இயல்புடைய இன்னொருவார் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்னும் உண்மையை நாம் அறிய நேரிட்டால், இந்த உலகில் நாம் அகவயமாக எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். அதாவது, இந்த உலகை நாம் பார்க்கும் அதே பார்வையில் பார்க்கும் இன்னொருவர் இல்லாமல் இருப்பதால் நம் உணர்வுகளை அறியக்கூடிய இன்னொருவார் இந்த உலகில் இல்லை. நம் உணர்வை பிறரால் அனுமானிக்க மட்டுமே முடியும் – அதுவம் அவர்களின் அனுமானிக்கும் தன்மையைப் பொறுத்தது.
புறவயத்தில் நாம் உறவுகளும் நட்புகளும் சூழ இருக்கையில், அகவயத் தனிமையின் முக்கியத்துவம் என்ன? நம் வாழ்க்கையில் உணவு மற்றும் உடல்ரீதியான பாதுகாப்பும் சில அடிப்படைத் தேவைகளும் தவிர மற்ற அனைத்து வாழ்வின் அம்சங்களும் உளவியல் சார்ந்தவையே – நம் மகிழ்ச்சியும் துயரங்களும் கூட. உறவுகள் மற்றும் நட்புகள் குறித்த நம் உளவியல் இயக்கங்களே பெரும்பான்மையான நம் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தீர்மானிக்கிறது. புறவயத் தேவைகளுக்காக நம்முடன் இருக்கும் உறவுகளும் நட்புகளும், மன இயக்கங்கள் சார்ந்தும் நம்முடன் உறவுடன் இருக்கிறார்கள் என்னும் மாயையில் நாம் இருக்கும்போது, உண்மையில் அத்தகைய உறவுகள் மன இயக்கங்கள் அளவில் இல்லாததால், நம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் முரண்பட நேரிடுகிறது. இந்த முரண்பாடுகளே பெரும்பான்மையான நம் துயரங்களுக்கு காரணமாக இருக்க கூடும்.
மன இயக்கங்கள் சார்ந்து, உறவுடன் இருப்பது என்பது, சாதாரண நிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே சாத்தியமற்றது. இரண்டு மனிதர்கள் ஒரே வகையிலான மன எழுச்சியில், மனதில் பிற எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே அத்தகைய உறவு சாத்தியமாக கூடும். சாதாரண நிலையில், அத்தகைய மன எழுச்சி ஏற்பட்டாலும், மனதில் எண்ணங்கள் இல்லாத மன எழுச்சி நிலை சில வினாடிகளுக்கு மேல் தொடர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையிலேயே நாம் யாருடனாவது உறவுடன் இருந்திருப்போம் என்றால் அது நம் நீண்ட வாழ்க்கையில் ஒரு சில வினாடிகள் மட்டுமே – அல்லது அத்தகைய நேரங்களின் கூட்டுத் தொகை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.
நம் அகவயத்தனிமையை உண்மையிலேயே உணரும்போது, நம் உளவியல் தேவைகளுக்காக நாம் எவரையும் சார்ந்திருக்க மாட்டோம் – அவர்கள் நம் மனைவி\கணவனாக இருந்தாலும், வாரிசுகளாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், பிரிக்க முடியாத (!) நட்புகளாக இருந்தாலும். இத்தகைய உளவியல் விடுதலையில் மனம் இருக்கும்போது, பிறரிடமிருந்து – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லாத மனத்திற்கு தோல்விகள் இல்லை. எனவே துயரங்களும் இல்லை.
நாம் அறிவு எனக் கருதும் நம் அறிவின் ஒரு பகுதி, நம் எண்ணங்களின் பதிவுகளே. இந்த அறிவு நம் புலன்களால் உணரப்பட்டவையும், அனுமானத்தால் பெறப்பட்ட புலன் அறிவின் நீட்சியுமாகும். இந்த அறிவின் பரப்பே நாம் அறியும் உலகத்தின் பரப்புமாகும். ஆக, நாம் அறியும் உலகின் இயல்பு என்பது நம் அறிவின் இயல்பு மற்றும் அறிதலின் இயல்பை சார்ந்தே இருக்கும். மனித இனத்தில், எந்த இருவரின் அறிதல் இயல்பும் அறிவின் இயல்பும் ஒன்று போல் இருக்க சாத்தியம் இல்லை. எனவே நம்மில் எந்த இருவரின் உலகங்களும் ஒன்று போல் இருக்கவும் சாத்தியம் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கேயான உலகத்தில் நாம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நமக்கேயான உலகத்தில், நம் உறவுகளையும், நண்பர்களையும், அறிந்தவர்களையும் நாமே நம்முடன் இணைத்துக் கொண்டுள்ளோம் – அவர்களாக இணையவில்லை, இணையவும் முடியாது. இதே போல, நம் உறவுகளும், நண்பர்களும், நம்மை அறிந்தவர்களும் அவர்களுடைய உலகத்தில் நம்மை இணைத்திருப்பார்கள் – நாமாக இணையவில்லை, நம்மால் இணையவும் முடியாது.
இங்கு எவருமே அடுத்தவர் உலகத்தில் நுழைந்து அவர்கள் தனிமையைப் போக்கவில்லை. ஆனால் அடுத்வர்களை நம் உலகத்தில் நுழைத்து, நம் தனிமையைப் போக்கிவிட்டோமென்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கற்பனையின் மூலமே நம் தனிமையை மறைத்து அதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடும் சாத்தியத்தை மரணம்வரை தள்ளி வைக்கிறோம்.
அத்தகைய தனிமையை எவ்வாறு அறிந்து கொள்வது? ஒருவேளை ஆன்மீகத்தின் சாரமே இந்த தனிமையை அறிந்து கொள்வதாக இருக்க கூடும் – ஆன்மீகத்தை ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது. நமக்கேயான நம் உலகத்தை, அதன் இயல்புகளுடன் அறிந்து கொள்ளும்போதுதான் நம் தனிமையை உணர முடியலாம். நாம்முடைய உலகை அறிய முற்படும்போது, அது முழுவதும் நம் இயல்பை சார்ந்து இருக்கும் என்பதை அறிவோம். இந்த அறிதல், பிறருடைய உலகம், அவர்களின் இயல்பை சார்ந்தே இருக்கும் என்னும் அறிவுக்கு நம்மை எடுத்துச் செல்லலாம். இந்த ஜட உலகில், நம் இயல்பைப் போன்ற இயல்புடைய இன்னொருவார் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்னும் உண்மையை நாம் அறிய நேரிட்டால், இந்த உலகில் நாம் அகவயமாக எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம். அதாவது, இந்த உலகை நாம் பார்க்கும் அதே பார்வையில் பார்க்கும் இன்னொருவர் இல்லாமல் இருப்பதால் நம் உணர்வுகளை அறியக்கூடிய இன்னொருவார் இந்த உலகில் இல்லை. நம் உணர்வை பிறரால் அனுமானிக்க மட்டுமே முடியும் – அதுவம் அவர்களின் அனுமானிக்கும் தன்மையைப் பொறுத்தது.
புறவயத்தில் நாம் உறவுகளும் நட்புகளும் சூழ இருக்கையில், அகவயத் தனிமையின் முக்கியத்துவம் என்ன? நம் வாழ்க்கையில் உணவு மற்றும் உடல்ரீதியான பாதுகாப்பும் சில அடிப்படைத் தேவைகளும் தவிர மற்ற அனைத்து வாழ்வின் அம்சங்களும் உளவியல் சார்ந்தவையே – நம் மகிழ்ச்சியும் துயரங்களும் கூட. உறவுகள் மற்றும் நட்புகள் குறித்த நம் உளவியல் இயக்கங்களே பெரும்பான்மையான நம் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் தீர்மானிக்கிறது. புறவயத் தேவைகளுக்காக நம்முடன் இருக்கும் உறவுகளும் நட்புகளும், மன இயக்கங்கள் சார்ந்தும் நம்முடன் உறவுடன் இருக்கிறார்கள் என்னும் மாயையில் நாம் இருக்கும்போது, உண்மையில் அத்தகைய உறவுகள் மன இயக்கங்கள் அளவில் இல்லாததால், நம் உறவுகள் மற்றும் நட்புகளுடன் முரண்பட நேரிடுகிறது. இந்த முரண்பாடுகளே பெரும்பான்மையான நம் துயரங்களுக்கு காரணமாக இருக்க கூடும்.
மன இயக்கங்கள் சார்ந்து, உறவுடன் இருப்பது என்பது, சாதாரண நிலையில் இரண்டு மனிதர்களுக்கு இடையே சாத்தியமற்றது. இரண்டு மனிதர்கள் ஒரே வகையிலான மன எழுச்சியில், மனதில் பிற எண்ணங்கள் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே அத்தகைய உறவு சாத்தியமாக கூடும். சாதாரண நிலையில், அத்தகைய மன எழுச்சி ஏற்பட்டாலும், மனதில் எண்ணங்கள் இல்லாத மன எழுச்சி நிலை சில வினாடிகளுக்கு மேல் தொடர வாய்ப்பில்லை. ஆகவே, உண்மையிலேயே நாம் யாருடனாவது உறவுடன் இருந்திருப்போம் என்றால் அது நம் நீண்ட வாழ்க்கையில் ஒரு சில வினாடிகள் மட்டுமே – அல்லது அத்தகைய நேரங்களின் கூட்டுத் தொகை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே.
நம் அகவயத்தனிமையை உண்மையிலேயே உணரும்போது, நம் உளவியல் தேவைகளுக்காக நாம் எவரையும் சார்ந்திருக்க மாட்டோம் – அவர்கள் நம் மனைவி\கணவனாக இருந்தாலும், வாரிசுகளாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும், பிரிக்க முடியாத (!) நட்புகளாக இருந்தாலும். இத்தகைய உளவியல் விடுதலையில் மனம் இருக்கும்போது, பிறரிடமிருந்து – அவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித எதிர்பார்ப்பும் இருக்காது. எதிர்பார்ப்புகள் இல்லாத மனத்திற்கு தோல்விகள் இல்லை. எனவே துயரங்களும் இல்லை.
Friday, December 2, 2011
மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள்
ஆன்மீகம் என்பது மதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் இவை போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறானது. ஆனால் மதங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் ஆன்மீகம் முளை விடுவதற்கு ஒரு அடிப்படை காரணமாக இருக்க கூடும். ஒரு ஆன்மீகவாதி எப்போதுமே மதவாதியாக இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் மதங்களாலும் அதைச் சாரந்த நம்பிக்கைகாளாலும் குறியீடுகளாலும் பண்படுத்தப்பட்ட ஒரு சமூகத்திலுருந்துதான் ஆன்மீகவாதி வெளிப்பட சாத்தியங்கள் அதிகமாக இருக்கலாம்.
மதம் என்பது ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரவ செய்யும் ஒரு அமைப்பு. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறிதல் திறனுடனும் வெவ்வேறு அறிவு சூழலிலும் இருப்பதால் ஆன்மீக வெளிப்பாடுகளை நேரடியாக சமூகத்தில் பரவ செய்வது இயலாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அத்தகைய பரப்புதல் மிகத்தேவையானது. எனவே மதம் என்னும் அமைப்பு குறியீடுகள் (Representation) மூலம் ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரப்புகிறது. ஆன்மீகம் என்பது மனித இனத்தின் வாழ்க்கை குறித்த தேடுதல் – எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.
ஆன்மீக வெளிப்பாடுகளை பெற அந்த மதத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் நிச்சயமாக முடியாது. காரணம் ஒரு மதவாதியால் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு மதம் சமூகத்தில் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், அந்த மதம் ஆன்மீகவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக ஆன்மீக வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அந்த சமூகத்தில் தோன்றும் ஆன்மீகவாதிகளை மதம் தன்னுடன் இணைத்து கொண்டும் அதன் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது - ஆன்மீகவாதி என்பவர் வாழ்க்கை குறித்த தேடுதலை உடையவர்.
ஆன்மீக வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் சமூகத்தில் பரப்பும்போது, பெரும்பாலானவர்களால் அந்த குறியீடுகள் சுட்டும் ஆன்மீக சாரத்தை புரிந்து கொள்ள இயலாமல் இருக்க கூடும். அத்தகைய நிலையில் அந்த குறியீடுகள் வெறும் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவம் அந்த மதத்தில் பெரும்பாலானவர்களால் பின்பற்ற முடியுலாம். இதன் மூலம், ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அந்த வெளிப்பாடுகள் குறியீடுகளாக, அந்த குறியீடுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.
ஆக, இன்று நம் மதங்களில் காணப்படும் அடிப்படை நம்பிக்கைகளும், சடங்குகளும், அதைப் போன்றவையும் ஆழமான ஆன்மீக வெளிப்பாடுகளின் குறியீடுகளாகவே இருக்க முடியும். ஆனால் மதம் அதன் இயக்கத்தில், அந்த அடிப்படை நம்பிக்கைகளை மட்டும் கொண்டிருக்காமல், சமூக இயக்கங்களின் காரணமாகவும், சமூக இயக்கங்களில் சார்புநிலை அறிவின் காரணமாகவும் பல புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிறவற்றையும் உருவாக்குகிறது. இந்த சார்புநிலை நம்பிக்கைகளும் சடங்குகளும் அந்த மதத்தின் பிரதான இயக்கங்களாக மாறும்போது, அது சுட்டும் ஆன்மீக வெளிப்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படுவதுடன், மதம் அதன் நோக்கத்திலிருந்தும் பிறழ்கிறது. அதாவது, மதம் ஆன்மீகவாதிகளின் தொடர்பை பெருமளவு இழந்து விட்டதுடன் மதவாதிகளின் துணையுடன், எந்த ஆன்மீக சாரமும் இல்லாத வெற்று நம்பிக்கைகளின், சடங்குகளின் தொகையாக மாறி விடுகிறது.
மிக சமீப காலம்வரை ஆன்மீக பயிற்சிகள் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு எட்டாததாகவே இருந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆன்மீக வளர்ச்சியை தனிமனித மனதினுள் தூண்டச் செய்யும் ஆரம்பகட்ட பயிற்சிகள், பல்வேறு ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் அமைப்புகள் மூலம் பரவலாக்கப் பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பம், ஆன்மீக பயிற்சிகள் வெகுஜனமயமாக்குதலுக்கு மேலும் தூண்டுதலாக அமைந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அறிவுச்சூழல் முன் எப்போதும் இல்லாத வகையில், தகுதி உடைய பெரும்பாலனவர்களும் அறிவை அடைவதற்கு சாத்தியமுள்ளதாக உள்ளது. அதாவது தொழில்துறை வளர்ச்சிகள் மூலமும், பொதுமக்கள் சார்புநிலை உடைய அரசாங்கங்கள் மூலமும், பெரும்பாலானவர்களின் அடிப்படை வாழ்க்கை போராட்டம் மிகவும் எளிதாக்கப் பட்டுள்ளது. ஆக விருப்பமிருந்தால், ஆன்மீக தேடலுக்கான சாத்தியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது - ஆன்மீகத்தின் தொடக்கநிலை பயிற்சிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களுடனும்.
அதே நேரத்தில், ஆன்மீக தேடுதலுக்கான சாத்தியத்தை கொடுக்கும் அதே காரணிகள், ஆன்மீக வெளிப்பாடுகளை சுட்டும் குறியீடுகளையும், சடங்குகளையும், லொகீகத்தை நோக்கி திசை திருப்புவதுடன், லொகீகம் சார்ந்த அர்த்தங்களையும் மனதின் சார்புநிலை அறிவுகள் மூலம் உருவாக்குகிறது. இதன் மூலம் புதுப்புது நம்பிக்கைகளும், குறியீடுகளும், சடங்குகளும் மதத்தினுள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் சார்புநிலை அறிவின் மூலமே உருவாக்கப் படுவதால், அத்தகைய நம்பிக்கைகளும், சடங்குகளும் உண்மையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்க சாத்தியங்களே இல்லை. மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் அமைப்புகளின் மூலம் ஆன்மீகத்தின் தொடக்கத்தை அறிந்தவர்களிலும், அந்த பயிற்சிகள் மூலம் தொடக்க நிலை பயன்பாட்டை உணர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள், அந்த அமைப்பின் மேல் அல்லது ஆன்மீக குருவின் மேல் வழிபாட்டில் ஈடுபட்டு விடுகிறார்கள். இதன் மூலம் அந்த அமைப்பு அல்லது குரு வெளிப்படுத்தும் ஆன்மீக வெளிப்பாட்டின் சாரத்தை இழந்து, வெறும் வழிபாட்டு மன நிலையுடன், அமைப்பு அல்லது குருவின் வார்த்தைகளையே ஆன்மீக வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் நம்பிக்கைகளிலும் வழிபாட்டு மன நிலையிலும் விழுந்து விடுவதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒரு சடங்காக மாற்றி விடுவதன் மூலம், அவர்களுக்குள் தோற்றுவிக்கப் பட்ட ஆன்மீக தேடுதல் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆன்மீக அமைப்பினால் அல்லது அமைப்பு சார்ந்த குருவால் வழங்கப் பட்ட, வாழ்க்கையை அதன் முழுமையான சாத்தியங்களுடன் வாழும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உண்மைக்கு தொலைவில் உள்ள இந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையுமே மதமாக, ஆன்மீக வழியாக கொள்கிறார்கள். காரணம், பெரும்பாலானவர்களுக்கு உண்மையை அறிய வேண்டிய தேடுதல், அவர்கள் மனதில் தோன்றுவதில்லை அல்லது தோற்றுவிக்கப் படுவதில்லை – அதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும். உண்மையிலேயே ஆன்மீகத் தேடல் உள்ளவர்களால் இத்தகைய பொய்தோற்றங்களை அளிக்கும் ஆன்மீக மயமாக்கப்பட்டவற்றை, அவர்களின் ஆன்மீக தேடலின் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள முடியும்.
மதம் என்பது ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரவ செய்யும் ஒரு அமைப்பு. சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு அறிதல் திறனுடனும் வெவ்வேறு அறிவு சூழலிலும் இருப்பதால் ஆன்மீக வெளிப்பாடுகளை நேரடியாக சமூகத்தில் பரவ செய்வது இயலாமல் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு அத்தகைய பரப்புதல் மிகத்தேவையானது. எனவே மதம் என்னும் அமைப்பு குறியீடுகள் (Representation) மூலம் ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தில் பரப்புகிறது. ஆன்மீகம் என்பது மனித இனத்தின் வாழ்க்கை குறித்த தேடுதல் – எல்லா சமூகங்களுக்கும் பொதுவானது.
ஆன்மீக வெளிப்பாடுகளை பெற அந்த மதத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தால் நிச்சயமாக முடியாது. காரணம் ஒரு மதவாதியால் நிச்சயமாக ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. எனவே ஒரு மதம் சமூகத்தில் பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமானால், அந்த மதம் ஆன்மீகவாதிகளிடமிருந்து தொடர்ச்சியாக ஆன்மீக வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அந்த சமூகத்தில் தோன்றும் ஆன்மீகவாதிகளை மதம் தன்னுடன் இணைத்து கொண்டும் அதன் தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறது - ஆன்மீகவாதி என்பவர் வாழ்க்கை குறித்த தேடுதலை உடையவர்.
ஆன்மீக வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் சமூகத்தில் பரப்பும்போது, பெரும்பாலானவர்களால் அந்த குறியீடுகள் சுட்டும் ஆன்மீக சாரத்தை புரிந்து கொள்ள இயலாமல் இருக்க கூடும். அத்தகைய நிலையில் அந்த குறியீடுகள் வெறும் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவம் அந்த மதத்தில் பெரும்பாலானவர்களால் பின்பற்ற முடியுலாம். இதன் மூலம், ஆன்மீக வெளிப்பாடுகளை சமூகத்தால் உள்வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அந்த வெளிப்பாடுகள் குறியீடுகளாக, அந்த குறியீடுகளை உள்வாங்கிக் கொள்ளக்கூடியவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.
ஆக, இன்று நம் மதங்களில் காணப்படும் அடிப்படை நம்பிக்கைகளும், சடங்குகளும், அதைப் போன்றவையும் ஆழமான ஆன்மீக வெளிப்பாடுகளின் குறியீடுகளாகவே இருக்க முடியும். ஆனால் மதம் அதன் இயக்கத்தில், அந்த அடிப்படை நம்பிக்கைகளை மட்டும் கொண்டிருக்காமல், சமூக இயக்கங்களின் காரணமாகவும், சமூக இயக்கங்களில் சார்புநிலை அறிவின் காரணமாகவும் பல புதிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பிறவற்றையும் உருவாக்குகிறது. இந்த சார்புநிலை நம்பிக்கைகளும் சடங்குகளும் அந்த மதத்தின் பிரதான இயக்கங்களாக மாறும்போது, அது சுட்டும் ஆன்மீக வெளிப்பாடுகள் பின்நோக்கி தள்ளப்படுவதுடன், மதம் அதன் நோக்கத்திலிருந்தும் பிறழ்கிறது. அதாவது, மதம் ஆன்மீகவாதிகளின் தொடர்பை பெருமளவு இழந்து விட்டதுடன் மதவாதிகளின் துணையுடன், எந்த ஆன்மீக சாரமும் இல்லாத வெற்று நம்பிக்கைகளின், சடங்குகளின் தொகையாக மாறி விடுகிறது.
மிக சமீப காலம்வரை ஆன்மீக பயிற்சிகள் பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு எட்டாததாகவே இருந்து வந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆன்மீக வளர்ச்சியை தனிமனித மனதினுள் தூண்டச் செய்யும் ஆரம்பகட்ட பயிற்சிகள், பல்வேறு ஆன்மீக குருக்கள் மற்றும் அவர்கள் அமைப்புகள் மூலம் பரவலாக்கப் பட்டுள்ளது. தற்போதைய தகவல் தொழில்நுட்பம், ஆன்மீக பயிற்சிகள் வெகுஜனமயமாக்குதலுக்கு மேலும் தூண்டுதலாக அமைந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அறிவுச்சூழல் முன் எப்போதும் இல்லாத வகையில், தகுதி உடைய பெரும்பாலனவர்களும் அறிவை அடைவதற்கு சாத்தியமுள்ளதாக உள்ளது. அதாவது தொழில்துறை வளர்ச்சிகள் மூலமும், பொதுமக்கள் சார்புநிலை உடைய அரசாங்கங்கள் மூலமும், பெரும்பாலானவர்களின் அடிப்படை வாழ்க்கை போராட்டம் மிகவும் எளிதாக்கப் பட்டுள்ளது. ஆக விருப்பமிருந்தால், ஆன்மீக தேடலுக்கான சாத்தியங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போதைய காலகட்டத்தில் மிக அதிகமாக உள்ளது - ஆன்மீகத்தின் தொடக்கநிலை பயிற்சிகள் அனைவருக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்களுடனும்.
அதே நேரத்தில், ஆன்மீக தேடுதலுக்கான சாத்தியத்தை கொடுக்கும் அதே காரணிகள், ஆன்மீக வெளிப்பாடுகளை சுட்டும் குறியீடுகளையும், சடங்குகளையும், லொகீகத்தை நோக்கி திசை திருப்புவதுடன், லொகீகம் சார்ந்த அர்த்தங்களையும் மனதின் சார்புநிலை அறிவுகள் மூலம் உருவாக்குகிறது. இதன் மூலம் புதுப்புது நம்பிக்கைகளும், குறியீடுகளும், சடங்குகளும் மதத்தினுள் உருவாக்கப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளும் சடங்குகளும் சார்புநிலை அறிவின் மூலமே உருவாக்கப் படுவதால், அத்தகைய நம்பிக்கைகளும், சடங்குகளும் உண்மையுடன் எந்த விதத்திலும் தொடர்புடையதாக இருக்க சாத்தியங்களே இல்லை. மேலும் ஆன்மீக பயிற்சி அளிக்கும் அமைப்புகளின் மூலம் ஆன்மீகத்தின் தொடக்கத்தை அறிந்தவர்களிலும், அந்த பயிற்சிகள் மூலம் தொடக்க நிலை பயன்பாட்டை உணர்ந்தவர்களிலும் பெரும்பாலானவர்கள், அந்த அமைப்பின் மேல் அல்லது ஆன்மீக குருவின் மேல் வழிபாட்டில் ஈடுபட்டு விடுகிறார்கள். இதன் மூலம் அந்த அமைப்பு அல்லது குரு வெளிப்படுத்தும் ஆன்மீக வெளிப்பாட்டின் சாரத்தை இழந்து, வெறும் வழிபாட்டு மன நிலையுடன், அமைப்பு அல்லது குருவின் வார்த்தைகளையே ஆன்மீக வெளிப்பாடுகளாக எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் மீண்டும் நம்பிக்கைகளிலும் வழிபாட்டு மன நிலையிலும் விழுந்து விடுவதுடன், அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளையும் ஒரு சடங்காக மாற்றி விடுவதன் மூலம், அவர்களுக்குள் தோற்றுவிக்கப் பட்ட ஆன்மீக தேடுதல் மனநிலையையும் இழந்து விடுகிறார்கள். இதன் மூலம் ஆன்மீக அமைப்பினால் அல்லது அமைப்பு சார்ந்த குருவால் வழங்கப் பட்ட, வாழ்க்கையை அதன் முழுமையான சாத்தியங்களுடன் வாழும் வாய்ப்பையும் இழந்து விடுகிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக சமூகத்தின் பெரும்பாலானவர்கள் உண்மைக்கு தொலைவில் உள்ள இந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையுமே மதமாக, ஆன்மீக வழியாக கொள்கிறார்கள். காரணம், பெரும்பாலானவர்களுக்கு உண்மையை அறிய வேண்டிய தேடுதல், அவர்கள் மனதில் தோன்றுவதில்லை அல்லது தோற்றுவிக்கப் படுவதில்லை – அதற்கான சாத்தியங்கள் பெருமளவில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும். உண்மையிலேயே ஆன்மீகத் தேடல் உள்ளவர்களால் இத்தகைய பொய்தோற்றங்களை அளிக்கும் ஆன்மீக மயமாக்கப்பட்டவற்றை, அவர்களின் ஆன்மீக தேடலின் தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள முடியும்.
Wednesday, November 23, 2011
அறிவு, அறிதல், மாயை (தொடர்ச்சி)
அறிவை முழுமையான(Absolute) அறிவு சார்புநிலை(Relational) அறிவு என இரண்டு வகைகளாகப் பொதுமை படுத்தலாம். இங்கு முழுமையான அறிவு என்பது தர்க்க நிலைகளுக்கு(Logic) அப்பாற்பட்டது, மனம் அதன் முழு விழிப்பு நிலையில் பெறுவது. முழுமையான அறிவுக்கான தேவை, அந்த அறிவை குறித்த தேடுதல் நம் மனதில் தோன்றினால் அல்லது தோற்றுவிக்கப் பட்டால் மட்டுமே. அத்தகைய தேடுதல் இல்லாத பட்சத்தில், சார்புநிலை அறிவு மட்டுமே நம்அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்ககூடும். ஆனால் சார்பு நிலை அறிவை முழுமையான அறிவாக நாம் ஏற்றுக்கொண்டால், நம் எல்லா வகையான துன்பங்களுக்கும் அந்த அறிவே ஆதாரமாக இருக்க கூடும். முழுமையான அறிவுக்கான தேடுதல் நம் இயல்பைப் பொறுத்தது - ஆனால் சார்புநிலை அறிவின் முழுமையின்மையை உணர்வது, நம் அமைதியான வாழ்வுக்கு மிக மிக இன்றியமையாதது.
சாதாரண நிலையில், முற்றிலும் புதிதாக நம்மால் எதையும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் , நாம் முன்பே அறிந்தவற்றின் தொடர்ச்சிகள் மட்டுமே. முற்றிலும் புதிதாக எதையாவது அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதையும் நாம் முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி மட்டுமே அறிய முடியும். அதாவது நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நாம் முன்பே அறிந்தவற்றின் தரம் அல்லது இயல்பை பொறுத்தே அமையும்.ஆகவே நாம் அறிந்தவை உண்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ அந்த அளவு தூரம், நாம் புதிதாக அறிபவையும் உண்மையிலிருந்து விலகி இருக்கும். ஆக நாம் உண்மையை அறிய விரும்பினால், நம் அறிதலின் இயல்பையும், நம் முன் அறிவையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.
அனுமானம் (Assumption) என்பது, நம் சாதாரண நிலை அறிதலின் இன்றியமையாத கருவி. அனுமானமே நாம் புதிதாக அறிய வேண்டியவற்றை , முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி நம் அறிவாக மாற்றுகிறது.ஆகவே நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நம் அனுமானிக்கும் தரம் அல்லது இயல்பையும் பொறுத்து அமையும்.
இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், நாம் அறிதல் என அறிவது, நம் புலன்கள் உணர்வதை, மனம் அதன் ஆழத்திலிருந்து கண்டெடுத்து வெளிப்படுத்துவதையே. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த உலகத்தில் சாத்தியமான எல்லா அறிவும் நம் மனதினுள் புதைந்து கிடக்கிறது. நம் புலன்கள் உணரும்போது, அதற்கான அறிவை, மனம் அதன் ஆழத்திலிருந்து எடுத்து நம் அறிவாக வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் அனைவரும் ஒரே அளவான அறிவுடன், அதாவது இந்த உலகில் பெற சாத்தியமுள்ள முழு அறிவுடன் படைக்கப்பட்டுள்ளோம். அந்த அறிவை வெளிப்படுத்தும் இயல்பில் மட்டுமே வேறுபட்டுள்ளோம்.
மனிதர்களில் ஒவ்வொருவரும் அறிவின் உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்களே. ஆனால் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் அ த்தகைய உச்சத்தை அடைவதில்லை. காரணம், அவர்கள் அத்தகைய உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்கள் தாங்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. தங்கள் உளவியல் பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், நம்பிக்கைகள், பயங்கள் போன்றவற்றை உருவாக்கி, அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே தங்கள் அறிதலுக்கான சார்புநிலைகளாககொண்டு விடுகிறார்கள். ஆகவே வெளிப்படும் புதிய அறிவும், அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே சார்ந்து உள்ளது . இதன் மூலம் முழுமையான அறிவை பெறுவதற்கான சாத்தியங்களை சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம்.
ஆன்மீக சிந்தனைத் தளங்களில், அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்னும்ஒரு சிந்தனை ஓட்டம் உள்ளது. அதாவது நாம் புதியதாக ஒன்றை அறிய தொடங்கும்போது, முன்பே அறிந்தவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்தால் மட்டுமே புதிதாக அறியும் அறிவு, உண்மைக்கு அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அந்த புதிய அறிவு, அதற்கு தேவையான சார்பு நிலையை மனதின் வெளிப்புற மாயைகளிலிருந்து பெறாமல் ஆழ்மனதிலிருந்து பெறக்கூடும். அத்தகைய விடுதலையை நம்மால் பெற முடிந்தால், நம்முடைய பயங்கள், நம்பிக்கைகள் போன்ற தளைகளிலிருந்தும் நம்மால் விடுபட முடியலாம். அல்லது, பயங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் ஒருவேளை நம்மால் அறிந்தவைகளிலிருந்தும் விடுதலை பெற முடியலாம். இங்கு அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பது, அறிந்தவற்றை முற்றிலுமாக விட்டு விடுவது ஆகாது, ஆனால் அறிந்தவற்றை வலுக்கட்டாயமாக புதிய அறிவின் மீது சார்பு படுத்துவதை விட்டு விடுவது ஆகும் – நம் மனம் மிக இயல்பாக அத்தகைய சார்புநிலையை எடுக்கும் தன்மை உடையது. .
நம் மனதினுள்ளேயே நம்மால் அறிய கூடியதெல்லாம் உள்ளதெனில் அதை எவ்வாறு அறிவது? அத்தகைய அறிவு, நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையை அடையும்போது மட்டுமே அடைய கூடியதாக இருக்கலாம். நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையில் உள்ளது என்னும் அறிவு ஒருவேளை மாயையாக இருக்குமானால், அப்போது நாம் அறிவதும் மாயையாகவே இருக்க கூடும். வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் அதன் உச்ச இயக்க நிலையில் அதன் அறிதலுக்காக வேறு எந்த அறிவையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். அத்தகைய அறிவு சாத்தியமானால், அது மட்டுமே முழுமையான அறிவாக இருக்கும்.
மனம் அதன் முழுமையான அறிதல் நிலையில் இருக்கும்போது, அத்தகைய மனம் வேறு எந்த மன இயக்கங்களையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். மனதின் அத்தகைய சார்பு நிலை இல்லாமையே விடுதலை அல்லது நிர்வாணம் என அழைக்கப் படுவதாக இருக்கலாம்!
இந்த விடுதலை அல்லது நிர்வாணம், ஒவ்வொரு மனிதருக்கும் சாத்தியமா? முழுமையான அறிவுக்கான தேடுதல் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப் பட்ட ஒவ்வொரு மனித மனத்துக்கும் விடுதலை அல்லது நிர்வாணம் நிச்சயமாக சாத்தியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு சாத்தியம் இல்லையெனில், விடுதலை அல்லது நிர்வாணம் என்பது வெறும் மாயையே!
நாம் நுண்ணறிவு(Intelligence) என அ.ழைப்பது, ஒரு சார்புநிலைகளற்ற அறிதலாக இருக்க கூடும். அவ்வாறெனில், நுண்ணறிவு என்பது முழுமையான அறிவின் அம்சமே ஆகும். அதாவது நம் அறிவின் மொத்தமும் நுண்ணறிவாக மாறும்பொது, நம் அறிவும் முழுமையான அறிவாக ஆக கூடும். நம் நுண்ணறிவு வெளிப்படும் தருணங்களை நாம் கவனிக்க நேர்ந்திருந்தால், அத்தகைய தருணங்களில் மனம் எண்ணங்களின் அலைபாயுதலிடமிருந்து விடுபட்டு இருந்திருப்பதை கவனித்திருப்போம். அதாவது மனம் அதன் தர்க்க நிலைகளிலிருந்து விடுபடும் தருணங்களில் மட்டுமே நுண்ணறிவு வெளிப்பட சாத்தியமுள்ளது. நம் அறிவு மொத்தமும் நுண்ணறிவாக மாறும்போது, அதுவே முழுமையான அறிவாக இருக்க கூடும். அதாவது, நம் அறிவு அல்லது அறிதல் எல்லாவிதமான சார்பு நிலைகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றிருக்க கூடும்.
நம் உடல் இருப்பை பொறுத்தவரை அறிதல் மற்றும் அறிவு என்பது, நம் மூளையினுள் நடைபெறும் உயிர்வேதி மாற்றங்களே. எனவே நுண்ணறிவும் உயிர்வேதி செயல்பாடுகளாகவே இருக்க முடியும் – நுண்ணறிவின் உயிர்வேதிச் செயல்பாடுகள், சார்புநிலை அறிவுக்கான உயிர்வேதிச் செயல்பாடிகளிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்க கூடும். அவ்வாறெனில், நம் மூளையின் ஒரு குறிப்பிட்ட உயிர்வேதிச் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் நுண்ணறிவை அடைவது சாத்தியப்படலாம். ஹட யோகம், கிரியா யோகம் போன்றவை இந்த அடிப்படையில் உருவாகி இருக்க கூடும். இதன் மறுபக்கமாக, நமது இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகளையே சார்ந்திருக்கும்போது, மூளை அதன் நுண்ணறிவையும் இழக்க கூடும்.
சாதாரண நிலையில், முற்றிலும் புதிதாக நம்மால் எதையும் அறிய முடியாது. நாம் அறிவதெல்லாம் , நாம் முன்பே அறிந்தவற்றின் தொடர்ச்சிகள் மட்டுமே. முற்றிலும் புதிதாக எதையாவது அறிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், அதையும் நாம் முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி மட்டுமே அறிய முடியும். அதாவது நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நாம் முன்பே அறிந்தவற்றின் தரம் அல்லது இயல்பை பொறுத்தே அமையும்.ஆகவே நாம் அறிந்தவை உண்மையிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ அந்த அளவு தூரம், நாம் புதிதாக அறிபவையும் உண்மையிலிருந்து விலகி இருக்கும். ஆக நாம் உண்மையை அறிய விரும்பினால், நம் அறிதலின் இயல்பையும், நம் முன் அறிவையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.
அனுமானம் (Assumption) என்பது, நம் சாதாரண நிலை அறிதலின் இன்றியமையாத கருவி. அனுமானமே நாம் புதிதாக அறிய வேண்டியவற்றை , முன்பே அறிந்தவற்றுடன் தொடர்பு படுத்தி நம் அறிவாக மாற்றுகிறது.ஆகவே நம் அறிவின் தரம் அல்லது இயல்பு, நம் அனுமானிக்கும் தரம் அல்லது இயல்பையும் பொறுத்து அமையும்.
இன்னும் சற்று ஆழமாக பார்த்தால், நாம் அறிதல் என அறிவது, நம் புலன்கள் உணர்வதை, மனம் அதன் ஆழத்திலிருந்து கண்டெடுத்து வெளிப்படுத்துவதையே. வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த உலகத்தில் சாத்தியமான எல்லா அறிவும் நம் மனதினுள் புதைந்து கிடக்கிறது. நம் புலன்கள் உணரும்போது, அதற்கான அறிவை, மனம் அதன் ஆழத்திலிருந்து எடுத்து நம் அறிவாக வெளிப்படுத்துகிறது. ஆகவே நாம் அனைவரும் ஒரே அளவான அறிவுடன், அதாவது இந்த உலகில் பெற சாத்தியமுள்ள முழு அறிவுடன் படைக்கப்பட்டுள்ளோம். அந்த அறிவை வெளிப்படுத்தும் இயல்பில் மட்டுமே வேறுபட்டுள்ளோம்.
மனிதர்களில் ஒவ்வொருவரும் அறிவின் உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்களே. ஆனால் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் அ த்தகைய உச்சத்தை அடைவதில்லை. காரணம், அவர்கள் அத்தகைய உச்சத்தை அடைவதற்கான சாத்தியங்களை உடையவர்கள் தாங்கள் என்பதை அறிந்திருக்கவில்லை. தங்கள் உளவியல் பாதுகாப்புக்காகவும், சமூக பாதுகாப்புக்காகவும், நம்பிக்கைகள், பயங்கள் போன்றவற்றை உருவாக்கி, அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே தங்கள் அறிதலுக்கான சார்புநிலைகளாககொண்டு விடுகிறார்கள். ஆகவே வெளிப்படும் புதிய அறிவும், அந்த நம்பிக்கைகளையும் பயங்களையுமே சார்ந்து உள்ளது . இதன் மூலம் முழுமையான அறிவை பெறுவதற்கான சாத்தியங்களை சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம்.
ஆன்மீக சிந்தனைத் தளங்களில், அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்னும்ஒரு சிந்தனை ஓட்டம் உள்ளது. அதாவது நாம் புதியதாக ஒன்றை அறிய தொடங்கும்போது, முன்பே அறிந்தவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடிந்தால் மட்டுமே புதிதாக அறியும் அறிவு, உண்மைக்கு அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது. அதாவது அந்த புதிய அறிவு, அதற்கு தேவையான சார்பு நிலையை மனதின் வெளிப்புற மாயைகளிலிருந்து பெறாமல் ஆழ்மனதிலிருந்து பெறக்கூடும். அத்தகைய விடுதலையை நம்மால் பெற முடிந்தால், நம்முடைய பயங்கள், நம்பிக்கைகள் போன்ற தளைகளிலிருந்தும் நம்மால் விடுபட முடியலாம். அல்லது, பயங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால் ஒருவேளை நம்மால் அறிந்தவைகளிலிருந்தும் விடுதலை பெற முடியலாம். இங்கு அறிந்தவற்றிலிருந்து விடுதலை என்பது, அறிந்தவற்றை முற்றிலுமாக விட்டு விடுவது ஆகாது, ஆனால் அறிந்தவற்றை வலுக்கட்டாயமாக புதிய அறிவின் மீது சார்பு படுத்துவதை விட்டு விடுவது ஆகும் – நம் மனம் மிக இயல்பாக அத்தகைய சார்புநிலையை எடுக்கும் தன்மை உடையது. .
நம் மனதினுள்ளேயே நம்மால் அறிய கூடியதெல்லாம் உள்ளதெனில் அதை எவ்வாறு அறிவது? அத்தகைய அறிவு, நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையை அடையும்போது மட்டுமே அடைய கூடியதாக இருக்கலாம். நம் மனம் அதன் உச்ச இயக்க நிலையில் உள்ளது என்னும் அறிவு ஒருவேளை மாயையாக இருக்குமானால், அப்போது நாம் அறிவதும் மாயையாகவே இருக்க கூடும். வேறு வார்த்தைகளில் கூறினால், மனம் அதன் உச்ச இயக்க நிலையில் அதன் அறிதலுக்காக வேறு எந்த அறிவையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். அத்தகைய அறிவு சாத்தியமானால், அது மட்டுமே முழுமையான அறிவாக இருக்கும்.
மனம் அதன் முழுமையான அறிதல் நிலையில் இருக்கும்போது, அத்தகைய மனம் வேறு எந்த மன இயக்கங்களையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லாமல் இருக்கலாம். மனதின் அத்தகைய சார்பு நிலை இல்லாமையே விடுதலை அல்லது நிர்வாணம் என அழைக்கப் படுவதாக இருக்கலாம்!
இந்த விடுதலை அல்லது நிர்வாணம், ஒவ்வொரு மனிதருக்கும் சாத்தியமா? முழுமையான அறிவுக்கான தேடுதல் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப் பட்ட ஒவ்வொரு மனித மனத்துக்கும் விடுதலை அல்லது நிர்வாணம் நிச்சயமாக சாத்தியமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு சாத்தியம் இல்லையெனில், விடுதலை அல்லது நிர்வாணம் என்பது வெறும் மாயையே!
நாம் நுண்ணறிவு(Intelligence) என அ.ழைப்பது, ஒரு சார்புநிலைகளற்ற அறிதலாக இருக்க கூடும். அவ்வாறெனில், நுண்ணறிவு என்பது முழுமையான அறிவின் அம்சமே ஆகும். அதாவது நம் அறிவின் மொத்தமும் நுண்ணறிவாக மாறும்பொது, நம் அறிவும் முழுமையான அறிவாக ஆக கூடும். நம் நுண்ணறிவு வெளிப்படும் தருணங்களை நாம் கவனிக்க நேர்ந்திருந்தால், அத்தகைய தருணங்களில் மனம் எண்ணங்களின் அலைபாயுதலிடமிருந்து விடுபட்டு இருந்திருப்பதை கவனித்திருப்போம். அதாவது மனம் அதன் தர்க்க நிலைகளிலிருந்து விடுபடும் தருணங்களில் மட்டுமே நுண்ணறிவு வெளிப்பட சாத்தியமுள்ளது. நம் அறிவு மொத்தமும் நுண்ணறிவாக மாறும்போது, அதுவே முழுமையான அறிவாக இருக்க கூடும். அதாவது, நம் அறிவு அல்லது அறிதல் எல்லாவிதமான சார்பு நிலைகளிலிருந்தும் முழுமையாக விடுதலை பெற்றிருக்க கூடும்.
நம் உடல் இருப்பை பொறுத்தவரை அறிதல் மற்றும் அறிவு என்பது, நம் மூளையினுள் நடைபெறும் உயிர்வேதி மாற்றங்களே. எனவே நுண்ணறிவும் உயிர்வேதி செயல்பாடுகளாகவே இருக்க முடியும் – நுண்ணறிவின் உயிர்வேதிச் செயல்பாடுகள், சார்புநிலை அறிவுக்கான உயிர்வேதிச் செயல்பாடிகளிலிருந்து முற்றிலும் வேறானதாக இருக்க கூடும். அவ்வாறெனில், நம் மூளையின் ஒரு குறிப்பிட்ட உயிர்வேதிச் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் நுண்ணறிவை அடைவது சாத்தியப்படலாம். ஹட யோகம், கிரியா யோகம் போன்றவை இந்த அடிப்படையில் உருவாகி இருக்க கூடும். இதன் மறுபக்கமாக, நமது இரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருந்துகளையே சார்ந்திருக்கும்போது, மூளை அதன் நுண்ணறிவையும் இழக்க கூடும்.
Subscribe to:
Posts (Atom)
